Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை

யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார்.

மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சுட்டிக்காட்டியுள்ள அவர், ஜெனீவா பேச்சுவார்த்தைகள் இந்த விடயத்தில் சுமுகமான மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிகளை கையாள்வதற்காக 5 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஆணைக்குழு வழங்குவது தொடர்பான செய்தியாளர் மாநாடு புதன்கிழமை இடம்பெற்ற வேளை அவர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான உதவித் திணைக்களம், ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் யாழ்ப்பாணத்திற்கு மிகக் குறைந்தளவு பொருட்களே செல்கின்றன. விநியோகம் இடம்பெற்றாலும் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இவை போதுமானதாகயில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது;

பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தின் நிலைமை அதிக கவலையளிப்பதாகவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு அவசியமாக தேவையாகவுள்ள பொருட்களை கொண்டு செல்ல முடியாமலுள்ளது. அங்கு மனிதாபிமான அமைப்புகள் செல்வதே கடினமாகவுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் தேவைகள் உள்ளன. அவற்றினை பூர்த்திசெய்வது மிகக் கடினமாகவுள்ளது. மனிதாபிமான அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவதில் இரு தரப்பும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும். ஜெனீவா பேச்சுவார்த்தைகள் இந்த விடயத்தில் சுமுகமான சூழலை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றோம்.

அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்று வருகின்றது.

மிகத் திறமையாக பணியாற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் இலங்கையில் தமது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அது என்னவென்று எங்களிடம் தெரியப்படுத்துங்கள். மூதூரில் அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை முழு உலகும் உன்னிப்பாக அவதானிக்கின்றது. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய தவணைக்கான மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குகின்றோம். ஐந்து மில்லியன் யூரோக்கள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக புதிதாக மனிதாபிமான உதவிகள் அவசியமாகவுள்ளது.

தமிழ் நாட்டிற்கும் பெருமளவு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஆணைக்குழு எவ்வித பாரபட்சமுமின்றி, இன, மத, வேறுபாடின்றி இந்த உதவிகளை வழங்குகின்றது.

புதிதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் எம்மைப் போல எதிர்காலக் கனவுகளைக் கொண்டவர்கள். அவர்களது கனவுகள் சிதைந்து போயுள்ளன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த 35 வருடங்களாக இலங்கையில் பணியாற்றிவரும் அமைப்பு என்ற வகையில் கடந்த வருடத்திலிருந்து மனிதாபிமான செயற்பாட்டிற்கான இடம் குறைவடைந்து வருவதை உணர்கின்றோம்.

மேலும், எமது சக அமைப்புகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி மனிதாபிமான அமைப்புகளின் பணியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இது தொடர்பான முதலாவது கூட்டம் கடந்தவாரம் இடம்பெற்றது. எனினும், இந்த விடயத்தில் செய்துமுடிக்க பணிகள் இன்னமும் உள்ளன.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான உதவித் திணைக்களம் மேலதிகமாக 5 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுதற்கான மனிதாபிமான உதவியாகவே இது வழங்கப்படுகின்றது. 2005 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து இலங்கையில் பாதுகாப்பு நிலைவரம் மோசமடைந்துள்ளது. புதிதாக மோதல்கள் மூண்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இலங்கை 2000 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைக்கு சென்றுவிட்டது. அக்காலப் பகுதியில் வருடமொன்றிற்கு 3791 பேர் கொல்லப்பட்டனர். புதிதாக மக்கள் இடம்பெயர்வதே குறிப்பாக கவலையளிக்கின்றது.

2006 ஏப்ரலுக்குப் பின்னர் 205,000 பேர் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே, முன்னர் இடம்பெற்ற மோதல்களால் 320,000 பேர் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளனர். மேலும், கடல்கோளால் 200,000 முதல் 400,000 வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பலர் மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர

சர்வதேச கவனத்தை பெற்றுள்ள குடாநாட்டு மனித அவலம்.

ஜநாவின் மனிதாபிமான அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் எகலண்ட் பிபிசி உலக தொலைக்காட்சி சேவையின் ஆசிய செய்திகளிற்கு வழங்கிய பேட்டி.

http://www.eelamist.com/podcast/index.php?...al%20Media&p=39

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதேவிகள்.. விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கு முன்னர் இதைப்பற்றி யோசித்திருக்கவேண்டும்... அதைவிட்டு இப்ப சொல்லி என்ன பயன்? :D

இன்னும் என்ன யோசனை தடைசெய்யுங்கள் இலங்கை அரசை...!!!

