Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார் விந்தனின் மனைவி

Featured Replies

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார் விந்தனின் மனைவி! தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கும் அவரது மனைவிக்குமிடையிலான குடும்பச் சண்டை பகிரங்கத்திற்கு வந்துள்ளது. சச்சரவு முற்றி பிள்ளைகளுடன் தனக்கும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு துணிந்த விந்தனின் மனைவி, மண்ணெண்ணெய் ஈரம் காயாமல் ஊடகநிறுவனமொன்றிற்குள் புகுந்து நியாயம் கேட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. உடல் முழுவதும் மண்ணெண்னை ஊற்றப்பட்ட நிலையில், விந்தனின் மனைவி யாழ் நகரத்தில் உள்ள ஊடக நிறுவனமொன்றிற்குள் தஞ்சம் புகுந்து, இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். யாழ்.நகரத்திற்கு அண்மையாக உள்ள புங்கன்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் மனைவியான உஷாந்தினியே இந்த அவல நிலைக்கு உள்ளாகியுள்ளார். அவர் தெரிவித்தவை வருமாறு- ‘எனது கணவன் விந்தன் இன்று (நேற்று) பொலிசாருடன் வீட்டுக்கு வந்தார். அவருடன் வந்த பொலிசார் வீட்டு கேற்றினை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அவர்கள் என்னை வீட்டைவிட்டு வெளியேறுமாறு வற்புறுத்தினார்கள். எனக்கு வேறு வழிதெரியாததால், என்னுடன் வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் என் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்ட துணிந்தேன். எனினும், மூத்தமகள் ரியூசனிற்கு சென்றிருந்தாள். அவளை தந்தையுடன் விட்டுச் செல்ல முடியாதென்பதால் தீமூட்டவில்லை. நான் மண்ணெண்ணெயை ஊற்றுவதை கண்ட பொலிசார் திரும்பச் சென்றுவிட்டனர்’ என்றார். இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி ஆராய்ந்தபோது, சில விடயங்கள் வெளிப்பட்டது. விந்தன் மற்றும் அவரது மனைவிக்கிடையில் முரண்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து மனைவி விவாகரத்து கோரியுள்ளார். எனினும், விந்தன் விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை. தனது அரசியல் பதவியினால் பொலிசாரை வைத்து தன்னை மிரட்டகிறார் என மனைவி குற்றம் சுமத்துகிறார். இந்த குடும்ப சர்ச்சை பற்றி கடந்த 8ம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் உஷாந்தினியால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. புங்கன்குளத்தில் 3 பெண் குழந்தைகளுடன் வசிப்பதாகவும், அந்த வீட்டை சொந்தம் கொண்டாடும் விந்தன் தங்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்துவதாகவும் கூறினார். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை தொடர்பு கொண்டபோது- ‘நேற்று பொலிசாருடன் அங்கு சென்றிருந்தேன். எனினும், நான் உள்ளே செல்லவில்லை. பொலிசார் மட்டமே சென்றனர். அங்கு என்ன நடந்ததென் தெரியவில்லை. மனைவி, பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற சொல்லவில்லை. அவர்களுடனேயே வசிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் என்னுடன் கதைக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன்’ என்றார்.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=39580&cat=nnews&sel=current&subcat=14

  • கருத்துக்கள உறவுகள்

விந்தன் அவர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினராவர். மக்கள் பலர் வீடின்றித் தவிக்கும்போது அவர் பெரியவீட்டில் வாழ்வது முறையல்ல, ஆகவேதான் விந்தன் தனது பெரியவீட்டைச் சின்னவீடுகளாக்கும் முயற்சியில் மனைவி பிள்ளைகளை வேறிடத்தில் தங்கவைக்க எண்ணிச் செயற்பட்டிருக்கலாம். :grin:

 

Edited by Paanch

  • தொடங்கியவர்

விந்தன் அவர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினராவர். மக்கள் பலர் வீடின்றித் தவிக்கும்போது அவர் பெரியவீட்டில் வாழ்வது முறையல்ல, ஆகவேதான் விந்தன் தனது பெரியவீட்டைச் சின்னவீடாக்கும் முயற்சியில் மனைவி பிள்ளைகளை வேறிடத்தில் தங்கவைக்க எண்ணிச் செயற்பட்டிருக்கலாம். :grin:

 

அண்ணை சின்னவீடு என்பதில் சின்ன திருத்தம்....

"சின்னவீடுகள்"

இல்லையெண்டா அண்ணன் பொலிசோட வந்திடுவார்

குடும்பச் சண்டையொன்றை அரசியலுடன் இணைக்க விரும்பவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ குற்றச் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் பலவற்றை விசாரிப்பதற்குக் கூட பொலிசார் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. ஆனால் இங்கு எப்படி விந்தனை பின்னாலே நிறுத்தி விட்டு பொலிசார் முன்னாலே சென்றனர். 

அப்படியானால் விந்தன் தனது குடும்பத் தேவைக்காக பொலிசாரைப் பயன்படுத்திக் கொண்டார?  

ஒன்று மட்டும் புரிகிறது. காலமும் நெரமும் கூடி வந்தால் மேர்வின் சில்வாவை விட துமி;நத சில்வாவை விட மகிந்தானந்த அளுத்கமகேயை விட மோசமான அரசியல் வாதிகள் எங்கள் பிரதேசங்களில் உருவாவார்கள் போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்ணை சின்னவீடு என்பதில் சின்ன திருத்தம்....

