Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்சி ஆரம்பிக்கிறார் உதயன் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரன்! இன்று யாழ் பத்திரிகைகளில் விளம்பரம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று யாழ்ப்பாணத்தில் வெளியான பத்திரிகைகளில் வித்தியாதரன் புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பான விளம்பரம் வெளியாகியுள்ளது. கட்சியில் இணைய விரும்புவோர், மற்றும் அது குறித்த கருத்து வெளியிட விரும்புவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறது விளம்பரம். ‘தேசியம்’ தொடர்பான கட்சி என்று விளம்பரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

இன்று இங்கு வெளியான உதயன்  பத்திரிகையில் நான் பார்த்த விளம்பரம் என்ற முறையில், இதை ஒரு தகவலாக இங்கு பதிகிறேன். என்மீது கடுப்புள்ள அன்பர்கள், தயவு செய்து இந்த கட்சி பற்றி என்னிடம் கேள்விக்கணைகளை வீசாதீர்கள். விளம்பரம் மட்டுமே பார்த்தேன். கட்சியில் சேரும் உத்தேசமோ, வாக்களிக்கும் திட்டமோ கிடையாது.

 

 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இப்படியான செய்தி ஒன்று இங்கு வந்திருந்ததே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே இப்படியான செய்தி ஒன்று இங்கு வந்திருந்ததே..

நேற்று யாழ்ப்பாண பத்திரிகைகளில் விளம்பரம் வந்திருக்கு என்று எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிசன்.ம்ம் விதி.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரன்புதிய கட்சி தொடங்குவது எதற்காக?இருக்கின்ற கட்சியின் தலமை பிடிக்கவில்லை என்றால் அதனை மாற்றுவதற்கு கட்சிக்குள் இருந்து போராடலாம்.அல்லது ஏற்கனவே உள்ள கட்சியான தமிழ்த் தேசிய முன்னணியில் இணைந்து மக்

களுக்கான சேவை செய்யலாம்.அதை விடுத்து புதிய கட்சி தொடங்குவது தானே தலைவராகவும் முயற்சியாகும்.இப்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்குவது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகத்தான் முடியும்.வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தாலா?தமிழருக்கு ஒரு நீதியான தீர்வு கிட்டும்வரை தமிழ்த்தேசிய முன்னணியையும் உள்ளிழுத்து ஒரே கட்சியாகச் செயற்படுவதே இப்போதைய சூழ்நிலையில் நல்லது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலமைப்பதவி கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.சம்பந்தரும்,சுமத்திரனும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விருப்பை குழி தோண்டும் புதுப்பிவார்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரன்புதிய கட்சி தொடங்குவது எதற்காக?இருக்கின்ற கட்சியின் தலமை பிடிக்கவில்லை என்றால் அதனை மாற்றுவதற்கு கட்சிக்குள் இருந்து போராடலாம்.அல்லது ஏற்கனவே உள்ள கட்சியான தமிழ்த் தேசிய முன்னணியில் இணைந்து மக்

களுக்கான சேவை செய்யலாம்.அதை விடுத்து புதிய கட்சி தொடங்குவது தானே தலைவராகவும் முயற்சியாகும்.இப்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்குவது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகத்தான் முடியும்.வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தாலா?தமிழருக்கு ஒரு அநீதியான தீர்வு கிட்டும்வரை தமிழ்த்தேசிய முன்னணியையும் உள்ளிழுத்து ஒரே கட்சியாகச் செயற்படுவதே இப்போதைய சூழ்நிலையில் நல்லது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலமைப்பதவி கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.சம்பந்தரும்,சுமத்திரனும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விருப்பை குழி தோண்டும் புதுப்பிவார்கள்.

