Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சல்மான் கானின் தண்டனையை நிறுத்திவைத்தது மும்பை உயர் நீதிமன்றம்

Featured Replies

salman_2399466f.jpg

 

 

மது போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 
மேலும், மும்பை விசாரணை நீதிமன்றத்திடம் ரூ.30,000 பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சல்மான் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சல்மான் கானின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், அவர் விடுக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 2002-ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
 
இதன் பின்னர், சல்மான் தரப்பில் அதே நாளில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
 
2 நாட்கள் ஜாமீன் இன்றுடன் முடிவடையும் நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் சல்மான் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அத்துடன், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சல்மான் கான் சார்பில் அவரது தரப்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.
 
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி திப்சே, நடிகர் சல்மான் கானின் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் நடிகர் சஞ்சய் தத் உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறார். அவர் செய்த குற்றம் மும்பை குண்டுவெடிப்புகளை மேற்கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தமை; ஆயுதம் அவர்களிடம் வாங்கயமை.

இவரும் போவதும் வருவதுமாக இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஒரு சட்டம் உள்ளது. கொலை, பாலியல் குற்றங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில், சிறை சென்றவர், தொழில் அதிபராக, பலருக்கு வேலை தருபவராகவும், பெரும் வரி தருபவருமாக இருந்தால், அவர் காலை 6 முதல், மாலை வரை, சிறை வண்டியில் தனது நிறுவன வேலைக்குப் போய் இரவு உள்ளார நித்திரைக்கு வர வேண்டும்.

வேலை இழப்புகளை தடுக்கவும், அரச வருமானத்தை காக்கவும் இந்த ஏற்பாடு.

அவ்வாறான சட்டம் அங்கு இல்லாவிடினும், சரவணபவன் ராசகோபால் முதல் சல்மான்கான் வரை இது தான் கதை. :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஒரு சட்டம் உள்ளது. கொலை, பாலியல் குற்றங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில், சிறை சென்றவர், தொழில் அதிபராக, பலருக்கு வேலை தருபவராகவும், பெரும் வரி தருபவருமாக இருந்தால், அவர் காலை 6 முதல், மாலை வரை, சிறை வண்டியில் தனது நிறுவன வேலைக்குப் போய் இரவு உள்ளார நித்திரைக்கு வர வேண்டும்.

வேலை இழப்புகளை தடுக்கவும், அரச வருமானத்தை காக்கவும் இந்த ஏற்பாடு.

அவ்வாறான சட்டம் அங்கு இல்லாவிடினும், சரவணபவன் ராசகோபால் முதல் சல்மான்கான் வரை இது தான் கதை. :D

 

இரண்டு வரிகளில் சொன்னால், காசு இருந்தால் ஜாமீன் இல்லை விடுதலையே கிடைக்கும் :)

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வரிகளில் சொன்னால், காசு இருந்தால் ஜாமீன் இல்லை விடுதலையே கிடைக்கும் :)

வத்தியார்,

நீங்கள் தானே படிப்பிச்சனியல், 'ஈட்டி எட்டடி பாயும். பணம் பாதாளம் வரை பாயும்' எண்டு. :D

  • கருத்துக்கள உறவுகள்

blind-judge.jpg

 

இந்த லட்சணத்தில்.... இந்திய நீதிமன்ற அடையாளமான, 

நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டு, கையில் தராசு வைத்திருக்கிறது.
இத்தனை வருடம், இந்த வழக்கு இழுபட்டதிலும் பார்க்க, சல்மான் மீது வழக்கு போடாமலே இருந்திருந்தால்...

பல லட்சக் கணக்கான பணமும், பலரின் நேரமும் மிச்சப் படுத்தியிருக்கலாம்.
 

நீதி மன்றம் என்ற பெயரில்....

சும்மா.... பம்மாத்து, விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்கிறாங்கள்.... நாதாரிப் பயல்கள். :(  :huh:  :o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா, கனிமொழி  போன்ற பெயர்களும் சல்மான் கான் பட்டியலுக்குள் அடங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலை சட்ட ஒழுங்குகள் ஒழுங்காய் இருந்திருக்குமெண்டால்  நாடு எப்பவோ முன்னேறியிருக்கும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.