Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி)

Featured Replies

பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி)

பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி)

 
 

பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகன முஸ்லிம் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றார்.

கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது அத்துமீறிய தாக்குதலை நடத்தி வருகின்றது.

கடந்த ஒரு வார காலத்தில் 06 பலஸ்தீனிய முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தூப்பக்கி சூட்டில் 15 வயது சிறுவன் உட்பட 6 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=73379

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் உருவாக்கத்திற்கான மூலகாரணமே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. உலகின் எந்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் பாலஸ்த்தீனத்தில் தமது உறவுகள் படும் அவஸ்த்தையைத்தான் காரணம் காட்டி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். 

பாலஸ்த்தீன - இஸ்ரேல் பிணக்கிற்கு முடிவு தேடாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக அந்த பெண்ணை துப்பாக்கியால் இப்படி சுடலாமா ரகுநாதன்?...நீங்கள் இப்ப கதைக்கிற அதே கதையைத் தான் எங்கட ஆட்களை அழிக்கும் போது சிங்களவர்கள் சொல்லி இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக அந்த பெண்ணை துப்பாக்கியால் இப்படி சுடலாமா ரகுநாதன்?...நீங்கள் இப்ப கதைக்கிற அதே கதையைத் தான் எங்கட ஆட்களை அழிக்கும் போது சிங்களவர்கள் சொல்லி இருப்பார்கள்

ரதி அக்கா,
ரகு நாதன் கூறிய கருத்தை  தவறுதலாகப் புரிந்து கொண்டீர்கள் போல் உள்ளது.
இஸ்லாமிய மக்களின் வன்முறைக்கான மூல காரணமே இந்த இஸ்ரேலிய படைகளின் அட்டூழியங்கள் தான் என்பதைத்தான் ரகு கூறுகிறார். 
ஆக இஸ்ரேலிய படைகளின் காட்டுமிராண்டி தனத்தையும் அந்த அபலை பெண்ணின் பரிதாப நிலையையும் அவர் கூறுகிறார்.
 

 

பாலஸ்த்தீன - இஸ்ரேல் பிணக்கிற்கு முடிவு தேடாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம்.--

ரகுநாதன் சொன்ன இந்த விடயம் தான் உலகம் இன்று இந்த யுத்தங்களால் நிரம்பி இருப்பதற்கு  காரணம் .

இந்த பெண்ணின் கொலை அதில் ஒரு நிகழ்வுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக அந்த பெண்ணை துப்பாக்கியால் இப்படி சுடலாமா ரகுநாதன்?...நீங்கள் இப்ப கதைக்கிற அதே கதையைத் தான் எங்கட ஆட்களை அழிக்கும் போது சிங்களவர்கள் சொல்லி இருப்பார்கள்நான் 

நான் அப்படி நினைக்கவில்லை ரதி.

பாலஸ்த்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போக்குத்தான் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை உசுப்பேத்தி விடுகிறது என்று தான் நான் நினைக்கிறேன்.  

தம்மை யாரும் எதுவும் கேட்கவோ அல்லது செய்யவோ முடியாது என்கிற  திமிர்ப் போக்கே இஸ்ரேலினை தொடர்ந்தும் இந்தவகையில் அட்டூழியங்களில் ஈடுபட ஊக்குவிக்கிறது.

பாலஸ்த்தீனர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. தினமும் இஸ்ரேலியர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் கொல்லப்படும் பாலஸ்த்தீனர்களோடு ஒப்பிடும்போது , கொல்லப்படும் இஸ்ரேலியர்களின்ன் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

சரி, நான் எமது பிரச்சினைக்கு வருகிறேன். சிங்களவர்கள் தாம் செய்த அட்டூழியங்களுக்கு நியாயம் கற்பிப்பது இருக்கட்டும், நாம் எதுவுமே செய்யவில்லையா ? அப்படியானால் கொழும்பிலும், தெற்கின் இதர பகுதிகளிலும், குடியேற்றக் கிராமங்களிலும் சிங்கள விவசாயிகளையும், குடியேற்றக்காரர்களையும் கொன்றது யார் ? அப்படிக் கொன்றுவிட்டு இப்படி நடப்பவை எல்லாம் தமிழர் பகுதிமீது நடக்கும் அட்டூழியங்களுக்குப் பதிலடி அல்லது அப்படி நடப்பதைத் தடுக்கத்தான் என்று நியாயம் கூறியது யார் ?

ஆக, இருபக்கத்தாரும் அநியாயங்களைச் செய்திருக்கிறோம். ஆனால், கொல்லப்பட்ட சிங்கள அப்பாவிகளுடன் ஒப்பிடும்போது கொல்லப்பட்ட தமிழ் அப்பாவிகளின் எண்ணிக்கை எத்தனையோ மடங்கு. பாலஸ்த்தீனத்திலும் நடப்பது இதுதான்.

