Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா டெஸ்ட்& ஒரு நாள் போட்டி தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்

தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து: இலங்கை படுதோல்வி
 

 

இலங்கைக்கு எதிரான 6ஆவது ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றது. முதல் 5 போட்டிகள் முடிவில், நியூசிலாந்து அணி 3-1 என, முன்னிலையில் இருந்தது.

 

இந்நிலையில் தொடரை தீரமானிக்கும் தீர்க்கமான போட்டி டனேடினில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக கனே வில்லியம்சன் 97, ரோஸ் டெய்லர் 96 ஓட்டங்களை பெற்றதோடு சதங்களையும் தவறவிட்டனர். மேலும் குப்டில் 28, கொரி ஹெண்டர்சன் 40 ஹெலியட் 21 ஓட்டங்களை பெற்றனர்.

 

இலங்கை அணியின் பந்து வீச்சில் தம்மிக்க பிரசாட் 2 விக்கெட்டுகளையும் ஹேரத், திசர பெரேரா மற்றும் டில்சான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்ந்து 316 என்ற கடின இலக்கை தொடுவதற்கு முயற்சித்த இலங்கை அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியை தழுவி தொடரை பறிகொடுத்தது.

 

துடுப்பாட்டத்தில் குமார் சங்;கக்காரவை தவிர யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. குமார் சங்கக்கார 81 ஓட்டங்களை பெற்றார். மேலும் திரிமான 29, டில்சான் 21, கருணாரட்ன 26 ஓட்டங்களை பெற்றனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சில் திறமையாக செயற்பட்ட கொரி ஹெண்டர்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 4-1 என தொடரை கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

 

http://www.virakesari.lk/articles/2015/01/25/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF

  • Replies 96
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா,கோவிந்தா,கோவிந்தா :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணியின் பந்துவீச்சு சுத்தம். பெரேராவுக்கு கடந்த இரு போட்டிகளிலும் செமை அடி. 10 ஓவர்களில் 93, 90 ஓட்டங்கள் என்று அள்ளி வழங்கியிருக்கிறார். சங்கக்காரவும், டில்ஷானும் மூன்று போட்டிகல் விளையாடினால் ஒருபோட்டியில் ஓட்டங்கள் எடுப்பதுடன் கடமை முடிந்தது என்று நினைக்கிறார்கள் போலும். மற்றையவர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 11 பேரைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

 

கருணாரத்ன..ஐயோ, ஐயோ. டெஸ்ட் போட்டியில் 100 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்கும் அவரை ஒருநாள்ப் போட்டிகளில் ஆரம்ப ஆட்டக்காரராகக் களம் இறக்கியிருக்கிறார்கள். அவருக்கு என்ன போட்டி விளையாடுகிறோம் என்றுகூடத் தெரியவில்லை போலிருக்கிறது.ஆறுதலாக தடவித் தடவி 30 பந்துகளில் 6 அல்லது 7 ஓட்டம் எடுத்துக்கொண்டு சந்தோஷமாக ஆட்டமிழந்து போகிறார்.

 

இவரைப் போலவே இன்னும், திரிமான, சந்திமால், மெண்டிஸ், பெரேரா என்று சிலர் இருக்கிறார்கள். எல்லோருமாகச் சேர்ந்து 10 அல்லது 12 ஓட்டங்கள் எடுத்தால் போதுமென்று நினைத்துவிட்டார்களோ என்னவோ, முதல் 4 அல்லது 5 விக்கெட்டுக்கள் 200 ஓட்டங்களுக்கு (அப்படி அதிசயமாக நடந்தால்), வீழ்ந்துவிட மீதி 5 பேரும் இன்னுமொரு 10 ஓட்டங்களைச் சேர்ந்து கும்பலாக அடித்துவிட்டு போட்டியை வேளைக்கே முடித்துக் கொள்கிறார்கள். பாவம், நியுசிலாந்து அணிக்கு உலகப் போட்டியில் நன்றாக விளையாடுவதற்கு இப்போதே நல்ல ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்தார்களோ என்னவோ??

