Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவேச தந்தை...அசராத காதலன்... வீதியில் கட்டினார் தாலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில் அவர் கண் எதிரே தாலி கட்டினார் மகன். பாதசாரிகளே பார்வையாளர் களாக இருந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஓமலுரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத் (22), சேலத்தில் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா(23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

omalur%20love%20500%201.jpg

இதனால், இருவாரங்களுக்கு முன் நண்பர்கள் உதவியுடன் சேலம் அருகே புகழ்பெற்ற கோவில் ஒன்றில் காதல்ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். இது தெரிந்ததும் ஆத்திரமடைந்த பழனிசாமி, கோபிநாத்தை வேலைக்கு அனுப்பாமல் மறைத்து வைத்தார்.

இந்நிலையில் நண்பர்களின் உதவியுடன் தப்பிவந்த கோபிநாத், திவ்யாவை அழைத்துக்கொண்டு ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடிவு செய்து, இருவரும் ஓமலூருக்கு வந் தனர். மகன் பதிவு திருமணம் செய்ய ஓமலூருக்கு வருவது பழனிசாமிக்கு தெரிந்தது. 

love%20pair%20omalur%281%29.jpg

இதையடுத்து, ஓமலூர் கடைவீதிக்கு வந்த காதல் ஜோடியை வழிமறித்த பழனிச்சாமி, திவ்யாவின் கழுத் தில் புது தாலி தொங்கியதை கண்டு ஆவேசமடைந்து, அதை பறித்து வீசினார். மேலும், திவ்யாவை சார மாரியாக தாக்கினார். இதனால் செய்வதறியாது அதிர்ச்சியடைந்த கோபிநாத், திவ்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கடை வீதிக்கு சென்ற கோபிநாத், புது தாலிக்கயிறு வாங்கி, அதே இடத்தில் மனைவியின் கழுத்தில் மீண்டும் கட்டினார். அப்போது அந்த வழியே நடந்துசென்றவர்கள் நடு வீதியில் நடந்த இந்த திருமணத்தை ஆச்சர்யமாக பார்த்தபடி சென்றதோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அவர்களை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த பழனிசாமி, அதைக் கண்டு அதிர்ச்சியாகி ஆத்திரத்தில் திவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்தார். இதனால் கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

omalur%20love%20500%202%281%29.jpg

சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று, காதல் ஜோடியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என எழுத்துப் பூர்வ உறுதிமொழி வாங்கினர். பின்னர் திவ்யாவை, கோபிநாத்துடன் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் சினிமா காட்சிகள் போல அரங்கேறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39382

புதுமணத்தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம்தான் அறுத்து வீசுவார் பண்ணப்பட்டி பழனிச்சாமி? :lol:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
அன்புதான் இறுதியில் ஜெயிக்கும் .
ஆறறிவு இல்லாதவர்களுடன் அலாட்டாமல் .... அவர்களை அப்படியே சாதி தொட்டிலில் வைத்து ஆட்டிவிடுவதுதான் 
சமூகத்திற்கு நன்று! 
அறிவு உள்ளவர்களையும் ....
இல்லாதவர்களையும் .....
இலகுவாக பிரிக்க அதுதான் சிறந்த அளவுகோல்.
 
 
இங்கு (அமெரிக்காவில்) ஒரு கேனையின் மகள் 
இன்னொருவருடன் காதல் கொண்டு திருமணம் ஆக்விட்டார்.
கேனை என்னிடம் வந்து சொல்லிச்சுச்சு .... என்ன இருந்தாலும் எமது சாதியை எப்படி விட்ட்டுகொடுப்பது?
அதனால் மகளை கைவிட்டு விட்டது கேனை.
 
