Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும்

Featured Replies

முஸ்லிம்களை விடுதலை புலிகள் யாழில் இருந்து வெளியேற்றியது 1990 ம் ஆண்டில். 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுத்தினர் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் 20 வருடமாகிவிட்டது. 1995 ம் ஆண்டின் பின்னர் அவர்கள் யாழ்பாணதில் குடியேறுவதை விடுதலை புலிகளால் தடுத்திருக்க முடியாது. அவர்களது வீடுகளில் தமிழ் மக்கள் குடியேறவில்லை. விடுதலை புலிகளை தமிழ்மக்களை அந்த நிலங்களை அபகரிக்க விடவும் இல்லை.  அப்படியானால் அவர்களை அங்கு குடியேறவிடாமல் தடுத்தவர்கள் இலங்கை இராணுவத்தினரா? முஸ்லீம்கள்  நினைத்திருந்தால் 1995 ம் ஆண்டின் பின்னரே யாழ்பாணம் சென்று தாங்கள் முன்பு இருந்த தங்கள் வீடுகளில் குடியேறியிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ரிறிங்கோ - நியாயமான கருத்தும் கேள்வியும்.
1995 இலிருந்து யாழ் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஏன் இவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை - நிச்சயமாக ஒரு மறைமுகக் காரணி இருக்க வேண்டும். அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2015, 4:15:43, trinco said:

முஸ்லிம்களை விடுதலை புலிகள் யாழில் இருந்து வெளியேற்றியது 1990 ம் ஆண்டில். 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுத்தினர் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் 20 வருடமாகிவிட்டது. 1995 ம் ஆண்டின் பின்னர் அவர்கள் யாழ்பாணதில் குடியேறுவதை விடுதலை புலிகளால் தடுத்திருக்க முடியாது. அவர்களது வீடுகளில் தமிழ் மக்கள் குடியேறவில்லை. விடுதலை புலிகளை தமிழ்மக்களை அந்த நிலங்களை அபகரிக்க விடவும் இல்லை.  அப்படியானால் அவர்களை அங்கு குடியேறவிடாமல் தடுத்தவர்கள் இலங்கை இராணுவத்தினரா? முஸ்லீம்கள்  நினைத்திருந்தால் 1995 ம் ஆண்டின் பின்னரே யாழ்பாணம் சென்று தாங்கள் முன்பு இருந்த தங்கள் வீடுகளில் குடியேறியிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதை தமிழருக்கு எதிராக அரசியல் ஆக்குகிறார்கள். சில பச்சோந்தி தமிழரும் புலிகளுக்கு எதிராக தமது உடம்பில் ஒடும் வக்கிரத்தை கொட்டுவற்காக அவர்களுக்கு ஜால்ரா போடுகிறார்கள்.

இலங்கை இராணுவத்தால் தமது வசிப்பிடங்களை விட்டு விரட்டப்பட்ட  தமிழ் மக்கள் இன்றும் அந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இராணுவம் அந்த இடங்களை விட்டு விலகினால் அடுத்த நிமிடமே அவர்களது வீடுகளுக்கு சென்று குடியேறிவிடுவார்கே தவிர அதை வைத்து அரசியல் செய்ய மாட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும் முஸ்லீம்களால் விரட்டப்பட்ட தமிழர்கள் பாடு அதோகதி தான். ஏனென்றால் அந்த இடங்களில் முஸ்லீம்கள் குடியேறிவிட்டார்கள்.

முதல் பந்தியில் இருக்கும் உங்கள் கேள்விக்கான விடை எனக்குத் தெரியாது! ஆனால், தரைவழிப் போக்குவரத்து அற்ற நிலையில் பின்புலத்தில் புலனாய்வுப் போர் நடந்து கொண்டிருந்த ஒரு பிரதேசத்தில் மீள வந்து குடியேற முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பது காரணமாக இருக்கலாம்!.   ஆனால், இந்தக் கேள்விக்கும் இந்த உரையாடலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் வர முடிந்த போது வரவில்லை என்பதால் அவர்கள் துரத்தப் படவில்லை என்று நிறுவும் முயற்சியா இது?

இரண்டாம் பந்தியில்: காரணம் தெரியவில்லை என்று முதலில் ஏற்றுக் கொண்ட பின் முஸ்லிம்கள் தங்கள் இடப்பெயர்வை வைத்து அரசியல் தான் செய்கிறார்கள் என்று அச்சொட்டாகச் சொல்லவும் முடிகிறது உங்களால்! அப்ப உங்களுக்குக் காரணம் தெரியுமா?

இப்படி maze க்குள்ளால ஓடி விளையாடும் வேலை தான் தமிழ் தரப்புக் குற்றச்சாட்டுகளைப் பேசும் ஒவ்வொரு திரியிலும் நடக்கிறது. கேள்வி எளியது: முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டது இனச்சுத்திகரிப்பு (சர்வதேச வரையறையின் படி!) என்கிறார் சும். அது சரி என்கிறேன் நான். தமிழர்களை முஸ்லிம்களும் விரட்டினார்கள், மன்னிப்புக் கோரவில்லை என்பதை நிராகரிக்காமலே, முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்புத் தான் என்றும் நான் சொல்கிறேன். இதை மறுதலிக்க சம்பந்தமில்லாத கேள்விகளும் பதில்களும் ஏன் என்று தான் எனக்குப் புரியவில்லை!  

ஜஸ்டின் எனது பதிவு திரியை திசை மாற்றவல்ல பதியப்பட்டது. கேள்வி நியாயமாகப்பட்டது. மற்றும்படி இஸ்லாமிய சகோதரர்கள் யாழை விட்டு வெளியேற்றப்பட்டது ஒரு அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் முஸ்லீம்கள் திரும்ப யாழ்ப்பாண்த்தில் குடியேறாமைக்கு புலிகள் மீது இருந்த பயம் தான் காரணம்.அந்த நேரம் யாழ் அரச கட்டுப்பாட்டில் இருந்தாலும்,வன்னி புலிகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலியள் இருக்கேக்கை தானே மட்டக்களப்பில் எத்தனையோ கொடூரங்கள் முஸ்லீம்களால் நடந்தது, அங்க  பயமில்ல  இங்க பயந்திட்டினமாம். என்ன கிழக்கில் நடந்த கொடூரம் வடக்கில் நடக்கல எண்டு சிலபேர் குத்தி முறியினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.