 

நியுசிலாந்து அணியோ விறைத்துப் போய் நிற்கிறார்கள். உலகப் போட்டி வருகிறது, யாருடனாவது சீரியசான போட்டிகள் விளையாடலாம் என்று இவர்களை அழைத்தால், சிறிலங்கா அணியில் எவருமே போட்டிக்கு வருகிறார்கள் இல்லையே என்கிற கவலை அவர்களுக்கு. இவர்களுக்குக் கொடுக்கும் அடியை வைத்துக்கொண்டு உலகப் போட்டிக்குப் போனால் அங்கே மற்றைய அணிகள் தம்மைப் பந்தாடிவிடுமோ என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. அதனால், இடைக்கிடை சிறிலங்கா அணிக்கு விட்டுக் கொடுத்து விளையாடிப் பார்க்கிறார்கள். சரி, இன்றைக்கு 100 ஓட்டங்களுக்கு முன்னரே 4 விக்கெட்டுக்களை நாங்கள் இழக்கிறோம், நீங்கள் இந்தமுறையாவது  எங்களுக்குச் சமமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது விளையாடுங்கள் என்று கொடுத்தால், அந்தப் போட்டியிலும் நியுசிலாந்து அணி 360 ஓட்டங்களைக் குவிக்க வேண்டியதாகிவிட்டது. இதோ, இந்தக் காட்சைப் பிடியுங்கள் என்று கொடுத்தால், வாங்க மாட்டேன் என்கிறார்கள் சிறிலங்கா பீல்டர்கள். போதாதற்கு ஒரு ஓவரில் 6 பந்துகளுமே புல் டொஸ்களாகப் போட்டால் நாங்கள் எப்படி அடிக்காமலிருப்பது என்று உண்மையான கவலையுடன் கேட்கிறார்கள் லூக் ரொஞ்சியும், கேன் வில்லியன்சனும். போதாக்குறைக்கு, அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் முதல் இருபோட்டிகளிலும் சிறிலங்கா போலர்களைச் சாத்தோ சாத்தென்று சாத்திவிட்டு, இனி என்னால முடியலைடா, நீங்க பாத்துக்கோங்க என்று அணியின் மற்றையவர்களிடன் கொடுக்க, அவர்களும், கூட்டிக்கொண்டு போய் மொத்தோ மொத்தென்று மொத்துகிறார்கள்.

 

7 போட்டிகளடங்கிய தொடரில் 4 - 1 என்று என்கிற அடிப்படையில் நியுசிலாந்து அணி வென்று இருக்கிறது. ஐய்யோ, அடியாதையுங்கோ, எங்களை விட்டால் காணும் என்று காலில் விழாத குறையாக இலங்கையணி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னுமொரு போட்டி மீதமிருக்க, அதில் சிறிலங்கா அணி துடுப்பெடுத்தாடாமல், நியுசிலாந்தணி மட்டுமே ஆடட்டும், நாங்கள் அரைவாசிக் காசுக்கு போட்டியைப் பார்த்துவிட்டு வீடு செல்கிறோம் என்று நியுசிலாந்து ரசிகர்கள் கேட்டிருப்பதாகாத் தகவல் (சும்மா பவுடிக்கி !).

 

இந்த லட்சணத்தில் இவர்களுக்கு ஒரு உலகக் கோப்பைப் போட்டி !!!!!

 

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவின் தோல்வி மற்றும் சங்ககாராவின் எடுப்பு கவுன்டு கொட்டுண்டதில் மிக்க மகிழ்ச்சி. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிமானவை ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னமே (பாடசாலை கிரிக்கட் விளையாடும்போது) புகழ்ந்து தள்ளினார்கள்.. சிங்கன் என்ன செய்யிறார் என்று இருந்து பார்க்க வேண்டியதுதான்.. :D

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

ஜீவன், திசரவின் விளையாட்டு போதாது : ஜயசூரிய
 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களான ஜீவன் மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இன்னும் நிறைய பங்களிப்பை அணிக்கு வழங்க வேண்டும் என தெரிவித்த அணியின் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய, இவர்கள் இருவரும் பந்து வீச்சு துறையை இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய,

 

 

இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமாயின் துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு என சகலத்துறைகளில் முன்னேற்றமடைய வேண்டும். மேலும் நாளை நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் திசர பெரேரா மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் இன்னும் திறமையாக விளையாட வேண்டும்.

குறிப்பாக இருவரும் நியூஸிலாந்துக்கு எதிரான கடந்த போட்டிகளில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் பெரிதாக சோபிக்கவில்லை.

