Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிய்ந்த செருப்புடன், சீன அதிபரை சந்தித்த அமைச்சர்.(படம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17-1410957319-srlanaks-minsister-600.jpg17-1410957376-minister-srilanka-600.jpg

 

17-1410957403-minister-srilanaks-124-660

 

பிய்ந்த செருப்புடன், சீன அதிபரை சந்தித்த இலங்கை அமைச்சர்.

 

கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ஒரு இலங்கை அமைச்சர், அதுவும் அந்த நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் பிய்ந்த ஷூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்ததையும், உட்கார்ந்ததையும் வெளிநாட்டு புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கியுள்ளனர்.

 

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வந்த இடத்தில் அவரது ஷூவின் கீழ்ப்பகுதி பிய்ந்து போய் விட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் பிய்ந்து போன ஷூவுடனேயே அவர் சீன அதிபருடன் கை குலுக்கினார், ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

 

அந்த அமைச்சரின் பெயர் டி.பி.ஏகநாயகே. இவர் இலங்கை அரசில் கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார்.

 

சீனப் பிரதமர்...

இலங்கைக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்றிருந்தார். அப்போது இலங்கை அதிபரின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

 

2 ஒப்பந்தங்கள்...

கையெழுத்தான ஒப்பந்தங்களில் ஒன்று - இரு நாட்டு பத்திரிகை, பிரசுரம், ரேடியோ, திரைப்படம் மற்றும் டிவி ஆகியவற்றில் இரு நாடுகளிடையிலான கூட்டுறவு தொடர்பானதாகும்.

 

அன்னநடை...

இந்த ஒப்பந்தத்தில் சீன அமைச்சரும், ஏகநாயகேவும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர் எழுந்து வந்தபோது மிக மிக மெதுவாக, காலை ஒரு மாதிரி இழுத்து வைத்தபடி நடந்து வந்தார். இது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

பிய்ந்து போன ஷூ...

ஆனால் அவர் அப்படி அன்ன நடை போட்டு வந்ததற்குக் காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. அதாவது பிய்ந்து போன ஷூவுடன் அவர் வந்திருந்தார். இதனால் சரியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஷூ இல்ல... ஷூ மாதிரி.

ஷூவின் கீழ்ப்பகுதி மட்டும் பிய்ந்து போயுள்ளது. இதனால் ஷூ போட்டது போலவே இருக்கிறது. ஆனால் ஷூவுக்குக் கீழே கால் நன்றாக தெரிகிறது. அவர் வேட்டி கட்டி வந்திருந்தாதல் ஓரளவு மறைக்க முடிந்தது. ஆனால் முழுமையாக மறைக்க முடியாமல் போய் விட்டது.

 

பேஸ்புக்கில்...

அமைச்சரின் இந்த கோலத்தை இலங்கையில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்து அதை தங்களது பேஸ்புக்கில் போட்டு விட்டனர்.

 

தர்மசங்கடத்தில் அமைச்சர்...

இப்போது அமைச்சர் ஏகநாயகேவின் மானம் கப்பலேறி உலகம் பூராவும் பரவி விட்டது. இலங்கை அரசுக்கும் பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17-1410957548-foreign-correspondents-ass17-1410957452-srilanaks-s1-minister-600.

 

:D  :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாகவே காத்தோட்டத்துக்காக இப்பிடித்தான் செருப்புப் போட்டுக்கொண்டு திரிகிறவர் போல

  • கருத்துக்கள உறவுகள்

Made in china செருப்போட உங்க தயாரிப்பின் கேவலத்த பாருங்க என்று காட்ட அமைச்சர் வந்து இருக்கார் சீன அதிபர் பாக்கட்டும் என்று..

Edited by SUNDHAL

17-1410957548-foreign-correspondents-ass17-1410957452-srilanaks-s1-minister-600.

 

:D  :lol:

இந்த அமைச்சருக்குள் கேத்தாவின் உளவாளி ஒருவர் ஒளிந்து இருக்கிறார் போல  :D

சிலவேளை யாரும் சாத்திரி சொல்லியிருப்பானோ நீ வெறும் காலோடு தான் திரியோனும் என்று?

ஒரு சப்பாத்து பிஞ்சிருந்தாலாவது வார வழியிலே பிஞ்சுட்டுது அவசரமாக்கும் என்று எடுக்கலாம் ...

