Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:18.25 PM GMT ] லங்காசிறி
IMG_8780.JPG
யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட நெடுந்தீவு பகுதிக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலமையிலான குழு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் வீதிகளில் கும்பங்கள் வைத்து வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தபடி முதலமைச்சர் தலைமையிலான குழுவை வரவேற்றுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டிலேயே இக்குழுவினர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர்.

வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொள்வதற்காக முதலமைச்சர் வகுத்துக் கொண்ட திட்டத்தின் படி இன்றைய தினம் தொடக்கமாக நெடுந்தீவுக்கு மேற்படி குழு சென்றிருந்தது.

இதில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கே.சயந்தன், ஆனோல்ட் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் கட்சியினர் ஆதரவாளர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது மக்கள் நெடுந்தீவு இறங்கு துறையில் மிகப்பெரும் வரவேற்பினை வழங்கியதுடன், பெருமளவு மக்கள் வீதியில் கூடி சகல வீடுகள் மற்றும் கடைகளில், கும்பங்களை வைத்து முதலமைச்சர் தலமையிலான குழுவிற்கு மலர் மாலைகளை அணிந்து வர வேற்பினை வழங்கினர்.

மேலும் வீதி முழுவதும் வெடியோசைகளால் அதிரும் வகையில் வெடிகளும் கொடுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்றைய விஜயத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர் குழுவினர்,  பின்னர் வழிபாட்டுத் தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது நெடுந்தீவு மக்கள் குடிதண்ணீர், வீதி, படகுப் போக்குவரத்து, மற்றும் உள்ளக போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் ஈ.பி.டி.பியின் அக்கிரமங்களிலிருந்து விடுதலை வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த விஜயம் இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

vikky_nedunthivu_001.JPG

 

 

vikky_nedunthivu_002.JPG

 

vikky_nedunthivu_003.JPG

 

vikky_nedunthivu_004.JPG

 

vikky_nedunthivu_005.JPG

 

vikky_nedunthivu_006.JPG

 

vikky_nedunthivu_009.JPG

 

vikky_nedunthivu_010.JPG

 

vikky_nedunthivu_014.JPG

 

vikky_nedunthivu_015.JPG

 

vikky_nedunthivu_016.JPG

 

vikky_nedunthivu_017.JPG

 

vikky_nedunthivu_020.JPG

 

vikky_nedunthivu_024.JPG

 

vikky_nedunthivu_027.JPG

 

vikky_nedunthivu_028.JPG

 

vikky_nedunthivu_029.JPG

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெடுந்தீவில், சுற்றுலா திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்க ஏதும் வழிமுறைகள் இருந்தால் சனத்தின் வாழ்க்கை தரம் மேம்படும் தானே? :(

 

ஏதாவது "திடீர் சாமி", "திடீர் புத்தர்" பூமியிலிருந்து முளைத்தார் என கரடிவிட்டு, கேரள 'பொய்யப்பசாமி' கோவில் மாதிரியும் வருமானத்தை பெருக்கவும் முடியுமே? :o:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசவன்னியன், 

 

அவர்களும் மருதப் பக்கம் போலவே  பாசக்காரப் பயலுக்க தான்

 

ஆனா மூக்கு மேலேயும் கோவம் வரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெடுந்தீவில், சுற்றுலா திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்க ஏதும் வழிமுறைகள் இருந்தால் சனத்தின் வாழ்க்கை தரம் மேம்படும் தானே? :(

-------

 

டக்ளஸ் தேவானந்தாவின், நீண்ட காலத் திட்டமே....

நெடுந்தீவை... குட்டி சிங்கப்பூராக மாற்றுவது தான்,

இன்னும் அவரை 10 வருஷம் நெடுந்தீவில் இருக்க விட்டிருந்தால்.... அதனை செய்து காட்டியிருப்பார்.

 

இந்த.. தேர்தலில், அவரும் அவர் கூட்டாளியும்... மண் கவ்வியதால், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தாவின், நீண்ட காலத் திட்டமே....

நெடுந்தீவை... குட்டி சிங்கப்பூராக மாற்றுவது தான்,

இன்னும் அவரை 10 வருஷம் நெடுந்தீவில் இருக்க விட்டிருந்தால்.... அதனை செய்து காட்டியிருப்பார்.

 

இந்த.. தேர்தலில், அவரும் அவர் கூட்டாளியும்... மண் கவ்வியதால், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.

 

 

நெடுந்தீவு  என்பது டக்லசுக்கு நிலாப்போன்றது

அதைக்காட்டி காட்டி

பிரான்சிலும் வெளியிலும் அவர் மில்லியனராகிவிட்டார்....

 

நெடுந்தீவு மக்கள்

வானத்தை பார்த்தபடி... :(

 

அவர்களுக்கு அது எப்பொழுதோ புரிந்துவிட்டபோதும்...

இரொணுவத்துடன் மாமாவாக இருந்ததால் எதுவும் செய்யமுடியவில்லை

ஆனாலுல் இடைக்கிடை அவரது ஆட்கள் காணாமல் போனார்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தாவின், நீண்ட காலத் திட்டமே....

நெடுந்தீவை... குட்டி சிங்கப்பூராக மாற்றுவது தான்,

இன்னும் அவரை 10 வருஷம் நெடுந்தீவில் இருக்க விட்டிருந்தால்.... அதனை செய்து காட்டியிருப்பார்.

 

இந்த.. தேர்தலில், அவரும் அவர் கூட்டாளியும்... மண் கவ்வியதால், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.

 

http://en.wikipedia.org/wiki/Puzhal_Central_Prison

 

தோழர் அங்க இல்லட்டியும்.... சென்னை வந்தால் இங்க மாத்தலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.