ஒருவேளை சிறப்பாக பந்து வீச முடியாவிட்டால் துடுப்பாட்டத்தில் திறமையை காட்ட வேண்டும். ஜீவன் மெண்டிஸ் 6,7 ஓவர்கள் வீசினால் அது அணிக்கு முக்கியமானதாக இருக்கும். எனவே இருவரும் அணிக்கு கூடுதலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

 

http://www.virakesari.lk/articles/2015/01/28/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Guptil ஐ எல்லாம் எதுக்கு அணியில் வைத்திருக்கினம் எண்டு தெரியேல்லை.

  • தொடங்கியவர்

இந்த Guptil ஐ எல்லாம் எதுக்கு அணியில் வைத்திருக்கினம் எண்டு தெரியேல்லை.

சும்மா பொழுதுபோக்குத்தான் :lol:  ஸ்ரீலங்கா அணியில் கருணாரட்னா மாதிரி <_<

  • கருத்துக்கள உறவுகள்

சங்கக்கார: ஒருவழியா மகிந்தவை கலைச்சு விட்டாச்சு..

ரோன்கி: மைத்திரியையும் கலைக்கிறமாதிரி வந்திடாதே.. :D

  • தொடங்கியவர்

சங்கக்கார: ஒருவழியா மகிந்தவை கலைச்சு விட்டாச்சு..

ரோன்கி: மைத்திரியையும் கலைக்கிறமாதிரி வந்திடாதே.. :D

 

ஹஹா நான் நினைக்கவில்லை அரசியலுக்கு வருவார் என்று

 

  • தொடங்கியவர்

சங்காவின் சாதனை : இலங்கை அணி திரில் வெற்றி
 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டம் காரணமாக இலங்கை அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது.

குமார் சங்கக்காரா ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும், திலகரட்ன டில்சான் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 287ஓட்டங்களுக்கு 6விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்ததுடன்
நியூசிலாந்துக்கு 288 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதலே தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 253ஓட்டங்களை மாத்திரம் பெற்று 35ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

மேலும் இந்தப் போட்டியில் குமார் சங்கக்காரா மற்றுமொரு சாதனையை பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர் என்ற பெருமையை இன்று பதிவு செய்தார். 396 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சங்கக்கார 13580 ஓட்டங்களை குவித்துள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=198863841729254377#sthash.KwEDc8kz.dpuf

  • தொடங்கியவர்

2nhos4i.jpg

 

fu0188.jpg

  • தொடங்கியவர்

நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இலங்கைக்கு வெற்றி
 

 

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக வெலிங்­டனில் இன்று  நடை­பெற்ற ஏழா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக் கெட் போட்­டியில் 34 ஓட்­டங்­களால் இலங்கை வெற்­றி­யீட்­டி­யது.


11ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தின் ஆரம்பப் போட்­டியில் எதிர்­கொள்­ளப்­போகும் நியூ­ஸி­லாந்தை வெற்­றி கொண்­டுள்­ளமை இலங்­கைக்கு ஆறு­த­லையும் உற்­சா­கத்­தையும் கொடுத்­துள்­ளது.

இலங்­கையின் இந்த வெற்­றியில் சிரேஷ்ட வீரர்­க­ளான குமார் சங்­கக்­கா­ரவும் திலக்­க­ரட்ன டில்­ஷானும் பெரும் பங்­காற்­றி­யி­ருந்­தனர். அத்­துடன் இந்தப் போட்­டியில் இலங்கை சார்­பாக பந்து வீச்சில் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆறு பந்­து­வீச்­சா­ளர்­களும் குறைந்­தது ஒரு விக்­கெட்­டை­யா­வது கைப்­பற்­றி­யமை விசே­ட­ம்சமாகும்.


இதேவேளை, இந்தப் போட்டியில் முதலாவது பிடியை எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதி கூடிய ஆட்டமிழப்புகளுக்கு பங்களிப்பு செய்த விக் கெட் காப்பாளர் என்ற பெருமையை சங்கக்கார பெற் றுக்கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் மேலும் ஒரு பிடியை எடுத்ததன் மூலம் 474 ஆட்டமிழப்புகளில் சங்கக்கார பங்களிப்பு செய்துள்ளார். இதற்கு முன் னர் அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் 472 ஆட்ட மிழப்புகளில் பங்களிப்பு செய்து முதலாமிடத்திலிருந்தார்.


இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட இணங்­கிய இலங்கை 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 287 ஓட்­டங்­களைக் குவித்­தது.