எழுதப்போனால் பலருடன் முரண்பட வேண்டிவரும். அதனால் இத்துடன் முடிக்கிறேன். 

நாம் பல விடயங்களைச் செய்யாமல் விட்டிருந்தால் எங்களுக்கு வந்த அழிவுகளில் சிலதையாவது தவிர்த்திருக்கலாம் என்று கவலைப் படுகிறேன். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்க்காரம் என்று இதைத்தான் கூறுவார்களோ?

என்னவோ தெரியவில்லை, வயது போகப் போக எவருடனும் முரண்பட மனது விரும்புதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அப்படி நினைக்கவில்லை ரதி.

பாலஸ்த்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போக்குத்தான் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை உசுப்பேத்தி விடுகிறது என்று தான் நான் நினைக்கிறேன்.  

தம்மை யாரும் எதுவும் கேட்கவோ அல்லது செய்யவோ முடியாது என்கிற  திமிர்ப் போக்கே இஸ்ரேலினை தொடர்ந்தும் இந்தவகையில் அட்டூழியங்களில் ஈடுபட ஊக்குவிக்கிறது.

பாலஸ்த்தீனர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. தினமும் இஸ்ரேலியர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் கொல்லப்படும் பாலஸ்த்தீனர்களோடு ஒப்பிடும்போது , கொல்லப்படும் இஸ்ரேலியர்களின்ன் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

சரி, நான் எமது பிரச்சினைக்கு வருகிறேன். சிங்களவர்கள் தாம் செய்த அட்டூழியங்களுக்கு நியாயம் கற்பிப்பது இருக்கட்டும், நாம் எதுவுமே செய்யவில்லையா ? அப்படியானால் கொழும்பிலும், தெற்கின் இதர பகுதிகளிலும், குடியேற்றக் கிராமங்களிலும் சிங்கள விவசாயிகளையும், குடியேற்றக்காரர்களையும் கொன்றது யார் ? அப்படிக் கொன்றுவிட்டு இப்படி நடப்பவை எல்லாம் தமிழர் பகுதிமீது நடக்கும் அட்டூழியங்களுக்குப் பதிலடி அல்லது அப்படி நடப்பதைத் தடுக்கத்தான் என்று நியாயம் கூறியது யார் ?

ஆக, இருபக்கத்தாரும் அநியாயங்களைச் செய்திருக்கிறோம். ஆனால், கொல்லப்பட்ட சிங்கள அப்பாவிகளுடன் ஒப்பிடும்போது கொல்லப்பட்ட தமிழ் அப்பாவிகளின் எண்ணிக்கை எத்தனையோ மடங்கு. பாலஸ்த்தீனத்திலும் நடப்பது இதுதான்.

எழுதப்போனால் பலருடன் முரண்பட வேண்டிவரும். அதனால் இத்துடன் முடிக்கிறேன். 

நாம் பல விடயங்களைச் செய்யாமல் விட்டிருந்தால் எங்களுக்கு வந்த அழிவுகளில் சிலதையாவது தவிர்த்திருக்கலாம் என்று கவலைப் படுகிறேன். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்க்காரம் என்று இதைத்தான் கூறுவார்களோ?

என்னவோ தெரியவில்லை, வயது போகப் போக எவருடனும் முரண்பட மனது விரும்புதில்லை.

வணக்கம் ஐயா!
சிங்கள அப்பாவிகள் என்ற சொல்லை எந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா,
சிங்களவரில் அப்பாவிகளும் இருந்தார்கள் , அவர்கள் எங்களாலும் இறந்தார்கள் என்பது உண்மை தானே.
இதில் என்ன இரகசியம் !!!

எந்த வருடத்தில் என்ற கேள்வி ..எதனால் வருகிறது?

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா,
சிங்களவரில் அப்பாவிகளும் இருந்தார்கள் , அவர்கள் எங்களாலும் இறந்தார்கள் என்பது உண்மை தானே.
இதில் என்ன இரகசியம் !!!

எந்த வருடத்தில் என்ற கேள்வி ..எதனால் வருகிறது?

சிங்கள அப்பாவிகள் இருக்கின்றார்கள் . இறந்திருக்கின்றார்கள்.  மறுப்பதிற்கில்லை....
ஆனால்..
தமிழ் அப்பாவிகள் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே கொல்லப்பட்டு வருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட சிங்கள அப்பாவிகளுடன் ஒப்பிடும்போது கொல்லப்பட்ட தமிழ் அப்பாவிகளின் எண்ணிக்கை எத்தனையோ மடங்கு ..இங்கு விபரமாக அவர் அதை எழுதிவிட்டாரே கு.சா அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.