Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர்

Featured Replies

[24 - September - 2006]

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.

அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் அந்தக் குடும்பஸ்தரைத் துரத்திப்பிடித்தனர்.

பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது கூறியுள்ளார்.

...

.....

http://www.thinakkural.com/news/2006/9/24/...s_page11496.htm

:cry: :cry: :cry: :) :x

  • தொடங்கியவர்

ஆனா எங்க ஊடகத்து எருமை மாடுகளுக்கு ஆய்வுப் பொருளும் முக்கியத்துவம்.

http://www.tamilnaatham.com/articles/2006/...ep/arush/23.htm

http://www.tamilnaatham.com/articles/2006/.../jeyaraj/24.htm

மிச்சத்துக்கு கண்ணிவெடியில் 2 இராணுவம் பலி 3 பேர் படுகாயம் 5 பேருக்கு சிறு காயம் அம்புலஸ்சில கொண்டு போன தகவல்கள் எல்லாம் எடுத்துபோடுவினம். பிறகு கணக்கு போடுகினமாக்கும் 40000 இல இருந்து 5 களத்தாலை அகற்றப்பட்டிருக்கினம் எண்டு.

இது மிககொடுமையான செய்தி....! புலிகள் கட்டுப்பாட்டு மக்கள் இதில் விதிவிலக்கு இல்லை எண்று கூற முடியாது...! ஆனாலும் இங்கு நிலைமை இப்போது போல இல்லை என்கிறார்கள்...

குறுக்ஸ் சொல்வது ஒரு பக்கத்தில் சரியாக பட்டாலும் இண்றய நிலையில் எல்லாவிதமான பிரச்சாரங்களும் தேவை என்பதுதான் உண்மை...!

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் என்பதோடு எங்களை நாங்களே காத்துக்கொள்ளும் வல்லமையும் திறனும் இருக்கின்றது என்பது தெளிவு படவேண்டும்.... அதோடு எங்களின் பொருண்மியத்தின் வளர்ச்சியானது நாங்கள் எந்த நாட்டிலும் தங்கி இருந்து வாழவேண்டி வராது என்பது சார்ந்ததாகவும் இருக்கவேணும்...

அப்படி புலிகள் பகுதி மக்கள் கூட இன்னும் உணவுக்காக ஏங்குகிறார்கள் எண்று எல்லாம் கட்டுரை வரையும் காலம் கடந்து விட்டதை இங்கு சொல்லாமல் விட முடியாது... அதேவேளை இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் படும் பாடுகளும் வெளிவரவேண்டும்....!

அதுதான் ஜதார்த்தத்தை சொல்லும்...!

மிக வேதனையான செய்தி!

எதிரி இதைத்தான் எதிர் பார்த்தான்!!!!, நாமும் அதற்கு இடம் கொடுக்கிறோமா??????

  • தொடங்கியவர்

உறுதிப்படுத்தாத தனிநபர்களால் காவப்பட்ட செய்திகளின் படி வேலணையில் மீன்பிடி தொழிலாளி தனது மனைவி, 3 பிள்ளைகளோடு பசிக் கொடுமை தாங்காது அரலி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்கள் சில நாட்களுக்கு முன்னர் என்று அறியமுடிகிறது.

நெல்லையன் எதிரி எதை எதிர்பார்த்தான் எதற்கு நாம் இடம் கொடுக்கிறோம்? கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்.

மிகவும் வேதனைகுரிய செய்தி :)

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திசையெல்லாம் களியாட்டம் போட்டு களிப்பில் கிடப்போம்.

இதைத்தானே புலம்பெயர் தமிழினம் உருப்படியாகச் செய்கிறது.

தாயகத்தில் சோறின்றித் தமிழன் சாவது எத்தனைபேர் கண்களுக்குத் தெரிகிறது? எங்களுக்குள்ளேயே துடித்தெழ முடியாவிட்டால்???????????????

இங்கு அவுஸ்ரேலியாவில் கோயில்களில் அன்னதானம் கொடுக்கினம் அதற்கு ஒரு கியு இந்த காசை நம் மக்களுக்கு அனுப்பினால் எவ்வளவு பிரயோசனமாக இருக்கும்.இங்கிருப்பவர்களுக

  • கருத்துக்கள உறவுகள்

காசை அனுப்பி என்ன செய்வது? அதற்கு பொருள் அரசாங்கம் அனுப்ப வேண்டுமல்லவோ!

3 மாதத்துக்கு தேவையான பண்டம் இருப்பதாக, அமீர்அலி அறிக்கை விட்டு; கொண்டு திரிகின்றார்!

