Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளி...!

Featured Replies

            
பெண்ணே.. பெண்ணே...   காதல் கொண்டேன்
உந்தன் கண்ணில் மின்னல்  கண்டேன்
உன்னால்தானே  தூக்கம் மறந்தேன்
விண் மேகம்போல நானும் மிதந்தேன்

செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...!
வெல்லமாய் இனிக்கிறாய்  மனசுக்குள்ளே...!!  

கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...!
என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! 

 

 

வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...?
காதல் சொல்லித் தருவாயா?
இல்லை... வேண்டாம் என்று மறைவாயா?
என் இதயம் திருடித் தொலைவாயா?   


கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு !
என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு !
நீ அன்றி நான் வாழும்    என் வாழ்வில்
அர்த்தங்கள்  இல்லை என்று... புரிந்துவிடு !

வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட...
இதயம்  சின்னச் சின்னத் தாளமிட...
என் பக்கம் ஓடி நீ வாடி...
உன் மடியில் நான் சாய...!

போகாதே பெண்ணிலவே தூரத் தூர...
என் மீது காதல் சாரல் தூறத் தூற...
நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற...
நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ...
உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம்
அதுதானே என்  வாழ்வின் வண்ணக்கோலம்

 

குறிப்பு:
 

"கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.

 

 

Edited by கவிதை

நீங்களா எடுக்கிறியள் ஆல்பம்? நன்னாயிருக்கு பாட்டு . திலிப் வர்மன் பாடல் வரிகளை போன்று உள்ளது :)

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிதை எப்போதாவது யாழுக்கு வருகின்றீர்கள்.தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளிப்பால் குடிக்க ஆசையாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது கவிதை

  • தொடங்கியவர்

நீங்களா எடுக்கிறியள் ஆல்பம்? நன்னாயிருக்கு பாட்டு . திலிப் வர்மன் பாடல் வரிகளை போன்று உள்ளது :)

 

ஆம்... இது ஒரு கன்னி முயற்சிதான். ஆனாலும்....முடிந்தவரை சிறந்த ஒரு பாடலைத்தர முயற்சிக்கிறோம். வெகுவிரைவில் பாடல் வெளியாகவிருக்கிறது. பாடல் வெளியாகும்போது யாழிலும் பகிர்வேன். கேட்டுவிட்டு உங்கள் நடுநிலையான விமர்சனங்களை முன்வையுங்கள். எமது அடுத்த படைப்புக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி இரா.விஷ்வா :)

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கவிதை எப்போதாவது யாழுக்கு வருகின்றீர்கள்.தொடர்ந்தும் இணைந்திருங்கள்

 

முதல்ல... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா.

 

நேரமில்லை... வேலைப்பழு.... என வேறு எந்தக் காரணமும் நான் யாழுக்கு முன்னர்போல் வராமல் இருப்பதற்கான காரணமில்லை. அதற்கான காரணத்தையும் காரணமானவர்களையும் வெளிப்படையாக  இங்கு சொன்னால், எழுதிய இக்கருத்தும்  காணாமல் போகடிக்கப்படலாம்.

 

முன்பெல்லாம்.... ஒருநாளைக்கு 100 தடவைக்கு மேல்கூட யாழுக்கு வந்து போனதுண்டு. ஆனால்  இப்பொழுது, என் "Book mark" இல் கூட யாழ் இல்லாமல் போய்விட்டது. இது எனக்கு மட்டுமல்ல, இப்படி பல பழைய உறவுகள் யாழுக்கு முன்புபோல் வருவதில்லை. ஏன் ??? எதற்கு...???  யாரால்...???

 

இதற்கான உண்மையான காரணம் என்ன? அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நான் அல்ல.... அப்படி நடப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் தான்.

யாழ் முன்னர்போல்  ஒரு   சூடான கருத்தாடும் களமாக , உறவுகள் மகிழ்வோடு கருத்துக்கள் பரிமாறி  ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டுமாயின்.... அதை  உரியவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இல்லை.... நாம் இப்படித்தான் என்று அடம்பிடித்தால், பரவாயில்லை. அது அவர்களைப் பொறுத்தது.... அவர்கள் விருப்பம்.

 

 

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ரதி அக்கா.

தொடர்ந்தும் இணைந்திருக்கிறேன். நன்றி வணக்கம். :)

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா.

