Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியை அம்பலப்படுத்துவோம்! ஆதவாளர்கள் போர்க்கொடி!!

Featured Replies

இறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள்  பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட  மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது.

இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அனந்தி இதனை செய்த சித்தார்த்தனிற்கும் அவரது ஆட்களிற்கும் குரல் கொடுப்பதே ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
ஏற்கனவே அனந்தியினது நடவடிக்கைகள் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பலரும் விட்டுவிலகியுள்ளனர்.இந்நிலையினில் தற்போது எஞ்சிய ஆதரவாளர்களும் விட்டு விலக முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே அனந்தியை தற்போது இயக்கிவரும் தென்னிலங்கை தரப்புக்கள் குறித்த முக்கிய புகைப்படங்களை வெளியிட ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் இணைந்து அனந்தி விருப்பம் கொண்டிருந்த போதும் அவர்கள் பின்னடித்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.http://www.pathivu.com/news/41791/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டு செய்தவற்றை வெளிப்படையாக விமர்சிக்கும், புளொட்டு அழியவேண்டும் என விரும்பினேன் என கூறும் அர்ஜூன் மீது வசைமாரி பொழியும் புலவாலுகள் இப்போ அவர்கள் கதாநாயகி பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

 முதலில் எனது நண்பரின் கேள்விக்கு பதில் தாருங்கள்.ஆதரிக்கலாமா? இல்லையா? பின்னர் முடிவெடுப்போம் (வாழைத்தோட்டத்தில் "பாரிஸ் இன்" நில் நடந்த கதை முழுக்கத்தெரியும்)

புளட் அமைப்பின் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் சித்தார்த்தன் மனைவி பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. புளட் அமைப்பை கலைப்பதோடு இந்த சொத்துகளை மக்களுக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை புளட் அமைப்பில் உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்களுக்காவது வழங்க சித்தார்த்தன் முன்வருவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

புளட்டிற்கு கூட்டமைப்பிற்குள் இடம் கொடுத்தவர்களையும் 2013 மாகாண சபை தேர்தலில் சித்தருக்கு ஓட்டு போட்டவர்களையும் என்ன செய்வதாக உத்தேசம்? 

  • கருத்துக்கள உறவுகள்

சுரேசு, செல்வம், சித்தர் இப்படி மக்களை நேரடியாக கொலை செய்த யாருக்கும் அரசியல் செய்ய அனுமதிக்க கூடாது என்பதே நான் சொல்குவது.

ஆனால் நீங்கள்தான் அனந்தியை ஜான்சி ராணி எண்டீர்கள்.

இப்போ என்னாச்சு ?

  • கருத்துக்கள உறவுகள்

சுரேசு, செல்வம், சித்தர் இப்படி மக்களை நேரடியாக கொலை செய்த யாருக்கும் அரசியல் செய்ய அனுமதிக்க கூடாது என்பதே நான் சொல்குவது.

ஆனால் நீங்கள்தான் அனந்தியை ஜான்சி ராணி எண்டீர்கள்.

இப்போ என்னாச்சு ?

அப்படி பார்க்க போனால் பொன்செகா செய்யமுடியாது,மகிந்தா செய்யமுடியாது........உலகதலைவர்களில் அரைவாசி பேர் செய்யமுடியாது.........ஏன் எங்கன்ட சோசலிச புரட்சி திலகங்கள் ஒருத்தருமே செய்ய முடியாது........

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டு செய்தவற்றை வெளிப்படையாக விமர்சிக்கும், புளொட்டு அழியவேண்டும் என விரும்பினேன் என கூறும் அர்ஜூன் மீது வசைமாரி பொழியும் புலவாலுகள் இப்போ அவர்கள் கதாநாயகி பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

உங்களது நோக்கம் என்ன?

எதற்கெடுத்தாலும் அனந்திமீது குற்றம் கண்டுபிடிப்பதேன்.....??

சித்தார்த்தன் கூட்டமைப்பின் வேட்பாளர்

அவருக்காக அனந்தி பரப்புரை செய்வதும் தவறெனில்....?

தப்பு யாருடையது....??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள வேட்பாளர்களில் நேர்மையாகச் செயற்படுபவர் தர்மலிங்கம் சித்தாத்தன். அவர் தனது தந்தையைப் போன்று தன்னைத் தேடி வருபவர்களுக்கு இயன்றளவு உதவிகளை செய்து வருகின்றார்.