காசை அனுப்பி என்ன செய்வது? அதற்கு பொருள் அரசாங்கம் அனுப்ப வேண்டுமல்லவோ!

3 மாதத்துக்கு தேவையான பண்டம் இருப்பதாக, அமீர்அலி அறிக்கை விட்டு; கொண்டு திரிகின்றார்!

அது அவரின் வீட்டுக்கு தேவையான சாமானாக இருக்கும்

:wink: :wink:

இன்னும் எததனை அவலங்களைக் காணவும் கேட்கவும போகின்றோமோ தெரியவில்லை. முடிவு எப்போது? யாரை நோவது?

ஈழத்திலிருந்து

ஐhனா

ஓம்..ஓம்..வன்னியில இடம் பெயர்ந்த குடும்பம் சில அரலி விதைகளை உண்டு மரணித்த நிலையும்..தற்கொலைகள் செய்தததையும் தாங்கள் அறியவில்லையா...???

இது திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பின் உச்ச நிலை .

இது காலத்துக்கு காலம் நடைபெறும் நிகழ்வாகும் .இதை தமிழினம் எதிர்நோக்கிய காலத்தில் தான் புயலென எழுந்த புலிகள் சேனை நில மீட்பை செய்து அந்த துயர நிகழ்வில் இருந்து விடு விட்டனர் .

எனவே அதுவரை இது தவிர்க பட முடியாத ஒரு துர்பாக்கிற நிலை தான் .

நன்றி

- வன்னி மைந்தன் -

இப்படி ஆளாளுக்கு கருத்துப் பரிமாறுகிற இந்த வேளை ஏதேனும் செய்யனும்பா...... புலம் பெயர்ந்தவர்கள் எழுச்சி கொள்வார்கள் குரல் கொடுப்பார்கள் என்று உறவுகளின் கண்களின் ஏக்கங்கூட வறண்டுபோக ஆரம்பித்ததுதான் நஞ்சுண்ட நிலை புலப்படுத்தும் பயங்கரச் செய்தி

என்ன செய்யப் போகிறோம்?......

எப்படி இந்தத் துன்பத்திலிருந்து எம்மினத்தை மீட்கப்போகிறோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசி வந்து பத்து பறந்து

போய்

விடுதலை வேண்டாம் எமக்கு

விக்கு தண்ணியும்

விட்டெறிந்த அரிசியும்

போதும் என

சனம் ஈய வேணும்

என ஆசை அவனுக்கு

கடிதம் வரவில்லை

அப்பாடா காசு என்றும்

கேவில்லை

போனும் போகுதில்லை

இதுக்கு மேல் நான்

என்ன செய்ய

நாளைக்கு பிறந்தநாள்

கொண்டாட்டம்

அடுத்தநாள் மனேசர் சிக்

வேலை பளு

அதற்கு அடுத்தநாள்

ஒரு நூல் வெளியீட்டு விழா

ம் இனி வாற சனி

ஒருக்கால் அடீத்து பார்ப்போம்

ஊரேடு ஒத்தது தானே என்ற

அலட்சியம்

யாழில் கவலைப்பட்டு

கண்ணணீர் விட்டு

பிரயோசனமாக என்ன

செய்யலாம் நாம்

பதிலுக்கு சீறிலக்காவில்

இருந்து வரும் உணவு பொருட்களை

பகீஸ்கரிக்கலாமா?

அல்லது ஒரு குடும்பத்தை ஒருவர்;எள

உங்கள் தெரிந்த, பழகிய நண்பர்களைத்

தொடர்பு கொண்டு வெளிநாட்டில் ஒருவருமே

இல்லாத குடும்பங்களுக்கு உதவிசெய்யலாமா?

எப்படி? எப்படி?.. கண்ணணீர் விட்டு

எமது விடுதலையை அதில் கரைத்துவிட்டு

போகாமல் காப்பாற்றுவது??

யாழ் உறவுகளே யாசிக்கின்றேன்

உங்கள் பதிலை. :idea:

ம்...

கண்ணீரின் கதை...

கொட்டகை போடாமல்...

கோரிக்கை கேட்காமல்....

பல நூறு திலீபன்கள்...

பொன்னைத்திருடவில்லை...

பணப்பையைத்திருடவில்லை....

பசிக்காக...

பிள்ளையின் பசிக்காக..

தந்தை அரிசியைத் திருடியிருக்கிறான்...

ஐ.நாவும்...

மனிதநேயம் பேசும்

உலக நாடும்...

அறிக்கையோடு சரி...

அழுத்தங்கள் போதவில்லை...

அழுத்தங்கள் உண்டெனிலும்...

அது..கொதித்திருக்கும் புலிகளுக்கும்..