செய்வார்களா இதனை, அமெரிக்காவும் 25 குள்ளர்களும்?

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கவனத்தை பெற்றுள்ள குடாநாட்டு மனித அவலம்.

ஜநாவின் மனிதாபிமான அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் எகலண்ட் பிபிசி உலக தொலைக்காட்சி சேவையின் ஆசிய செய்திகளிற்கு வழங்கிய பேட்டி.

http://www.eelamist.com/podcast/index.php?...0Media&p=39

சர்வதேச கவனம் வருவதில் அக்கறை காட்டுவதோடு நின்றுவிட முடியாது. புறூண்டி போல ஒரு நிலையை தமிழ் மக்கள் அடையாமல் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகிறது. புறூண்டியில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினி போட்டும் படுகொலைச் செய்யப்படும் அழிக்கப்பட்டனர், அந்த அழிவுகள் நிகழ்ந்த பின்னர்தான் சர்வதேசத்தின் மனிதாபிமானம் பிறந்தது அங்கு, அதுவல்ல முக்கியம். அவசியம் மனிதப் பேரவலம் நேரப்போவதற்கு முதல் காத்திரமான நடவடிக்கைகள் மட்டுமே.

பேட்டிகள் அறிக்கைகள் வெறும் செய்திகள் அறிவூட்டல்கள் என்ற அளவில் நின்றுவிடாமல் காத்திரமான சர்வதேசப் பங்களிப்பு அந்த மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கக் குரல் கொடுப்பது செயற்படுவதும் சிறீலங்கா அரசை வலியுறுத்தச் செய்வதும் அவசியமாகிறது.

95 இடம்பெயர்வின் போது செய்தித் தணிக்கைகளை இட்டு பெரும் இடம்பெயர்வின் போது நிகழ்ந்த அவலத்தைச் சுட்டிக்காட்டிய ஐநாவையே மலேரியாவுக்கு மருந்தடிக்கிறதோட உங்கட வேலை இலங்கைக்குள்ள இருக்க வேணும் என்ற எச்சரித்த நாடு புத்தனின் நாடு என்பதையும் இன்று அந்தச் சூழல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதானது விரைந்து மக்களுக்குப் பயன் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையா ஆட்டகின்றார்கள்? யார் என்ன ஆனால் என்ன?

ஜப்பான்,சீனா: எனக்கு இல்மனைட்

அமெரிக்கா : எனக்கு திருமலை

பாக்கிஸ்தான் : எனக்கு ஆயுத வியாபாரம்

நோர்வே ; அட எனக்கும் மன்னாரில் எண்ணெய் பார்க்க ஆசை.

மேற்குலகு : அட அச்சா சிறுவர் விப.....?????

ஈழத்திலிருந்து

ஐhனா

ஜனா பாகிஸ்தானின் விருப்பு ஆயுதவியாபாரம் இல்லை... இந்தியாவின் தென்னக இலக்குகளை தாகக்க கொலைகாறர்களை ஏவுவிட வசதியான ஒருதளம்...!

மற்றது ஐநாவினால் என்ன செய்யமுடியும்...??? ஆனந்த சங்கரி மாதிரி யாருகாவது நாகரீககோமாளி விருதை வளங்குவதை தவிர.... ஈழத்தில் சரியான முறையில் பங்களிப்பதாக இருந்தால் கடந்த பலவருடங்களுக்கு முன்னம் செய்து இருக்கவேண்டியது...

எனக்கென்னவோ தமிழ்மக்கள் சம்பந்தமான தனிப்பட்ட விடயங்கள் சர்வதேசத்தின் அரங்குக்கு கொண்டு வரப்பட்டு... புலிகளினால் மட்டும் முடிவு எடுக்கும் தன்மைக்கு பிரச்சினை நகர்ந்துவிட்டதை கண்டு பொறுக்காமல் அதில் தாங்களும் பங்களிப்பு செய்வதுபோலவும்.... தனிய புலிகளின் கைகளுக்குள் தமிழ்மக்களை காப்பாற்றும் முடிவு போய்விடக்கூடாது எண்றும் வருந்துவதுதான் தெரிகிறது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.