Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:58.41 AM GMT ]
sammanthan.jpg
அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைகின்றது.

நாடாளுமன்ற அதிகாரங்களை கவனத்தில் கொள்ளாது கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து, மீண்டும் நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் சம்பந்தன் கூறினார்.

அத்துடன் நீதித்துறை சுதந்திரம்,, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு போன்றவை ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் சுதந்திரமான நிர்வாகம் உருவாகும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

தமிழ்வின்.காம்

  • கருத்துக்கள உறவுகள்

பானையில் இருந்தாலல்லவா அகப்பையில் வரும். சிறீலங்காவில் சனநாயகம் எங்கே இருக்கிறது சம்பந்தரே..? 19வது திருத்தம் தமிழருக்கு அதனை அள்ளித்தர..??  :(

  • கருத்துக்கள உறவுகள்
13 இற்கும் உப்பிடித்தான் சொன்னீர்கள் 
18 இற்கும் உதைதான் சொன்னீர்கள் 
 
இப்ப 19க்கும் அதே பல்லவி.
அவர்கள் செய்வதற்கு சிங் சக்கா தட்டிக்கொண்டு இருங்கள்.
இந்த செய்திமூலம் 
நீங்கள் நலமாக இன்று இருக்கிறீர்கள் என்று அறிந்தேன்.
 
செய்தி பழசு ...
நாள் புதுசு 

 

’19’ மீதான விவாதம் தொடங்கியது – அனைவரையும் ஆதரிக்க மைத்திரி கோரிக்கை APR 27, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

19-300x200.pngசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரையாற்றியதையடுத்து, விவாதம் ஆரம்பமானது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், நிறைவேற்று அதிகாரத்தை தாம் விரும்பவில்லை என்றும், அதிபரின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும், 19வது திருத்தத்துக்கு, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, 19வது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள, தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும், பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு அறிவித்தார்.

இதையடுத்து,விவாதம் சுமுகமான முறையில் நடந்து வருகிறது.

அதேவேளை, கடந்தவாரம் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், இன்று காலை தொடங்கம், நாடாளுமன்றப் பகுதியில், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

19-suport-demo.jpg

இதற்கிடையே, 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக, புரவசி பலய உள்ளிட்ட பொதுஅமைப்புகள் இணைந்து ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பேரணியில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், மதகுருமார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பேரணி நாடாளுமன்றம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகப் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/04/27/news/5636

 

  • கருத்துக்கள உறவுகள்

இதையாவது பெரும்பான்மை சிங்களவர்கள் ஏற்று கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கடந்த 65 வருடங்களாக சிங்களவர்களுக்கும் சிறீலங்காவிலும் ஜனநாயகம் சரியா இல்லை என்று தானே போராடி வருகிறார்கள். இப்ப 19வது திருத்தச் சட்டமூலம் மூலமாக அது கிடைக்கப் பெறுகிறது என்பது தான்.. சம்பந்தனின் இக்கருத்தின் பொழிப்புரை.

 

தமிழ் மக்கள் தமிழீழமும் கேட்கல்ல.. ஒரு மண்ணாங்கட்டியும் கேட்கல்ல என்றவர் வேறு எதனைக் கேட்டு தமிழ் மக்கள் போராடினது என்று சொல்ல முடியும். இதைத்தான் சொல்ல முடியும்.

 

தமிழ் மக்களின் பிரச்சனை.. ஜே ஆர் ஜனாதிபதி ஆட்சியை கொணர முதலே தொடங்கிட்டு சம்பந்தர். அதாவது தெரியுமா இல்ல.. அது சும்மா.. என்று சொன்னாலும் சொல்லுவார்.

 

இதுங்களை எல்லாம் கடவுள் தமிழ் மக்களுக்கு தலைவர்களாக்கி ஏன் தான் சோதிக்கிறானோ?! :rolleyes::lol::icon_idea:


அதுசரி 19 வந்திட்டுது..

 

13.. 13+.. 13- களுக்கு என்னாச்சு சம்புந்துர். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.