ஊருக்குச் சென்றிருந்த போது நானும் அவர் தொடர்பில் பிழையான கருத்தினையே கொண்டிருந்தேன். அப்போது அவர் தொடர்பில் நல்லவிதமாக உரையாடியவர்களிடம் கருத்து கேட்டபோதே அவர்கள் சித்தாத்தனைப் பற்றி உயர்வாக கூறினார்கள்.

கல்லூரி கட்டுவதற்கான (ஆசிரியர் பயிற்சி கலாசாலை என நினைக்கின்றேன்) இவரும் இவருடைய சகோதரியும் இணைந்து கையெழுத்து வைத்து தானமாக காணியை கொடுத்தது என்கின்றார்கள். அமைச்சர்கள் செய்ய முடியாத எத்தனையோ விடயங்களை வவுனியா எம்.பியாக இருந்த போது சித்தாத்தன் செய்ததாக வவுனியா மக்கள் தற்போதும் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அதேபோன்று ஒரு காலத்தில் பின்தங்கிய பகுதியாக இருந்த வவுனியாவையும் அங்குள்ள மருத்துவனையையும் அபிவிருத்தி உயர்த்திய செய்த பெருமையும் இவருக்கு உள்ளது என்கின்றனர்.

வவுனியாவில் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் தமிழர்களை குடியேற்றி சிங்களவர்களிடம் இருந்து மண் பறிபோகாது காப்பாற்றிய பெருமையும் இவருக்கும் இவர் சார்ந்த புளொட்டுக்கும் உள்ளது என்கின்றனர்.

மாகாண சபை உறுப்பினராக தற்போது உள்ள இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அனைத்தையும் பிரித்து கொடுத்துள்ளார். ஆனால், பிற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

எத்தனையோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்துள்ளார். இதனை எல்லாம் இங்கே புளொட்டை திட்டுகின்றவர்கள் அங்கே சென்று அறிவது நல்லது என்பதே எனது கருத்து.

கடந்த காலத்தைப்பற்றி பேசிப்பேசியே நாம் எமது பொன்னான காலத்தை வீணடிக்கின்றோம் என்பது சரியான உண்மையாகத்தான் உள்ளது.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள வேட்பாளர்களில் நேர்மையாகச் செயற்படுபவர் தர்மலிங்கம் சித்தாத்தன். அவர் தனது தந்தையைப் போன்று தன்னைத் தேடி வருபவர்களுக்கு இயன்றளவு உதவிகளை செய்து வருகின்றார்.

ஊருக்குச் சென்றிருந்த போது நானும் அவர் தொடர்பில் பிழையான கருத்தினையே கொண்டிருந்தேன். அப்போது அவர் தொடர்பில் நல்லவிதமாக உரையாடியவர்களிடம் கருத்து கேட்டபோதே அவர்கள் சித்தாத்தனைப் பற்றி உயர்வாக கூறினார்கள்.

கல்லூரி கட்டுவதற்கான (ஆசிரியர் பயிற்சி கலாசாலை என நினைக்கின்றேன்) இவரும் இவருடைய சகோதரியும் இணைந்து கையெழுத்து வைத்து தானமாக காணியை கொடுத்தது என்கின்றார்கள். அமைச்சர்கள் செய்ய முடியாத எத்தனையோ விடயங்களை வவுனியா எம்.பியாக இருந்த போது சித்தாத்தன் செய்ததாக வவுனியா மக்கள் தற்போதும் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அதேபோன்று ஒரு காலத்தில் பின்தங்கிய பகுதியாக இருந்த வவுனியாவையும் அங்குள்ள மருத்துவனையையும் அபிவிருத்தி உயர்த்திய செய்த பெருமையும் இவருக்கு உள்ளது என்கின்றனர்.

வவுனியாவில் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் தமிழர்களை குடியேற்றி சிங்களவர்களிடம் இருந்து மண் பறிபோகாது காப்பாற்றிய பெருமையும் இவருக்கும் இவர் சார்ந்த புளொட்டுக்கும் உள்ளது என்கின்றனர்.