அநீதியான தீர்வுதான் எப்பவோ கிடைத்துவிட்டதே புலவர்ஜீ.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தவறு திருத்தப்பட்டுள்ளது .சுட்டிக் காட்டியதற்கு நன்றி.கைத்தொலைபேசியில் எழுதும் போது நீதியான என்று தட்டச்சு செய்யும் போது அநீதியான என்றே வருகிறது. 2 அல்லது3 முறை மீண்டும்மீண்டும் முயற்சி பண்ணியபின்பே நீதி கிட்டி இருக்கிறது.நீதி கிடைக்கும் வரை முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட நீதி!!!!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கூட்டமைப்புடன் இணைந்து அரசியலில் இணைய இருந்தவர் வித்தியாதரன். ஆனால் சரவணபவன் அதை அபகரித்தார் என்றுதான் சொல்லவேண்டும். தனது தங்கைக்காக அதனைத் தாரை வார்த்தார் வித்தி என்றால் மிகையல்ல. மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. பல உயிராபத்துக்களுக்கு நடுவில் துணிவாக விடுதலைப்புலிகளை ஆதரித்த பத்திரிகையாளர். அத்தோடு அவர் திருமலையைச் சேர்ந்தவர் ஆனால் பூர்வீகம் யாழ்ப்பாணம். யாழ் இந்துவின் பழைய மாணவரான அவர் கல்லூரியின் கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளராகவும் இருந்தவர்

வித்தியாதரன் தொடங்கும் இந்த முயற்சி சரியா தவறா என்பதைக் எதிர்காலம் மிகவிரைவில் பதில் சொல்லும். குறிப்பாக புலத்து அன்பர்களின் தாளத்துக்கு ஆடுவதற்காக இந்த முயற்சி நடைபெறுமாயின் நிச்சயம் தோல்வியிலேயே முடியும். அதே போன்று அனந்தி, சிவாஜிலிங்கம், கஜேந்திரன் அன் கோ போன்றவர்களையும் தவிர்த்து நேரடியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாட்டுக்குள இருக்கும் முன்னாள் போராளிகளை இணைத்துச் செயற்படுவதன் மூலம் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு முடிவுகட்டலாம். கூட்டமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலனோர் சுயநலவாதிகள் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இன்னுமொரு விடயம் இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிட முடியாது என்பதனையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கோமாளிகளை விட டில்லியுடன் நல்ல உறவு வைத்திருக்க முனையவேண்டும்! அதன் பொருள் டில்லிக்கு வால்பிடிப்பதல்ல தமிழர் தரப்பு நியாயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதிபட புரியவைத்தலும் அதற்கேற்ப எமது இராஜதந்திரத்தை முன்னெடுத்தல் ஆகும்.

தமிழர் தரப்புக்குத் தலைமை தாங்குவதற்கு வித்தியாதரன் தகுதியானவரே. அவருக்கு அந்த தார்மீகப் பொறுப்பும் கடமையும்கூடவேஇருக்கிறது! கூட்டமைப்புக்கு எதிரான புலத்து அன்பர்களின்சதிக்குள் விழாமல் இருப்பாரானால் அவருக்கு இந்த கருத்தாளரின் ஆதரவு இருக்கும். சரியான பாதையில் வித்தி செல்வாராயின் கூட்டமைப்பின் தலைமப்பொறுப்பே அவரைத் தேடிவரும். ஆனால் வித்தி பல நரிகளையும் வல்லூறுகளையும் கோட்டான்களையும் கடந்து போகவேண்டியிருக்கும்.

வாலியா இதை எழுதினார் .மிகவும் பக்குவமான தரமான பதிவு .

 

வித்தியாதரன் அரசியல் பிரவேசம் பற்றி எனது கருத்தை பின்னர் எழுதுகின்றேன் 


பச்சை முடிந்துவிட்டது வாலி .

வாழ்த்துக்கள் வித்தி அண்ணா. சுவைபிரியன் கூறியது போல விதி யாரை விட்த்து.....அடித்தள மக்கள் / போராளிகள் விடுபட்டால் அவர்களை அணைத்து செல்ல வாழ்த்துக்கள். ஆனாலும் சமந்தன் ஐயா சொல்வதும் சரி தான் ஐக்கியம் முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கூட்டமைப்புடன் இணைந்து அரசியலில் இணைய இருந்தவர் வித்தியாதரன். ஆனால் சரவணபவன் அதை அபகரித்தார் என்றுதான் சொல்லவேண்டும். தனது தங்கைக்காக அதனைத் தாரை வார்த்தார் வித்தி என்றால் மிகையல்ல. மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. பல உயிராபத்துக்களுக்கு நடுவில் துணிவாக விடுதலைப்புலிகளை ஆதரித்த பத்திரிகையாளர். அத்தோடு அவர் திருமலையைச் சேர்ந்தவர் ஆனால் பூர்வீகம் யாழ்ப்பாணம். யாழ் இந்துவின் பழைய மாணவரான அவர் கல்லூரியின் கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளராகவும் இருந்தவர்

