Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபாயகரமான பாதையில் பயணம் செய்யும் சிறிலங்கா - இந்திய ஊடகம் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அதிகாரமிக்க சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பொது பல சேனவின் செயலகத்திற்கு இரண்டு தடவைகள் இரு வேறு நிகழ்வுகளுக்காகச் சென்றிருந்தனர்.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேடு எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தற்போது மீண்டுமொரு தடவை சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தென்சிறிலங்காக் கரையோரத்தில் காணப்படும் சுற்றுலா மையங்கள் உள்ள இடங்களில் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவங்களில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளனர். அத்துடன் முஸ்லீம் மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றன முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு நாட்களில் இவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் எரிக்கப்பட்டும் உள்ளன. அண்மையில் உருவாக்கப்பட்ட பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனவே முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டமை தெளிவானதாகும்.

இந்த வன்முறைகள் சிறிலங்காவின் கரையோர நகரங்களான அளுத்கம, பெருவல போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சிறிலங்கா அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதுடன், இந்த இடங்களில் அமைதியை ஏற்படுத்துமாறு இராணுவம் மற்றும் சிறப்புக் காவற்துறையினருக்கு கட்டளையிட்டது.

1980களில் ஜே.வி.பி கிளர்ச்சி இடம்பெற்றதன் பின்னர் அளுத்கம மற்றும் பெருவல போன்ற இடங்களில் வன்முறைகள் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கமானது பொது பலசேன அமைப்பின் வன்முறைச் செயற்பாடுகளைக் கவனத்திற் கொள்ளாது அசட்டை செய்துவருகிறது.

சிறிலங்காவில் வாழும் வேறு இனத்தவர்களைப் பிரதானமாக முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பொது பலசேன அமைப்பு பல்வேறு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற போதிலும், இதற்கான பல்வேறு சாட்சியங்கள் உள்ள போதிலும், சிறிலங்காவை ஆளும் அரசாங்கம் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதற்குப் பதிலாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அதிகாரமிக்க சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பொது பல சேனவின் செயலகத்திற்கு இரண்டு தடவைகள் இரு வேறு நிகழ்வுகளுக்காகச் சென்றிருந்தனர்.

சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது சகோதரரின் இப்போக்கானது பொது பல சேனவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காது அதன் செயற்பாடுகளை அதிகாரபூர்வமாக ஆதரிப்பதாக உள்ளது. மூன்று முஸ்லீம்கள் மற்றும் பௌத்த பிக்கு ஒருவருக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற கைககலப்பின் பின்னரே அளுத்கமவில் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகள் தீவிரம் பெற்றுள்ளன. அளுத்கமவில் யூன் 15 அன்று பொது பல சேன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதை பொது அமைப்புக்கள் எதிர்த்திருந்தன. இவர்களின் அச்சமானது தற்போது உண்மையாகியுள்ளது. இது வன்முறையாக வெடித்துள்ளது. இந்த ஊர்வலத்தில் பௌத்த பிக்கு ஒருவர் சிறுபான்மையினருக்கு எதிராக உரையாற்றிய கையோடு வன்முறைகள் வெடித்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஆயுதம் தாங்கிய காவற்துறையினர் நிலைமையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது திணறினர்.

நீண்ட காலப் போரிலிருந்து மிக அண்மையில் மீண்டெழுந்த சிறிலங்கா தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல உண்டு. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களுக்கான கோரிக்கை நிறைவேற்றப்படுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் திருப்திகரமான பதிலளிக்கவில்லை. இதனை நிறைவேற்றாது, இதற்குப் பதிலாக, சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களின் குறுகிய அரசியல் இலக்குகள் பெரும்பான்மையினத்தவரின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதால் சிங்கள தேசியவாதிகள் தமக்கான புதிய எதிரிகளை உருவாக்குகின்றனர். போருக்குப் பின்னான தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிறிலங்கா அதிபர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை ஏற்கனவே உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்காவில் பிறிதொரு சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளமையானது மேலும் ராஜபக்ச எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினையாக மாறியுள்ளது.

உலகின் கவனம் தற்போது சிறிலங்காவில் தாக்கப்படும் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது திசைதிரும்பியுள்ளதன் காரணமாக, சிறிலங்கா அதிபர் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு நட்டஈடுகளை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் இந்த வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து சிறிலங்கா அதிபரோ அல்லது இவரது அரசாங்கமோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித கண்டனங்களையும் வெளியிடவில்லை. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தருணம் இதுவாகும். சிறிலங்கா அதிபர், "நாங்கள் ஏனையவர்களைத் துன்பப்படுத்தவோ அல்லது அவர்களின் உடைமைகளை நாசம் செய்யவோ அனுமதிக்க முடியாது" என சமூக ஊடகங்களில் அதிக செய்திகளை வெளியிடுவதை விடுத்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140623110752

சிறி லங்கா வெற்றி குத்தாட்ட பாதையில் யாரும் குறுக்கிடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு அபாயகரமான பாதையைக் காட்டிவிட்டதே, இந்தியா தானே!  :o

 

இனிப் பார்வையாளர்களாக இருக்க வேண்டியது தான்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவின் செல்லப்பிள்ளை சிறீலங்கா.அப்படியொரு அபாயகரமான நிலை வந்தாலும் தமிழர்கள் காப்பாற்றுவார்கள். :)

புலிகள் போன பாதை தான் ராஜபக்சா  அரசின் ஒவ்வொரு அடியும் .

 

எமக்கென்ற கேள்வி கேட்பாரற்ற அரசு முடிந்தால் பண்ணிப்பார் .

 

ஒருவர் முடிந்தார் அடுத்தவர் முடிய போகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

The Hindu ஆங்கில நாளேடு....

ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர் சாகும் போது.... எழுதத் தோன்றாத தலையங்கம்,

ஸ்ரீலங்காவில் மூன்று முஸ்லிம் செத்தவுடன்... எழுதியது ஆச்சரியம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.