மாகாண சபை உறுப்பினராக தற்போது உள்ள இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அனைத்தையும் பிரித்து கொடுத்துள்ளார். ஆனால், பிற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

எத்தனையோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்துள்ளார். இதனை எல்லாம் இங்கே புளொட்டை திட்டுகின்றவர்கள் அங்கே சென்று அறிவது நல்லது என்பதே எனது கருத்து.

கடந்த காலத்தைப்பற்றி பேசிப்பேசியே நாம் எமது பொன்னான காலத்தை வீணடிக்கின்றோம் என்பது சரியான உண்மையாகத்தான் உள்ளது.

நன்றி  உங்களது வெளிப்படையான கருத்துக்கும் சாட்சிக்கும்...

இது போன்ற கருத்துக்களை வரவேற்கின்றேன்.

இவையே இன்றைய தேவை

 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பகிடி விடவில்லை தானே? சித்தர் ஏன் மாகாண சபை தேர்தலில் யாழில் போட்டியிட்டவர்? 90 களில் வ்வுனியாவில் இருந்தவர்களை கேளுங்கள் இவரது வண்டவாளம் தெரியும். 

மாகாண சபை நிதியை யாருக்கு பிரித்துக் கொடுத்தார்? 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பகிடி விடவில்லை தானே? சித்தர் ஏன் மாகாண சபை தேர்தலில் யாழில் போட்டியிட்டவர்? 90 களில் வ்வுனியாவில் இருந்தவர்களை கேளுங்கள் இவரது வண்டவாளம் தெரியும். 

மாகாண சபை நிதியை யாருக்கு பிரித்துக் கொடுத்தார்? 

வவுனியாவில் தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை போட்டியிட வைத்து அதில் ஒருவரோ இருவரோ தெரிவு செய்யப்பட்டனரே.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை தனது தொகுதிக்குட்பட்ட ஊர்களில் உள்ள அமைப்புக்கள், கழகங்கள் என பல தரப்பட்டோருக்கு உதவி புரிந்திருக்கின்றார். நான் கூறும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய நீங்களே மானிப்பாய் தொகுதிக்குட்பட்ட ஊர்களிலும் அதேவேளையில் சாவகச்சேரிப் பகுதியில் உள்ள ஊர்களிலும் விசாரணை செய்து பாருங்கள்.

இங்கே, நான் புளொட்டை வால் பிடிப்பதற்காக இதனை எல்லாம் எழுதவில்லை. உண்மை தெரிந்தபடியால் எழுதுகின்றேன். அவ்வளவுதான்.

உங்களுக்கு பிறிதொரு விடயத்தினை தெரியப்படுத்தலாம் என விரும்புகின்றேன்.

வடமாகாண சபைக்குத் தெரியாமல் தமக்கான நிதி ஒதுக்கீட்டினை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த முனைகின்றனர் என்று வடமாகாண சபை முதலமைச்சர் ஒரு அறிக்கை விட்டிருந்தார் அல்லவா.

அதன் உண்மைத்தன்மை இதுதான். மாவை சேனாதிராசாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் யாழ்ப்பாணத்தில் இரு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த அந்தப் பணத்தினை ரணில் ஊடாக பெற்றுக்கொண்டனர். ஆனால், வடமாகாண சபையின் முதலமைச்சர், சுரேஸ் மற்றும் மாவையின் திட்டங்கள் தொடர்பான விபரத்தினை அறியாது அவசரப்பட்டு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இறுதியில் உண்மை தெரிந்து அவர் வருத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர். (இந்தத் தகவல் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, அவர் வருத்தப்பட்டது தொடர்பான விடயம்) 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தர் தனது அரசியல் வாழ்க்கையில் எத்தனை தடவை எம்.பி யாக இருந்தவர்? 

சித்தர் "தர்மலிங்கம்" என்ற நாமத்தை வைத்தே இப்போது வண்டி ஓட்டுகிறார். நீங்கள் கூறியது மாதிரி அவர் தனது தொகுதிக்குட்பட்ட ஊர்களுக்கு ஏதாவது செய்யலாம் ஆனால் வ்வுனியாவில் அடித்த கொள்ளை, கப்பம், சித்திரவதை, கொலைகளுடன் ஒப்பிடும் போது இதெல்லாம் யுஜுப்பி. 

