Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுநரை மாற்றுவதே மக்களின் விருப்பம்: யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
-
05 செப்டம்பர் 2014

 

 



மக்களின் விருப்பத்திற்கு இணங்க வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். எனினும் மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்துள்ளதால் வடக்கு மாகாண சபை சீராக இயங்காமல் இருக்கிறது என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று காலை (05.09.14) 9.15 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் அன்ரூ மானிடனம் வடக்கின் தற்போதைய ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதனை தெளிவாக யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பலவித முட்டுக்கட்டைகளை விதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தரப்பை சேர்ந்த ஒருவர் ஆளுநராக இருப்பதனை பொதுமக்கள் விரும்பவில்லை என தெரிவித்த ஆயர் இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111288/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரை மாற்றுவதே மக்களின் விருப்பம்

 

 

ஆளுநரை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது.... :(

சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கும் யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு  ஒன்று நடைபெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் யாழ் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
 

jaffna_bishop_us_emabssy.1.png

வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை, ஆளுநர் பதவியில் இருந்து மாற்றாமல் தொடர்ந்து அவரை இரண்டாவது தடவையாக நியமித்து வடமாகாண சபையின் செயற்பாடுகளை செய்யவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக அவருக்கு எடுத்துக்கூறினேன்.
 

jaffna_bishop_us_emabssy.2.png

தமிழ் மக்கள் மத்தியில் திருப்பம் ஒன்று கட்டாயம் வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

வடமாகாண சபைக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரும் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் அன்ரு மன், தனக்கு தெரிவித்ததாக ஆயர் தெரிவித்தார். http://www.pathivu.com/news/33650/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு சபை சீராக இயங்காமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – யாழ்.ஆயர்!

 

thomas-300x236.jpgமக்களின் விருப்பத்திற்கு இணங்க வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். எனினும் மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்துள்ளதால் வடக்கு மாகாண சபை சீராக இயங்காமல் இருக்கிறது என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று காலை (05.09.14) 9.15 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் அன்ரூ மானிடனம் வடக்கின் தற்போதைய ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதனை தெளிவாக யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பலவித முட்டுக்கட்டைகளை விதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தரப்பை சேர்ந்த ஒருவர் ஆளுநராக இருப்பதனை பொதுமக்கள் விரும்பவில்லை என தெரிவித்த ஆயர் இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

http://tamilleader.com/?p=40599

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரை மாற்றுவதே மக்களின் விருப்பம்

 

 

ஆளுநரை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது.... :(

விசுகர்,

அப்படியானால் ஆளுனராக இவரையே முழு ஆயுள் காலத்துக்கும் நியமிக்க கோருமாறு விக்கியாரை நீங்கள் கேட்டுக்கொள்ளலாமே?

விசுகர்,

அப்படியானால் ஆளுனராக இவரையே முழு ஆயுள் காலத்துக்கும் நியமிக்க கோருமாறு விக்கியாரை நீங்கள் கேட்டுக்கொள்ளலாமே?

ஆளுநரை மாற்றுவதால் பிரயோசனம் இல்லை. ஆளுநரின் அதிகாரங்களை மட்டும் படுத்தி மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சரின் அதிகாரத்தை உறுத்மடுத்துவே நல்லது என்ற பொருள்படவே விசுகு கருத்து தெரிவித்தார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

அப்படியானால் ஆளுனராக இவரையே முழு ஆயுள் காலத்துக்கும் நியமிக்க கோருமாறு விக்கியாரை நீங்கள் கேட்டுக்கொள்ளலாமே?

 

 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்பார்கள்

 

ஒரு வலுவற்ற

சுயமில்லாத பொருள்மீது அதிக  கவனம் குவிகிறது

நன்றாக இந்தக்கோரிக்கையை  வளர்த்துவிட்டு

அதை எடுத்துவிட்டு

தமிழரின்  பெரும் கேள்வி  ஒன்றை 

கோரிக்கை ஒன்றை  நிறைவேற்றியுள்ளேன் என மகிந்தவால் சில காலங்களை

தமிழரை அழிக்க இன்னும் எடுத்துக்கொள்ள இது வழி தருமேயன்றி..

 

எய்தவனுக்கு எந்த பலயீனத்தையும் தராது......

 

தலைகளைத்தட்டியே  எதுவும் நடக்கவில்லை என்பது வரலாறு......... :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.