Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது குறித்து கூட்டமைப்புடன் பேச ஜனாதிபதி இணக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது குறித்து கூட்டமைப்புடன் பேச ஜனாதிபதி இணக்கம்!
[Wednesday 2015-06-24 19:00]
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையேயான சந்திப்பு இன்று  நண்பகல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை அளித்தார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையேயான சந்திப்பு இன்று நண்பகல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை அளித்தார்.

  

இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ம.ஆ.சுமந்திரன், பொன் செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இந்தச் சந்திப்புக் குறித்து கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்-

ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக்கூடியதும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது. வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள், பழைய போராளிகள் நாட்டிற்கு திரும்பும் போது கைது செய்யப்படுகின்றமை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றோடு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாத காணி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன. இவை சம்பந்தமாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இவ்வுரையாடல்களை நடத்துவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார் என்றுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=134761&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே பாதி கிணறு தாண்டியதிற்கு சமன். எஞ்சிய பாதி அடுத்த தேர்தல் அறிவிப்புக்கு முதல் வாரம். 

 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் விண்ணணியின் விண்ணர்களைச் சந்திக்க மாட்டாரா? ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாய் பேச்சுவார்த்தை...பேச்சுவார்த்தை....பேச்சுவார்த்தை...
கடைசியிலை பொதுசனம் நடுத்தெருவிலை நிண்டதுதான் மிச்சம்....:(
உந்த கூத்தணி கூத்தமைப்பு இல்லாதிருந்தால் நாட்டிலை சண்டை போர் எல்லாம் வந்திருக்காது எண்டது என்ரை அபிப்பிராயம்.......பெடியளை உசுப்பேத்தி உசுப்பேத்தி சாகடிச்சுப்போட்டு தாங்கள் மட்டும் பட்டுவேட்டியோடை திரியினம்.:huh:

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் பயலுக 50/50 கேட்கப்போய் வந்த வினை! உந்த பேய்க்கிழாந்தி வேலையைத்தான் இப்ப விண்ணணியின் விண்ணண் பபா கஜேந்திரனும் செய்யிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாய் பேச்சுவார்த்தை...பேச்சுவார்த்தை....பேச்சுவார்த்தை...
கடைசியிலை பொதுசனம் நடுத்தெருவிலை நிண்டதுதான் மிச்சம்....:(
உந்த கூத்தணி கூத்தமைப்பு இல்லாதிருந்தால் நாட்டிலை சண்டை போர் எல்லாம் வந்திருக்காது எண்டது என்ரை அபிப்பிராயம்.......பெடியளை உசுப்பேத்தி உசுப்பேத்தி சாகடிச்சுப்போட்டு தாங்கள் மட்டும் பட்டுவேட்டியோடை திரியினம்.:huh:

இப்பவும் அது தான் நடக்குது..

தமிழரிடம் ஒரு வேசம்

சிங்களவனிடம் ஒரு வேசம்....

சிங்களவனிடம் எந்த வேசமும் எடுபடாது

தமிழருக்கு வேறு நாதியில்லை:(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இப்பவும் அது தான் நடக்குது..

தமிழரிடம் ஒரு வேசம்

சிங்களவனிடம் ஒரு வேசம்....

சிங்களவனிடம் எந்த வேசமும் எடுபடாது

தமிழருக்கு வேறு நாதியில்லை:(:(:(

தமிழரிடம் ஒரு வேசம் இல்லை. அங்கேயும் கூட்டமைப்பு இரண்டு வேடங்கள் தான்.

ஒன்று தேர்தலுக்கு முன்னர் இன்னொன்று தேர்தலுக்குப் பின்னர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் பயலுக 50/50 கேட்கப்போய் வந்த வினை! உந்த பேய்க்கிழாந்தி வேலையைத்தான் இப்ப விண்ணணியின் விண்ணண் பபா கஜேந்திரனும் செய்யிறார்.

