Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரே இரவில் நல்லாட்சி வந்து விடாது: சுமந்திரன்

Featured Replies

ஒரே இரவில் நல்லாட்சி வந்து விடாது: சுமந்திரன்

 

article_1430808121-gb.jpg

 
நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது அது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.கே. சுமந்திரன் தெரிவித்தார்.
 
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா வன்னி இன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
 
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டது.
இதில் விசேடமாக,  அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அதன் தாக்கம் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.
இதன் பின்னர் தற்போது வரவுள்ள தேர்தல் திருத்த சட்டம் தொடர்பாகவும் எமது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டை எவ்வாறு எடுப்பது என நாங்கள் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
 
அதன் நிமிர்த்தம் பிரேரிக்கப்பட்ட வித்தியாசமான முறைகளை சரியாக படித்து ஆராய்ந்து, அதற்கும் மேலாக எங்களுடைய யோசனைகள் ஏதாவது இருக்குமாயின் அதனையும் பிரேரிக்குமாறு ஒரு குழு நியமிக்கப்பட்டு இருவார அவகாசத்தினுள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம்.
 
இதேவேளை, கட்சி தொடர்பாக செய்யப்படும் பொய் பிரசாரத்துக்கு பதில் கொடுக்கும் முகமாகவும் மத்திய குழு உறுப்பினர்கள் அவதானமாக இருந்து அவ்வப்போது தேவைப்பட்டால் அதற்கான சரியான விளக்கத்தை தெரிவிப்பதற்குமான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், ஒழுக்காற்று நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மார்ச் முதலாம் திகதியில் இருந்து கட்சி உறுப்புறுமையில் இரந்து விலகியிருந்தார்.
அவர், தானும் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்திருந்தார். தேர்தல் ஆணையகமும் அதனை ஏற்று அவருடைய இடத்துக்கு இன்னொருவரை நியமிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளது.
 
நாங்கள் விசாரணை இல்லாமலேயே நீக்கிய ஒரு உறுப்பினர். அதற்கு பிரதான காரணம் விசாரிப்பதற்கு அவர் எங்கே என்று கூட தெரியாமல் அவர் தலைமறைவாகியுள்ளார்.
ஏனையோருக்கு நாம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். பதில் அளிக்காதவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் விளக்கம் அளித்தவர்கள் மீது விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை செய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
அது விசாரணை நடத்தி மத்திய செயற்குழுவுக்குமிக விரைவாக அறிக்கையை  வழங்கமாறும் இன்று (திங்கட்கிழமை) முடிவெடுக்கப்பட்டள்ளது.
அத்துடன் நல்லாட்சிக்கான பல முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஜனாதிபதி, ஜனநாயகத்தையும்; நல்லாட்சியையும் நிறுவுவேன் என்பதை அடிப்படையாக வைத்தே தேர்தலில் போட்டியிட்டார். அதற்காகவே நாங்களும் எங்கள் ஆதரவை கொடுத்திருந்தோம்.
 
ஆனால், இரவோடு இரவாக நாட்டில் நல்லாட்சி வந்து விடாது. அது படிப்படியாக நிகழவேண்டிய விடயம்.
அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்த சட்டம், நல்லாட்சி நாட்டில் மீளவும் முளை விடுவதற்கு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை என தெரிவித்தார்.
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

100 இரவுகள் கடந்து போயிட்டுதேப்பு. நல்லாட்சிக்குரிய ஒரு சமிக்ஞையையும் காணேல்ல. ஐயா விக்னேஸ்வரனுடன் முரண்படும் ஆட்சி தான் தமிழர்களுக்கு தெரியுது பின் வாசல் மாமா. :lol::D

  • தொடங்கியவர்

 

ஒரே இரவில் நல்லாட்சி வந்து விடாது: சுமந்திரன்

 

 

இது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனால் இதனை நீங்கள் சொல்லக்கூடாது சுமந்திரன்,நீங்கள் எப்போதிலிருந்து மைத்திரியின் பேச்சாளரானீர்கள்?
 
