Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ருசி நிறைந்த ராமநாதபுரம்: நண்டுக்கால் சூப்

Featured Replies

soup_2004845h.jpg
 

ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா.

என்னென்ன தேவை?

நண்டு கால்கள் குறைந்தது 10

ரசப் பொடி - மூன்று டீஸ்பூன்

புளி, எலுமிச்சை - தேவையான அளவு

பூண்டு - 1

ம‌ஞ்ச‌ள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 4

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்யவும். பின்னர் அ‌ம்‌மி‌க்கல் அ‌ல்லது ம‌த்தில் வைத்து ஓடுகள் உடையும் அளவிற்குத் தட்டிக்கொள்ள வேண்டும். புளியைத் தண்ணீர் அல்லது தேங்காய்ப் பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நசு‌க்‌கி வை‌த்து‌க்கொ‌ள்ள வேண்டும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் தயாராக உள்ள பு‌ளி‌க்கரைச‌லுடன் ரச‌‌ப்பொடி, ம‌ஞ்ச‌ள் பொடி, உப்பு, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டுக் கா‌ல்க‌ள், பூ‌ண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

நண்டுக் கால்கள் நன்றாக வெந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். சுடச் சுட இந்த சூப்பைக் குடித்தால் ஜலதோஷம் காணாமல் போகிவிடும்.

 

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/article6217290.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

crab_bl_sa.jpg

 

நண்டின் பத்துக் காலையும், சூப்புக்குள் போட்டுவிட்டு...
அதன் வயிற்றுப் பகுதியை... என்ன செய்வது?crab.gif

 

  • தொடங்கியவர்

ருசி நிறைந்த ராமநாதபுரம்: காரல் மீன் சொதி

 

 

 
meen_2004888h.jpg
 

மீனவ நாட்டார் மருத்துவத்தில் பெண்கள் மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது இன்றும் தமிழகக் கடலோரக் கிராமங்களில் பின்பற்றப்படுகிறது. அதுபோல மீன் சொதிகளில் காரல் மீன் சொதி ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்றது.

என்னென்ன தேவை?

காரல் - அரை கிலோ

தேங்காய் - அரை மூடி

பச்சை மிளகாய் - 3

சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்

எலுமிச்சம் பழம் - 1

சின்ன வெங்காயம் - 5

கறிவேப்பிலை, உப்பு எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி, இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய்ப் பாலுடன் சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்யப்பட்ட காரல் மீன் இவற்றுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாகக் கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழத்தை ருசிக்கு ஏற்பப் பிழியவும். தாளிப்புச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு மூன்றையும் சேர்த்துத் தாளித்து, சொதியில் ஊற்றினால் சுடச் சுட காரல் மீன் சொதி தயார்.

 

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF/article6217371.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

 

crab_bl_sa.jpg

 

நண்டின் பத்துக் காலையும், சூப்புக்குள் போட்டுவிட்டு...

அதன் வயிற்றுப் பகுதியை... என்ன செய்வது?crab.gif

 

இப்படிச் செய்யலாம்!

 

காரை நகர் சீ நோர் நிறுவனத்துக்கு, ஒரு முறை வங்கிக்கடன் கொடுத்த போது, எங்களுக்கு வைத்த 'பார்டியில்' இதைச் செய்து தந்தார்கள்... சுவை..அருமை!

 

அத்துடன் நண்டு கடிக்கிற பிரச்சனையும் இல்லை! தேங்காய்ச் சிரட்டையும் தேவையில்லை!

 

Chesapeake-Stfd-Crab-in-Nat.jpg

 

soup_2004845h.jpg
 

ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா.

என்னென்ன தேவை?

நண்டு கால்கள் குறைந்தது 10

ரசப் பொடி - மூன்று டீஸ்பூன்

புளி, எலுமிச்சை - தேவையான அளவு

பூண்டு - 1

ம‌ஞ்ச‌ள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 4

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்யவும். பின்னர் அ‌ம்‌மி‌க்கல் அ‌ல்லது ம‌த்தில் வைத்து ஓடுகள் உடையும் அளவிற்குத் தட்டிக்கொள்ள வேண்டும். புளியைத் தண்ணீர் அல்லது தேங்காய்ப் பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நசு‌க்‌கி வை‌த்து‌க்கொ‌ள்ள வேண்டும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் தயாராக உள்ள பு‌ளி‌க்கரைச‌லுடன் ரச‌‌ப்பொடி, ம‌ஞ்ச‌ள் பொடி, உப்பு, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டுக் கா‌ல்க‌ள், பூ‌ண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

நண்டுக் கால்கள் நன்றாக வெந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். சுடச் சுட இந்த சூப்பைக் குடித்தால் ஜலதோஷம் காணாமல் போகிவிடும்.

 

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/article6217290.ece

 

 

எனக்கு நல்ல தடுமல் பிடிச்சு இருக்கும் நேரத்தில் இதனைப் போட்டுள்ளீர்கள். இன்று நண்டு கடைகளில் வாங்கக் கூடியதாக இருந்தால் இன்றே இரவு செய்து பார்க்கப் போகின்றேன்.