வித்தியாதரன் தொடங்கும் இந்த முயற்சி சரியா தவறா என்பதைக் எதிர்காலம் மிகவிரைவில் பதில் சொல்லும். குறிப்பாக புலத்து அன்பர்களின் தாளத்துக்கு ஆடுவதற்காக இந்த முயற்சி நடைபெறுமாயின் நிச்சயம் தோல்வியிலேயே முடியும். அதே போன்று அனந்தி, சிவாஜிலிங்கம், கஜேந்திரன் அன் கோ போன்றவர்களையும் தவிர்த்து நேரடியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாட்டுக்குள இருக்கும் முன்னாள் போராளிகளை இணைத்துச் செயற்படுவதன் மூலம் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு முடிவுகட்டலாம். கூட்டமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலனோர் சுயநலவாதிகள் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இன்னுமொரு விடயம் இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிட முடியாது என்பதனையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கோமாளிகளை விட டில்லியுடன் நல்ல உறவு வைத்திருக்க முனையவேண்டும்! அதன் பொருள் டில்லிக்கு வால்பிடிப்பதல்ல தமிழர் தரப்பு நியாயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதிபட புரியவைத்தலும் அதற்கேற்ப எமது இராஜதந்திரத்தை முன்னெடுத்தல் ஆகும்.

தமிழர் தரப்புக்குத் தலைமை தாங்குவதற்கு வித்தியாதரன் தகுதியானவரே. அவருக்கு அந்த தார்மீகப் பொறுப்பும் கடமையும்கூடவேஇருக்கிறது! கூட்டமைப்புக்கு எதிரான புலத்து அன்பர்களின்சதிக்குள் விழாமல் இருப்பாரானால் அவருக்கு இந்த கருத்தாளரின் ஆதரவு இருக்கும். சரியான பாதையில் வித்தி செல்வாராயின் கூட்டமைப்பின் தலைமப்பொறுப்பே அவரைத் தேடிவரும். ஆனால் வித்தி பல நரிகளையும் வல்லூறுகளையும் கோட்டான்களையும் கடந்து போகவேண்டியிருக்கும்.

 

 

வித்தியாதரன் அவர்கள் பிரான்சுக்கு வந்திருந்தபோது சந்தித்திருந்தேன்

நல்லமனிதர்

அத்துடன் வேசமில்லாதவர்...

ஆனால் தமிழர்கள் இவ்வாறு  முரண்படுவதும்

பிரிந்து செல்வதும் 

பலவீனமாக்குவதும்  இன்றையநிலையில் சரியன்று

ஆனால் அதை வித்தியாதரன் ஏற்றுக்கொண்டிருப்பதும்

புரிந்து கொண்டிருப்பதும் அவரது பேட்டியில் தெரிகிறது....

போராளிகள் வெளியில் வேண்டுமென்றே விடப்பட்டிருப்பதும்

வேண்டப்படாதவர்களாக கூட்டமைப்பினால் பார்க்கப்படவதும் உண்மை.

 

