Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்தது! மூன்று தமிழர்கள் களத்தில்!!

Featured Replies

canada%205684d.jpg

 

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி தொகுதியில் சண் தயாபரனும் களத்தில் குதித்துள்ளனர். இத்தேர்தல்களின் முடிவுகள் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி காலை 10 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

malarum

  • கருத்துக்கள உறவுகள்
சொன்னால் வெட்கக் கேடு ...தமிழர்களே தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்யும் கொடுமையை நான் இன்று பார்க்க நேர்ந்தது. 
அடிப்படை  என்ன ...தமிழன் என்றால் வாறவன் போறவனுக்கெல்லாம் ஒரு இளக்காரம் ...
அவன் கொள்கை என்ன, அவன் தேர்தல் வாக்குறுதி என்ன, அவனின் தன்  நிலம்  சார்ந்த வாஞ்சை  என்ன ...who  cares....!! "
தமிழன் தோத்தாலும் பரவாயில்லை இன்று மியாமி வெல்ல வேண்டும்.:" 
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மானிடரை நினைத்து விட்டால் 
 

 

தம்பி சசி ,

அவன் கொள்கை என்ன, அவன் தேர்தல் வாக்குறுதி என்ன, அவனின் தன்  நிலம்  சார்ந்த வாஞ்சை  என்ன ...who  cares....!! "

 

இது நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் .

கொள்கை ,நீதி நியாயம் உண்மை என்று எல்லாம் இருக்கு வெறுமன தமிழன் என்பதற்காக வாக்கு போட முடியாது .

இலங்கையில் தமிழர்கள் போராடபுறப்பட்டதே சிங்கள ஆட்சி நீதி தவறி அநியாயமாக நடந்து கொள்ளதொடங்கியபடியால் தான் .பின்னர் போராட போன இயக்கங்களில் விமர்சனம் வைப்பதும் அவர்கள் செய்யத அநியாயத்திற்கு எதிராகத்தானே ஒழிய சிங்களத்திற்கு ஆதரவாக இல்லை .

தமிழன் அல்லது எங்கடை ஆட்கள் என்பதற்காக அநியாயத்திற்கு துணை போகக்கூடாது .பிழை நடக்கும் போது சுட்டிக்காட்டாமல் தலைக்கு மேல் வெள்ளம் போன பின் ஒப்பாரி வைப்பதில் பிரயோசனம் இல்லை .

நான் கனடா வந்து  இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றது  இங்கு நடக்கும் எம்மவர் அரசியல் ஓரளவிற்கு அத்துபடி .எமது பிரச்சனையை வைத்து அரசியல் செய்தவர்களும் வயிறு வளர்த்தவர்களும் தான் அனேகம் பேர் .

இரண்டு தினங்களுக்கு முன் லண்டனில் உள்ள கனேடிய தூதரகத்தில் இலங்கையில் போரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டவர்களை பற்றி ஒரு கருத்தரங்கு நடந்தது.பல உலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள் (M.I.A,BIANCA JAGGER,MARYAM D'ABO ,) அதில் பாஷன அபயவர்தனாவும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை வாசித்தார் .சிங்களவனுக்கு அவர் ஒரு இனத்துரோகி  ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாமல் நியாயத்திற்காக குரல் கொடுக்கின்றார் பாருங்கள் அங்குதான் தான் இருக்கு மனிதாபிமானம் .இனம் மதம் மொழி இவை எல்லாவற்றிற்கும் மேலே மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இனம் மதம் மொழி இவை எல்லாவற்றிற்கும் மேலே மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கு .

 

 

மனிதர்கள் எல்லோரிடமும் இருக்கவேண்டிய  பண்பு

அது தமிழரிடம்  மிகமிக  அதிகம்

ஆனால் சிங்களவரிடம்  அறவே இல்லாத  ஒன்று

 

இது தான் தமிழர்களின் தொடர்ச்சியான  தோல்விகளுக்கும் (எல்லாளன் தொடக்கம்- பிரபாகரன் வரை)

சிங்களவனின் வெற்றிகளுக்கும் காரணம். :(  :(  :(

 

சொன்னால் வெட்கக் கேடு ...தமிழர்களே தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்யும் கொடுமையை நான் இன்று பார்க்க நேர்ந்தது. 
அடிப்படை  என்ன ...தமிழன் என்றால் வாறவன் போறவனுக்கெல்லாம் ஒரு இளக்காரம் ...
அவன் கொள்கை என்ன, அவன் தேர்தல் வாக்குறுதி என்ன, அவனின் தன்  நிலம்  சார்ந்த வாஞ்சை  என்ன ...who  cares....!! "
தமிழன் தோத்தாலும் பரவாயில்லை இன்று மியாமி வெல்ல வேண்டும்.:" 
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மானிடரை நினைத்து விட்டால் 
 

 

 

இந்தியாவில் தொகுதிகளில் எந்த சாதி அதிகம் இருக்கு என்று பார்த்து அந்த சாதியைச் சேர்ந்தவரை தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவர். மக்களும் கட்சி, கொள்கை, ஆள் திறமையானவரா இல்லையா, சுயநலமியா இல்லையா என்றெல்லாம பார்க்காமல் சாதிக்காக வாக்குப் போட்டு வெல்ல வைப்பர்.

