Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வித்தியா கொலை குற்றவாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கில் போட வேண்டும்! - நாடாளுமன்றத்தில் விஜயகலா ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா கொலை குற்றவாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கில் போட வேண்டும்! - நாடாளுமன்றத்தில் விஜயகலா ஆவேசம்

[Thursday 2015-05-21 08:00]
Vijayakala-300-news.jpg

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

  

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் எனது துக்கத்தை வெளிப்படுத்துகிறேன். மேற்படி மாணவி படுகொலை செய்யப்பட்டு ஏழு தினங்களாகின்றன. இதனால் இன்று வட மாகாணம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தின் இயல்புநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த மாணவி கடத்தப்பட்ட மறுதினம் அதிகாலை 6 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் 9 மணிக்கே வருகை தந்தனர். முன்னதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற தாயார் நான்கு மணித்தியாலங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தேவையற்ற விடயமாகும். அதுமாத்திரமன்றி, குறித்த மாணவி சிநேகிதனுடன் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளதுடன், மறுநாள் வந்து முறையிடுமாறு பொறுப்பின்றிய நிலையில் அசட்டையாகச் செயற்பட்டுள்ளனர்.

 

மாணவி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் 10 பேருக்கு தொடர்புள்ளது. இதில் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகிறார். கடந்த காலங்களிலும் இப்பிரதேசங்களில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றன. அங்கு இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்களாலேயே இந்தக் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

சிறுமிகளை, யுவதிகளை, பெண்களை படுகொலை செய்து கிணறுகளில் போட்டு புதைத்ததும் இந்த ஆயுதக்குழுக்களே ஆகும். இன்று வடக்கில் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அங்கு இயங்குகின்ற ஆயுதக்குழுவே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசட்டையாக இருக்கின்றனர். மேற்படி ஆயுதக்குழுக்கள் இன்று பலவந்தமாக பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், உடைகளையும் பறித்து அலுவலகங்களை நடத்திவருகின்றன.

 

எனவே, வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும்'' என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132472&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடமிருந்து காப்பாற்றி

சட்டத்தின் முன் நிறுத்தவோம் என உறுதிமொழி வழங்கி

அம்மாவால் கொண்டு செல்லப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்

அடுத்தநாளே எவ்வாறு கொழும்பு வந்தார் என்று சொல்லமுடியுமா தாயே.

 

உண்மைகள் உங்களிடமுள்ளது

வேண்டுமென்றே சவுண்டு விடுவது  போலுள்ளது தங்களது நடவடிக்கைகள்....... :(  :(  :(

இனிமேல் தீவுப்பகுதிக்குள் கால் வைக்கும் எண்ணம் அறவே இல்லையா....? :(

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வாக்குகளுக்காக

  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும்
உவர் நீதிபதியா? அரசியல்வாதியா?

உவர் நீதிபதியா? அரசியல்வாதியா?

 

திடீரென நீதிபதியான அரசியல்வாதி.

 

சரி விடுங்க எதோ பிழைச்சிட்டு போறா.

  • கருத்துக்கள உறவுகள்
ஆ....ஆ..என்னமா றாமா பண்ணுறா...ஒரு விதத்தில் சுவிஸ்காரனை தப்ப வைச்சதே இவா என்று தான் நினைக்கத் தோணுது...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மண்ணெண்ணையின்ரை மனிசிக்கு உலக அரசியல் ஒண்டும் தெரியாது. சும்மா வாள் வாள் எண்டு தொண்டைகிழிய கத்திப்போட்டு  போகத்தான் சரி...
 
தூக்குத்தண்டனை உலகத்திலிருந்தே தூக்கப்படவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்
உங்களை தூக்க ஆட்கள் இல்லை ......
நாடு தன்பாட்டில் திருந்தும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.