Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

கோவம்...

குற்றாலத்திற்கும்..

குன்றிற்கும்..

என்னடி கோவம்...

குற்றாலம்.. குன்றேறிக்..

குளிப்பாட்ட ஏங்க...

குன்றுக்கோ

குற்றால நீராட

மனதார வாட..

ஏனிந்தக் கண்ணாமூச்சி..

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாமூச்சி விளையாட்டில்

கண்களைக்கட்டி இருளில்

உருவங்களைத் தொலைத்து

முகரும் சுவாச நொடிகளில்

தேடிப் பிடித்து

ஆடி முடிந்த ஆட்டங்களின்

ஞாபகங்கள்

மறக்க நினைத்தாலும்

மறுபடி மறுபடி வருகின்ற

நினைவுகள்

நினைவுகள் இன்றும்

நீங்காமல் அன்றுபோல

நிழலாடுகின்றது

என் நெஞ்சில்

சிரட்டையில் சோறு சமைத்து

ருசித்து நாம் சாப்பிட்டதும்

உன் முதுகில் எனைச் சுமந்து

கூனிக் கூனி நீ நடந்ததையும்

கிட்டிப்புள் அடிச்சு பக்கத்துவீட்டு

சட்டிபானை நீ உடைச்சதும்

பிறந்தநாள் சட்டையில் நீ

சேறு பூச நான் அழுததையும்

அரும்பிய உன் மீசை கண்டு

குறும்பாக அதை நான் இழுக்க

அடிக்க ஓங்கிய உன்கைகள்

கட்டி எனை அணைத்ததையும்

இன்னும் இன்னும்

இனிய நினைவுகள்

எத்தனை எத்தனையோ

அவையனத்தையும்

உன்னோடு பகிரணும்

உடனே வா காளையே :(

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளையே எருமைத்தயிர் உண்டால்

நாளை சிங்களவளை எதிர்த்து

வாழலாம் என்றே அன்னை

பாலை தயிராக்கி ஊட்டி ஊட்டி

வளர்த்தாள் இப்போ

அன்னையோ சிங்களவன் நாட்டில்

காளையோ புலத்தில்

புலத்தில்தான் பூவையே..

பொழுதெல்லாம்...ரணம்..

இதயம் தினம் அழும்..

ஈரநினைவுகள் எழும்..

அம்மா மனசுக்குள்...

அழைப்பதும்....

தங்கை காதை..நான்

திருகுவது போல் இருப்பதும்..

அப்பா அருகே கனைப்பது

போல் தோன்றுவதும்..

மாமா..மாமி..

சித்தி..சித்தப்பா..

எல்லோர் பிரியமும் பேச்சும்...

இழந்த காளை

புலத்தில்தானடி பூவே..

புலத்தில்தான்.

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தான் என்று

சிரிக்கும் இதயங்கள்

காட்டும் கோபங்கள்

சொல்லா வார்தை கொண்டு

சொல்லி செல்லும்

மாயங்கள்....

கனத்திடும் பொழுதினில்

காயங்கள் சுமப்பவர்

காயத்தால் செய்திடும்

மாயங்கள்.......

புலத்தில் தானடி பூவே

புலத்தில் தானடி......

Edited by கஜந்தி

புலத்தில்தானடி

வெள்ளைப் பூக்களும்..

கறுப்புத்தேனியும்.....

கறுப்புப்பூக்களும் காதல்

கொள்வதைக் காண்கிறேன்...

காதலுக்கு இது

வலுவென சந்தோசம்

கொண்டேன்..

சிரிக்க விரிந்த

இதழ்கள் மூடுமுன்னே...

செடியிழந்த பூக்கள்..

சிதறிக்கிடந்ததும்..

பூ உதறித்தள்ளியதாய்..

தேனீக்கள்..

மதுவருந்திக்கிடப்பதையும்..

கண்டேன்..

அடடா..

இங்கேயும்.. இப்படித்ததானா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்ததானா இடித்துரைப்பது நீ

இதயக்கரையில் விழுந்ததோ ஒர் கீறல்

கண்ணீர் விலக்கிய பார்வையின் ஒளியில்

நர்த்தனம் புரியும் உந்தன் உருவம்

உருவம்..