துடுப்­பாட்­டத்தில் குமார் சங்­கக்­கார ஆட்­ட­மி­ழக்­காமல் 113 ஓட்­டங்­க­ளையும் திலக்­க­ரட்ன டில்ஷான் 81 ஓட்­டங்­க­ளையும் பெற்­ற­துடன் இவர்கள் இரு­வரும் இரண்­டா­வது விக்­கெட்டில் 104 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணிக்குத் தெம்­பூட்­டினர். தனது 397ஆவது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய குமார் சங்­கக்­கார 21ஆவது சதத்தைப் பூர்த்­தி­ செய்தார்.


இவர்­க­ளை­விட பதில் அணித் தலைவர் லஹிரு திரி­மான்ன (30 ஓட்­டங்கள்), திசர பெரேரா (20 ஓட்­டங்கள்) ஆகி­யோரே ஓர­ளவு திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

நியூ­ஸி­லாந்து பந்­து­வீச்சில் கோரி அண்­டர்சன் 59 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக­்கெட்­க­ளையும் டிம் சௌதீ 50 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.
வழ­மை­யான அணித் தலைவர் ப்றெண்டன் மெக்­க­ல­முக்கு ஓய்வு வழங்­கப்­பட்டு கேன் வில்­லி­ய­ம்சன் தலை­மையில் 288 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து 45.2 ஓவர்­க ளில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 253 ஓட்­டங்­களைப் பெற்று தோல்­வியைத் தழு­வி­யது.

நியூ­ஸி­லாந்து துடுப்­பாட்­டத்தில் கேன் வில்­லி­யம்சன் 54 ஓட்­டங்­க­ளையும் மத்­திய மற்றும் பின்­வ­ரி­சை­களில் லூக் ரொன்சி 47 ஓட்­டங்­க­ளையும் டெனியல் வெட்­டோரி 35 ஓட்­டங்­க­ளையும் கய்ல் மில்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷமிந்த எரங்க 34 ஓட்டங்களுக்கு 2 விக் கெட்களையும் நுவன் குலசேகர 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்த சமீர 60 ஓட்டங்களுக்கு 2 விக் கெட்களையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8687#sthash.8ZLMdbJQ.dpuf

  • 1 month later...

இந்த Guptil ஐ எல்லாம் எதுக்கு அணியில் வைத்திருக்கினம் எண்டு தெரியேல்லை.

இப்ப விளங்கியிருக்கும் .

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்கியிருக்கும் .

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

கிறிஸ் கேய்லும் இப்பிடித்தான் 215 விளாசினவர்.. :D இவர்களால் ஓரிரு ஆட்டங்களில்தான் பலன்.. Consistency இல்லாத ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களால் அணிக்கு பிரச்சினைகள்தான் கூட வரும்.

  • தொடங்கியவர்

இரண்டு பேரும் பழையதிரியை தேடி முன்னுக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள் :icon_mrgreen::lol:  ஆனால் இந்த Guptil இப்ப கடைசியாக நடந்த 2 போட்டிகளில்தான் நல்லா விளையாடி இருக்கிறார். அதுவும் இன்று 4 ரன்கள் எடுத்து இருக்கும்போது கொடுத்த catchயை தவறவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப விளங்கியிருக்கும் .

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

 

கிறிஸ் கேய்லும் இப்பிடித்தான் 215 விளாசினவர்.. :D இவர்களால் ஓரிரு ஆட்டங்களில்தான் பலன்.. Consistency இல்லாத ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களால் அணிக்கு பிரச்சினைகள்தான் கூட வரும்.

 

 

இரண்டு பேரும் பழையதிரியை தேடி முன்னுக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள் :icon_mrgreen::lol:  ஆனால் இந்த Guptil இப்ப கடைசியாக நடந்த 2 போட்டிகளில்தான் நல்லா விளையாடி இருக்கிறார். அதுவும் இன்று 4 ரன்கள் எடுத்து இருக்கும்போது கொடுத்த catchயை தவறவிட்டார்கள்.

 

லேட் கட் (Late Cut) என்பது இதைத்தானோ? ஆகா, யாழ் இணையத்தில் என்னமா கிரிக்கெட் விளையாடுறார்கள்.

  • தொடங்கியவர்

லேட் கட் (Late Cut) என்பது இதைத்தானோ? ஆகா, யாழ் இணையத்தில் என்னமா கிரிக்கெட் விளையாடுறார்கள்.

 

கிழவியே இந்த வயதில் கிரிக்கெட் பார்க்கும்போது நாங்கள் விளையாடுவதில் என்ன தப்பு :icon_mrgreen::lol:

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.