Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்

Featured Replies

54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்  

Breaking Now
 
பப்புவா அருகே சென்ற போது ரேடாரில் இருந்து விலகியது

 
Read more at: http://tamil.oneindia.com/
  • தொடங்கியவர்
54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்
 
 
ஜகார்த்தா: 54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் ஒன்று பப்புவா மாகாணம் அருகே மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பப்புவா தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பயணிகளுடன் டிரிகானா ஏர் ஏடிஆர் 42 என்ற விமானம் புறப்பட்டது. ஓக்சிபில் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் பப்புவா அருகே பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.

 

மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட 54 பேர் இருந்தனர். விமானம் மாயமான தகவலை அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். விமானம் மாயமான பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் மாயமான பகுதி மலைப்பகுதி ஆகும். எனவே மலைப்பகுதியில் விமானம் மோதி விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பெரும் சோதனையைச் சந்தித்தன. இந்த நிலையில் இந்தோனேசிய விமானம் ஒன்று மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து கிளம்பி சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது, ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில், 162 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுமரத்தில கடலைக் கடந்தாலும்கடக்கலாம், கட்டேல போற விமானத்தை நம்பேலாமல் கிடக்கு...!  :(

  • தொடங்கியவர்
இந்தோனேஷியாவில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு
 
 

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடிரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்டேப் என்ற மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1319724

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டுக் கொடியில் காயவிட்டிருக்கும் அண்டவெயர் என்ன பிராண்ட் என்று கண்டு பிடித்து சொல்லும் நவீன உலகில் இந்தப் பெரிய விமானத்தை கண்டுபிடிக்க இயலாமல் இருப்பது நிறையவே சந்தேகங்களை எழுப்பகிறது.

ஒரு வீட்டுக் கொடியில் காயவிட்டிருக்கும் அண்டவெயர் என்ன பிராண்ட் என்று கண்டு பிடித்து சொல்லும் நவீன உலகில் இந்தப் பெரிய விமானத்தை கண்டுபிடிக்க இயலாமல் இருப்பது நிறையவே சந்தேகங்களை எழுப்பகிறது.

எம்மிலும் பார்க்க வேற்று கிரக வாசிகள் மிகவும் திறமை சாலிகள். விரைவில் வேற்றுக்கிரக வாசிகளால் மக்கள் கடத்தப்பட்டார்கள் என செய்தி வந்தால் அப்போது......இது போக ஹேக்கர்கள் விமானத்தொடர்பாடலில் விளையாட நினைத்தால் அண்டர்வெயாரும் மிஞ்சாது தம்பி.கடவுள் வழிபாடு ஒன்றே சாலச் சிறந்தது.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வீட்டுக் கொடியில் காயவிட்டிருக்கும் அண்டவெயர் என்ன பிராண்ட் என்று கண்டு பிடித்து சொல்லும் நவீன உலகில் இந்தப் பெரிய விமானத்தை கண்டுபிடிக்க இயலாமல் இருப்பது நிறையவே சந்தேகங்களை எழுப்பகிறது.

இன்னும் ஒரு வருசத்தாலை இதுதான் அந்த பிளேனின்ரை துண்டு எண்டு தண்ணீக்காலை ஒண்டை எடுத்து காட்டுவாங்கள் பாருங்கோ..

54 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மலையில் மோதியது

indonesia_2513490h.jpg

இந்தோனேசியாவில் இருந்து 54 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் மலையில் மோதியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் இருந்து ஓக்சிபில் என்ற நகருக்கு தனியார் பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 2.22 மணிக்குப் புறப்பட்டது. இதில் 49 பயணிகளும் விமானி உட்பட 5 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த விமானம் 3.16 மணிக்கு ஓக்சிபில் நகரில் தரையிறங்க வேண்டும். ஆனால் 2.55 மணி அளவில் ரேடாரில் இருந்து விமானம் திடீரென மாயமானது. இதைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