ஒரே இரவில் வளலாயிலுள்ள வீடுகளையெல்லாம் தரைமட்டமாக்கி   மறுநாள் வெறும் காணியை மக்களுக்குக் காட்டலாம்....., ஒரே இரவில் ஆயிரக் கணக்கான மக்களை காணாமல் போகச் செய்யலாம் ............. ஆணால் நல்லாட்சி மட்டும் ஏன் ஒரே இரவில்  வந்து விடாது ? என நீங்கள் அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழருக்கு விடிவு இல்லை என்பது திண்ணம். ஒரு கதைக்கு வைத்துக்கொள்ளுவம், சிங்களவன் எதோ கொஞ்ச தீர்வை தர விரும்பினாலும் (இது 100% நடவாது என்பது வேறு கதை) உந்த கூட்டமைப்பு ஆக்கள் விட மாட்டினம். எனன்றல் எதாவது தீர்வு கிடைத்தால் தங்கடை பிளைப்பிலை மண் விழுந்துவிடும் என்ற பயம். அதன் பிறக்கு தங்களுக்கு அரசியல் வாழ்கை இல்லை என்ற அச்சம் தான் உவையளை உப்பிடி கதைக்க வைக்குது.

 

தான் பின் கதவால MP ஆனமாதிரி, பின்கதவால எதாவது தீர்வு வரும் எண்ட நினைப்பிலை சிங்களவனுக்கு செம்பு தூக்குறாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரவில் நல்லாட்சி வந்து விடாது: சுமந்திரன்

 

 

 

இதையே தலைவர் இவ்வாறு சொல்வார்....

 

எந்த சிங்களத்தலைமையும் எதையும் தமிழருக்கு தராது என்பது வலாற்று உண்மை..

அந்தவகையில் சிங்கள பேரினவாதம் ஒற்றுமையானது....

 

ஆனாலும்

தர்மத்தை மதித்து

உலக ஒழுங்கை மதித்து

வரவேற்று

இவர்களும் ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு சில காலங்களை இவர்களுக்கும் கொடுப்போம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடுத்த தேர்தலில் மைத்திரியின் கட்சியின் தேசியப்பட்டியலின் ஊடாகவே பாராளுமன்றத்திற்கு போவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவர் நல்லாட்சி எண்டு என்னத்தை/எதை சொல்லவாறார்?

  • கருத்துக்கள உறவுகள்
2009தில் இருந்து ......
2016 வரை சுமந்திரனுக்கு ஒரு இரவுதான் வந்திருக்கு.
 
அந்தாள் முதலிரவை பற்றி பேசுதோ என்னமோ ...
மக்கள்தான் நாட்டு பிரச்சனை என்று நினைத்து போட்டு குழப்புகிறார்கள்.
 
எனக்கும் சுமந்திரன் சொல்வது உணமைபோல்தான் இருக்கறது 
கலியாணம் கட்டியவர்கள்தான் உறுதி படுத்த வேண்டும்.
 
முதலிரவில் எல்லாமே நடந்தாலும் 
நல்லாட்சி என்பது ஒரு இரவிலேயே வராது .....
பல இரவுகள் கடக்கும்போதுதான் 
ஒருவருக்கு பிடித்தவை 
பிடிக்காதவை 
பற்றிய புரிந்துணர்வு வரும். 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

பல இரவுகளுக்குப் பின்னர்தான் குழந்தை உண்டானதா என்று தெரியவரும் மருது.. இப்பத்தானே மைத்திரியும், ரணிலும் தொடங்கியிருக்கினம்??! :D

  • கருத்துக்கள உறவுகள்

பல இரவுகளுக்குப் பின்னர்தான் குழந்தை உண்டானதா என்று தெரியவரும் மருது.. இப்பத்தானே மைத்திரியும், ரணிலும் தொடங்கியிருக்கினம்??! :D

 

 

நீங்க  வேற..

ரணிலுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து எடுத்துத்தான் பழக்கம்..

இது குடும்ப வாழ்க்கையல்ல  குழந்தை பெற்றுக்கொள்ள........

 

மகிந்தவிடமிருந்து எடுத்து ஒரு பரீட்சார்த்தமுறை மட்டுமே..

எப்பொழுதும் கழண்டு கொள்ளலாம்... :lol:  :D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.