நான் கேட்டேன் ....
அமெரிக்காவில் எல்லா மனிதரும் சரி சமம் என்று 1960இல் இருந்து பாரிய போராட்டம் நடக்கிறது.
பெண்களுக்கு வாக்கு உரிமை பெற்று கொடுத்த்ததில் இருந்து 
இப்போது ஓரின சேர்க்கை ஆளர்களுக்கும் ஒன்றாக வாழ வசதியும் 
சில ஸ்டேட்டில் திருமணம் செய்யும் தகுதியையும் பெற்று கொடுத்திருக்கு.
நீங்கள் ஏன் இங்கு வந்தனீங்கள் ....?
அங்கின இரண்டு கத்தரி கண்டை நட்டுபோட்டு .....
நான் யாழ் உயர் வேளாள குளத்தை சேர்ந்தவன் என்று ஒரு எழுத்து பலகையையும் போட்டுவிட்டு 
அதற்கு கீழே இருந்திருக்கலாமே....? 
செய்யுறது முழுக்கு சுத்த பித்தலாட்ட வேலை .....
இதுக்கு ஒரு உயர் தகுதி வேற கேட்குது நாய்க்கு!
உண்மையான சாதி என்றால் 
ஏன் இவர்கள் எல்லா மனிதரும் சமன் என்று வகுக்க பட்ட மேற்கு நாடுகளில் வந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ???
கேட்கிறவன் என்ன கேனையனா ??? 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு இரண்டும்.. மூன்று வருசத்தில.. திவ்வியா தானே.. இந்த தாலியை அறுத்தெறியாத வகைக்கு கோபிநாத்து குடும்பம் நடத்துவாரா..?!

 

நடத்திட்டா.. நல்லது.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அன்புதான் இறுதியில் ஜெயிக்கும் .
ஆறறிவு இல்லாதவர்களுடன் அலாட்டாமல் .... அவர்களை அப்படியே சாதி தொட்டிலில் வைத்து ஆட்டிவிடுவதுதான் 
சமூகத்திற்கு நன்று! 
அறிவு உள்ளவர்களையும் ....
இல்லாதவர்களையும் .....
இலகுவாக பிரிக்க அதுதான் சிறந்த அளவுகோல்.
 
 
இங்கு (அமெரிக்காவில்) ஒரு கேனையின் மகள் 
இன்னொருவருடன் காதல் கொண்டு திருமணம் ஆக்விட்டார்.
கேனை என்னிடம் வந்து சொல்லிச்சுச்சு .... என்ன இருந்தாலும் எமது சாதியை எப்படி விட்ட்டுகொடுப்பது?
அதனால் மகளை கைவிட்டு விட்டது கேனை.
 
நான் கேட்டேன் ....
அமெரிக்காவில் எல்லா மனிதரும் சரி சமம் என்று 1960இல் இருந்து பாரிய போராட்டம் நடக்கிறது.
பெண்களுக்கு வாக்கு உரிமை பெற்று கொடுத்த்ததில் இருந்து 
இப்போது ஓரின சேர்க்கை ஆளர்களுக்கும் ஒன்றாக வாழ வசதியும் 
சில ஸ்டேட்டில் திருமணம் செய்யும் தகுதியையும் பெற்று கொடுத்திருக்கு.
நீங்கள் ஏன் இங்கு வந்தனீங்கள் ....?
அங்கின இரண்டு கத்தரி கண்டை நட்டுபோட்டு .....
நான் யாழ் உயர் வேளாள குளத்தை சேர்ந்தவன் என்று ஒரு எழுத்து பலகையையும் போட்டுவிட்டு 
அதற்கு கீழே இருந்திருக்கலாமே....? 
செய்யுறது முழுக்கு சுத்த பித்தலாட்ட வேலை .....
இதுக்கு ஒரு உயர் தகுதி வேற கேட்குது நாய்க்கு!
உண்மையான சாதி என்றால் 
ஏன் இவர்கள் எல்லா மனிதரும் சமன் என்று வகுக்க பட்ட மேற்கு நாடுகளில் வந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ???
கேட்கிறவன் என்ன கேனையனா ??? 

 

 

அமெரிக்காவிலை வெள்ளாளம் இல்லாட்டிலும் வெள்ளைக்காரன் இருக்கிறான்...அவனும் அப்பப்ப தன்ரை இனத்துவேசத்தை காட்டிக்கொண்டுதானே இருக்கிறான்.... :D
 
உலகத்திலை இருக்கிற எல்லா நாட்டிலையும் ஏதாவது ஒரு துவேசம் இருந்துகொண்டுதா இருக்குது. மத துவேசம் / இன துவேசம் / நிற  துவேசம் / பண துவேசம்.....இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்........அமெரிக்காவிலை இருந்துகொண்டு கத்தரிக்கண்டு வரைக்கும் போட்டியள் அங்கைதான் என்ரை நெஞ்சைத் தொட்டுட்டியள்... :icon_mrgreen:
 
மணமக்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அன்புதான் இறுதியில் ஜெயிக்கும் .

