Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தில் சில்மிஷம் செய்த முதியவர்: வெளுத்து வாங்கிய வீரப்பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் விமானம் ஒன்றில் பயணம் செய்த பெண்ணின் பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இளம்பெண் ஒருவர் புவனேஷ்வருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பின் இருக்கையில் இருந்த முதியவர் ஒருவர் இருக்கையின் இடைவெளியில் கைவிட்டு அந்த பெண்ணை தொட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து விமானம் தரையிறங்கவுள்ள நேரத்தில் மீண்டும் அந்த நபரின் கைகள் அந்த பெண்னை தொடுவதற்கு தயாராக இருக்கையின் இடைவெளி அருகே இருந்துள்ளது.

இதையடுத்து விமானம் தரையிறங்கியதும், எழுந்த அந்த பெண் அனைவர் முன்னிலையிலும் சத்தமாக நடந்தவற்றை கூறி சண்டையிடத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் வெட்கத்தால் தலைகுனிந்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் அந்த பெண் தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதோடு நில்லாமல், அந்த நபர் மீது பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த முதியவர் புவனேஷ்வரைச் சேர்ந்த தொழிலதிபர் என்று தெரிகிறது.

அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை பற்றிய வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த நபர், தான் தவறு செய்துவிட்டதாகவும் மன்னிப்பு கடிதம் எழுதி தருவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண், தான் பெண்ணாக இருப்பதால் தானே இவ்வாறு நடந்து கொண்டீர்கள், உங்கள் அம்மா, மனைவி அல்லது உங்கள் மகளிடம் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டியது தானே என்று ஆவேசமாக கேட்கிறார்.

அந்த பெண்ணுடன் நிற்கும் அதிகாரி ஒருவர், அந்த நபரிடம் நான் ஒரு பெண்ணின் தந்தை என்று கூறுகையில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் குறுக்கிட்டு, நானும் ஒரு பெண்ணின் தந்தை தான் என்று கூறுகிறார்.

இதனை கேட்டு கடும் கோபத்துக்குள்ளான பாதிக்கப்பட்ட பெண், நீங்கள் ஒரு பெண்ணின் தந்தையா? உங்கள் பெண் குழந்தை மிகவும் பாவம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயைப் போல் வேகமாக பரவி வருகிறது.

tamilwin.com

 

இதென்ன தேவை இல்லாத வீடியோவை போட்டிருக்கு.. சம்பவத்தை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கும் வீடியோவைப் போடுங்க!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல், பெண்கள் சீலை கட்டும் போது.....
இடுப்பு பகுதியை மறைத்து, சீலை கட்ட வேண்டும் என்ற சட்டத்தை... அமுல் படுத்த வேண்டும்.
 

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு திருமண விழாவிற்கு... ஒரு ஜேர்மன் கார்ரருக்கும் அழைப்புக் கொடுத்திருந்தார்கள்.
அவர் இடுப்பு தெரிய, சீலை கட்டிய பெண்களை  பார்க்கையில்.....
நீச்சல் உடையில், பார்ப்பதை விட.... இது கூடுதலான செக்ஸியாக தெரிகின்றது  என்று குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல், பெண்கள் சீலை கட்டும் போது.....

இடுப்பு பகுதியை மறைத்து, சீலை கட்ட வேண்டும் என்ற சட்டத்தை... அமுல் படுத்த வேண்டும்.

 

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு திருமண விழாவிற்கு... ஒரு ஜேர்மன் கார்ரருக்கும் அழைப்புக் கொடுத்திருந்தார்கள்.

அவர் இடுப்பு தெரிய, சீலை கட்டிய பெண்களை  பார்க்கையில்.....

நீச்சல் உடையில், பார்ப்பதை விட.... இது கூடுதலான செக்ஸியாக தெரிகின்றது  என்று குறிப்பிட்டார்.

சில பேருக்குக் கொடியில 'சீலை' காயுறதும் செக்ஸியாத் தெரியும்! :D

 

எல்லாம் 'பார்வையில' தான் இருக்கு! :icon_idea:

சில பேருக்குக் கொடியில 'சீலை' காயுறதும் செக்ஸியாத் தெரியும்! :D

 

:D :D :D

 

 

 

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டுன்னு சும்மாவா பாடினாங்க....

உங்களுக்கு அந்த வாசம் பிடிபடல போல இருக்கே புங்கை அண்ணா  :lol:

 

நான் சிறி அண்ணனின் கருத்தை வழிமொழிகிறேன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சில பேருக்குக் கொடியில 'சீலை' காயுறதும் செக்ஸியாத் தெரியும்! :D

 

எல்லாம் 'பார்வையில' தான் இருக்கு! :icon_idea:

ஆ ஊ என்றால் எல்லா பக்கமும் இப்போ இந்த கருத்தை கேட்க கூடியதாக இருக்கிறது.
 
பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் பார்ப்பவர்கள்தான் குருடராக இருக்க வேண்டும் என்பதை 
எத்தனை தூரத்திற்கு ஏற்று கொள்ளலாம்??
அப்போ நாகரீகத்தின் தேவை என்ன ..?
 
மேலே இருக்கும் செய்தியை நியாய படுத்தவில்லை.
ஆனால் பார்ப்பவர்கள் குருடராக இருக்க வேண்டும் என்பது வெறும் அபத்தம்.
அவர்கள் என்ன உணர்ச்சி அற்ற ஜடங்களா ....?
 
