Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம்! அனந்திக்கு இடமில்லை?

Featured Replies

TNA%20members.JPGஇம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது.

7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன்(ஈபிஆர் எல் எப்) , க.அருந்தவபாலன், சிறிகாந்தா(ரெலோ), சித்தார்த்தன்(புளொட்) ,சிறீதரன் ஆகியோரின் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் அனந்தியாக இருக்க மாட்டார் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.10 வது நபர் யார் என்பதில் இழுபறி நிலவுகின்றது.

இதனிடையே போனஸ் ஆசனங்களுக்காக தேசியப்பட்டியலில் பரிந்துரை செய்யப்படும் பெயர்களுக்கு மிகுந்த போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு நிலை பேராசிரியரும் பேரவை உறுப்பினரும் தமிழரசுகட்சியின் உபதலைவருமான பேரா.சிற்றம்பலம் அவர்களுக்கு தேசியப்பட்டிலில் இடமளிக்குமாறு மாவை சேனாதிராஜாவை கோரும் கையெழுத்து வேட்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது .

பேரா.சிற்றம்பலம் அவர்கள் பல தடவை பாராளுமன்ற தேர்தலி்ல் களமிறங்க எண்ணியபோதும் அவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.அவருடைய வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தமையால் அவரை தமிழரசுக்கட்சி களமிறக்கியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் இம்முறை தேசியப்பட்டியலில் உள்வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக பேரவையில் அரசியல் தேவையில்லை என்றும் ஈபிடிபி  ஆட்கள் வந்துவிட்டனர் என்று குரல் கொடுத்து  விட்டு தமிழரசுக்கட்சியின் இணைத்தலைவரை பேரவையில் கொண்டு வந்து இப்போது  அவருக்கு தேசியப்பட்டியல் கோரும் கடிதம் பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளப்படுவது எந்தவகையில் நியாயம் என விமர்சனம் எழுந்துள்ளது.அவ்வாறு அவர் கோருவதாயின் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகுவதே நல்லது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சுமந்திரன் சென்ற முறை தேசியப்பட்டியலில் உள்வந்து தற்போது நேரடியாக தேர்தலில் களமிறங்குகின்றார்.சுமந்திரனுக்காக வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் நுாற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் இது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் களமிறங்கும் கஜேந்திர குமாருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான நேரடிப்போட்டியாக அமைய உள்ளது.

இதேவேளை அனந்தி அவர்கள் கூட்டமைப்பு போட்டியிட சந்தர்ப்பம் தராவிட்டால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடுவதாக தெரிவித்திருக்கின்றமை கூட்டமைப்பில் கோபத்தினை ஏற்படுத்தியிருக்கும் அதே நேரம் மக்கள் முன்னணி ஆதரவாளர்களிடையே சலசலப்பினை ஏற்படுத்தியிருப்தாக தெரிவிக்கப்படுகின்றது ஏனெனில் அனந்தி மக்கள் முன்னணியினை தனது இரண்டாவது தெரிவாக கொண்டிருப்பதாகவும் அதனை தனது பாராளுமன்ற கனவை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்ள நினைப்பதாகவும் அவர்கள் குறைப்படுகின்றனர்.

அவருக்கு முன்னணி சந்தர்ப்பம் வழங்கினால் முன்னணியினை பாதிக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். http://www.pathivu.com/news/41315/57//d,article_full.aspx
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன் கூட்டமைப்புக்கு அனந்தியின் தெரிவு ஒரு பிரச்சனையாகவே இருக்க போகிறது என்று . கூட்டமைப்பின் பின்கதவு அரசியலுக்கு அவர் தோதுப்படமாட்டார் . எனவே அவரை எடுத்து போட்டு , அவவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதிலேயே மிச்ச 5 வருடமும் போகும் . அதே நேரத்தில் நாலு பேருக்கே, தவில் அடிக்க வேண்டிய நிலையில் நிலையில் இன்னுமொருவரை இழப்பது கூட்டமைப்பின் பெரும் வீழ்ச்சியாக போகும் . 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விபரம் வெளிவந்துள்ளது:-

 

 

யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விபரம் வெளிவந்துள்ளது:-



யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் வெளிவந்துள்ளது.

இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன், அச்சுவேலியினை சேர்ந்த இராசேந்திரா ஆகியோர் தமிழரசுக்கட்சி சார்பில் இறக்கப்படவுள்ளனர்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர் எல் எப்) , சிறிகாந்தா (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரின் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தென்மராட்சியில் அருந்தவபாலனா அல்லது ரவிராஜின் மனைவியா என கேள்வி வலுத்துள்ளது.

