Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகக்திலும் சிறிலாங்காப்படையினருக்கு பயிற்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழகத்தில் பயிற்சிகள்

தமிழகம் இந்தியா சூளுர் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய வான்படைத்தளத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இதனைகண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் பாரரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது

இதேவேளை இவ்வாரம் இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில், கடந்த சிலநாட்களாக சிறிலங்கா விமானப்படையினருக்கு இந்தியாவால் இரகசியமாக விமானப்பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

பதிவு

சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியா பயிற்சி வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில்

- பண்டார வன்னியன் 17 நவம் 2006 17:11

கடந்த வாரம் இந்தியா பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில் இலங்கை விமானப்படைக்கு பயிற்சிகள் வழங்கப்ட்டது விடயமாக சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியானதும் அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பட்ட எதிர்ப்புக் குரல்கள் இந்திய அரசுக்கெதிராக எழுந்துவரும் நிலையில், இன்று தமிழகம் கோயம்புத்தூர் சூளுரில் உள்ள இந்திய வான்படைத்தளத்தில் மற்றுமொரு வான்படைப்பயிற்சி இலங்கை வான்படைக்கு ஏற்பாடகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கோவை கே.யூ.இராமக்கிருஸ்ணன் மற்றும் வீ.ஈ.ஆறுச்சாமி தலைமையில் கோவை பெரியார் திராவிடர்கழகத்தினர் எதிர்புத் தெரிவிக்கும் முகமாக, மாலை 4.00மணியளவில் சூளுர் சீரணி அரங்கிலிருந்து, விமானப்படை தளத்தினை நோக்கி 100க்கு மேற்பட்டோர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாகச் சென்ற வேளையில், மாலை 5.00மணியளவில் பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு சூளுர் மண்டபத்தடி பொலிசில் தடுத்து வைக்கப்ட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : சங்கதி.கொம்

ஈழத்திலிருந்து

ஜானா :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் பயிற்சியும் வழங்குவம் அதுக்கு எதிரா போராட்டமும் நடத்துவம் இடைக்கிட சிறீலங்கா அரசாங்கத்தை எங்கட அரசாங்கம் கண்டிக்கிறதா அறிக்கையும் விடுவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் உங்களுக்கும் உங்கட குடும்பங்களோட கல்லா சூட்கேசுயள் நிறைஞ்சா சரிதானே :P :P :P

வசதிக்கேற்றவாறு கருத்துக்கள் பதிவதில் ஒன்றும் குறைவில்லைதான். செய்தாலும் குறை செய்யாவிட்டாலும் குறை. இதனால்த் தானே இன்றுவரை இவ்வளவு பாதிப்புக்கள் எமக்கேற்பட்டும் எவரும் ஏன் என்று கேட்கும் நாதியற்றவர்களாக நாம் இருக்கின்றோம்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை சம்மந்தமான சகலவிடயங்களும் மத்தியரசின் கீழேயே உள்ளன. அதனால் மாநில அரசிற்குத் தெரியாமலே பலவிடயங்கள் மத்திய அரசு செய்யலாம். உதாரணமாக முன்பு தமிழ்நாட்டிலிருந்து ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டது தமிழ்நாட்டரசிற்குத் தெரியாமலேயே நடந்தது. பின்புதான் ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டது தமிழ்நாட்டரசு அறிந்து கொண்டது.

இலங்கை விமானப்படையினருக்கு இந்தியா பயிற்சியளிக்க மறுத்தால் அவர்கள் பாகிஸ்தானிலோ அல்லது சீனாவிலோ அதனைப் பெறுவார்கள். இலங்கை விடயத்தில் அவர்களுக்கும் ஏதாவது செய்தால்த்தான் எமக்காக நாளை இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் ஏதாவது சொன்னால் இலங்கை அரசும் அதனைத் தட்டிக்களிக்காத நிலை வரலாம். எனவே எழுந்தமானத்திற்கு எதையாவது எழுத வேண்டுமென்று எழுதாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை விமானப்படையினருக்கு இந்தியா பயிற்சியளிக்க மறுத்தால் அவர்கள் பாகிஸ்தானிலோ அல்லது சீனாவிலோ அதனைப் பெறுவார்கள். இலங்கை விடயத்தில் அவர்களுக்கும் ஏதாவது செய்தால்த்தான் எமக்காக நாளை இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் ஏதாவது சொன்னால் இலங்கை அரசும் அதனைத் தட்டிக்களிக்காத நிலை வரலாம்.
இந்தியா இலங்கையரசிடம் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது செய்யச்சொல்லுமா? இப்படியே இலவு காத்த கிளி மாதிரி ஏமாந்து இருங்கள். :lol:

எத்தனை முறை இந்தியா பொட்டிலடித்த மாதிரி சொல்லியாயிற்று..? சுதந்திர ஈழம் தீர்வல்ல, நீங்கள் எப்பொழுதும் சிங்களவனுக்கு கீழ்தானென்று..! உதவாக்கரை மாவட்ட கவுன்சில் ஆட்சிமுறையை திணிக்கப்பார்த்தவர்களை இன்னுமா நம்புகிறீர்கள்? தமிழ்நாடு இந்தியாவிடம் பத்திரப்படும் வரை மத்திய அரசின் இந்த 'சகுனி ஆட்டம்' நிச்சயம் தொடரும்.இங்கே தமிழக தமிழர்களின் அரைவேக்காட்டு கருத்தொற்றுமையின்மையால் மத்தியில் அதிகாரவர்கத்திடம் அவ்வளவு ஆதிக்கம் செலுத்த முடியாதென்பதே உண்மை. இதில் பல அரசியல்வாதிகள் இன்று ஒரு சொல், நாளையொரு நிலை எடுப்பவர்கள்.

புத்திசாலியாக நடந்துகொள்வது ஈழமக்களின் தீர்க்கமான தீர்மானத்திலேதான்!

நாங்கள் அரைவேக்காட்டுத் தனமாக நடந்து கொண்டு மற்றவர்களை அரைவேக்காடுகள் என்று எழுதுவதில் எந்த பயனுமில்லை. இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகத்தானிருக்கின்றது. ஆனால் நாங்கள் தான் இந்தியா சம்மந்தமாக எமது நிலைப்பாட்டில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகத்தானிருக்கின்றது...

சரியான கணிப்பு..இதுவே இந்தியாவின் "நிலை"யான தீர்ப்பு!

சுதந்திர ஈழம் தீர்வல்ல, நீங்கள் எப்பொழுதும் சிங்களவனுக்கு கீழ்தானென்று..!

இலங்கை விமானப்படையினருக்கு இந்தியா பயிற்சியளிக்க மறுத்தால் அவர்கள் பாகிஸ்தானிலோ அல்லது சீனாவிலோ அதனைப் பெறுவார்கள். இலங்கை விடயத்தில் அவர்களுக்கும் ஏதாவது செய்தால்த்தான் எமக்காக நாளை இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் ஏதாவது சொன்னால் இலங்கை அரசும் அதனைத் தட்டிக்களிக்காத நிலை வரலாம். எனவே எழுந்தமானத்திற்கு எதையாவது எழுத வேண்டுமென்று எழுதாதீர்கள்

திரு.வசம்பு அவர்களின் கருத்து...

யாதார்த்தம்,,,,,,

கேள்வி எல்லாம்...

எமக்காக நாளை

இந்த எமக்காக - என்பது -

யாரை அர்த்தப்படுத்தினீர்கள் என்பதே!

வசம்பு எழுதியது:

இலங்கை விமானப்படையினருக்கு இந்தியா பயிற்சியளிக்க மறுத்தால் அவர்கள் பாகிஸ்தானிலோ அல்லது சீனாவிலோ அதனைப் பெறுவார்கள். இலங்கை விடயத்தில் அவர்களுக்கும் ஏதாவது செய்தால்த்தான் எமக்காக நாளை இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் ஏதாவது சொன்னால் இலங்கை அரசும் அதனைத் தட்டிக்களிக்காத நிலை வரலாம். எனவே எழுந்தமானத்திற்கு எதையாவது எழுத வேண்டுமென்று எழுதாதீர்கள்

திரு.வசம்பு அவர்களின் கருத்து...

யாதார்த்தம்,,,,,,

கேள்வி எல்லாம்...