 

நண்டுக் கால்கள் நன்றாக வெந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். சுடச் சுட இந்த சூப்பைக் குடித்தால் ஜலதோஷம் காணாமல் போகிவிடும்.

 

 

கொத்தமல்லி இலை என்று வந்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

 

என்னென்ன தேவை?

காரல் - அரை கிலோ

 

காரல் மீன் என்பது 'சூவாப் பாரையா'? 

இன்றிரவு நண்டு ரசம் செய்து பார்த்தேன். நன்றாக வந்தது.

 

மூன்று நண்டுகள் வாங்கி கால்களை உடைத்து அவற்றை கொஞ்சம் நசுக்கி போட்டு விட்டு மிஞ்சிய வயிற்றுப் பகுதிகளையும் அப்படியே (நசுக்காமல்) போட்டு செய்தேன். கொஞ்சம் வெங்காயம் மற்றும் மிளகும் போட்டனான். ரசப் பொடி மனைவி செய்து தந்தார் (கடையில் ரசப் பொடி வாங்குவதில்லை). புளிக்கரைசலுடன் தேவையான அளவு தண்ணீரும் விட வேண்டும். தேசிக்காய் தேவைப்படாது.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

crab_bl_sa.jpg

 

நண்டின் பத்துக் காலையும், சூப்புக்குள் போட்டுவிட்டு...

அதன் வயிற்றுப் பகுதியை... என்ன செய்வது?crab.gif

 

சிறித்தம்பி! வயிற்றுப் பகுதியிலை தானே முழுவிசயமும் புதைஞ்சு கிடக்கு... :D

  • கருத்துக்கள உறவுகள்
தமிழக 'receipe' வகைகளில் மிளகாய்த் தூள், மசாலாத் தூள், அந்த தூள், இந்த தூள் என்பார்கள்.
 
நமது தூள், மிளகாய்த் தூள் என்று கூறப் பட்டாலும், சகலமும் விகிதாசாரப் படி சேர்த்த ஒரு சிறப்பான கலவை ஆகையால், அதை மட்டும் போட்டால் போதும்.
 
இது எனது சமையல் அனுபவம்.
 
ஒரு விடயத்தினை கவனித்தீர்களா?
 
ஈழத் தமிழர்கள், மிளகாயினை, ஆசியாவுக்கு அறிமுகப் படுத்திய போர்த்துக்கேயர், மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்கு உள்ளானவர்கள். எமது சமையலில் அவர்களது பங்கு உண்டு. அதே வேளை தமிழகம், பிரித்தானிய ஆட்சி வரும் வரை சுதந்திரமாக வாழ்ந்தவர்கள்.  :rolleyes:
 
மிளகாய் வர முதல் நாம் மிளகில் உறைப்புக் கண்டவர்கள்.
 
ருசிகளில் உறைப்பு என்பது உண்டு என்பது ஐரோப்பாவில், மிளகு, போர்த்துக் கேயரால் கொண்டு வரும் வரை தெரியாது. அதற்கு முன்னர் இத்தாலியர்கள், தரை மார்க்கமாக அராபிய வர்த்தகர்களிடம் இருந்து, தங்கம் கொடுத்து, வாங்கிய மிளகினை அரச, பிரபு குடும்பங்களுக்கு மட்டுமே வித்தார்கள். 
 
ஸ்பானியர்கள் தென் அமரிக்காவில் இருந்து மிளகாயைக் கொண்டு வர, போர்த்துக் கேயாரின் மிளகு வியாபாரம் படுக்க, அவர்கள் மிளகாயை ஆசியாவுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.
 
   :icon_idea:

Edited by Nathamuni

எங்கள் ஊரில் நண்டுக்கால் சூப் செய்யும்போது மிளகாய்க்குப் பதில் மிளகுதான் உபயோகப்படுத்துவார்கள். மிளகும் பூண்டும் தான் முக்கியமான பொருட்கள்....
 
பாக்யராஜ் படத்தில் முருங்கைக்காயை  காம ஊக்கியாகச் சொல்வது போல எங்கள் பகுதிகளில் நண்டுக்கால் சூப்பை சொல்வார்கள் :)

ஒரு மனுசன் மினக்கெட்டு நண்டு ரசம் செய்து பார்த்துட்டு அதைப் பற்றி நல்லா இருக்கு என்று எழுதியிருகின்றான்..அதுக்கு ஒரு நன்றி...ம்ஹும்...

 

 

 
 
பாக்யராஜ் படத்தில் முருங்கைக்காயை  காம ஊக்கியாகச் சொல்வது போல எங்கள் பகுதிகளில் நண்டுக்கால் சூப்பை சொல்வார்கள் :)

 

 

அடடா...அதுதானா விடயம்..அதான் முந்தநாள் இரவு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அடடா...அதுதானா விடயம்..அதான் முந்தநாள் இரவு....

 

 

முந்தநாள் இரவு!!!!!!!........என்ன நடந்தது???...என்ன நடந்தது?????....என்ன நடந்தது?????  :o dogrun.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.