Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் ஆஸ்திரேலியா தமிழர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பின் படி இந்தோனேசியா அதிபரும் மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து இன்னும் சிலநாட்கள் அல்லது வாரங்களில் ஆஸ்திரேலியா தமிழரான மயூரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது......ஆஸ்திரேலியா அரசின் கடைசிக்கட்ட பெரும் முயற்ச்சிகளையும் மீறி அவருக்கான தண்டனையை இந்தோனேசியா முன்னெடுக்கின்றது.....

http://www.news.com.au/world/asia/doomed-bali-nine-duo-to-be-transferred-to-nusa-kambangan-island-this-week-ahead-of-their-executions/story-fnh81fz8-1227221756457

இந்த செய்தியை இதுவரை யாரும் யாழில் இணைக்காததும் இதை பற்றி யாரும் பேச பயப்படுவதும் ஆச்சரியம் தருகின்றது....

2005 முதல் 2015 வரை நடைபெற்றவற்றை இங்கே சென்று பார்க்கலாம்....

http://www.abc.net.au/news/2015-02-12/bali-nine-timeline-andrew-chan-myuran-sukumaran/6085190

தண்டனை குறைப்புக்கு இந்தோனேஷிய நீதிபதிகள் லஞ்சம் கோரினர்: மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சானின் சட்டத்தரணிகள் பரபரப்பு குற்றச்சாட்டு 

 

8930sukumaran2.jpg

 

 

இந்­தோ­னே­ஷி­யாவில் போதைப்­பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள அவுஸ்­தி­ரே­லி­யர்­க­ளான மயூரன் சுகு­மா­ர­னுக்கும் அன்ட்ரூ சானுக்கும் இத்­தண்­ட­னையை விதித்த நீதி­ப­திகள், குறைந்த தண்­டனை வழங்­கு­வ­தற்­காக லஞ்சம் கோரி­ய­தாக அவர்­களின் சட்­டத்­த­ர­ணிகள் பர­ப­ரப்­பான குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்­ளனர்.
 
2005 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டில் இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் கைது செய்­யப்­பட்ட 9 அவுஸ்­தி­ரே­லி­யர்­களில் இவ்­வி­ரு­வரும் அடங்­கு­கின்­றனர். லண்­டனில் பிறந்த அவுஸ்­தி­ரே­லி­ய­ரான  மயூரன் சுகு­மா­ர­னுக்கும், அன்ட்ரூ சானுக்கும் இந்­தோ­னே­ஷிய நீதி­மன்­றத்­தினால் தூக்­குத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் இம்­மாத இறு­தியில் தூக்­கி­லி­டப்­படக் கூடும் என அஞ்­சப்­படும் நிலையில் தூக்­குத்­தண்­ட­னையை ரத்­துச்­செய்­யு­மாறு கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டுள்­ளன.
 
இந்­நி­லையில் தமக்கு தண்­டனை வழங்­கிய 6 நீதி­ப­திகள் குழாம் குறைந்த தண்­டனை வழங்­கு­வ­தற்­காக லஞ்சம் வழங்­கு­மாறு கோரினர் என மயூரன் சுகு­மாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகி­யோரின் சட்­டத்­த­ர­ணிகள் இந்­தோ­னே­ஷிய நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.
 
ஆனால், மேற்­படி நீதி­ப­தி­களில் ஒரு­வ­ரான வயான் யஸா அபாதி இக்­குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­துள்ளார். வழக்கு விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்ட உண்­மை­களின் அடிப்­ப­டை­யி­லேயே மேற்­படி தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது என அவர் கூறியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மரண தண்டனையில் 'உடன்பாடில்லை' எனினும் சில குற்றங்களுக்கு, அதை விட வேறு வழியும் இல்லைப் போலவும் கிடக்கு சுண்டல்! :o

 

ஆனால், என்ன பிரச்சனை எண்டால், பத்து வருசங்கள் அந்த இருட்டுச் சிறையில் வைத்திருக்காமல்... அப்பவே மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கலாம்!

 

ஆனால், பத்துவருஷம் ஒரு இந்தோனேசியச் சிறையில்.. காலம் தள்ளுவது என்பது மரண தண்டனையை விடக் கோரமானதாக இருந்திருக்கும்!

 

'பாங்காக் ஹில்ரன்' படம் கிடைச்சால் பாருங்கள்! :D

 

அதனால் தான் 'மரண தண்டனை' வேண்டாம் என்ற வரிசையில் நிற்கிறேன்! அத்துடன், இந்தோனேசிய நீதி, எங்கள் சிறிலங்கா நீதியை விடவும் மேலானதல்ல! :icon_idea:

 