"சின்னவீடுகள்"

இல்லையெண்டா அண்ணன் பொலிசோட வந்திடுவார்

திருத்திவிட்டேன் தம்பி.:(

  • தொடங்கியவர்

குடும்பச் சண்டையொன்றை அரசியலுடன் இணைக்க விரும்பவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ குற்றச் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் பலவற்றை விசாரிப்பதற்குக் கூட பொலிசார் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. ஆனால் இங்கு எப்படி விந்தனை பின்னாலே நிறுத்தி விட்டு பொலிசார் முன்னாலே சென்றனர். 

அப்படியானால் விந்தன் தனது குடும்பத் தேவைக்காக பொலிசாரைப் பயன்படுத்திக் கொண்டார?  

ஒன்று மட்டும் புரிகிறது. காலமும் நெரமும் கூடி வந்தால் மேர்வின் சில்வாவை விட துமி;நத சில்வாவை விட மகிந்தானந்த அளுத்கமகேயை விட மோசமான அரசியல் வாதிகள் எங்கள் பிரதேசங்களில் உருவாவார்கள் போலிருக்கிறது.

நிச்சயமாக

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கருத்து மணி.

சில சமயங்களில் இவர்கள் கையில் போவதற்கு பேசாமல் போலிஸ் அதிகாரம் சிங்களவர் கையில் இருந்தால் பரவாயில்லை என்றும் தோன்றுகிறது.

அண்மையில் சடன என்ற சிங்கள நிகழ்ச்சியில் வந்து கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எங்களிடத்தில் விருப்பு வாக்குகளுக்கான போட்டியில்லை. எங்கள் அரசியல் வாதிகளில் திருடர்கள் போதைவஸ்து கடத்துபவர்கள் இல்லை என்று பெருமையாகச் சொன்னார்.

அப்போது குறுக்கிட்ட சிங்கள அமைச்சரான அஜித் பெரேரா விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் நிலவிய காரணத்தால் இதுவரை அவற்றிற்கு இடமிருக்கவில்லை. ஆனால் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ள இன்றைய நிலையில் இருந்து பாருங்கள் இன்னும் சிறிது காலத்தில் விருப்பு வாக்கிற்கான வெட்டுக் குத்துகள் உள்ளிட்ட விடயங்கள் இங்கு போல அங்கும் உருவாகத் தான் போகிறது என்று பதிலளித்தார்.

அஜித் பெரேராவின் வார்த்தை பொய்த்து விட வேண்டும் என்பது தான எனது விருப்பம் என்றாலும் அவரது வார்த்தை பலித்து விடும் போல் தான் இருக்கிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

டெலோ அமைப்பைச் சார்ந்த விந்தன் ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் வசித்தபோது இரத்மலானை இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த உஷாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். உஷா ஒரு தேர்தலிலும் கொழும்பில் போட்டியிட்டு இருக்கின்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று யாழ் ஆஸ்பத்திரிவீதியில் மாட்டின் வீதிக்கு கிட்டவாக முன்னாள் ரோயல் கல்லூரி ஆசிரியர் கனகசபாபதி அவர்களின் வீடு சும்மா இருந்த காரணத்தால் எவருக்கும் சொல்லாமல் குடியேறி ஒரு தொலைத்தொடர்பு நிலையைத்தையும் அதில் தொடங்கினர். பின்னர் விந்தன் மாநகர சபை  உறுப்பினர் , மகாண சபை உறுப்பினர் என ஆகிவிட்டார். அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விந்தன் குடும்பம் அந்த வீட்டை விட்டு வெளியேறியது. விந்தனும் உஷாவும் நன்றாகவே வாழ்ந்துவந்தனர். இவர்கள் பிரிவினைக்கு உஷாவின் தாயாரே காரணமாக இருக்கலாம். விந்தன் நிதானமாகச் செயற்படக்கூடியவர், தற்போது என்ன நடக்கிறதோ தெரியவில்லை. இவர்கள் பிரியக்கூடாது. விந்தன் உண்மையாகவே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்த வீட்டில் இருந்து எழுப்ப நீதிமன்ற உத்தரவு ...

கூட்டமைப்பா கொக்கா ? 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாழ்வில் ஈடுபடும் எவருக்கும் தனிப்பட்ட அவர்களது வாழ்க்கையில் எந்தவித கறைகளோ பிரச்சனைகளோ இருக்கக்கூடாது என்பதே எனது கருத்து. அது விந்தனாக இருந்தாலும் வேந்தனாக இருந்தாலும் அனைவருக்கும் பொருந்தும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாழ்வில் ஈடுபடும் எவருக்கும் தனிப்பட்ட அவர்களது வாழ்க்கையில் எந்தவித கறைகளோ பிரச்சனைகளோ இருக்கக்கூடாது என்பதே எனது கருத்து. அது விந்தனாக இருந்தாலும் வேந்தனாக இருந்தாலும் அனைவருக்கும் பொருந்தும். 

கூப்பன்மா அரிக்கிற அரிக்கனிலை அரிச்சு எடுத்தாலும் கறள் கறை இல்லாத அரசியல்வாதியை உலகத்திலை எடுக்கமாட்டியள். :innocent: :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.