Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜந்தாவது திருமணத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
woman-cheated-4-youths-260215-400-puthin

சென்னை பி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிட காண்டிராக்டர். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை-பணத்தை அபகரித்து கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது.

   

தற்போது 5-வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி வழக்கு பதிவு செய்து, காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்-தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது.

 

இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை-பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரிய வந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார். காயத்ரி 2010ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து விட்டு விவாகரத்து பெற்று விட்டார். 2012ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரிடமும் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுவிட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

 

2013ம் ஆண்டு கோவில் பூசாரி ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து ரூ.1 லட்சம் பணம், மற்றும் 5 பவுன் நகையை அபகரித்து உள்ளார். இதன்பின் காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்துள்ளார். அதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபரை தனது திருமண வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது. சீனிவாசன் புகாரை தொடர்ந்து. போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127279&category=Puthinam&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோர்ட்டார் அவர்களே.. குந்திதேவி செய்தால் சரி.. காயத்ரி செய்தால் பிழையா? :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோர்ட்டார் அவர்களே.. குந்திதேவி செய்தால் சரி.. காயத்ரி செய்தால் பிழையா? :blink::D

 

அடப்பாவிகளா குந்தி தேவிக்கு 5 கல்யாணம் கட்டி வைச்சிட்டீங்களா. அது திரெளபதி. :lol:  :D

அடப்பாவிகளா குந்தி தேவிக்கு 5 கல்யாணம் கட்டி வைச்சிட்டீங்களா. அது திரெளபதி. :lol:  :D

 

இசையண்ணா தெரிந்து கொண்டு தான் எழுதிப்பாத்தவர் எத்தனை பேர் தான் வைக்கும் கருத்துக்களை சரியாக வாசிக்கின்றார்கள் என்று கண்டுபிடிக்க  :) :)

  • கருத்துக்கள உறவுகள்

இசையண்ணா தெரிந்து கொண்டு தான் எழுதிப்பாத்தவர் எத்தனை பேர் தான் வைக்கும் கருத்துக்களை சரியாக வாசிக்கின்றார்கள் என்று கண்டுபிடிக்க  :) :)

 

பார்ர...இசையண்ணாவுக்கு ஆதரவை.  :lol:

அதுசரி.. உந்தப் பொம்பள செய்த தில்லுமுல்லுப் பற்றி எண்ண நினைக்கிறீங்க. இதையே ஒரு ஆண் செய்திருந்தால்.... நிறைய எழுதி இருப்பீங்களில்ல.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா குந்தி தேவிக்கு 5 கல்யாணம் கட்டி வைச்சிட்டீங்களா. அது திரெளபதி. :lol:  :D

 

 

குந்தி தேவியின் புருசனது பெயர் சூரியன் தானே நெடுக்கு..

மறந்து போச்சு.... :lol:  :D

பார்ர...இசையண்ணாவுக்கு ஆதரவை.  :lol:

அதுசரி.. உந்தப் பொம்பள செய்த தில்லுமுல்லுப் பற்றி எண்ண நினைக்கிறீங்க. இதையே ஒரு ஆண் செய்திருந்தால்.... நிறைய எழுதி இருப்பீங்களில்ல.  :lol:  :D

 

இதில் என்ன சொல்லவிருக்கு? ஆண் பிழைவிட்டால் என்ன பெண் பிழைவிட்டால் என்ன யாரு செய்தாலும் குற்றம் குற்றமே!!!!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா குந்தி தேவிக்கு 5 கல்யாணம் கட்டி வைச்சிட்டீங்களா. அது திரெளபதி. :lol:  :D

நன்றி நெடுக்ஸ்.. :D அதுசரி.. குந்திதேவி யாரைப் பெத்தவா?! :unsure: எல்லாமே மறந்துபோச்சு.. :huh:

இசையண்ணா தெரிந்து கொண்டு தான் எழுதிப்பாத்தவர் எத்தனை பேர் தான் வைக்கும் கருத்துக்களை சரியாக வாசிக்கின்றார்கள் என்று கண்டுபிடிக்க  :) :)

ஆதரவுக்கு நன்றி, தமிழினி.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்.. :D அதுசரி.. குந்திதேவி யாரைப் பெத்தவா?! :unsure: எல்லாமே மறந்துபோச்சு.. :huh:

 

 

நீங்க என்றாலும் பறுவாயில்லை மறந்து போனீங்க.. உங்களுக்கு வயசும் போகுது தானே.. இங்க புலம்பெயர் நாடுகளில் தமிழ் படிச்ச பிள்ளைகள்.. இவாட பெயரை.. உச்சரிக்கிறதைக் கேட்டா.. அழுவீங்க.

 

குந்திதேவி.. கர்ணன் மற்றும் பஞ்சபாண்டவர்களின் அம்மா.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்றாலும் பறுவாயில்லை மறந்து போனீங்க.. உங்களுக்கு வயசும் போகுது தானே.. இங்க புலம்பெயர் நாடுகளில் தமிழ் படிச்ச பிள்ளைகள்.. இவாட பெயரை.. உச்சரிக்கிறதைக் கேட்டா.. அழுவீங்க.

 

குந்திதேவி.. கர்ணன் மற்றும் பஞ்சபாண்டவர்களின் அம்மா.  :lol:  :icon_idea:

 

கர்ணனின் அப்பா யாருப்பா???

பஞ்ச பாண்டவர்களின் அப்பா யாரப்பா..??

தலை வெடிக்கமுன் பதில்..?? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
தோலைபார்த்து மாடு பிடிச்சா தொழிலுக்கு ஆகாது .......
தாடையை பிடிச்சு பார்த்து மாடு அவிட்டா இந்த பிரச்சனைகள் வாராது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.