பருவக்காலங்களால்

மாறக்கூடும்...

அலங்கோலமாகக்கூடும்...

என்னிதயம்.. தூய்மையாக

இருப்பதை என்னால் உணர முடியாமல்

போகின்ற காலத்தில்..

நான் உன்னருகே

இருக்கமாட்டேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாட்டேன் வரவே மாட்டேன்

வாசல் தேடி வந்த என்னை

விழிமலர மொழி பேசி

வாவென்ற அழைக்காத

வாசல் தேடி எப்படி என்

பாதங்களை பதிப்பேன்

பதிப்பேன் உன்

பாதம் அடி வைக்க

அங்கே என்

உள்ளங்கைகளை....

வேண்டாமா விடு..

நீ வராத வீட்டுக்கு...

உன் தங்கை வருவாளா...

கேட்டுப் பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கிறேன் என் கன்னத்தை

பதிந்துவிட்ட உன் கைவிரல்

பதிப்புக்களை ஆஆஆஆஆஆ

வலிக்கின்றது மனமும் சேர்ந்து

பலிக்கடாவாகி விட்ட என்னை

காளிக்கு ஒப்பாகவா வர்ணிக்கிறாய்

வர்ணிக்கிறாய் தினமும்

வெண்ணிலவை உன்கவிகளில்

வர்ணிப்புக்கு எல்லையே இல்லையா

வெள்ளையுள்ளம் கொண்டவனே..

கெஞ்சிக் கேட்கிறேன்

பஞ்சுமேகத்தை வர்ணி

கொஞ்சிக் கேட்கிறேன்

மஞ்சள்வானத்தை வர்ணி

கன்னி நான் கேட்கிறேன்

மின்னும் நட்சத்திரத்தை வர்ணி

சின்ன வாய்திறந்து கேட்கிறேன்

வர்ண வானவில்லதை வர்ணி

இனிமேல் உன்கவிகளில்

இவள் கேட்ட வர்ணனைகள்

மட்டுமே அலங்கரிக்கும் என்று

கட்டளை இடுகின்றேன் மன்னவனே..

மன்னவனே என் மஞ்சத்தில்

கஞ்சமின்றி துயில் கொண்டவனே

கொஞ்சி பேசி காதல் சொன்னாய்

கொஞ்சமில்லாமல் விஞ்சியும் நின்றாய்

அஞ்சி அஞ்சி என் அந்தரங்கம் கண்டாய்

இந்த வஞ்சியை கஞ்சிக்கு

ஏங்க வைத்துவிட்டாயேடா ?

ஏங்க வைத்துவிட்டாயேடா

நீங்கி எனைச் சென்றதனால்

எங்கே சென்றாய் என்னவனே

வீங்குகின்றன கண்களிரண்டும்

கொங்கைகள் துடிக்கையிலும்

மங்கலமான முகம்வாடுகையிலும்

மங்கையிவள் தவிக்கின்றாள்

வேங்கையே நீ வந்துவிடு...

வங்கக்கடல் அலைகல் போல

பொங்குகின்றன நினைவலைகள்

திங்களிவள் சோருகின்றாள்

சிங்கமே என்முன்னே வா..

இங்கிதமானவனே எனக்கு

தீங்கேதும் நேருமுன்னே

பங்கயக் கழுத்தில் முத்தமிட்டு

சங்கமம் ஆகிவிடு என்னுள்ளே

Edited by வெண்ணிலா

என்னுள்ளே வசிப்பவளே

என்னையே சுவாசிப்பவளே

கண்ணிலே மணியாகி

கனவிலும் உறுத்துபவளே

காதல் என்று எண்ணி

கைபிடிக்க நினைத்தேன்

கானல் நீராய் கரைந்து போனாயே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனாயே...

தமிழ் தந்த செல்வத்தின்

செல்வமே..!

தமிழ் வீரத்தின்

புன்முறுவலே..!

எதிரி படை தோற்கும் நாள்

எட்டும் தொலைவில் தான்

தமிழ் கண்ணே...!

