Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோணேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக குடமுழுக்கு

Featured Replies

article_1422526103-unnamed.jpg

 

கிழக்கு மாகாணத்தில் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.  கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர், புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இவ்வாலயம் திருஞானசம்பந்தரினால் பாடல்பெற்ற திருத்தலமாகும். எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.  

 

 

http://www.tamilmirror.lk/138735#sthash.IqNDNfHg.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நன்பரே...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி ஆதவன்!

 
 
 
 
 
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர்... 
பற்றுந் தாரீர்...
கோணமாமலை உள்ளீரே..
 
பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை.. 
அகத்தும் இல்லை..
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்!
மேலை நாள் ஒன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்!
ஏதுந் தாரீர்.. 
ஏதும் ஓதீர்..
உம்மை யன்றே எம்பெரு மானே..
கோணமாமலை உள்ளீரே..
 
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்...
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கு
அன்பு டையவர்க் கின்பம் ஓரீர்...
 
  • தொடங்கியவர்

எல்லைக்காளி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

 

article_1423047306-IMG_8211.JPG

 

 

திருக்கோணேஸ்வரர் பெருமானின் காவலுக்காக அமைக்கப்பட்ட பறையன்குளம், எல்லைக்காளி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை(3) தைபூசத்திற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பன்குளம் நாமல்வத்தையில் இருந்த காட்டு வழியாக சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் சென்றால் இக்கோவிலை அடைய முடியும். ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இங்கு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

கடந்த, 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறினர். இவர்கள், இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத நிலையில் இப்பிரதேசம் பாலடைந்து காணப்படுகின்றது. இக்கோயிலுக்கு செல்வதற்காக இந்து இளைஞர்; பேரவையின் ஏற்பாட்டில் நகரித்தில் இருந்து தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டு காடுகளுக்கு ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டது.   திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் தமது நேர்;த்தியை நிறைவு செய்வதற்காக நாமல்வத்தை என்னும் இடத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் மூலமாகவும், கால்நடையாகவும் பறையன்குளத்ததை சென்றடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

article_1423047326-IMG_8232.JPG

 

article_1423047336-IMG_8141.JPG

 

 

article_1423047346-IMG_8187.JPG

 

article_1423047410-IMG_8231.JPG

 

article_1423047423-IMG_8233.JPG

 

http://www.tamilmirror.lk/139154#sthash.EG4iBktK.dpuf

இணைப்பிற்கு நன்றிகள் ஆதவன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  ஆதவன்...!

  • தொடங்கியவர்

திருக்கோணேஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு

 

 

ko-161.jpg

 

 

ko-17.jpg

 

 

ko-15.jpg

 

ko-4.jpg

 

 

ko-6.jpg

 

ko-8.jpg

 

 

http://www.thinakkathir.com/?p=61024


ko-9.jpg

  • தொடங்கியவர்

திருக்கோணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

 

article_1423636946-IMG_8746.JPG

 

 

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை (11) காலை நடைபெற்றது.  

 

22 வருடங்களின் பின்னர் நடைபெறும் கும்பாபிகேஷகத்தை காண்பதுக்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடியவர்கள் வருகைதந்திருந்தனர். ஆலயத்துக்கு வரும் அடியவர்களின் வசதிக்கருதி  கடற்கரை முன்றலிலிருந்து ஆலயத்துக்கு சொந்தமான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இந்து மன்றத்தினரால் அடியவர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

article_1423637003-IMG_8832.JPG

 

http://www.tamilmirror.lk/139550#sthash.iFwGQv1V.dpuf

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஆதவன்.

  • கருத்துக்கள உறவுகள்
இராவணனும் எமது கடவுளா???
ஏன் இராவணனின் படம் போஸ்டரில் போட்டிருக்கு ??
  • 4 weeks later...
  • தொடங்கியவர்

திருக்கோணேஸ்வரர் மாதுமை அம்பாள் நகர்வலம்

 

 

 

article_1427621099-valipaadu01.jpg

 

வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் மாதுமை அம்பாள் சமேத நகர்வலம் நேற்று சனிக்கிழமை(28) நடைபெற்றது. கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகம் காரணமாக, சிவராத்திரியை தொடந்து இடம்பெறும் நகர்வலம் இடம்பெற்றிருக்கவில்லை. அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நகர்வலம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

article_1427621116-valipaadu02.jpg

 

article_1427621126-valipaadu03.jpg

 

 

article_1427621139-valipaadu04.jpg

 

www.tamilmirror.lk/142925#sthash.a5lg1lvM.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.