Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள்- 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

race-to-the-finish-sepia.jpg

 

என்ர பிரச்சனைக்கெல்லாம்.. ஒரே தீர்வு இந்தக் குதிரையளிட்டத் தான் இருக்குது எண்டு என்ர ‘உள்ளறிவு' அடிக்கடி சொல்லிகொள்ளும்\, மச்சான் ! அவனவன்.. அவனவனிட்டை இருக்கிற திறமையளைப் பாவிச்சு முன்னுக்கு வாறதில ஒரு தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியேல்லை என்ற படி பேப்பரை மிகவும் அவதானமாகப் படித்துக்கொண்டிருந்தான்!

நானும் எதுவும் பேசாமல், இந்தக் கவனத்தைப் படிக்கிற காலத்தில காட்டியிருந்தால்  இப்ப எங்கேயோ போயிருப்பாயே சூட்டி என எனக்குள் மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்!

அதோட மாதாவிட்டையும் ஒரு சின்னப் பந்தயம் வைச்சிருக்கிறன்! எனக்குப் பெரிய தொகை விழுமெண்டு சொன்னால்.. அவவுக்கு அரைவாசி தாறதாச் சொல்லியிருக்கிறன்!

சரி.. உனக்கு எப்ப குதிரையில ‘காசு' விழுந்து...எப்ப.. உன்ர குடும்பத்தைக் கூப்பிடுகிறது என நான் இழுக்கவும்,,, மச்சான், எனக்குத் தெரியும் நீ நம்ப மாட்டாய் எண்டு..! சூட்டி தான் பேப்பரிலிருந்து கண்களை உயர்த்திய படியே என்னைப் பார்த்துக் கூறிய படியே.....

‘ட்ரைபெக்டா’ எண்டு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறியா ? என்று உரையாடல் தொடரவும்,

சொல்லு.. சொல்லு.. கேள்விப்பட்டிருக்கிறன்!

அதிலையும் கனக்க விதங்கள் இருக்குது! ஐயா அடிச்சது ‘கிளீன்' ட்ரை பெச்டா!

எல்லாருக்கும் கிடைக்காது.. தரவைக் கடலுக்குள்ளை.. வலம்புரிச் சங்கு கிடைக்கிற மாதிரி எண்டு வைச்சுக் கொள்ளன்!

எவ்வளவு கிடைச்சது?

உங்கட காசில ஒரு நாற்பதாயிரம் வரும்... என்று கூறிய படியே.. கிளாசை ஒரு முறை முற்றாக நிரப்பியபடி மீண்டும் ஒரு சிகரற்றைப் பற்றவைத்துக் கொண்டான்!

என்னடா… எல்லாப்பிரச்சனைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே சூட்டி?

ஓமடாப்பா.. எனக்குத் தெரிஞ்சவன் ஒருத்தன்.. ஒரு சாப்பாட்டுக் கடையொண்டு கிட்டடியில தான் திறந்திருந்தான். யாழ்ப்பாணம் மாதிரி.. கடையுக்கிள்ள போன உடனேயே.. சோறு கறி எல்லாத்தையும் மேசையில கொண்டு வந்து வைக்கிற மாதிரி… ! வியாபாரம் கொஞ்சம்  பரவாயில்லாமல் போய்க்கொண்டிருந்தது! அண்ணை.. ஒரு பத்து மட்டும் கையிலயிருக்குமென்டால், லாச் சப்பலிலை என்னை ஒருத்தரும் அசைக்கேலாது எண்டான்! நான் கஷ்டப்பட்டுத் தொடங்கிய யாவாரம்,,நீங்களும் தூரத்துச் சொந்தம் தானே...அரைவாசியை எழுதித் தாறன் எண்டு கெஞ்சினான்!

அண்ணையாண .. உங்கட தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணிச் சொல்லுறன்.. சரியா இண்டையில இருந்து ஒரு வருசத்தில,, இருபதாக்கிக் காட்டிறன் அண்ணை எண்டான்!

 

பத்தை அவனிட்டைக் குடுத்திட்டன்!

ஒரு பத்தை.. இரண்டு பிள்ளையளின்ர பேரிலையும் ஆளுக்கு அஞ்சஞ்சா பாங்கில போட்டு வைச்சன்!

சரி ..நல்லது தானே செய்திருக்கிறாய்? மிச்சத்தை ஊருக்கு அனுப்பினையாக்கும்?

இல்லை.. மச்சான்.. சந்தோசத்தில கொஞ்சம் தண்ணியைப் போட்டிட்டுப் படுத்தன்! கொஞ்சம் அயந்து போற நேரத்தில.. மாதா கனவில வந்தா..! வந்து என்ன சூட்டி... என்னை மறந்திட்டியே எண்டு கேட்டா!

அண்டைக்குப் இரவே ரயிலைப் பிடிச்சு.. மாதாவின்ர உண்டியலில மிச்சமிருந்த அவ்வளவத்தையும் கொண்டேப் போட்டிட்டன்!

வாக்குத் தவறக் கூடாது என்றவனைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாகக் கிடந்தது!

பிறகென்ன  நடந்தது...சூட்டி?

கடையுக்குள்ள ஒரே கரப்பொத்தான் செத்துக்கிடக்குது எண்டு ஆரோ ஒரு புண்ணியவான் போன் அடிச்சுத் தன்ர சமூக சேவையைச் செய்து விட… கடை பூட்டுப் பட்டுப் போச்சுது……! அதோட ஒரு பத்துப் போச்சா?

பாங்கில போட்ட காசை எடுத்து..நாள் வட்டிக்குக் குடுக்க வெளிக்கிட ...வட்டிக்குக் காசு வாங்கினவனை ஊருக்குத் திருப்பியனுப்பிப் போட்டாங்கள்! அதோட மற்றப் பத்தும் போச்சா?