அவர்கள் உள் வாங்கப்படுவதன்  ஊடாக 

ஆகக்குறைந்தது அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படணும் என்பதே எனது விருப்பமும் ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல கட்சிகள் தோன்றுவது ஜனநாயகம் தழைத்தோங்க உதவும். அனுபவம் மிக்க ஊடகவியலாளர் புதிய கட்சி தொடங்குவது நல்லதே. சுமந்திரன், சம்மந்தனை தூற்றிக்கொண்டிருப்பவர்களும் புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்து தமது கொள்கைகளுக்கு மக்களிடயே வரவேற்பு உள்ளதா என்று பரீட்சித்து பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் கூட்டமைப்புடன் இணைந்து அரசியலில் இணைய இருந்தவர் வித்தியாதரன். ஆனால் சரவணபவன் அதை அபகரித்தார் என்றுதான் சொல்லவேண்டும். தனது தங்கைக்காக அதனைத் தாரை வார்த்தார் வித்தி என்றால் மிகையல்ல. மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. பல உயிராபத்துக்களுக்கு நடுவில் துணிவாக விடுதலைப்புலிகளை ஆதரித்த பத்திரிகையாளர். அத்தோடு அவர் திருமலையைச் சேர்ந்தவர் ஆனால் பூர்வீகம் யாழ்ப்பாணம். யாழ் இந்துவின் பழைய மாணவரான அவர் கல்லூரியின் கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளராகவும் இருந்தவர்

வித்தியாதரன் தொடங்கும் இந்த முயற்சி சரியா தவறா என்பதைக் எதிர்காலம் மிகவிரைவில் பதில் சொல்லும். குறிப்பாக புலத்து அன்பர்களின் தாளத்துக்கு ஆடுவதற்காக இந்த முயற்சி நடைபெறுமாயின் நிச்சயம் தோல்வியிலேயே முடியும். அதே போன்று அனந்தி, சிவாஜிலிங்கம், கஜேந்திரன் அன் கோ போன்றவர்களையும் தவிர்த்து நேரடியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாட்டுக்குள இருக்கும் முன்னாள் போராளிகளை இணைத்துச் செயற்படுவதன் மூலம் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு முடிவுகட்டலாம். கூட்டமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலனோர் சுயநலவாதிகள் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இன்னுமொரு விடயம் இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிட முடியாது என்பதனையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கோமாளிகளை விட டில்லியுடன் நல்ல உறவு வைத்திருக்க முனையவேண்டும்! அதன் பொருள் டில்லிக்கு வால்பிடிப்பதல்ல தமிழர் தரப்பு நியாயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதிபட புரியவைத்தலும் அதற்கேற்ப எமது இராஜதந்திரத்தை முன்னெடுத்தல் ஆகும்.

தமிழர் தரப்புக்குத் தலைமை தாங்குவதற்கு வித்தியாதரன் தகுதியானவரே. அவருக்கு அந்த தார்மீகப் பொறுப்பும் கடமையும்கூடவேஇருக்கிறது! கூட்டமைப்புக்கு எதிரான புலத்து அன்பர்களின்சதிக்குள் விழாமல் இருப்பாரானால் அவருக்கு இந்த கருத்தாளரின் ஆதரவு இருக்கும். சரியான பாதையில் வித்தி செல்வாராயின் கூட்டமைப்பின் தலைமப்பொறுப்பே அவரைத் தேடிவரும். ஆனால் வித்தி பல நரிகளையும் வல்லூறுகளையும் கோட்டான்களையும் கடந்து போகவேண்டியிருக்கும்.

என்னுடைய ஊகம் சரியாக இருந்தால், வித்தியின் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு subsidiary. சமீப காலமாக கூட்டமைப்பு பற்றி அதிருப்தி கொண்டவர்கள் கஜேந்திரன்ஸ் பக்கம் போகாமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு holding unit. நல்ல விஷயம்தான்.

 

கூட்டமைப்பு இப்பதான் புத்திசாலித்தனமாக அரசியல் செய்ய தொடங்கியிருக்கு.

 

இருந்து பாருங்கள், வித்தியின் கட்சி மிக விரைவில் ஏதோ ஒரு பிரச்சனையை வைத்து (பெரும்பாலும் காணி விவகாரம்) சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்குவார்கள். 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இப்படியான மறை பொருட்களை விளங்க கூடியவர்கள் இருப்பது ஆச்சரியமான விடயம். :)

வித்தியின் இறக்கம்; அனந்தி ஆக்கள் வெளியே போனாலும் அல்லது போக்கப்பண்ணினாலும் வருகிற இழப்புகளை ஈடுசெய்யவே.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைக்குழு /ஒட்டுகுழு ஓணான் குழு :)..மற்றைய இலக்குகள் ..கயேந்திரன்,EPDP,UNP...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.