எனவே, குற்றவாளிகள் உண்மையில்.. சந்தேகங்களுக்கு அப்பால்.. 'குற்றவாளிகள்' தானா என்ற கேள்வியும் என்னிடம் உண்டு! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் கடத்தல் என்பது.... பல இளையவர்களின் வாழ்க்கையை.... பாழ்படுத்தும் செயல்.
அதற்கு என்ன தண்டனை வேண்டுமாலும், கொடுப்பதில் தப்பில்லை.
ஆனால்...இவர் உண்மையில், போதைப் பொருள் கடத்தினாரா? என்பது உறுதி செய்யப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவு இங்கே வீண்டாம். இதை நீக்கி விட்டால் நல்லது. நான் கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா நியூஸ் பார்ப்பதில்லை ஏனென்றால் மயூரனை பார்க்கும் போது, எங்களின் உறவு ஒன்று படும் வேதனையை தாங்கமுடியவில்லை. இந்தோனேசிய justice மிகவும் கீழ்தரமானது. இவர் 24 வயதில் தான் பிடி பட்டார். அவரை வழி நடத்திய தலைவர் சிட்னியில் இப்பவும் நன்றாக வாழ்கிறார். அதை விட அவருடன் சென்ற இன்னொரு ------- தந்தை ஆஸ்திரேலியா போலீஸ்க்கு அவர்களை பற்றி சொல்லி அவர்களை ஆஸ்திரேலியாவில் இருந்தது வெளிக்கிட முதல் (சிட்னியில் இருந்து) தடுக்க சொல்ல, இவர்களோ தடுக்காமல் அங்கை போன பிறகு இந்தோனேசிய போலீஸ்க்கு சொல்லி பிடிச்சு கொடுத்தவங்கர். இவர் பிடிபட்டவுடன் இவரை பற்றி கீழ்தரமான எழுத்துகளை ஆஸ்திரேலியா மீடியா எடழுதியது.

Edited by நிழலி
ஒருமையில் எழுதுவதை முற்றாகத் தவிர்க்கவும்

மரண தண்டனையில் உடன்பாடில்லை, சட்டம் சரி வர செயற்பட்டதா என்றும் தெரியவில்லை , தலையை விட்டு வால்களுக்கு தண்டனை.

 

எனினும் boat அகதிகளுக்கு குடுகவேண்டிய முக்கியத்துவம் இதற்கு நான் அளிபதில்லை....

இந்த பதிவு இங்கே வீண்டாம். இதை நீக்கி விட்டால் நல்லது. நான் கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா நியூஸ் பார்ப்பதில்லை ஏனென்றால் மயூரனை பார்க்கும் போது, எங்களின் உறவு ஒன்று படும் வேதனையை தாங்கமுடியவில்லை. இந்தோனேசிய justice மிகவும் கீழ்தரமானது. இவர் 24 வயதில் தான் பிடி பட்டார். அவரை வழி நடத்திய தலைவர் சிட்னியில் இப்பவும் நன்றாக வாழ்கிறார். அதை விட அவருடன் சென்ற இன்னொரு ------- தந்தை ஆஸ்திரேலியா போலீஸ்க்கு அவர்களை பற்றி சொல்லி அவர்களை ஆஸ்திரேலியாவில் இருந்தது வெளிக்கிட முதல் (சிட்னியில் இருந்து) தடுக்க சொல்ல, இவர்களோ தடுக்காமல் அங்கை போன பிறகு இந்தோனேசிய போலீஸ்க்கு சொல்லி பிடிச்சு கொடுத்தவங்கர். இவர் பிடிபட்டவுடன் இவரை பற்றி கீழ்தரமான எழுத்துகளை ஆஸ்திரேலியா மீடியா எடழுதியது.

 

ஒருமையில் எழுதுவதை முற்றாகத் தவிர்க்கும் படி பலமுறை கேட்டுள்ளோம். களவிதிகளை மீறாமல் கருத்துகளை எழுதவும்.

இந்தோனேசிய அதிபரிடம் மீண்டும் மேன்முறையீடு

 

இந்தோனேசியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இரு ஆஸ்திரேலியர்கள் தம்மை வாழ விட வேண்டும் என்றும் அதன் மூலம் சக சிறைக் கைதிகளுக்கு தாம் மறுவாழ்வுத்திட்டம் ஒன்றில் உதவ முடியும் என்று இந்தோனேசிய அதிபருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

போதை மருந்து கடத்தலுக்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் ஆஸ்திரேலிய பிரஜைகளான அண்ட்ரூ ஷான் மற்றும் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருமே இவ்வாறு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொவை கோரியுள்ளனர்.
 
இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒரு மாத காலத்துக்கு அதிகாரிகள் ஒத்திவைத்தை அடுத்தே இந்த கோரிக்கை வந்துள்ளது.
 
மன்னிப்புக்கான மேன்முறையீட்டை இந்தோனேசிய அதிபர் விடொடொ இதுவரை நிராகரித்துள்ளார்.
மேலும் 5 வெளிநாட்டுக்காரர்களும், துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்கொள்கிறார்கள்.
 
video

மரண தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும்

 

 

150224103927__80552154_balisplitimage.jp

 

சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலும் பதினொரு கைதிகளின் மரணதண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.

 
மரண தண்டனை விதிக்கும் தமது நாட்டின் உரிமையில் எவரும் தலையிடக் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
துப்பாக்கிச் சூட்டு அணியினரால் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளவர்களுள் அஸ்திரேலியா, பிரேசில், மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளும் அடங்குவர். பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய அதிபர் வெளிநாட்டுத் தலைவர்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்.
 
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கும் வகையில் கருணைமனு அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என அதிபர் ஏற்கனவே தீர்மானித்ததுள்ளார். அறிவிக்கப்பட்ட மரண தண்டனையில் காலதாமதம் ஏற்படாது என்று இந்தோனேசியா அறிவித்துள்ளது.
 
ஏதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனையை தடுக்கும் வகையில் அஸ்திரேலியப் பிரஜைகள் இருவராலும் மேற்கொள்ளப்பட்ட இறுதி சட்டபூர்வ வழிமுறைகளையும் இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது. மரண தண்டனையை எதிர்கொண்டிருப்பவர்களில் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மயூரன் சுகுமாரனும் அடங்குவார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.