Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 அரசியலுக்குள் பலியாகமாட்டேன்: சிறிதரன் எம்.பி

Featured Replies

article_1427436335-Sritharan.JPG

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும்  அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

 

யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இருப்பினும், அந்நிகழ்வில், சிறிதரன் எம்.பி கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், 'பிரதமர் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை' என்றார்.

 

 http://www.tamilmirror.lk/142760#sthash.6WpaVV41.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் முதல்வருக்கு மதிப்புத்தராத ஒருவர் அவர் யாராயிருந்தால் என்ன? நாங்கள் மதிப்புத்தர வேண்டுமா..??  நன்றி தமிழ் மகனே!!

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இப்ப.. சிங்களவங்க முன்னால.. நல்லா கூனிக்குறுக வெளிக்கிட்டிட்டார். :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தின் முதல் குடி மகனுக்கு அழைப்பு கொடுக்காமால் விட்டத்தின் முக்கிய காரணம்.....ஒற்றையாட்ச்சியை விரும்புகின்றார்கள் என்பதற்க்கு எடுத்துக்காட்டு......

  • கருத்துக்கள உறவுகள்
உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.
  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.

 

நீங்களே எங்கன்ட கருத்தை எழுதினால் நாங்கள் எப்படி மாற்று கருத்து வைக்கிறதாம்..:D

  • கருத்துக்கள உறவுகள்

 

உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.

 

சிறீதரனின் இந்த அறிக்கையிலும் ஒரு அரசியல் உண்டு

மக்கள் விக்கி ஐயாவின் நடவடிக்கைகளால் அவரது பக்கம் நிற்கிறார்கள்...

சிறீதரன் அதை வைத்து அரசியல் செய்கிறார்

நமக்கு எவர் குற்றினாலும அரிசியானால் சரி...

  • கருத்துக்கள உறவுகள்

 

உணர்ச்சி அரசியல் செய்யும் ஒரு புலத்து புலிவலாகத்தான் இவர் இருக்க முடியும்.
இதனால் இவர் சாதித்தது என்ன ???
 
மக்களுக்கு போசாக்கு மா கிடைப்பதை புறனிக்கிறார் 
முன்பு புலிகள் யாழ்தேவியை மறித்தார்கள் ......
இவர் போசாக்கு மாவை மறிக்கிறார் ....
 
மக்களுக்கு இப்போது தேவை போசாக்கு மா மட்டுமே 
பிரதமர் கொண்டுவந்தும் 
இவர்களால் மக்களுக்கு கிடைக்காது போவது அநியாயம்.

 

 

 

 

வட மாகாண முதலமைச்சரை புறக்கணிக்கும் 
ரணிலை 
உண்மையான தமிழன் யாரும் சந்திக்க போக மாட்டான்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணிலுக்கு... முதல்வர் விக்னேஸ்வரனை கண்டால் பிடிக்காது என்றும்,
தமிழர் சம்பந்தமான பிரச்சினைகளை... சம்பந்தன், சுமந்திரன் வகையறாக்களிடம் கேட்டு அறிந்து கொள்வதாகவும்,
"தந்தி தொலைக்காட்சிக்கு" அளித்த பேட்டியில் குறிப்பட்டதை, யாழ் களத்தில்... யாரோ.. இணைத்திருந்தை பார்த்தேன்.
பிதமர் ரணிலை பார்க்க... "கிண்டர் கார்டன்"  பிள்ளைகள், எவ்வளவோ திறம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சிறிதரன்.

இந்த விக்கி - ரணில் பூசலுக்கு யாராவது முடிவு கட்டினால் தேவலை. Unnecessary distraction.

ரணில் வேண்டும் என்றே சிங்கள வாக்குகளுக்காக செய்யுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் வழங்கும் போசாக்கு பொதிகளை முதலில் பகுப்பாய்வு செய்ய அனுப்பவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சிறிதரன்.

இந்த விக்கி - ரணில் பூசலுக்கு யாராவது முடிவு கட்டினால் தேவலை. Unnecessary distraction.

ரணில் வேண்டும் என்றே சிங்கள வாக்குகளுக்காக செய்யுறார்.

 

முதல்வர் விக்னேஸ்வரன், முன்பு நீதிபதியாக இருந்த போது...

ரணிலுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை போலுள்ளது.....

அது தான்... ரணில், இப்ப.. பிரதமராக வந்து.... எமது முதல்வரை பழிவாங்குகிறார். :D  :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சிறிதரன்.

இந்த விக்கி - ரணில் பூசலுக்கு யாராவது முடிவு கட்டினால் தேவலை. Unnecessary distraction.

ரணில் வேண்டும் என்றே சிங்கள வாக்குகளுக்காக செய்யுறார்.

முதல்வர் சி வி யின் நகர்வு எமக்கு சாதகமாக அமையாது என்று வேறு ஒரு திரியில் எழுதினேன்.
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் வினவினேன்.
 
அவரை தள்ளிவிட்டு சிங்களம் பயணிக்கும். 
இதுதான் இன்றைய செய்தி . (மேலே இருக்கு)
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மருது இப்போதான் இந்த திரியை கண்டேன்.

சீவி கொஞ்சம் வெளிபடையான, மனதில் தோன்றுவதை சொல்லும் டைப். அவர் ரணிலிடம் சிங்களவர்களுக்கு உண்மையை சொல்லும் நியாய அரசியலை எதிர்பார்கிறார்.

ரணில் இப்போ செய்வது தேர்தலை மனதில் வைத்து செய்யும் positioning . தன்னை ஒரு சிங்கள காவலனாக strong man ஆக காட்ட வேண்டியே மீனவரை சுடுவோம் எனும் பேச்சு மற்றும் சீவியுடன் முரண்பாடு எல்லாம்.

சீவியும் இனக்கொலை தீர்மானத்தை கொஞ்சம் விட்டுப் பிடித்திருக்கலாம். ரணிலை கடுப்பேற்றியதை தவிர அந்த தீர்மானம் ஒன்றையும் அடைய போவதில்லை.

இவர்கள் முரண்டு பிடிப்பதால் நீண்ட நோக்கில் இருவரும் எமக்கும் ஒரு லாபமுமில்லை. தேர்தலுக்கு பின் சுமூகம் ஆவார்கள் என்றே தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.