Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இன்று வரை இரு தரப்பினருக்குமிடையில் மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடந்துள்ளன.

இறுதியாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பும் இணக்கப்பாடு இன்றி தமது பேச்சுவார்த்தையே முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமது கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நாளை உத்தேசிக்கப்பட்டிருந்த ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாடுக்கு வராமைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

ஆட்சி மாற்றம் தொடர்பாக வேறு யுக்திகள் பற்றி அவர்கள் சிந்திக்கின்றார்களோ என்பதும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சபை அமர்வின் பின்னர் அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்போம் என்றும் குறிப்பிட்டடார்.

முஸ்லிம் முதலமைச்சர் என்பது முஸ்லிம்களின் அபிலாஷையாக இருப்பதால்தான் இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாத நிலை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் கூறுகின்றார்.

2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின் பின்பு ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற முதலமைச்சர் அக்கட்சிக்கு விட்டுக் கொடுக்க தயார் என்று அறிவித்திருந்தது.

இதனை சுட்டிக்காட்டும் அவர் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க மறுப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறுகின்றார்.

2012ம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தது.

அந்த ஆதரவை ஜனாதிபதி தேர்தலின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக் கொண்டாலும் தற்போதைய நிலையில் தற்காலிகமாக தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக எதிர்கட்சிகள் கருதுகின்றன.

இருந்தாலும் இன்று திங்கட்கிழமை இரவு கட்சி தலைமைக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெறுவதாகவும் அந்த சந்திப்பில் தமது அடுத்த கட்ட நகர்வு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.

 

இதற்கிடையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஐக்கிய மக்கள் சுதந்திர. முன்னனியின் செயலாளருக்கு இன்று திங்கட்கிழமை அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

2012ம் ஆண்டு மாகாண ஆட்சி அமைக்கும் போது இரு கட்சிக்குமிடையில் முதலமைச்சர் பதவி முதல் இரண்டரை வருடங்கள் ஐ. ம. சு . முன்னனிக்கும் அடுத்த இரண்டரை வருடங்கள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸக்கும் என இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அவரது பதவிக் காலம் இன்னமும் மூன்று மாதங்களில் முடிவடையவிருக்கின்றது.

 

தனது பதவிக் காலம் முடிவடையும் போது அதனை விட்டுக் கொடுக்க தான் தயார் என்றும் இது தொடர்பான ஜனாதிபதியுடன் பேச ஏற்பாடுகளை செய்து தருமாறு அவர் கேட்டுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்று கூறுகின்றது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150119_eastprovince

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாடுக்கு வராமைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

 

 

இதிலென்ன சந்தேகம். வெளிப்படையாக பதவி மோகம் தான்.
 
தற்போது கூடுதலான ஆசனத்தை வைத்திருக்கும் கூட்டமைப்புக்கு தான்  முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும். அது கிடைக்காத போது  இணக்கப்பாட்டுக்கு வராமல் இருக்கிறார்கள். கடந்த தேர்த்தலில் மகிந்தவிடம் பதவி கிடைக்கும் என நினைத்து தான் அவருடன் சேர்ந்தார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ஷ்டம் ஒரு முறை தான்.... கதவைத் தட்டும்.
அப்ப வந்த அதிர்ஷ்டத்தை, உதறித் தள்ளியது முஸ்லிம்கள் தான்.
இப்ப... திருப்பி, கேட்க...

முஸ்லிம்களுக்கு...... வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லையா?

Edited by தமிழ் சிறி

இல்லை, இல்லை, இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  கவனமாகவும் நிதானமாகவும் 

அதேநேரம் இலக்கில் குறியுடனும் செய்து முடிக்கவேண்டிய விடயம் இது

தமிழரது தலைவர்கள் தமது ஆழ்மையை  நிரூபிக்க இவை உதவும்

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மையா,ஆளுமையா விசுகர்:)

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதே நல்லது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதே நல்லது.

 

எனது விருப்பமும், அதுவே..... புலிக்குரல்.

இப்போது கூட்டமைப்பு, முஸ்லிம்களுடன் நலிவுப் போக்கை கடைப் பிடிக்குமானால்,

அதைப் போன்ற, முட்டாள் தனம் எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை அதனால்தான் அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இவ்வளவு நாளும் இழுபறியா இருக்கின்றது. ஜயா சம்பந்தன் அந்த தவறை செய்வார் என்று நம்பிக்கை இல்லை!

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு தேர்தல் நடைபெறும் சந்தர்ப்பத்தில் ததேகூட்டமைப்பு தகுதியான முஸ்லிம் வேட்பாளர்களையும் களத்தில் இறக்க வேண்டும்.முஸ்லிம் காங்கிரசின் சந்தர்ப;பவாத போக்கை இனங்காட்ட வேண்டும்.முஸ்லிம் தலைவர்கள் பதவிகளுக்காக கூடுவிட்டு கூடுபாய்வபர்களே ஒழிய முஸ்லிம் மக்களுக்காக எதையும் செய்வதில்லை என்பது முஸ்லிம் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.மத வேறுபாட்டை விடுத்து தமிழ்பேசும் மக்கள் என்று ஒன்றிணைய வேண்டும். அதுக்காக பியசேன மாதிரி கட்சி மாறக் கூடிய வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மையா,ஆளுமையா விசுகர் :)

 

ஆளுமை  ராசா... :icon_idea:

இரண்டிலும் என்னிடம் சந்தேகம் கேட்கலாமா?? :D

இன்று மாகாணசபை கூட்டம் ஆரம்பமாகிய போது எதிர்க்கட்சி தலைவர் , பெரும்பான்மையை நிருபிக்கும் படி விடுத்த கோரிக்கை முதலமச்சரால் ஏற்கப்பட்டு அவரால் பெரும்பான்மை நிருபிக்கமுடியவில்லை .இதனால் கூட்டம் மீண்டும் பிப்ரவரி 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

முஸ்லிம் காங்கிரசின் ஆதரவில்லாமல் வேறு வழிகளில் TNA பெரும்பான்மை ஆதரவை திரட்ட முடியும் .கொள்கை ரீதியான சிக்கல்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதால் சம்பந்தன் ஐயா இதற்கு சம்மதிக்கவில்லை .தற்போது TNA உறுப்பினர்கள் சம்பந்தன் ஐயாவை கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு செல்கின்றனர் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.