Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்!

[Wednesday 2015-05-06 19:00]
subaskaran-allirajha-060515-300-seithy.j

சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான்.

 

உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , மோபைல் கம்பெனியை ஆரம்பித்தார்.

  

 

பல ஆண்டுகளாக லண்டனில் மோபைல் போன் ஜாம்பவான்களாக இருந்த பல கம்பெனிகளை பின்னுக்கு தள்ளி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். உலக தரவரிசையில் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இவர் இடம்பித்தது மட்டும் அல்ல ,ஈழத் தமிழர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

 

கொஞ்ச பணம் சம்பாதித்துவிட்டால் கூட , அதனைவைத்து ரேடியோ நிலையம் TV நிலையம் என்று ஆரம்பித்து தமது புகழை பரப்ப நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் , சுபாஷ்கரன் மிகவும் வித்தியாசமானவர். அத்தோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை அவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார்.

 

தனது சொந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அவர் உதவிபுரியவில்லை. எத்தியோப்பியா முதல் , ஐரோப்பா வரை உள்ள பல நாடுகளில் கஷ்டப்படும் மக்களுக்கும் ,சிறுவர்களுக்கும் சுபாஷ் பல உதவிகளைப் புரிந்து வருகிறார். இதனை ஆதாரத்தோடு தற்போது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் , செல்வந்தராக இருக்கும்(தனிப்பட்ட மனிதர்கள்) யார் யார் எவ்வளவு பணத்தை தொண்டுக்காக செலவு செய்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பிரித்தானியாவில் 13 வது இடத்தில் சுபாஷ்கரன் அவர்கள் இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விடையம். மேலும் லைக்கா மோபைல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரேம் சிவசாமி போன்ற பல நல்ல மனிதர்கள் , சுபாஷ்கரனுக்கு பேருதவியாக இருந்துவந்துள்ளார்கள்.

 

அதுபோக சுபாஷ்கரன் அவர்களுக்கு அவரது தாயாரே என்றும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். வியாபார போட்டி காரணமாக சுபாஷ்கரன் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் பல கடந்த காலகட்டங்களில் இடம்பெற்றது. இருப்பினும் அவை யாவையும் அவர் தகர்த்து எறிந்து , தனது தொண்டுப் பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார் , என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடையம் ஆகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

'லைக்'கா

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் தொலைக்காட்சியைப் பார்த்தாலே தெரியுதே.. இவர் விலை போனாரா இல்லையா என்று.

 

ஏலவே.. பல பிராடு வேலைகள் செய்து தான் சம்பாதிச்சது. அதில் கோப்ரா போன் காட்டுகளை விற்பனை செய்த பின்.. செல்லுபடியற்ற தாக்கி உழைச்ச பிராடுகளும் அடங்கும்.

 

இவரின் தொலைபேசி சேவை வாடிக்கையாளர்கள்.. பாவம் அப்பாவி மாணவர்களும்.. குடியேற்றக்காரர்களும்  தான். அவர்களிடம் வறிகின காசு தான் இவை. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

ஒருவருக்கு வயித்தெரிச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு வயித்தெரிச்சல்.

காலையில் ஏழுமணிக்கு வேலை தொடக்கம் முடிய இரவு 10 மணியாகும் சம்பளம் அதிகமில்லை 25 பவுன்தான் நம்ப வில்லை என்டால் அருகில் லைக்கா கார்ட் விற்கும் வேலையாளுடன் கொஞ்சம் மினக்கெட்டு கதைக்கவும் உடனே சொல்ல மாட்டார்கள் .அநேகமா ஆந்திரா ,கன்னடா  மாணவர் விசா வில் இருப்பவர்கள் முதல்நாள் சமைத்த கடலைகறியை இரண்டு பாண் துண்டுக்குள் வைத்து ஒரு நாலு மணி வாக்கில் மதியத்துக்கும் இரவுக்கும் சேர்த்து உணவாகும் .

மாணவ விசாக்களில் உள்ளவர்களிடம் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கியே முன்னுக்கு வந்தார், இப்பவும் tax பேய்க்காட்டல் வேலைகளுக்குதான் இந்த உதவித்திட்டங்களை பாவிக்குறார், அதாலதான் ஈழத்தில் எவ்வளவு உதவிகள் தேவைஇருக்க அங்கை சும்மா தெளித்துவிட்டு ஐரோப்பா, ஆபிரிக்கா எண்டு சீன் போடுறார். :icon_idea:

மாலைதீவில் போதையில் மிதப்பது, பிள்ளையின் பிறந்த தினத்துக்கு செய்த கூத்து எல்லாம் யாவரும் அறிந்ததே :icon_idea:

சரி அவர் உதவி செய்திட்டு போகட்டும்...ஆனால் வாழ்துவதற்கும், பாராட்டுக்கும் உரியவர் கிடையாது :lol:

உலகத்தில் இருக்கும் பெரும் புள்ளிகள் எல்லாரும் கள்ளர். ஆனால் அவரின் திறமையை பாராட்டுகிறேன்,  இவ்வளவு போட்டியிலும் ஒரு நிறுவனம் நின்று பிடிப்பது  பெரும் கஸ்டம்,

இன்றும் எல்லா கடைகளிலும் லைக்கா தான்  முதலிடம் ,லேபரா இரண்டாவது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏணியைப் பாவித்து மேலே ஏறிச் செல்லலாம்.
ஆனால் மேலே சென்றதும்  ஏணியை உதைத்துக்

கீழே தள்ளி விடுவது தான் ஆபத்தானது.

அவமானமும்  கூட.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ராஜ் ராஜராட்னத்தின்  தற்போதைய ஜெயில் வாழ்க்கையும் ,மலேசிய தொழில் அதிபர் ஆனந்தகிருஷ்ணனின் ஏகபோக சொத்துக்களுக்கு ஒரே வாரிசான மகனின் தற்போதைய நிலையும் கண்முன்னால் வருகின்றன .இருவரும் ஈழத்தவர்கள் இந்த இருவரும் லைக்காவிட்க்கு முன்னோடிகள் இலங்கையில் முதலீடு செய்வதில் தற்போது ......................என்ன பயன் .

Edited by பெருமாள்

வியாபாரம் என்று வந்துவிட்டால் moral ethics பார்க்கமுடியாது. 10 ரூபாய்க்கு வாங்கியதை 15 ரூபாய்க்கு விற்றால்தான் லாபம். அங்கேயே moral ethics அடிபட்டுப் போய்விடுகின்றது. ஆனாலும் அந்த 5 ரூபாய் லாபத்தில் ஒரு ரூபாவை நன்கொடையாக வழங்கவும் ஒரு மனம் வேண்டும். அந்த மனத்திற்கு எனது வாழ்த்துக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.