Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – மேனகா காந்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17-1421489686-maneka-gandhi-600.jpg

 

”ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது –

சொல்கிறார் மேனகா காந்தி!

 

லக்னோ: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளது தமிழகத்தில் புதிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் இன்று பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், "ஜல்லிக்கட்டில் காளைகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகின்றனர்.

 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

 

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை பாஜக கடுமையாக எதிர்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பட்டியலில் இருந்து காளையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 13ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

 

மேலும், தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கூறினார்.

 

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்றும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறப்படும் நிலையில், ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி புதிய பூகம்பத்திற்கு வழிவகுத்து கொடுத்திருக்கின்றார்.

 

-தற்ஸ் தமிழ்-

அடடா இவ பி.ஜே.பி என்று கேள்விப்பட்டேன் எப்பாடா இவாவும் தலிவர் காலில் வீழ்ந்து தி.மு.காவில் சேர்ந்தவ

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே

தமிழகத்தில் தமிழர்களே கிடையாது என்றும் சொல்வார்..

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் குகைக்குள் வாழ்ந்த காலத்திலேயே தமிழர்நாட்டில் ஏறுதழுவுதல் இருந்துள்ளது.. மூளைகெட்ட மேனகா.. :D

அப்படியே ஜரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் ஜல்லிகட்டு நடத்தினால் என்ன, நல்ல இருக்குமே

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடத்துக்கு ஒருக்கா மேனகா வரும் போகும். ஜல்லிக்கட்டு அப்படி அல்ல. அது ஒரு வரலாறு. மிருகங்களை மனிதர்களை வதைக்காத வகைக்கு தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு இந்த வீர விளையாட்டு நவீன மயப்படுத்தப்படு பாரம்பரிய விழுமிய  இழப்பின்றி விளையாடப்படுதல் தமிழ்நாட்டுக்குப் பெருமையாக  அமையும். இதற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுக் கொள்வதும்.. மேனகா போன்ற சந்தர்ப்பவாதிகளின் வாயை அடைக்கு  உதவும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் குகைக்குள் வாழ்ந்த காலத்திலேயே தமிழர்நாட்டில் ஏறுதழுவுதல் இருந்துள்ளது.. மூளைகெட்ட மேனகா.. :D

 

இவவுக்கு எங்கை ஏறித் தழுவதல் தொிந்திருக்கப் போகுது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18-1421561106-ramadoss2323-600-jpg.jpg

 

ஜல்லிக்கட்டு குறித்து உங்களுக்கு என்ன தெரியும்.. மேனகா காந்திக்கு,

ராமதாஸ்... கடும் கண்டனம்.

 

சென்னை: ஜல்லிக்கட்டின் வரலாறு குறித்தும், பண்பாடு குறித்தும் சற்றும் தெரியாதவராக இருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. வரலாறு தெரியாமல், பண்பாடு தெரியாமல் அவர் பேசக் கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு போட்டிகள் மேற்கத்திய கலாச்சாரம் என்றும், இப்போட்டிகளை பாரதிய ஜனதா கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த முடியாததால் தமிழக மக்கள் மனக்காயம் அடைந்துள்ள நிலையில், அதில் ஈட்டியைப் பாய்ச்சும் வகையில் பொய்யான கருத்தை மேனகா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

 

விலங்குகளின் உரிமைகளுக்காக போராடுபவர், நாய்கள் கொல்லப்படுவதை சட்டப்போராட்டம் நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையில், மேனகா காந்தி மீது எனக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்த வரலாறும் தெரியாமல், கலாச்சாரமும் புரியாமல் அவர் கருத்து தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது, இப்படிப்பட்ட ஒருவரையா இந்தியா அமைச்சராகப் பெற்றிருக்கிறது? என்ற சலிப்பு தான் ஏற்படுகிறது. மேனகா கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது ஜல்லிக்கட்டு போட்டி குறித்த அடிப்படை புரிதல் கூட அவருக்கு இல்லை என்பதை உணர முடிகிறது.