Edited by பூமகள்

தமிழ் கண்னே

தமிழ் மண் தந்த

தமிழ்ச் செல்வனே

காலை வேளைதனில்

வானில் வந்த

காலனவன் உன்னோடு

சேர்த்து ஐவரையும்

முழுங்கியதை எப்படிதான்

மறக்க முடியுமோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறக்க முடியுமோ

மாவீரனே!

உன் புன்னகை சிந்தும் வதனத்தை

பாவியரின் வல்லூறுகள்

பறந்து வந்து உன் உயிர் குடித்ததே

உன் இழப்பின் வடுச் சுமந்து

எம் மன்னவன் சொல்லும்

சேதிக்காய் காத்திருப்போம்

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

காத்திருக்கிறோம் என்று

கார்த்திகைப்பூக்கள் கண்ணைப்

பார்க்கும்.. தலைமகனே

உன்னைப் பார்க்கும்...

காலங்கள்.. எதுவோ

கண்ணீர்ப்பூக்கள்...

மெல்லப் பார்க்கும்....

கல்யாணக் கனவுகள்..

இல்லாமல் கன்னிப்பூக்கள்

போர்க் களம் பார்க்கும்..

சொல்லாமல் வேள்வியில்

வித்தாகும்... கரும்புலி

விண்ணில் நின்று

தமிழ் மண்ணைப் பார்க்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணைப் பார்க்கும்

கண்கள் இங்கே கருவறை சுமந்திடும்

கல்லறைகளில் நெய்விளக்கேற்றி

கண்ணீரை காணிக்கிட

வந்திடுவீர்

வந்திடுவீர் என்றெண்ணி

வாசல் படி நோக்கித்

தவம் கிடந்தேன்!

படலை திறக்கும் ஓசை

கேட்டு

மழலை போல துள்ளியெழுந்து

வாசல் தாண்டி ஓடி

வந்தேன்

கையில் காகிதக் கட்டு

தோளில் தொங்கும் துணிப் பை

எல்லாம் பார்த்து

ஆவலோடு உன் முகம்

பார்த்தேன்...

வழமையாக உதடு சுளிக்கும்

உன் முகம்

புன்னகையோடு...!

மனசுக்குள் ஏதேதோ

இன்பத் துடிப்புகள்...

'அப்பாடா...' இன்றாவது

என் அத்தான் கோபம் தணிந்து

மடல் வரைந்தாரே...!

Edited by kavi_ruban

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரைந்தாரே ஓவியம்

உரைத்திட முடியா நினைவுதனை

கரை கண்டு புரளும் கற்பனையாலே

வரைந்து கவியாலே பாடல்

தொடுத்துடுவீரே

இரை தேடும் பறவைக்கு

இரை தருவது போலே களத்தில்

வரையும் ஓவியம் தருவதும் அழகு

கரைபுரண்டோடும் கவியும் அழகு

கவியும் அழகு

கவி புனையும்

கவியும் அழகு

சுதியும் நயமும்

நெளியும்

நதி போல

என் நெஞ்சில் பாயும்

விரியும் கற்பனையில்

தெரியும் பல காட்சி

சரியும் பிழையும்

தெரியா

கவியொன்று பிறக்கும்!

அரியும் அவனிடை

தழுவும் உமையும்

விழி மலர்த்தி

கை உயர்த்தி

ஆசீர்வதிப்பார்!

நீயும் நானும்

வெறும் பேனைகள்

தமிழன்னை தன்னை நிரப்பி

தன்னையே தாளில்

எழுதுகிறாள்

நானும் வந்து களத்தில்

பிரதி செய்கிறேன்

அவ்வளவே என் கவி!

Edited by kavi_ruban

என் கவிகள்

இயற்கையை தழுவும்

தென்றலாய்

பூக்களை வட்டமிடும்

தேனீக்களாய்

என்றும் உன்னையே

சுற்றி வட்டமிடுகின்றன...

என் கருவிழிப் பார்வையினிலே

நீ விழுந்த நாள் தொடக்கம்

என் மனதினிலே

ஊற்றெடுக்கிறது கவிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.