வேலையில விழுந்து.. விழுந்து விளையாடுற விளையாட்டும்.. ஒரு நாள் விபரீதமாய்ப் போய்க் கொஞ்சம் எக்கச் சக்கமாய் அடி பட்டுப் போச்சுது…! அதோட இருந்த காலும் போச்சுது... என்றவனை உன்னிப்பாகப் பார்த்த படியே......,

இனி என்ன செய்யப் போற பிளான்...சூட்டி?

இன்னுமொரு ரைபெக்ரா  விழாமலா போகப்போகுது?

அது தான் மாதாவுக்குக் பக்கத்திலேயே வந்திருக்கிறன்!

முற்றும் !

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்டைக்குப் இரவே ரயிலைப் பிடிச்சு.. மாதாவின்ர உண்டியலில மிச்சமிருந்த அவ்வளவத்தையும் கொண்டேப் போட்டிட்டன்!

மாதவுக்கு பகிடியும்  !தெரியாது வெற்றியும் தெரியாது....என்று சொல்லி காசை அடிக்கிறதை விட்டிட்டு....மனுசன் லூஸ் மனுசனாய்யிருக்குது..

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக்கொஞ்சப்பேரை  எனக்கும் தெரியும்

வென்றால் வீட்டடையே வாங்கலாம் என நினைத்து வீட்டு வாடகைப்பணத்தை இதில போட்டுட்டு வீதிக்கு வந்தவர்கள்

மனைவி பிள்ளைகளின் நகைகளை திருடி இதில போட்டுட்டு வீட்டில அவமானச்சின்னமா வாழ்பவர்கள்

மனசு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு ராசா மாதிரி போக்குக்காட்டி வாழ்பவர்கள்

வணக்கம் என்று கை கொடுத்தால் கையை விடாது கொஞ்சப்பணம் தரஏலுமே இன்னும் 1 மணித்தியாலத்தில் தாறன் என்பவர்கள்

இப்படி

இப்படி

பலர்....

ஆனால் ஒரு எல்லைக்கு மேல் போய்விட்டால்

இவர்களும் மனநோயாளிகளே..

திருத்துவதும்  திருந்துவதும் மிகமிக கடினம்

 

நன்றியண்ணா

கதைக்கும் பகிர்வுக்கம்...

அடுத்த அடுத்த கதைகளை தொடர்ந்து எழுதுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரில் எத்தனை முகங்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க இப்படியான ஆசாமிகள் சாமிகளை குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். கதை நன்றாக உள்ளது, நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்களின்ரை வசன நடையை அச்சடிச்சமாதிரி எழுதியிருக்கிறியள் புங்கை...
உண்மையிலையே நீங்கள் ஒரு பெரிய மடுமாதா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மாதவுக்கு பகிடியும்  !தெரியாது வெற்றியும் தெரியாது....என்று சொல்லி காசை அடிக்கிறதை விட்டிட்டு....மனுசன் லூஸ் மனுசனாய்யிருக்குது..

மாதா எவரிடமும் கையேந்தியது இல்லை! பக்தர்கள் தான் 'வலிந்து' மாதாவிடம் பந்தயம் பிடிக்கிறார்கள்!

நானும் எனது உறவுகளை நீண்ட காலமாகப் பிரிந்திருந்த காலம்!

ஒவ்வொருவருக்கும் அவர்களது 'உயரத்தின்' அளவுக்கு மெழுகு திரி வாங்கிக் கொழுத்தினேன்!

தர்க்க ரீதியாகப் பார்க்கப் போனால்..அந்த மெழுகுதிரிகளுக்கான பணத்தை ஊருக்கு அனுப்பியிருக்கலாம்!

ஆனாலும் எனக்கு அன்றும் இன்றும்.. எனது செயல் முட்டாள் தனமாகத் தெரியவில்லை!

அது போலத் தான் 'சூட்டியின்' செயலும் என எண்ணுகின்றேன்!

வருகைக்கு நன்றி... புத்தன்!

  • கருத்துக்கள உறவுகள்

மாதா எவரிடமும் கையேந்தியது இல்லை! பக்தர்கள் தான் 'வலிந்து' மாதாவிடம் பந்தயம் பிடிக்கிறார்கள்!

நானும் எனது உறவுகளை நீண்ட காலமாகப் பிரிந்திருந்த காலம்!

ஒவ்வொருவருக்கும் அவர்களது 'உயரத்தின்' அளவுக்கு மெழுகு திரி வாங்கிக் கொழுத்தினேன்!

தர்க்க ரீதியாகப் பார்க்கப் போனால்..அந்த மெழுகுதிரிகளுக்கான பணத்தை ஊருக்கு அனுப்பியிருக்கலாம்!

ஆனாலும் எனக்கு அன்றும் இன்றும்.. எனது செயல் முட்டாள் தனமாகத் தெரியவில்லை!

அது போலத் தான் 'சூட்டியின்' செயலும் என எண்ணுகின்றேன்!

வருகைக்கு நன்றி... புத்தன்!

மெழுகுதிரி ஒகே......ஆனால் சீட்டுக்காசு .....(கீ..கி..கி)........மற்றவர்களின் நம்பிக்கையை நாம் குறைசொல்ல முடியாது அவருக்கு அதனால் மனநிறைவு கிடைக்குது என்றால் நாம் யார் தடுத்து நிறுத்த..............பட்  இலவசமாக கருத்து சொல்லலாம்......கி..கி..

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எதோ உங்கள் எழுத்து சரியாக இல்லை போல் இருக்கே புங்கை. மனதார இந்தக் கதையை நீங்கள் எழுதவில்லையோ ???

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.