ஆறறிவு இல்லாதவர்களுடன் அலாட்டாமல் .... அவர்களை அப்படியே சாதி தொட்டிலில் வைத்து ஆட்டிவிடுவதுதான்

சமூகத்திற்கு நன்று!

அறிவு உள்ளவர்களையும் ....

இல்லாதவர்களையும் .....

இலகுவாக பிரிக்க அதுதான் சிறந்த அளவுகோல்.

இங்கு (அமெரிக்காவில்) ஒரு கேனையின் மகள்

இன்னொருவருடன் காதல் கொண்டு திருமணம் ஆக்விட்டார்.

கேனை என்னிடம் வந்து சொல்லிச்சுச்சு .... என்ன இருந்தாலும் எமது சாதியை எப்படி விட்ட்டுகொடுப்பது?

அதனால் மகளை கைவிட்டு விட்டது கேனை.

நான் கேட்டேன் ....

அமெரிக்காவில் எல்லா மனிதரும் சரி சமம் என்று 1960இல் இருந்து பாரிய போராட்டம் நடக்கிறது.

பெண்களுக்கு வாக்கு உரிமை பெற்று கொடுத்த்ததில் இருந்து

இப்போது ஓரின சேர்க்கை ஆளர்களுக்கும் ஒன்றாக வாழ வசதியும்

சில ஸ்டேட்டில் திருமணம் செய்யும் தகுதியையும் பெற்று கொடுத்திருக்கு.

நீங்கள் ஏன் இங்கு வந்தனீங்கள் ....?

அங்கின இரண்டு கத்தரி கண்டை நட்டுபோட்டு .....

நான் யாழ் உயர் வேளாள குளத்தை சேர்ந்தவன் என்று ஒரு எழுத்து பலகையையும் போட்டுவிட்டு

அதற்கு கீழே இருந்திருக்கலாமே....?

செய்யுறது முழுக்கு சுத்த பித்தலாட்ட வேலை .....

இதுக்கு ஒரு உயர் தகுதி வேற கேட்குது நாய்க்கு!

உண்மையான சாதி என்றால்

ஏன் இவர்கள் எல்லா மனிதரும் சமன் என்று வகுக்க பட்ட மேற்கு நாடுகளில் வந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ???

கேட்கிறவன் என்ன கேனையனா ???

மருதுக்கு கறுப்பின மக்களுககு நடக்ககிற விடயங்கள் தெரியல

  • கருத்துக்கள உறவுகள்

மருதுக்கு கறுப்பின மக்களுககு நடக்ககிற விடயங்கள் தெரியல

இங்கு எல்லோரும் சமம் எனும் சட்டம் அமூலில் இருக்கிறது.
மற்றவர்களுடன் தாம் சமம் இல்லை என்று எண்ணுபவர்கள் ....... ஏன் இங்கு வர வேண்டும்?
எங்கு போகிறோம் ஏன் போகிறம் என்ற விடை காண ஆறாம் அறிவு பிரச்சனை தவிர்த்து வேறு ஒரு காரணத்தை கூறமுடியவில்லை. 
இங்கு உங்களை ஒருவர் மத ரீதியாகவோ .... நிற ரீதியாகவோ ... இன ரீதியாகவோ.... பால் ரீதியாகவோ  
துன்புறுத்தினால் நீங்கள் வழக்கு பதிவு செய்யலாம்.
உங்களை சட்டம் பாதுகாக்கும்.
 
ஆபிரிக்காவில் இருந்து நேற்று வந்தவன் எல்லாம் இங்கு நல்லாத்தான் இருக்கிறான்.
சோம்பேரிகள்தான் அடுத்தவன் முதுகில் ஏறுவதும் ..... அவன் இறக்கிவிட்டால் ... துவேஷம் காட்டுகிறான் ...
என்ற கணக்கில் திரிகிறார்கள்.
யாராகினும் விதைப்பதையே அறுவடை செய்யமுடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.