அடுத்தவருக்கு அந்தரங்க உணர்வை ஏற்படுத்தும் விளம்பர நோக்கம் தவிர்த்து ஆபாச ஆடை அணிவதில் வேறு என்ன நிர்ப்பந்தம் உண்டு?
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆ ஊ என்றால் எல்லா பக்கமும் இப்போ இந்த கருத்தை கேட்க கூடியதாக இருக்கிறது.
 
பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் பார்ப்பவர்கள்தான் குருடராக இருக்க வேண்டும் என்பதை 
எத்தனை தூரத்திற்கு ஏற்று கொள்ளலாம்??
அப்போ நாகரீகத்தின் தேவை என்ன ..?
 
மேலே இருக்கும் செய்தியை நியாய படுத்தவில்லை.
ஆனால் பார்ப்பவர்கள் குருடராக இருக்க வேண்டும் என்பது வெறும் அபத்தம்.
அவர்கள் என்ன உணர்ச்சி அற்ற ஜடங்களா ....?
 
அடுத்தவருக்கு அந்தரங்க உணர்வை ஏற்படுத்தும் விளம்பர நோக்கம் தவிர்த்து ஆபாச ஆடை அணிவதில் வேறு என்ன நிர்ப்பந்தம் உண்டு?

 

என்னைக் கேட்டால், அந்தப் பெண் 'வீரப்பிரதாபம்' காட்டுவது விட்டு விட்டு.....'அங்கிள்' நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லாயிருக்கா? என்று ஒரு வார்த்தை எல்லோர் முன்னிலையிலும் கேட்டிருக்கலாம்!

 

ஏதோ.. இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளது மாதிரியும்... அந்த முதியவர் தொட்டுவிட்டதால்.. ஏதோ தனது 'கற்பு' போய் விட்டமாதிரியும் படம் காட்டியிருக்கத் தேவையில்லை!

 

ஆனால் உடையணிவது என்பது அவரவரின் சுதந்திரம்! மற்றவர் தலையீடு செய்து... அவர் எப்படி உடையணிய வேண்டுமென்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை!

 

இதே தவறையே, இஸ்லாமிய மதத்தை அனுஸ்டிப்பவர்களும் செய்கிறார்கள்!

 

மற்றும் படி... மனிதனது கூர்ப்படைதலில்.. எவரோ தலையிட்டு... அந்தக் கூர்ப்பியலை மாற்றி விட்டார்கள் என்பது தான் எனது கருத்து!

 

மனிதன் தனது 'உரோமங்களை' இழந்ததும்... வாலை இழந்ததும்... நிமிர்ந்து இரண்டு காலில் நடந்ததும் தான் தவறு என்பது எனது கருத்து! மனிதனைத் தவிர எந்த உயிரினத்துக்கும் 'ஆடை' தேவையில்லை! அவற்றின் வாலும்.... உரோமங்களும் ... மறைக்க வேண்டியதை மறைக்கின்றன!

 

ஒரு உயிரினத்தினது... 'மனம்' என்பதே அது வாழும் சூழலுக்கேற்ப அதன் 'கூர்ப்பு' நிலையைத் தீர்மானிக்கின்றது!

 

தரையில் நடக்க நினைக்கும் மீன்களின் செட்டைகள்.. கால்களாக மாறுவதும்.. பறக்க நினைக்கும் உயிரினங்களின் கைகள் சிறகுகளாக மாறுவதும். தானே கூர்ப்பு! 

 

எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள...அவை தங்கள் நிறங்களையும்... வடிவங்களையும் மாற்றுவது தான் 'கூர்ப்பின்' ஒரு அங்கமென நான் நினைக்கிறேன்!

 

கரடிகள்... கொரில்லாக்கள் போன்றவை இரண்டு கால்களில் நடந்தாலும்... அவற்றின் உரோமங்கள் அவற்றின் 'கற்பைப்' பாதுகாக்கின்றன!

 

மற்றும் படி... பெண்கள் அவ்வாறு சேலையணிவது, உங்களைக் கிள்ளும் படி கேட்பது போல இருந்தால்... கிள்ள வேண்டியது தான்!  :lol: அதும் இயற்கை தான்! :D

 

ஆனால் அக்கம் பக்கத்தில் ஆருமில்லாதவாறு அவதானமாக இருக்கவும்... அத்துடன் என்ன விதமான ' பாதணிகள்' அவள் அணிந்திருக்கிறாள் என்பதையும் அவதானிக்கவும்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தவறுகள் தப்புகள் மனிதனின் வாழ்க்கையில் சர்வசாதாரணம்.
 
முதியவர் இருக்கையின் இடைவழியே கையை நீட்டும் போதே கையை தட்டிவிட்டு தான் அப்படியானவர் இல்லை என்பதை சமிக்கை செய்திருக்கலாம்.
அல்லது உடனேயே எழும்பிநின்று எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.
 
விமானம் தரையை தொடும் மட்டும் காத்திருந்து சனத்தை கூட்டி பிரச்சனையை பகிரங்கப்படுத்தவே அவர் விரும்பியிருக்கின்றார். 
 
சில்லறை பிரச்சனைகளை சில்லறையாகவே தீர்க்க வேண்டும். பெரிது படுத்தினால் அதன் விலையும் பெரிதாகவே இருக்கும்.
 
இந்தியாவில் ஒரு பெண்ணை ஏன் பல ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்கின்றார்கள் என்பதற்கு விடைகள் கொஞ்சம் கொஞ்சமாகவே வருகின்றது. :icon_idea:

நான் பெரியவரின் செயல் சரியென சொல்ல வரவில்லை.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.