எமக்காக நாளை

இந்த எமக்காக - என்பது -

யாரை அர்த்தப்படுத்தினீர்கள் என்பதே!

அட அதுவந்துங்க நானும் என்வூட்டுக்காரியுமுங்க. இப்ப சந்தோசமுங்களா நிம்மதியாய் போய் தூங்குங்க. :lol: :P :(

ஹி ஹி ஹி ஹி வசம்பண்ணா ஹி ஹி ஹி ஹி

போராட்டம் நடந்ததா?? செய்திகள் ஏதும் கிடைத்ததா?

தான் குற்றஉணர்வில்லால் நிம்மதியாக உறங்குவதற்காக அநியாயத்தின் பால் நிலையெடுத்து அதற்காக காரணங்கள் வேறு அடுக்காக தோண்டியெடுத்து தூசுதட்டிக்காட்டி விட்டு உறங்கப்ப போய்விட்டார் திரு.வசம்பு.

நாங்களோ இங்கே உறக்கமின்றி உணவுமின்றி உயிரை விடுகின்றோம் இன்று.

நாளை நீங்கள் நித்திரைவிட்டெழுந்து வாருங்கள், எங்கள் சவங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு.

அட சாணக்கியன் என்று பெயர் வைத்துவிட்டால் நிஜ சாணக்கியன் (இவரும் இந்தியர் என்பது தெரியுமா??) ஆகிவிட முடியுமா என்ன??

என் கருத்தை மேலே ஒருவர் யதார்த்தம் என்கின்றார். நீங்கள் அநியாயம் என்கிறீர்கள். என் கருத்தில் கூட ஒரு சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாதவர்களா இந்தியா விடயத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றீர்கள்????

புலத்தில் பாதுகாப்பாகவும் சௌக்கியமாகவும் இருந்து கொண்டு தாயகத்தில் மக்கள் படும் அவலங்களுக்காக யதார்த்தங்களை மறைத்து உங்களைப்போல் முதலைக்கண்ணீர் வடிக்க எனக்குத் தெரியாதுங்க. :rolleyes::)

சிறிலங்கா இராணுவத்துக்கு உதவி இல்லை: வைகோவுக்கு இந்தியப் பிரதமர் கடிதம்

[சனிக்கிழமை, 18 நவம்பர் 2006, 19:53 ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான இராணுவ தளபாடங்களை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.06) திகதியிடப்பட்ட பிரதமரின் கடிதத்தை இன்று சனிக்கிழமை சென்னையில் ஊடகவியலாளர்களிடம் வழங்கினார்.

அக்கடிதத்தில் மன்மோகன் சிங்க் கூறியிருப்பதாவது:

இலங்கையில் சமீபத்தில் நடந்த சம்பவங்களில் தமிழர் பகுதிகளில் பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது நம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைச் செயலில் எவ்வித நியாயமும் இல்லை என்று நாம் தொடர்ந்து கூறிவருகின்றோம். அப்பாவிகளைக் கொல்வது, குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது ஏற்கத் தக்கதல்ல.

அப்பாவித் தமிழர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டது குறித்து சிறிலங்கா அரசிடம் இந்தியாவின் கவலையை தெரிவித்துள்ளோம்

யதார்த்தம் என்று கூறியவரின் குதர்க்கத்தை கூட சரியாக புரிந்து கொள்ள முடியா வசம்பு நேரவிரயம்.

மெளனமே சாணக்கியம்!

யதார்த்தம் என்று சென்னவர் "எமக்காக" என்பதிலேயே குதர்க்கம் பண்ணியிருந்தார். அவருக்கு அவர் பாணியிலேயே குதர்க்கமாகப் பதிலளித்துள்ளேன். ஏனுங்க மௌனசாமி அது உங்க கண்ணுலை படலைங்களா??

மௌனமே சாணக்கியமுங்களா?? அப்புறமேனுங்க வெற்றுப் புலம்பலுங்க?? நேரவிரயமில்லீங்களா?? நடத்துங்க நடத்துங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இந்தியா உன் சுயநலத்துக்காய் அப்பாவிதமிழரை கொல்ல பயிற்சி கொடுப்பதுக்கு உன் சேவை இன்னும் இலங்கைக்கு தேவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.