Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச்சேவை இலங்கையின் சுமை – றணில் விக்ரமசிங்க

Featured Replies

srilankan%20air_CI.jpg

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச்சேவையை இலங்கையின் சுமை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வர்ணித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமானச்சேவை எங்கள் நாட்டிற்கு பெரும் சுமை, உலகில் வேறு எந்த விமானச்சேவையும் இவ்வளவு சமையாக விளங்கவில்லை.

எங்களுக்கு சொந்தமாக ஒரு எயர்பஸ் கூடயில்லை, ஸ்ரீலங்கன் எயர்லைன்சிடம் சில பேருந்துகளும், லொறிகளும் மாத்திரம் உள்ளன, சாதராண போக்குவரத்து நிறுவனத்திடம் இதனை விட அதிகமான வாகனங்களிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118263/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணத்திலை நிக்கிற ஆமியள் நாட்டுக்கு சுமையாய் தெரியேல்லையோ? ஆமியிட்டை எக்கச்சக்கமான லொறியும் பேரூந்தும் நிக்குதாமே... :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எங்கட தாய் நாட்டை இப்படி கேவலப்படுத்துறாரே

ரணில் தனக்கு பெரிய சுமை எண்டு மைத்திரி விரைவிலை சொல்ல போறா. :D (திருமதி ரணிலை சொன்னன்) 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கூட... நான்கு விமானத்தை, சொந்தமாக வைத்திருந்தார்கள்.
வெட்கம், கெட்ட ஸ்ரீலங்கா.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு, நாக்கிலை.....  "சனி பகவான்" குடி கொண்டுள்ளார். :D  :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு, நாக்கிலை.....  "சனி பகவான்" குடி கொண்டுள்ளார். :D  :lol:  :icon_mrgreen:

 

எயர் இந்தியாவுடன் கூட்டுச்சேர்ந்து விமானசேவை நடத்த திட்டம்போடுறார் போல

  • கருத்துக்கள உறவுகள்

எயர் இந்தியாவுடன் கூட்டுச்சேர்ந்து விமானசேவை நடத்த திட்டம்போடுறார் போல

 

ம்ம்ம்ம்ம்ம்....................

எயார், இந்தியாவே..... பக்கிள் அடிச்சுக் கொண்டு நிக்குது, புத்தா...

  • கருத்துக்கள உறவுகள்

எயர் இந்தியாவுடன் கூட்டுச்சேர்ந்து விமானசேவை நடத்த திட்டம்போடுறார் போல

 

அவர் ரணில் எயார் விடப்போறார் போல...

ஏன் மகிந்த எயார் விடலாம்

ரணில் விடப்படாதோ..??

உந்த ஸ்ரீ லங்கன் ஏற்லைன் எமிரேட்ஸ் ஏற்லைன் உடன் சேர்ந்து இயங்கும்போது ஓரளவு நல்லாக போனது. எமிரேட்ஸ் கைவிட்டவுடன் எல்லாம் போச்சு 

  • தொடங்கியவர்

சிறிலங்கன் ஏர்லைன்ஸில் முறைகேடுகள்: விசாரணைக் குழு

 

150117145114_sri_lankan_airlines__512x28

 

 

இலங்கையின் முந்நாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் இடம்பெற்றதை விசேட விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது சம்பந்தமாக குற்றவியல் விசாரணை செய்யப்பட்டு குற்றத்துக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

 
சிறிலங்கா ஏர்லைன்ஸ் மீது தெரிவிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த மூத்த சட்டத்தரணி ஜே. சி. வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு, அதிர்ச்சியூட்டும் பல மோசடிகள் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பிரதமர் அலுலகத்தின் அறிக்கை கூறுகிறது.
சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முந்நாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்ஹ, தனது பதவியை முழுமையாக முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என விசாரணைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒப்பந்தங்கள் முறைகேடாக கையாளப்பட்டமை, தகமையற்றவர்களை பணிக்கமர்த்தப்பட்டமை, மற்றும் விமான சேவையின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டமை என பில்லியன் டொலர்கள் கணக்கில் மோசடி நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முந்தைய அரசாங்கத்தின் கீழ் சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், புத்தம் புதிய விமானங்களை வாங்கியது உட்பட ஏராளமான செலவுகளை அனாவசியமாக செய்திருந்தது என்றும், ஆனால் குறைவான செலவிலேயே விமான சேவையில் நல்ல விதமான மாற்றங்களை கொண்டுவந்திருக்க முடியும் எனவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
 
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விமான சேவையின் முந்நாள் தலைவரும், முந்நாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மைத்துணருமான நிசாந்த விக்ரமசிங்ஹ மீது குற்றவியல் விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி வெலியமுனவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
நிசாந்த பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றை சிறிலங்கா ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி கபில சந்திரசேன, போலி ஆவணங்கள் அடிப்படையில் தந்தார் என்பதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
 
நுழைவுத் தேர்வில் சித்தி பெறாதவர்கள் பலருக்கு முகாமைத்துவத்தின் தலையீட்டின் பேரில் வேலை வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிர விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி சந்திரசேன, அந்தப் பதவிக்கு பொருத்தமற்றவர் என்பதுடன், முறைகேடான வகையில் விமானிகளை பணிக்கமர்த்தியமை உட்பட, விமானப் பணியாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆட்கடத்தல் கும்பலுக்கு உதவியமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் வந்திருக்கவில்லை.
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mr_returnhome_02.jpg

 

Airport%202.img_assist_custom.jpg

 

விழுந்து கும்பிட்ட ராசிபலன் இப்ப வேலை செய்யுது.  :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.