 

இதே போல் கனடிய தமிழர்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் போல இருக்கு.

 

தமிழராக இருப்பது மட்டுமே ஒரே ஒரு தகுதியாக கொண்டு வாக்களித்து வெற்றிபெற வைத்து வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.

 

ஆனால் அப்படி நடக்கவில்ல. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். முக்கியமாக 2009 இன் அதிகமாகவே விழித்துக் கொண்டு உள்ளார்கள்.

 

ஆள் யார், அவர் கட்சி எது, கட்சியின் கொள்கை என்ன, தன் தொகுதியை சிறப்பிக்க திறமை இருக்கா என்றெல்லாம் பார்த்து வாக்களித்து இருக்கின்றார்கள்.

 

வெறும் இன அடையாளம் ஒன்றை வைத்து உணர்ச்சி அரசியல் செய்த காலம் மலையேறி விட்டது.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தொகுதிகளில் எந்த சாதி அதிகம் இருக்கு என்று பார்த்து அந்த சாதியைச் சேர்ந்தவரை தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவர். மக்களும் கட்சி, கொள்கை, ஆள் திறமையானவரா இல்லையா, சுயநலமியா இல்லையா என்றெல்லாம பார்க்காமல் சாதிக்காக வாக்குப் போட்டு வெல்ல வைப்பர்.

 

இதே போல் கனடிய தமிழர்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் போல இருக்கு.

 

தமிழராக இருப்பது மட்டுமே ஒரே ஒரு தகுதியாக கொண்டு வாக்களித்து வெற்றிபெற வைத்து வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.

 

ஆனால் அப்படி நடக்கவில்ல. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். முக்கியமாக 2009 இன் அதிகமாகவே விழித்துக் கொண்டு உள்ளார்கள்.

 

ஆள் யார், அவர் கட்சி எது, கட்சியின் கொள்கை என்ன, தன் தொகுதியை சிறப்பிக்க திறமை இருக்கா என்றெல்லாம் பார்த்து வாக்களித்து இருக்கின்றார்கள்.

 

வெறும் இன அடையாளம் ஒன்றை வைத்து உணர்ச்சி அரசியல் செய்த காலம் மலையேறி விட்டது.

 

நன்றி

 

நிழலி

உங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடில்லை

 

ஆனால் இன்றையநிலையில் எம்மவரை  வெல்லவைக்கவேண்டி  தேவையை  நீங்கள் நிராகரிக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்

தமிழர்கள் சிலர் கனடிய  பாராளுமன்றத்தில் இருப்பதற்கும்

இல்லாதிருப்பதற்கும் வித்தியாசமுண்டல்லவா....

இன்று ராதிகா  சிறசபேசன் வெளியில் நிற்பதைவிட

பாராளுமன்றத்தில் இருந்தால்.....?

 

நல்லவர்களை

ஆரோக்கியமானவர்களை  அனுப்பணும் என்பது  உண்மைதான்

ஆனால் உப்பில்லாத  இடத்து............?? :(

கனடாவைப் பொறுத்தவரை தமிழர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழரைவிட மற்ற இனத்தவர்கள் எங்கள் பிரச்சனைகளைக் கையாளும் விதம் பாரட்டுக்குரியது.  கனேடியப் பாராளுமன்றத்தில் எமது இனப் பிரச்சனையைத் தமிழர் மூலம் விவாதிப்பதைவிட வேற்று இனத்தவர்கள் மூலம் விவாதிப்பதே அதிக பலனைத் தரும்.  இன்று அநேக பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் விடயங்களில் தலையிடாததற்கு இந்தக் கைப்பொம்மைகளை ஆட்டுவிக்கும் அமைப்பே முழுக் காரணம். ஆனால்,அந்த நிலை இப்போது மாறி விட்டது.  நேற்றைய  தேர்தல் முடிவே அதற்குச் சான்று.  இனிவரும் காலங்களில் அந்த அமைப்பு இளையவர்களை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கலாம்.  இருந்தாலும் அதுவும் கடினமே.   