உள்ளூர் கிராம மக்கள் அளித்த தகவலின்படி பின்டாங் மலைப்பகுதியில் இந்தோனேசிய போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. சில மணி நேர தேடுதல் வேட்டையில் அடர்ந்த வனப்பகுதியில் விமானம் நொறுங்கி கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கியுள்ளது. அதில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். விபத்து நேரிட்ட பகுதியை சென்றடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்த பின்னரே முழுவிவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

மோசமான வானிலை நிலவுவதாலும் இரவு நேரம் என்பதாலும் விமானம் விழுந்த வனப் பகுதிக்கு மீட்புப் படையினர் உடனடியாக செல்ல முடியவில்லை. திங்கள்கிழமை காலைதான் மீட்புப் பணிகள் தொடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.விபத்துக்குள்ளான தனியார் விமானம் டிரைகானா ஏர் நிறுவனத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த நிறுவனம் சர்வதேச தர விதிகளை பூர்த்தி செய்யாததால் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் விமான சேவைகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/54-பேருடன்-சென்ற-இந்தோனேசிய-விமானம்-மலையில்-மோதியது/article7549442.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

'நொறுங்கிய இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்சம் டாலர்கள்'

 
 
Trigana_Air_Servic_2513709f.jpg
"திரிகானா ஏடிஆர் 42-300 விமானத்தில் சுமார் 5 லட்சம் டாலர் பணம் எடுத்துச் செல்லப்பட்டது"

இந்தோனேஷியாவில், 54 பேருடன் மலையில் மோதி வெடித்து சிதறிய விமானத்தில் 6.5 பில்லியன் ரூபியா (இந்தோனேஷிய நாணயம்) பணம் இருந்தது தெரியவந்துள்ளது.

கிழக்கு நாடுகளில் ஏழ்மையில் தவிக்கும் மக்களுக்கு உதவிட இந்தப் பணம் எடுத்து செல்லப்பட்டதாக அந்நாட்டு தபால்துறை அதிகாரி ஹர்யோனோ தெரிவித்தார். 6.5 பில்லியன் ரூபியா என்பது அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 5 லட்சம் ஆகும்.

இது குறித்து ஜெயபுரா தபால் அலுவலகத்தின் தலைவர் ஹர்யோனோ கூறும்போது, "அந்தப் பணம் மொத்தமும் 4 பைகளில் கொண்டுவரப்பட்டது" என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

விமானத்தில் மிகப் பெரிய தொகை எடுத்து செல்லப்பட்டதும் விமானம் விபத்துக்குள்ளானதையும் அதிகாரிகள் சந்தேகப் பார்வையில் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பணம் கொண்டு செல்லப்பட்டது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவன கேள்வி எழுப்பியதற்கு விமான நிலைய அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

விமான பாகங்கள் கண்டெடுப்பு

இந்நிலையில், ஓக்பிசி மாவட்ட மக்கள், விமானம் மலையில் மோதியதை பார்த்ததாகவும், அதன் உடைந்த பாகங்களை பார்த்ததாகவும் கூறியதை அடுத்து அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் அந்தப் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர், சில பாகங்களை கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம், 54 பயணிகளுடன் ஜெயபுரா விமான நிலையத்தில் இருந்து ஆக்சிபில் நோக்கிப் புறப்பட்ட திரிகானா ஏடிஆர் 42-300 என்ற அந்த விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பாபுவா மாகாணத்தின் பின்டாக் மாவட்டத்தில் உள்ள ஒப்பாபே என்ற மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை பார்த்ததாக தெரிவித்தனர்.

பலத்த காற்றுடன் கனமழை மற்றும் மோசமான வானிலையால், விமானம் மலை மீது மோதி விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவின் ஏ.டி.ஆர். 42–300 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 49 பயணிகள் மற்றும் 5 குழந்தைகள் என 54 பேருடன் உடன் 5 விமான குழுவினரும் பயணம் செய்தனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/நொறுங்கிய-இந்தோனேஷிய-விமானத்தில்-5-லட்சம்-டாலர்கள்/article7550078.ece

  • தொடங்கியவர்

##

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.