இதே வேளை சுரேஸ்பிறேமச்சந்திரன் தனது பட்டியலில் வடமராட்சியினில் ஒருவரை களமிறக்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே போனஸ் ஆசனங்களுக்காக தேசியப்பட்டியலில் பரிந்துரை செய்யப்படும் பெயர்களுக்கு மிகுந்த போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு நிலை பேராசிரியரும் பேரவை உறுப்பினரும் தமிழரசுகட்சியின் உபதலைவருமான பேரா.சிற்றம்பலம் அவர்களுக்கு தேசியப்பட்டிலில் இடமளிக்குமாறு மாவை சேனாதிராஜாவை கோரும் கையெழுத்து வேட்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் பல தடவை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க எண்ணிய போதும் அவருக்கு இடமளிக்கப்பட்டு இருக்கவில்லை. அவருடைய வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தமையால் அவரை தமிழரசுக்கட்சி களமிறக்கி இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் இம்முறை தேசியப்பட்டியலில் உள்வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121593/language/ta-IN/----.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் பிரேமசந்திரன்.. சித்தார்த்தன் போன்ற முன்னாள் ஒட்டுக்குழு ஆட்களுக்கு இன்னும் பதவி ஆசை போகவில்லை. மாவைக்கு இந்த வயசில எதுக்கு எம் பி பதவி. சரவணபவன் எம் பி ஆகி என்னத்தை கிழிச்சவர்..?! சிறீகாந்தாவும் முன்னர் எம்பியாக இருந்து பின்னர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். சித்தார்த்தனும் அதே ரகம்.

ஒரு தடவைக்கு மேல் எம் பியாக தெரிவாகி மக்கள் கடமையை சரியாகச் செய்யத் தவறிய எவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நிற்கத் தகுதியற்றவர்களாவர்.

ஏலவே.. ஆனந்த சங்கரிக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியதை இங்கு நினைவு கூறலாம். கூட்டமைப்பில் போட்டி இட்டும் தேர்தலில்..சங்கரி தோத்தார். தனித்துப் போட்டி இட்டும் தோத்தார்.

சுமந்திரன் எம் பியாக இருந்து தான் முள்ளமாரித்தனம் செய்யனுன்னு இல்லை.

சிறீதரன் தன்னுடைய இடத்தை தன்னை விட இன்னும் பணியாற்றக் கூடிய ஓர் இளைஞனுக்கோ.. யுவதிக்கோ விட்டுத் தந்து தான் அவர்களின் பின்புல ஆலோசகராக இருக்கலாம்.

யாரிந்த அருந்தவபாலன்... என்னத்தை மக்களுக்காகச் செய்தவர்..??! மக்கள் பிரதிநிதியாக அவர் நிற்பதற்கு..??!

ஆக மொத்தத்தில் கூட்டமைப்பு... அதாவது கூத்தமைப்பு யாழ் மாவட்ட வேட்பாளர் தெரிவு என்பது மக்களுக்கானதல்ல.. மாவையின் திருப்தி.. திருப்திப்படுத்தலுக்கானது. இந்தப் போக்கு சரியானதல்ல. இது மக்கள் சனநாயகமாக அன்றி மாவை சம் சும் கும்பலின் சரவணபவன் சுரேஸ் சித்தார்த்தனின்.. தனிப்பட்ட செல்வாக்கு சர்வாதிகார அரசியலாகவே தென்படுகிறது.

மக்கள் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்.. சித்தார்த்தன் 2009 மே வரை புளொட்டில் இருந்து கொண்டு மிகக் கொடிய யுத்தத்துக்கு முண்டுகொடுத்து வந்ததோடு சிங்கள இராணுவ ஒட்டுக்குழுவை இயக்கி வவுனியாவில் தமிழ் மக்களை வடிக்கட்ட வதைக்க அப்பட்டமாக உதவிய ஒருவர். அவருக்கு மாகாண சபை ஆசனம் வழங்கியதே யாழ் மாவட்ட மக்கள் செய்த தவறுகளில் ஒன்று. அதை திருந்த ஒரு வாய்ப்பாகக் கருதாமல் பதவி ஆசை பிடித்து அலையும் இவர்களை சிங்கள நாடாளுமன்றம் அனுப்புவதன் மூலம் யாழ் மாவட்ட மக்கள் தங்கள் சொந்தங்களை கொன்று குவித்தவர்களையே மக்கள் பிரதிநிதிகளாக்கி என்னத்தை இந்த உலகிற்கு சொல்லப் போகிறார்கள்..??!

