Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து பங்காளிக் கட்சித் தலைவர்கள் சம்பந்தனுடன் ஆலோசனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து பங்காளிக் கட்சித் தலைவர்கள் சம்பந்தனுடன் ஆலோசனை!
[Friday 2015-08-21 09:00]
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் நேற்று மாலை திரு­கோ­ண­ம­லையில் சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள சம்­பந்­தனின் இல்­லத்தில் நடை­பெற்ற இந்தச் சந்­திப்பில் ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், ஜனா ஆகி­யோரும் புளொட் சார்பில் அதன் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சிவ­சக்தி ஆனந்தன் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் நேற்று மாலை திரு­கோ­ண­ம­லையில் சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள சம்­பந்­தனின் இல்­லத்தில் நடை­பெற்ற இந்தச் சந்­திப்பில் ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், ஜனா ஆகி­யோரும் புளொட் சார்பில் அதன் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சிவ­சக்தி ஆனந்தன் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர்.

  

தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­துள்ள தேசியப் பட்­டியல் பிர­தி­நி­தித்­து­வத்தை யாருக்கு வழங்­கு­வது என்­பது தொடர்பில் இந்­தச்­சந்­திப்­பின்­போது ஆரா­யப்­பட்­டுள்­ளது. இன்­றைய தினம் கூட்­ட­மைப்பின் செய­லாளர் மாவை சேனா­தி­ரா­ஜா­வுடன் கலந்­து­ரை­யாடி இறுதி முடி­வுக்கு வரு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்­திப்­பின்­போது கருத்து தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இருவரையே தேசிய பட்டியலுக்கு நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

http://www.seithy.com/breifNews.php?newsID=138689&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியப்பட்டியல் ஒன்றேனும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவை தந்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளனர்.
 
 இந்த வகையில் வாக்களித்த மக்களுக்கும் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைத்து பெரியோர் தாய்மார் இளைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
 அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் வெற்றுக்கோசமிடும் சில கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் இன்று நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளனர். இதனை உணர்ந்து மழைக்கு முளைக்கும் காளான்களான சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமது நிலைமையை எண்ணிக்கொள்ள வேண்டும்.
 
இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் இரு தேசியப்பட்டியில் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
 
இதற்காக வடக்கு கிழக்கில் களத்தில் நின்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களின் கடும் பிரயத்தனமாக உள்ளது.
 
எனவே இரு தேசியப்பட்டியலையும் தமிழரசுக்கட்சி தனது அங்கத்தவர்களுக்கு வழங்காது ஏனைய அங்கத்துவ கட்சிகளாக உள்ள மூன்று கட்சிகளில் எவராவது ஒருவருக்கு ஒரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையை வழங்க வேண்டும். இதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்கட்சி பூசல் நிலவுவதாக தமிழர்களிடம் பொய்ப்பரப்புரை செய்யும் உதிரிக்கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கிழக்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்று என கூப்பாடு அதுக்குள்ள நீங்களுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கிழக்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்று என கூப்பாடு அதுக்குள்ள நீங்களுமா? 

பிரபாகரனை புரட்டி எடுத்தார்கள் அல்லவா?

எதுக்கு தடி என்று....

இப்ப தெரியும்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரேசை உள்ளே கொண்டுவரும்  முயற்சியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிற்கு குறிப்பாக அம்பாறை அல்லது திருமலைக்கு ஒன்று கொடுத்தே ஆகணும். அந்த மக்கள் மிகவும் marginalised ஆகி இருக்கிறார்கள். ஒரு எம்பி கிடைத்தால் கொஞ் ஏதாவது செய்யலாம்.

சுரேசுக்குதான் மனதில் இடம் கொடுத்துள்ளோமே?

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற இரண்டு இடத்துக்கே இவ்வளவு ஆலோசனை தேவைப்படுகுது. 60 ஆண்டு கால இனப்பிரச்சனையை தீர்க்க இன்னும் 4 மாசம் தான் மிச்சம் இருக்குது. சமஸ்டி..சுயநிர்ணயம்..சம அந்தஸ்துடன் கூடிய தீர்வு. பிளீஸ் இதை கெதியா முடிச்சிட்டு தீர்வை.. இதயத்தால் இணைந்தோருடன் இணைந்து கொண்டு வரவும். ஜஸ்ட்.. 4 மாதங்கள் தான் மிச்சம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கிழக்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்று என கூப்பாடு அதுக்குள்ள நீங்களுமா? 