 

வவுனியாவில் தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை போட்டியிட வைத்து அதில் ஒருவரோ இருவரோ தெரிவு செய்யப்பட்டனரே.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை தனது தொகுதிக்குட்பட்ட ஊர்களில் உள்ள அமைப்புக்கள், கழகங்கள் என பல தரப்பட்டோருக்கு உதவி புரிந்திருக்கின்றார். நான் கூறும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய நீங்களே மானிப்பாய் தொகுதிக்குட்பட்ட ஊர்களிலும் அதேவேளையில் சாவகச்சேரிப் பகுதியில் உள்ள ஊர்களிலும் விசாரணை செய்து பாருங்கள்.

இங்கே, நான் புளொட்டை வால் பிடிப்பதற்காக இதனை எல்லாம் எழுதவில்லை. உண்மை தெரிந்தபடியால் எழுதுகின்றேன். அவ்வளவுதான்.

உங்களுக்கு பிறிதொரு விடயத்தினை தெரியப்படுத்தலாம் என விரும்புகின்றேன்.

வடமாகாண சபைக்குத் தெரியாமல் தமக்கான நிதி ஒதுக்கீட்டினை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த முனைகின்றனர் என்று வடமாகாண சபை முதலமைச்சர் ஒரு அறிக்கை விட்டிருந்தார் அல்லவா.

அதன் உண்மைத்தன்மை இதுதான். மாவை சேனாதிராசாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் யாழ்ப்பாணத்தில் இரு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த அந்தப் பணத்தினை ரணில் ஊடாக பெற்றுக்கொண்டனர். ஆனால், வடமாகாண சபையின் முதலமைச்சர், சுரேஸ் மற்றும் மாவையின் திட்டங்கள் தொடர்பான விபரத்தினை அறியாது அவசரப்பட்டு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இறுதியில் உண்மை தெரிந்து அவர் வருத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர். (இந்தத் தகவல் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, அவர் வருத்தப்பட்டது தொடர்பான விடயம்) 

 

சித்தர் தனது அரசியல் வாழ்க்கையில் எத்தனை தடவை எம்.பி யாக இருந்தவர்? 

சித்தர் "தர்மலிங்கம்" என்ற நாமத்தை வைத்தே இப்போது வண்டி ஓட்டுகிறார். நீங்கள் கூறியது மாதிரி அவர் தனது தொகுதிக்குட்பட்ட ஊர்களுக்கு ஏதாவது செய்யலாம் ஆனால் வ்வுனியாவில் அடித்த கொள்ளை, கப்பம், சித்திரவதை, கொலைகளுடன் ஒப்பிடும் போது இதெல்லாம் யுஜுப்பி. 

 

நன்றி  உங்களது வெளிப்படையான கருத்துக்கும் சாட்சிக்கும்...

இது போன்ற கருத்துக்களை வரவேற்கின்றேன்.

இவையே இன்றைய தேவை

 

 

நிர்மலன்,

நீங்கள் சித்தர் கனக்க செய்ததாக சொல்லியுள்ளீர்கள் நல்ல விடயம்...

அப்படி பார்க்கப்போனால் டக்கர் எவ்வளவு மக்களுக்கு செய்திருக்கிறார்?

சித்தரின் வவுனியா அடாவடிதனங்களை இலகுவில் மறந்துவிடமுடியாது

சித்தர் 2009ல் போர் முடிய மகிந்தவிற்கு வாழ்துப்பாடி விட்ட அறிக்கையையும் மறந்துவிடமுடியாது

சித்தர்அள்ளித்தெளித்ததை வைத்து அவரை தூக்கிப்பிடிக்க முடியாது....

இவர்களின் கொள்கைகளும் ஆதரவும் தான் இப்ப சம்சும்மிட்கு கைகுடுக்கின்றது....


அடுத்தது முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்

சித்தருக்கு வரவேண்டிய இடத்தில இருந்து பணம் வந்துகொண்டு இருக்கும்

சிவாயிலிங்கம் தெற்கில..சித்தர்,டக்கர் வடக்கில...கருணா கிழக்கில...கடுமையாக தமிழருக்கு உழைக்கினம்

வலு கவனமாய் இருக்கோணும்

 

சங்கரி தமிழரிண்ட வாக்கை உடைக்க சீமைக்கே போய்டாரு

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.