Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்திருத்தல்

Featured Replies

தனித்திருத்தல் வரம்.

நீண்ட  இரவில்

ஏதாவது ஒரு மாலையில்

தன் குரல் கேளாத தொலைவில்

 

எதுவும் தேவையில்லை

நீ நான் அவர்கள்

 

ஒரு புல்வெளியில்

குளக்கரையில்

குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்..

 

தனித்திருத்தல் பெரும் தவம்.

 

இழக்கவும்

ஏற்கவும் எதுவுமில்லாமல்,

கேட்கவும்

சொல்லவும் எவருமில்லாமல்

 

பெருவெளியொன்றில்

மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல

கிளைநுனியொன்றில்

சலனமின்றிக் கிடக்கும் ஒரு  பறவையைப் போல

 

தனித்திருத்தல் வரம்

தனித்திருத்தல் பெரும் தவம்.

 

தனித்திருத்தலில்

ஒரு தற்கொலை நிகழலாம்

ஒருவன் வன்புணர்வை முயலலாம்

தாயொருத்தி

அடிவயிற்றின் வலியோடு

ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம்

எவனோவொருவன்

எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு

காமத்தை கழித்துக் கொண்டிருக்கலாம்

பெண்ணொருத்தி கணவன் போனபின்

படுக்கையை தயார் செய்து காவலிருக்கலாம்

 

இருந்தாலும்,

எங்காவது யாராவதொருவர்

தனிமையின் பேறடைந்திருக்கலாம்.

நெற்கொழு, இக் கவிதை பல படிமங்களினூடாக தனித்திருத்தலின் இனிமையைச் சொல்லி செல்கின்றீர்கள்.

 

பொதுவாக தனித்து இருத்தல் ஒரு சாபமாகதான் பலரால் நோக்கப்படுகின்றது, ஆனால் அது வரமாகவும் சில வேளைகளில் வாய்பதுண்டு. பெரும் கூட்டத்தில் தனித்து இருத்தலும், யாருமற்ற வெளியில் இயற்கையுடன் தனித்து இருத்தலும் பல தடவைகள் எமக்குள் எம்மை இறங்கிச் செல்ல தூண்டுவன.

 

பெருவெளியொன்றில்

மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல

கிளைநுனியொன்றில்

சலனமின்றிக் கிடக்கும் ஒரு  பறவையைப் போல

 

தனித்திருத்தல் வரம்

தனித்திருத்தல் பெரும் தவம்.

 

 

 

இவ் வரிகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டி ஒவ்வொரு வாசிப்பிலும் மனசை தனித்திருத்தலை நோக்கிப் பறக்கச் செய்கின்றது
 

 

நீண்ட  இரவில்

ஏதாவது ஒரு மாலையில்

தன் குரல் கேளாத தொலைவில்

எதுவும் தேவையில்லை

நீ நான் அவர்கள்

 

 

இக் கவிதையில் என் புரிதலை இவ் வரிகள் சற்று தாமதப்படுத்துகின்றன.

 

நீ / நான் / அவர்கள் எல்லாம் சேர்ந்து இருக்கும் போது தனித்திருத்தல் என்பது கூட்டத்தின் நடுவே தனித்து இருத்தலைச் சொல்கின்றதா என சிறு மயக்கம் எழுகின்றது, சில காலம் செல்ல இவ் வரிகள் எனக்குள் புதுவிதமான புரிதலைத் தரலாம்..............
 

என் இன்றைய மிகுந்த பரபரப்பான நாளின் சில கணங்களை பொருள் மிகுந்ததாக்கிச் செல்கின்றது உங்கள் கவிதை. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தனித்திருத்தல் சில சமயங்களில் வரமாக இருந்தாலும் பல சமயங்களில் சாபமாகத்தான் இருக்கிறது. வழமைபோல் நெற்கொழுதாசன் நல்லதொரு கவிதை தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் சில சமயங்களில் சுற்றிலும் உறவுகள் இருந்தாலும் முற்றிலும் தனிமை உணர்வு மிகுந்து நிற்பதை தவிர்கமுடியாது தனிமை வரமும் சாபமும் கலந்த ஓர் வாழ்க்கை அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித்திருத்தலின் தனித்துவத்தைச் சொல்லும் நல்ல கவிதை. வாழ்த்துகள்.

 

தனியாக இருத்தல் (யாருமின்றி),

தனித்திருத்தல் (தனக்கேயுரித்தான பண்புகளுடன்)

தன்னுடன் இருத்தல் (தனியாக இருந்தாலும் கூட்டத்தோடு இருந்தாலும், தன்னுள் நிகழ்வதுடன், தான் ஒன்றியிருத்தல்)

 

என்ற மூன்று விதமாகத் தனித்திருத்தலைப் புரிந்துகொள்ளலாம்.

Edited by seyon yazhvaendhan

சாதாரண ஒரு கவிதையாக கடந்து செல்ல முடியவில்லை, தனிமையின் பேறை நீங்கள் அடையாமல் இதை படைத்திருக்க முடியாது,

தனித்திருக்கும் போதுதான் பிரபஞ்ச இருப்புநிலையை உணரமுடியும். இந்த கவிதையை வாசித்தபின் அந்த உணர்வு ஏற்பட்டது நெற்கொழு அண்ணா.

  • தொடங்கியவர்

நெற்கொழு, இக் கவிதை பல படிமங்களினூடாக தனித்திருத்தலின் இனிமையைச் சொல்லி செல்கின்றீர்கள்.