உதவுகின்ற தமிழருக்கும்...

சிங்களவன்..

அவன் இட்ட திட்டங்கள்...

செப்பனவே நடக்கிறது...

புனர்வாழ்வுக்கழகம்..

நிதிமுடங்க...நிர்க்கதியில் நிற்கிறது..

ஏ9 பாதை..மூடியே கிடக்கிறது..

மக்களுக்கு பொருளில்லை...

மறித்துவிட்டு..

இராணுவதளபாடம்...

இறக்கும்வேலை தொடர்கிறது..

உணவில்லை..

ஒளியில்லை..சிறார்

கல்விக்கும் வழியில்லை..

அன்றாடங்காய்ச்சிக்கு...

தொழிலுக்கு அனுமதியில்லை..

இல்லை...இல்லை..இல்லை...

தமிழனுக்கு எதுவுமே

இல்லை...

ஐயோ...

மீளுமா இன்பக்காலங்கள்..

என்றிருந்த எனக்கு...தமிழன்

துன்பம் போகுமா....

என்றிருக்கிறது..

இன்னும் நாங்கள்

பட்டதையும்..

பழைய சில கசப்புகளையும்..

சொல்லி சொல்லி

புறம் மட்டும்

பேசிக்கொண்டிருக்கிறோம்...

கொடிய ஒரு அரக்கினிடம்..

சிக்குண்டு நம்தேசம்..

விடை காண விளைகின்ற

விடுதலை போராட்டம்...

போகாட்டிலும்..

தமிழா...

புறம் மட்டும் பேசாதே...

தமிழா...

புறம் மட்டும் பேசாதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறம் பேசவில்லை - நானே

புதுமை என

அறம் பேச வந்தேன்

அடுத்தது என்ன செய்யவிளையவென.. :shock:

ஐயோ கோபிதா..

நான் உங்களை சொல்லவில்லை..

உங்கள் ஆக்கம் நன்று..

நான் சொன்னது சில புறம் பேசும்... சகோதரருக்கு..

என்ன கொடுமை இது.. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். கேள்விப்பட்ட நேரம் முதல் சரியான மன வேதனையாய் இருக்கிறது.

கானல் நீர் போன்ற சமாதான மாயைகுள்ளே இருந்தால் கட்டிய கோவனத்தையும் உருவி கொடுக்கும் கூட்டம் யாழ்ழில்

சிலவேலை சமாதானம் வரவில்லை என்றால் பனங்காய்யும் சாப்பிடவும் வேண்டிவரும் ஆனா நாங்கள் சமாதானம் பேச சொல்லி போதிப்போம் :roll:

பனங்காயின் சாற்றில் கோவனமும் தோய்க்கவேண்டி வரும் :?: ஆனா நாங்கள் சமாதானம் வர சமாதானமாக குரல் கொடுப்போம் :idea:

உங்கள் சுய கொடுர முகங்கள் வெளி வந்தால் கூட்டில் இருந்து குருவையை சுயமாக தடா(வெளியேற்றி) போடுங்கள்

அப்போதும் சமாதானம் வரும் சமாதான்மாக :!:

ஆனா பனங்காயயை கைவிட்டு விடவேண்டாம் பனங்காய்யால் தான் எமது அழுக்கு துணிகளை சமாதான படுத்த முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் விகடகவி

தவறுதலாக விளங்கிக்கொண்டதற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானல் நீர் போன்ற சமாதான மாயைகுள்ளே இருந்தால் கட்டிய கோவனத்தையும் உருவி கொடுக்கும் கூட்டம் யாழ்ழில்

சிலவேலை சமாதானம் வரவில்லை என்றால் பனங்காய்யும் சாப்பிடவும் வேண்டிவரும் ஆனா நாங்கள் சமாதானம் பேச சொல்லி போதிப்போம் :roll:

பனங்காயின் சாற்றில் கோவனமும் தோய்க்கவேண்டி வரும் :?: ஆனா நாங்கள் சமாதானம் வர சமாதானமாக குரல் கொடுப்போம் :idea:

உங்கள் சுய கொடுர முகங்கள் வெளி வந்தால் கூட்டில் இருந்து குருவையை சுயமாக தடா(வெளியேற்றி) போடுங்கள்

அப்போதும் சமாதானம் வரும் சமாதான்மாக :!:

ஆனா பனங்காயயை கைவிட்டு விடவேண்டாம் பனங்காய்யால் தான் எமது அழுக்கு துணிகளை சமாதான படுத்த முடியும்

என்ன வடிவேல் பனங்காயை இந்தளவுக்கு பிழிகிறீர்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.