சித்தார்த்தன் மட்டுமல்ல.. டக்கிளசும் கூட. !!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இளைஞர்களை கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தும் படி கூட்டமைப்பை வற்புறுத்தாத வரை இவர்கள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கேட்டு கூட்டமைப்பில் மாவை போனற விடாக்கண்டன்கள் கேட்பார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு மக்கள் வாக்குகளால் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படிக் கற்றுக் கொடுக்கும் போது இவர்களை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக்குவதை நிராகரிக்கும் அதேவேளை மக்களின் வாக்குப் பலம் சிதையாத வகைக்கு தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்கக் கூடிய வகையில் அரசியல் தளம் அமைக்கப்படுவதும் அவசியம். அதனை இளைஞர்கள்.. மாணவர்கள்.. மக்கள் முன் எடுத்துச் செல்வது நல்லது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு மக்கள் தேர்வாக்கியதே மாணவர்கள் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது மிகப் பொருந்தும். மாவை.. சுரேஸை.. சித்தார்த்தனை.. சுமந்திரனை.. சரவணபவனை.. தனிப்பட்ட ரீதியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக்க விரும்புவார்களா என்பது பெரிய கேள்விக்குறி.

காரணம் இவர்கள் மக்களுக்கு நல்லதை விட செய்த கெடுதல்களின் பட்டியலே நீண்டது. இவர்கள்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ற அந்த நிழலில் நிற்பதால் தான் வாக்குப் பெறுகிறார்களே தவிர.. இவர்களின் தனிப்பட்ட அரசியலை மக்கள் விரும்புவதாக இல்லை. அந்த வகையில்.. தொடர்ந்தும் இவர்கள் மக்களின் உரிமைக்காக தோற்றம் பெற்ற தமிழ் தேசியம் என்ற அந்த அடையாளத்தால்.. பதவி ஆசை பிடித்தவர்கள் தொடர்ந்து ஆதாயம் பெற அனுமதிக்க வேண்டுமா என்று மக்களும் மாணவர்களும் சிந்திக்க வேண்டும். அதற்கான வேளை வந்துவிட்டது. இந்தச் சிந்தனை மக்களின் வாக்கு பலத்தை சிதறடிக்காத வண்ணம் மாற்றம் ஒன்றை நோக்கி தமிழ் தேசிய மக்கள் உரிமைக்கான அரசியலை தகுந்த மாற்றுத் தலைமைகளிடம் கையளிக்கும் வகைக்கு அமைவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கூட்டமைப்பை தோல்வி அடைய செய்து சிங்கள இனவாதிகளுக்கு தீனி போடக்கூடாது என மக்கள் சிந்திக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என  நினைக்கிறேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கூட்டமைப்பை தோல்வி அடைய செய்து சிங்கள இனவாதிகளுக்கு தீனி போடக்கூடாது என மக்கள் சிந்திக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என  நினைக்கிறேன்.
 

ஆம் அது தான் நிஜம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் மக்களின் இந்த மனநிலையை வைச்சுக் கொண்டு தான் அரசியல் செய்கிறார்கள். மக்கள் தங்கள் பலத்தை காட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து தெரிவாக்கி வருவதை சில சந்தர்ப்பவாத தமிழரசு மற்றும் முன்னாள் ஒட்டுக்குழு ஆட்கள் தமக்கான அரசியல் வெளியை நிரப்பிக் கொள்ளப் பயன்படுத்துகிறார்களே தவிர மக்களின் உரிமை தொடர்பில் அதனைப் பயன்படுத்துவதாக இல்லை.

இந்த இடத்தில் மக்கள் தமது வாக்குகள் சிதையா வண்ணம்.. எப்படி இவர்களுக்கு பாடம் புகட்டுவது என்று 1989 பாணியில் ஒரு செயலுக்கு முன்வருவது அவசியம். தமிழ் தேசியம் என்ற தமிழ் மக்களின் அடையாளம் பலவீனப்படாத வகைக்கு மக்கள் இதனைச் செய்ய ஒரு வாய்ப்பளிக்கப்பட்டால் மக்கள் மாற்றி யோசிக்க வழி உள்ளது. !!

  • கருத்துக்கள உறவுகள்

அனந்திக்குக் கொடுக்காதது நல்லது. மகிந்தவின் பெரமுனவில் அனந்திக்கு இடம் கிடைக்கலாம். சிற்றம்பலத்துக்கு தேசியப்பட்டியல் கிடைக்காது. தேடியப்பட்டியல் கிழக்கு மாகாணத்துக்குத்தான் கொடுக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி, 
கஜேந்திர குமார் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு.....
தமிழ் தேசியக் கூட் டமைப்பு வாக்குகளை பிரித்து.... த.தே.கூ. விற்கு வட மாகாணத்தில் ஒரு இடமும் கிடைக்காமல் செய்ய வேண்டும்.
இதை எழுத எனக்கு, வேதனையாக இருந்தாலும், சம்பந்தனுக்கு பாடம் புகட்ட வேறு வழி இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.