வட அமெரிக்க கண்டத்தின் அரசியலையும் ஐரோப்பிய அரசியலையும் அவுஸ்ரேலிய அரசியல் முறைகளையும் தெரிந்தவர்கள் இப்படி கருத்தெழுதமாட்டார்கள்.:lol:
அல்லது...
சிங்கப்பூருக்கு ஒருதடவை சென்று வாருங்கள்.:wub::)

ஐயோ முடியலப்பா! நேற்றுத்தான் ஒருவன் அறுபது வருசமாக நாம சொன்னதை சொல்லி ஒப்பாரி வைத்தான் "நம்மள ஏமாதித்திட்டாங்கண்ணு". சூடு காயுறதுக்கு முன்னுக்கு குந்தியிருக்கிராங்கள்!

 

பின்வாசல் மாமா இழுத்துக்கொண்ணு போட்டாரா? 

 

இல்லை

 

தேர்தல் காலம், தொடங்கீட்டாங்கள்! இனி எமக்கு அறுபது வருசமாக செய்த மாதிரி      ஏறி இருந்து மொட்டை அடித்து, நாமம், சந்தனம் தடவி பொட்டும் போட்டு ஆலாத்தி எடுக்க வெளிக்கீட்டுட்டாளோய்!

  • கருத்துக்கள உறவுகள்

வட அமெரிக்க கண்டத்தின் அரசியலையும் ஐரோப்பிய அரசியலையும் அவுஸ்ரேலிய அரசியல் முறைகளையும் தெரிந்தவர்கள் இப்படி கருத்தெழுதமாட்டார்கள்.:lol:
அல்லது...
சிங்கப்பூருக்கு ஒருதடவை சென்று வாருங்கள்.:wub::)

இந்திய உபகண்ட அரசியலையும் இலங்கை அரசியலையும் தெரிந்தவர்கள் இப்படி இருக்க மாட்டார்கள் :lol: 

அல்லது...

இந்த இடங்களுக்குப் போகாட்டியும் காரியமில்லை கொஞ்சம் தேடிவாசியுங்கள் ^_^

 

நியானி: சீண்டும் வரி நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால் கூட்டமைப்பினர் குறிப்பாபாக தமிழரசுக்கட்சியினரும் வாலுகளும் மகிந்த ஆதரவாளர்கள் மற்றும் பொதுபலசேன ஆகியோர் மைத்திரியை ஒரு பலமற்ற சனாதிபதியாக ஆக்கிவிட்டார்கள் அதனால் பொதுத்தேர்தலின் பின்னர் தான் எந்தவொரு நடவடிக்கையும் சாத்தியமாகும் என தங்களுக்குள் புலம்பிக்கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் தீர்வு காண்பதற்கு சனாதிபதி இணக்கம் என்று நாடகமாடுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா 100 நாளைக்கு ரோட் மப் போடுறம் எண்டிச்சினம்.. மைத்திரி வாரார் மாற்றம் வருகுது என்றிச்சினம்.. இதயத்தால இணைஞ்சிட்டம் எனி என்ன இந்தா எல்லாம் ஆகுது என்றிச்சினம்.. இதுக்கு மேல என்ன தரக் கிடக்குது.. சிங்கள சுதந்திர தினம் கொண்டாடிச்சினம்.. ஏன் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையே சம் சும் கும்பல் புறக்கணிச்சுது.. அதுக்கு மேல.. புலம்பெயர் தமிழர்களோட பேச வைச்சிட்டினம்.. இப்படி எத்தனையோ சாத்தியமே இல்லாததை எல்லாம் செய்திட்ட கூட்டமைப்பு.. இனப்பிரச்சனை தீர்க்கிறது என்றதை.. செய்யுறது பெரிய காரியமே. :lol:

என்ன தேர்தலுக்கு தேர்தல்..உதுகளை சொல்லி வாக்குப் பிச்சை கேட்க வைச்சிட்டாங்களே என்றது தான் ஒரே கவலை. :lol:

எல்லாம் தமிழனின் தலைவிதி. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.