 

பொதுவாக தனித்து இருத்தல் ஒரு சாபமாகதான் பலரால் நோக்கப்படுகின்றது, ஆனால் அது வரமாகவும் சில வேளைகளில் வாய்பதுண்டு. பெரும் கூட்டத்தில் தனித்து இருத்தலும், யாருமற்ற வெளியில் இயற்கையுடன் தனித்து இருத்தலும் பல தடவைகள் எமக்குள் எம்மை இறங்கிச் செல்ல தூண்டுவன.

 

 

 

இவ் வரிகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டி ஒவ்வொரு வாசிப்பிலும் மனசை தனித்திருத்தலை நோக்கிப் பறக்கச் செய்கின்றது

 

 

இக் கவிதையில் என் புரிதலை இவ் வரிகள் சற்று தாமதப்படுத்துகின்றன.

 

நீ / நான் / அவர்கள் எல்லாம் சேர்ந்து இருக்கும் போது தனித்திருத்தல் என்பது கூட்டத்தின் நடுவே தனித்து இருத்தலைச் சொல்கின்றதா என சிறு மயக்கம் எழுகின்றது, சில காலம் செல்ல இவ் வரிகள் எனக்குள் புதுவிதமான புரிதலைத் தரலாம்..............

 

என் இன்றைய மிகுந்த பரபரப்பான நாளின் சில கணங்களை பொருள் மிகுந்ததாக்கிச் செல்கின்றது உங்கள் கவிதை. நன்றி

மிக்க அன்பு நிழலி அண்ணை, 

உங்களின் கருத்திடலை வாசித்தபின்  கவிதையின் அழகு தனித்து தெரிகிறது. 

 

அன்பும் நன்றியும் அண்ணை 

தனித்திருத்தல் சில சமயங்களில் வரமாக இருந்தாலும் பல சமயங்களில் சாபமாகத்தான் இருக்கிறது. வழமைபோல் நெற்கொழுதாசன் நல்லதொரு கவிதை தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் சில சமயங்களில் சுற்றிலும் உறவுகள் இருந்தாலும் முற்றிலும் தனிமை உணர்வு மிகுந்து நிற்பதை தவிர்கமுடியாது தனிமை வரமும் சாபமும் கலந்த ஓர் வாழ்க்கை அனுபவம்.

 

மிக்க அன்பு அக்கா, 

 

ஒவ்வொருவரும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உணர்வை கடந்துதானே வாழ்கிறோம். அப்படி இல்லாவிட்டால் வாழ்வில் சுவைதான் ஏது?

 

நன்றி அக்கா. 

தனித்திருத்தலின் தனித்துவத்தைச் சொல்லும் நல்ல கவிதை. வாழ்த்துகள்.

 

தனியாக இருத்தல் (யாருமின்றி),

தனித்திருத்தல் (தனக்கேயுரித்தான பண்புகளுடன்)

தன்னுடன் இருத்தல் (தனியாக இருந்தாலும் கூட்டத்தோடு இருந்தாலும், தன்னுள் நிகழ்வதுடன், தான் ஒன்றியிருத்தல்)

 

என்ற மூன்று விதமாகத் தனித்திருத்தலைப் புரிந்துகொள்ளலாம்.

சேயோன் 

மிக்க அன்பு, 

 

உங்களின் வாசிப்பின் நுண்மை என்னை இன்னும் பொறுப்புடன் இயங்க தூண்டுகிறது 

மிக்க நன்றி 

சாதாரண ஒரு கவிதையாக கடந்து செல்ல முடியவில்லை, தனிமையின் பேறை நீங்கள் அடையாமல் இதை படைத்திருக்க முடியாது,

தனித்திருக்கும் போதுதான் பிரபஞ்ச இருப்புநிலையை உணரமுடியும். இந்த கவிதையை வாசித்தபின் அந்த உணர்வு ஏற்பட்டது நெற்கொழு அண்ணா.

சாதாரண கவிதையாக கடக்கமுடியவில்லை என்று சொல்லும் போதே தெரிகிறது நண்பனே உன் தனித்திருப்பும். 

 

மிக்க அன்பு விஷ்வா 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் இக் கவிதையைப் படித்தேன். நன்றாக உள்ளது நன்பரே...!

 

தனித்திருத்தல் அத்தோடு விழித்திருத்தலும் முக்கியம்...!  :)

  • தொடங்கியவர்

இப்போதுதான் இக் கவிதையைப் படித்தேன். நன்றாக உள்ளது நன்பரே...!

 

தனித்திருத்தல் அத்தோடு விழித்திருத்தலும் முக்கியம்...!  :)

மிக்க அன்பு சுவி ஐயா 

 

எப்போதும் விழித்திருக்கவே முயல்வேன் ஐயா. 

 

நன்றியுடன் ..

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை சிலவேலைகளில் கொடுமை. சிலவேளைகளில் இனிமை.

அப்படி இருப்பவர்களின் மன நிலையைப் பொறுத்து அது அளக்கப்படுகின்றது.
தனித்திருக்கும்போது மனக்கட்டுப்பாடு அவசியம்.
கவிதைக்கு நன்றி நேற்கொழு தாசன்
 

  • தொடங்கியவர்

 

தனித்திருக்கும்போது மனக்கட்டுப்பாடு அவசியம்.

 

நூறு வீதம் உண்மையான வரிகள் 

 

அன்புகள் ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்

தனித்திருத்தல் என்பது ஒரு விதமான...தவம் என்பது எனது கருத்து!

 

சும்மா இருக்கும் திறன் அரிது  என்றார் தாயுமானவ சுவாமிகள்!

 

அந்தத் திறன் உங்களுக்குக் கை  வந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி!

 

சின்ன வயதிலேயே சந்நியாசி விடுவீங்களோ என்று பயந்தேன்!

 

ஆனால்.. உங்கள் அடுத்த கவிதை.. அந்தப் பயத்தை முற்றாகப் போக்கி விட்டது! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.