இதோடை... சம்பந்தனுக்கு,  தலை இன்னும்.... நரைத்து விடும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அங்க நரைக்க இனி ஒன்றும் இல்லை

இதோடை... சம்பந்தனுக்கு,  தலை இன்னும்.... நரைத்து விடும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

பின் வாசல் பிரேமச்சந்திரன்.

என்ன ரைமிங்கா வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கொம்பனி ஏன் சுரேசுக்கு திறந்து காட்டினம் ? 

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கொம்பனி ஏன் சுரேசுக்கு திறந்து காட்டினம் ? 

சுரேசை, இப்ப வெளியில் விட்டால்,
அவர்களின்.... பொட்டுக்கேடு வெளியில் வந்து விடும் என்பதால்,  தாங்கள்  சாகு மட்டும், 
சுரேசை.... விரும்பியோ, விரும்பாமலோ... அணைத்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுரேஸ்,நாளை ஸெல்வம், சித்தர்,  ஆனந்தன் இப்படி முன்னாள் தமிழின கொலையாளிகள் ஒவ்வொன்றாய் அகற்றப் படணும்.

அடுத்து மாவை, சம் போன்ற 70 களில் வன்முறையை தூண்டியவர்களை அனுப்போணும்.

சீவி, சும், ஐங்கரநேசன், வியாலேந்திரன், இப்படி 2009 பின்னான ரத்த கறை படியாத கரங்கள் தமிழ் அரசியலை முன் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.

தோற்றவர்கள் எவருக்கும் தேசியப்பட்டியலில் இடம் கிடைக்காது . ,இம் முறை அம்பாறைக்கு தேசியப் பட்டியலில் ஒரு இடம் வழங்கப்படவேண்டும் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

பின்கதவால் தன் வரமாட்டேன் என பிரேமச்சந்திரன் சொல்லாதது ஏன்?

தேர்தலில் தோற்காமல் நேரடியாக தேசிய பட்டியலில் வந்த சும் பின் கதவுப் பேர்வழி என்றால்.

தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னும் எம்பி யாக துடிக்கும் பிரேமச்சந்திரனை பின்கதவு பிரேமச்சந்திரன் என்பதில் என்ன குறை?

ஆளுக்கு இந்த முறை சீட் கொடுக்க கூடாது. அனந்தியை வச்சும், சும்மின் லண்டன் பேச்டுவார்தை, தம்பிக்கு பதவி வேண்டி இவ்வாறு சுயநல அரசியலை கூட்டமைப்பின் பேச்சாளரய் இருந்த படியே செய்ததால், அதுக்கு தண்டணையாய் மக்கள் கொடுத்த செருப்படிதான் இந்த நிராகரிப்பு.

வேணுமெண்டால் பிச்சுக் கொண்டு போகட்டும் இவர் போனாலும் ஈபி கூட்டமைப்பில் தான் இருக்கும்.

போய் இன்னொரு கஜேந்திரன் ஆகட்டும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுரேஸ்,நாளை ஸெல்வம், சித்தர்,  ஆனந்தன் இப்படி முன்னாள் தமிழின கொலையாளிகள் ஒவ்வொன்றாய் அகற்றப் படணும்.

அடுத்து மாவை, சம் போன்ற 70 களில் வன்முறையை தூண்டியவர்களை அனுப்போணும்.

சீவி, சும், ஐங்கரநேசன், வியாலேந்திரன், இப்படி 2009 பின்னான ரத்த கறை படியாத கரங்கள் தமிழ் அரசியலை முன் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.

இதைத் தான் நாங்களும் விரும்புகின்றோம்.
ஒரு சிறு மாற்றம்...... சும் அவர்களையும் வெளியில் அனுப்பிவிட்டால்
ஒரு பெரிய மாற்றம் வரும் என்று நம்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.