நேரமில்லை... வேலைப்பழு.... என வேறு எந்தக் காரணமும் நான் யாழுக்கு முன்னர்போல் வராமல் இருப்பதற்கான காரணமில்லை. அதற்கான காரணத்தையும் காரணமானவர்களையும் வெளிப்படையாக இங்கு சொன்னால், எழுதிய இக்கருத்தும் காணாமல் போகடிக்கப்படலாம்.

முன்பெல்லாம்.... ஒருநாளைக்கு 100 தடவைக்கு மேல்கூட யாழுக்கு வந்து போனதுண்டு. ஆனால் இப்பொழுது, என் "Book mark" இல் கூட யாழ் இல்லாமல் போய்விட்டது. இது எனக்கு மட்டுமல்ல, இப்படி பல பழைய உறவுகள் யாழுக்கு முன்புபோல் வருவதில்லை. ஏன் ??? எதற்கு...???  யாரால்...???

இதற்கான உண்மையான காரணம் என்ன? அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நான் அல்ல.... அப்படி நடப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் தான்.

யாழ் முன்னர்போல் ஒரு சூடான கருத்தாடும் களமாக , உறவுகள் மகிழ்வோடு கருத்துக்கள் பரிமாறி ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டுமாயின்.... அதை உரியவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இல்லை.... நாம் இப்படித்தான் என்று அடம்பிடித்தால், பரவாயில்லை. அது அவர்களைப் பொறுத்தது.... அவர்கள் விருப்பம்.

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ரதி அக்கா.

தொடர்ந்தும் இணைந்திருக்கிறேன். நன்றி வணக்கம். :)

இதற்குள் சம்மந்தப்பட்டவர்கள் நிர்வாகம் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்குள் சம்மந்தப்பட்டவர்கள் நிர்வாகம் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?

 

ஆரப்பா அந்த ஆக்கள்???? தனிமடல்லையாவது சொல்லுங்கோப்பா? தலை வெடிக்கப்போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா.

 

நேரமில்லை... வேலைப்பழு.... என வேறு எந்தக் காரணமும் நான் யாழுக்கு முன்னர்போல் வராமல் இருப்பதற்கான காரணமில்லை. அதற்கான காரணத்தையும் காரணமானவர்களையும் வெளிப்படையாக  இங்கு சொன்னால், எழுதிய இக்கருத்தும்  காணாமல் போகடிக்கப்படலாம்.

 

முன்பெல்லாம்.... ஒருநாளைக்கு 100 தடவைக்கு மேல்கூட யாழுக்கு வந்து போனதுண்டு. ஆனால்  இப்பொழுது, என் "Book mark" இல் கூட யாழ் இல்லாமல் போய்விட்டது. இது எனக்கு மட்டுமல்ல, இப்படி பல பழைய உறவுகள் யாழுக்கு முன்புபோல் வருவதில்லை. ஏன் ??? எதற்கு...???  யாரால்...???

 

இதற்கான உண்மையான காரணம் என்ன? அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நான் அல்ல.... அப்படி நடப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் தான்.

யாழ் முன்னர்போல்  ஒரு   சூடான கருத்தாடும் களமாக , உறவுகள் மகிழ்வோடு கருத்துக்கள் பரிமாறி  ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டுமாயின்.... அதை  உரியவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இல்லை.... நாம் இப்படித்தான் என்று அடம்பிடித்தால், பரவாயில்லை. அது அவர்களைப் பொறுத்தது.... அவர்கள் விருப்பம்.

 

 

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ரதி அக்கா.

தொடர்ந்தும் இணைந்திருக்கிறேன். நன்றி வணக்கம். :)

 

வணக்கம்  தம்பி கவிதை..

நாற்சந்தியில் ஒரு திறந்து எழுதவும்...

இவ்வாறு எழுதுவதால் எதுவுமே புரியவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா அந்த ஆக்கள்???? தனிமடல்லையாவது சொல்லுங்கோப்பா? தலை வெடிக்கப்போகுது.. :D

நிழலியாக இருக்கும் என்பது எனது ஊகம்...ஊகம் என்று சொல்லி விட்டேன் பின்னர் சண்டைக்கு வாறேல்ல

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  தம்பி கவிதை..

நாற்சந்தியில் ஒரு திறந்து எழுதவும்...

இவ்வாறு எழுதுவதால் எதுவுமே புரியவில்லை....

 

எனக்கே புரிவது உங்களுக்குப் புரியவில்லையா அண்ணா :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.