 

கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.  அதற்கு வேட்பாளர் நியமனத் தெரிவிலேயே பல தமிழர்களால் (லிபரல் கட்சியில்கூட)  இடம்பெற முடியவில்லை.  போன தேர்தலைவிட வரும் தேர்தலில் தொகுதிகளை (சில தொகுதிகளை இரண்டாகப் பிரித்து) வேறு அதிகரித்திருக்கிறார்கள்.  அப்படியிருந்தும் அவர்களால் பெறமுடியவில்லையெனில் கட்சிகள் தமிழர்மீது வைத்திருக்கும் நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. 

 

 கனடா பல்கலாச்சார நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகள் கனேடிய விசுவாசிகளாகவே இருப்பார்கள்.  அரசியல் என்று வரும்போது அவர்கள் தமது சொந்தஅடையாளத்தைவிடக் கனடாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  அதனாலேயே அவர்களால் தேர்தலில் வெல்ல முடிகிறது.   எதிர்காலத்தில் எங்கள் விடயங்களில் கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் எமக்குச் சார்பாக  இருப்பார்கள்.  அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.  

கனடாவில் உள்ள தமிழரை கனடிய தமிழரின் பிரச்சனைகளுக்காக கனடிய பாராளுமன்றம், மாகாணஆட்சி மன்றங்களுக்கு அனுப்பலாம்...

இவர்கள் தங்கள் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லியிருந்தால் அந்த மக்களே அனுப்பியிருப்பார்களே...அவர்கள் அப்படி அனுப்பவில்லை என்றால் என்ன அர்த்தம்..இவர்களிலும் பார்க்க தகுதி கூடியவர்கள் உள்ளார்கள் என்று தானே...அது பிழையா???

கனடாவைப் பொறுத்தவரை தமிழர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழரைவிட மற்ற இனத்தவர்கள் எங்கள் பிரச்சனைகளைக் கையாளும் விதம் பாரட்டுக்குரியது.  கனேடியப் பாராளுமன்றத்தில் எமது இனப் பிரச்சனையைத் தமிழர் மூலம் விவாதிப்பதைவிட வேற்று இனத்தவர்கள் மூலம் விவாதிப்பதே அதிக பலனைத் தரும்.  இன்று அநேக பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் விடயங்களில் தலையிடாததற்கு இந்தக் கைப்பொம்மைகளை ஆட்டுவிக்கும் அமைப்பே முழுக் காரணம். ஆனால்,அந்த நிலை இப்போது மாறி விட்டது.  நேற்றைய  தேர்தல் முடிவே அதற்குச் சான்று.  இனிவரும் காலங்களில் அந்த அமைப்பு இளையவர்களை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கலாம்.  இருந்தாலும் அதுவும் கடினமே.   

 

கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.  அதற்கு வேட்பாளர் நியமனத் தெரிவிலேயே பல தமிழர்களால் (லிபரல் கட்சியில்கூட)  இடம்பெற முடியவில்லை.  போன தேர்தலைவிட வரும் தேர்தலில் தொகுதிகளை (சில தொகுதிகளை இரண்டாகப் பிரித்து) வேறு அதிகரித்திருக்கிறார்கள்.  அப்படியிருந்தும் அவர்களால் பெறமுடியவில்லையெனில் கட்சிகள் தமிழர்மீது வைத்திருக்கும் நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. 

 

 கனடா பல்கலாச்சார நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகள் கனேடிய விசுவாசிகளாகவே இருப்பார்கள்.  அரசியல் என்று வரும்போது அவர்கள் தமது சொந்தஅடையாளத்தைவிடக் கனடாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  அதனாலேயே அவர்களால் தேர்தலில் வெல்ல முடிகிறது.   எதிர்காலத்தில் எங்கள் விடயங்களில் கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் எமக்குச் சார்பாக  இருப்பார்கள்.  அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.  

இந்த அமைப்புத்தான் தாயகத்திலும் கைப்பொம்மைகளை உருவாக்க முயன்று தோற்றுப்போனது .

இந்த அமைப்புத்தான் தாயகத்திலும் கைப்பொம்மைகளை உருவாக்க முயன்று தோற்றுப்போனது .

 

உண்மை.  ஆனால், அவர்கள் காட்டிய வழியில் வேறு பல புல்லுருவிகளும் தோன்றிவிட்டன.  சிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் அங்குள்ளவர்களுக்கு நிதி சேர்ப்பதாகக்கூறித் தங்களை வளர்த்து விட்டன.  எல்லாம் இணையங்களின் உதவியுடன்.  அவர்களுடைய இணையங்கள் நிகழ்வுகள் நடத்தினால் பல்லாயிரக்கணக்காக நிதி சேருகிறதாம்.  இவ்வாறு நிதி சேர்ப்பவர்களுக்கு சிறிலங்காவில் இப்போ நிறையச் சொத்து சேர்ந்து விட்டதாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.