 

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல், மெக்சிகோ போன்ற நாடுகளில் நடத்தப்படும் காளைச் சண்டையும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் ஒரே மாதிரியானவை என்ற எண்ணத்தில் தான் மேனகா காந்தி தவறான விமர்சனத்தைக் கொட்டியிருக்கிறார். ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் நடத்தப்படும் காளைச் சண்டை போட்டியிலிருந்து ஜல்லிக்கட்டு முற்றிலும் மாறுபட்டதாகும். காளைச் சண்டை போட்டி காளைகளை ஏமாற்றி படுகொலை செய்யும் நோக்கம் கொண்டதாகும். ஸ்பெயினில் கடந்த ஆண்டு காளைச்சண்டை போட்டியில் 40,000 காளைகள் கொல்லப்பட்டதிலிருந்தே இதை உணரலாம். ஆனால், தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருட்களை மீட்டெடுத்து வீரத்தை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டது.

 

காளைச் சண்டையில் பங்கேற்கும் வீரர்கள் கத்தி மற்றும் குத்தீட்டியுடன் தான் களமிறங்குவார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்க வரும் இளைஞர்கள், வெறும் கைகளுடன் வீரத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு களமிறங்குவர். காளைச் சண்டைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் நிலையில், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் குரூரத்தை அடிப்படையாகக் கொண்ட மேல்நாட்டு கலாச்சாரமான காளைச்சண்டையை பின்பற்றி தான் வீரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜல்லிக்கட்டு உருவாக்கப்பட்டது என்று கூறியதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், வீரத்தையும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

 

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கக்கூடிய காளைகள், பசுக்கள் மட்டுமின்றி, மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள் என்ற மேனகா காந்தியின் குற்றச்சாற்று அவரது அறியாமை மற்றும் அபத்தத்தின் உச்சமாகும். அறுவடைத் திருநாளான பொங்கல் நாள் மரங்களையும், செடிகளையும் வணங்கி கொண்டாடப்பட வேண்டும்; ஆனால், தமிழர்கள் காளைகளைக் கொடுமைப்படுத்தி கொண்டாடுகிறார்கள் என்ற மேனகா காந்தியின் கருத்தும் அறியாமையின் வெளிப்பாடே. பொங்கல் திருநாளின் நோக்கமே விவசாயத்திற்கு உதவிய சக்திகளுக்கு நன்றி தெரிவிப்பது தான். அதன்படி பொங்கல் அன்று இயற்கையை வணங்கும் தமிழர்கள், அதற்கு அடுத்த நாள் மாடுகளுக்கு தனியாக மாட்டுப்பொங்கல் என்ற பெயரில் விழா எடுக்கிறார்கள்.

 

ஜல்லிக்கட்டு கூட காளைகளின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கானது தானே தவிர, அவற்றை கொடுமைப்படுத்துவதற்கானது அல்ல. இந்த உண்மைகளையெல்லாம் உணராமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுவதை மேனகா காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டி பற்றி அடுத்த முறை கருத்து கூறுவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு குறித்த வரலாற்றையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை பாரதிய ஜனதா எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ள நிலையில், அதை பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்
அந்தம்மா கொஞ்சம் நல்லவங்க .....
எதோ எழுந்த மாத்திரத்தில் வார்த்தையை கொட்டிவிட்டார். இவங்களுக்கு அவங்கள்தான் மாடு பிடிக்கிற வேலையை காட்டி கொடுத்திருப்பாங்க 
அப்படி என்று மேல் ஓட்டமா சிந்திச்சு இருக்கா.
 
நாங்கள் கி.மு 3000 ஆண்டு காலமா மாடு பிடிச்சிருக்கலாம் 
2014இல் மாடு பிடிக்கிறப்போ சிலபேர் இறந்து போய் இருக்கிறார்கள் (நீதிமன்ற எதிர்ப்பையும் மீறி களவா பிடிச்சிருக்கிரானுகள்)
அதற்கு முன்பு ஓவரு ஆண்டும் சிலர் இறந்திருக்கிறார்கள் ...
அதனால் 2015இல் இது தேவை இல்லாத வேலை என்றுதான் எனக்கு படுகிறது.
 
ஐந்தறிவு மாட்டை பிடிச்சு என்ன செய்கிறது ?
இதில் ஆறறிவு மனிதன் பெருமை பேச என்ன இருக்கிறது ?
 
இப்பிடியே மாடு பிடிக்கிற வேலையை விட்டுட்டு .......
ஊர்வழியே திரியும் ரவுடிகளை பிடிச்சு விளையாடினால் சமூகம் என்றாலும் திருந்தும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.