இங்கே இரண்டுமே பிஞ்சிருக்குது...இந்தாள் ஒரு கிறுக்கு பயல் போல இருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைச்சருக்குள் கேத்தாவின் உளவாளி ஒருவர் ஒளிந்து இருக்கிறார் போல  :D

 

வேட்டிக்குள்.... ஒரு குள்ளமான மனிதர் ஒளிந்திருக்கிறார் என்று சொல்கிறீர்களா... அஞ்சரன். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை யாரும் சாத்திரி சொல்லியிருப்பானோ நீ வெறும் காலோடு தான் திரியோனும் என்று?

ஒரு சப்பாத்து பிஞ்சிருந்தாலாவது வார வழியிலே பிஞ்சுட்டுது அவசரமாக்கும் என்று எடுக்கலாம் ...

இங்கே இரண்டுமே பிஞ்சிருக்குது...இந்தாள் ஒரு கிறுக்கு பயல் போல இருக்கு....

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், அமைச்சரவையிலும்.....

ஒரு அமைச்சர் சட்ட சபையில் ஜெயலலிதா அமர்ந்திருக்கும் நாட்களில், தான் செருப்பு அணிந்து வரமாட்டேன் என்று, சட்டசபைக்கு வெறுங்காலுடன் வந்த போது... ஜெயலலிதா அதனை கண்டித்தவர்.

 

அதே போன்ற, பக்தியை.... இந்த அமைச்சரும் மகிந்தவுக்கு கொடுத்திருக்கலாம் என எண்ணுகின்றேன்.

அது... வெளிநாட்டு பத்திரிகையாளர் கண்ணில் பட்டு, களேபரமாகி விட்டது.

 

உள்ளூர் பத்திரிகையாளர் கண்ணில் இந்தக் காட்சி, முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டிருந்தாலும்,  அதனை வெளியிட துணிந்திருக்க மாட்டார்கள் என எண்ணுகின்றேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17-1410957376-minister-srilanka-600.jpg

 

:D இன்றைய படம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

17-1410957376-minister-srilanka-600.jpg

 

:D இன்றைய படம்  :D

 

 

சிறி  லங்காவின் இன்றைய நிலைக்கு இந்தப்படம் சரியாகப் பொருந்துகின்றது

 

  • கருத்துக்கள உறவுகள்

கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க குறித்து தற்போது ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. சீன ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்திருந்தபோது அந்நாட்டுடன் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்ளும் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.

இதன்போது அமைச்சரின் காலணியை அவதானித்த புகைப்பட ஊடகவியலாளர் அதனை பக்குவமாக படம் பிடித்து ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளார். அதில் அமைச்சர் ஏக்கநாயக்க அணிந்திருந்த இரண்டு பாதணிகளும் அடியில் கிழிந்து காணப்பட்டன.

பாதணிக்கு வௌியில் அமைச்சரின் பாதம் தெரிகிறது. இது குறித்து ஊடகங்கள் பலவிதமான கருத்துக்களை விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஆனால் அதில் உள்ள உண்மை தன்மையை யாரும் வௌிக்கொணரவில்லை. அந்த வேலையை தற்போது உங்கள் ‘தமிழ்பாஸ்ட்நியூஸ்’ இணையம் செய்கிறது.

பாராளுமன்றிற்கு வரும் அரசாங்கத்தின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் பாதணி அணிவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மற்றும் டி.பி.ஏக்கநாயக்க ஆகியவர்கள் அதில் அடங்குவதோடு கலாசாரத்துறை பிரதி அமைச்சரும் அவ்வாறே செய்கிறார். வாழ்நாள் முழுக்க பாதணி அணியாமல் இருப்பது இவர்கள் மூவரதும் வேண்டுதல் என தெரியவருகிறது.

சீன தூதுக்குழு முன் வெறும் காலுடன் சென்று நின்றால் அது ஆரோக்கியமாக இருக்காது என்பதற்காகவே அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க பாதங்கள் கீழே படும்படி பாதணி அணிந்திருந்ததாக புதிய தகவல் வந்துள்ளது. எனினும் அமைச்சர் கிழிந்த பாதணி அணிந்து சென்றார் என ஊடகங்கள் அசிங்கப்படுத்தி வருகின்றன.

இதேவேளை, தான் அணிந்திருந்த பாதணி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதென கூறியுள்ள அமைச்சர், அந்த நிகழ்விற்கு பாதம் கீழே படும்படி சென்றது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

http://tamilfastnews.com/gossip/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

 

259335.jpg

 

 

 

உலக வங்கியின் தலிவராக இருந்த போது துருக்கி பள்ளிவாசல் ஒன்றினுள் போகும் போது பாதணிகளைக் களட்டி உள்ளார் போல். அப்போது அவரின் பஞ்சம் வெளியே தெரிந்தது.
 
உலக வங்கி தலிவராக முதல் அமெரிக்காவின் பாதுகாப்பு உப காரியதரிசி.
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.