Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன ஒப்புக் கொள்கின்றார் சரத் பொன்சேகா

Featured Replies

 

யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன ஒப்புக் கொள்கின்றார்:-


யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டுள்ளார்.


யுத்த சூன்ய வலயம் அமைந்திருந்த புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது கனரக ஆயுதங்கள் கொண்டுதாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


தவறுதலாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் ஓப்புக்கொண்டுள்ளார்.


யுத்த சூன்ய வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற அரசாங்கத்தின் வாதத்தை பொய்ப்பிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.


சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக யுத்த சூன்ய வலயம் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளைக்கொடி சம்பவம் மற்றும் இசைப்பிரியா விவகாரம் போன்றன தொடர்பில் நிச்சயமாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


பொதுமக்கள் 40000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமத்தும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கை நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.


யுத்த களத்தில் இடம்பெறும் சம்பவங்களை நேரடியாக கண்காணிப்பதற்கு தேவையான அதி நவீன கருவிகள் யுத்த காலத்தில் படையினரிடம் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச யுத்த சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களில் அடிப்படையில் யுத்தம் மேற்கொள்ளபபட்டதாகத் தெரிவித்துள்ளார்.


உத்தியோகப் பற்றற்ற ஆயுதக் குழுக்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும் வழிநடத்தினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125877/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகப் பற்றற்ற ஆயுதக்குழுக்கள் = இந்தியன் ஜவான்ஸ் :o

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வேண்டுமானால் ஐ நாவை ஏமாற்றலாம் .....

சுமந்திரன் ஐயாவின் உள்ளக முறிமுறைக்குள் சிக்கிதான் ஆகவேண்டும்.

என்ன என்ன ஆயுதம் ...என்ன என்ன திகதி என்று நேர நேர சுருக்கு கயிறு போடவே 
சுமந்திரன் ஐயா உள்ளுக்கு இருந்தே கிடங்கு கிண்டுறார். 

பக்கத்தில் என்றால் அப்படியே தள்ளிவிட வசதியாய் இருக்கும். 

அதுதான் தோத்தனாங்கள் .tw_smiley:

3 minutes ago, arjun said:

அதுதான் தோத்தனாங்கள் .tw_smiley:

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்! ... வாவ் ... கிட்ட நிண்டா ஒருக்கால் கட்டிக்கொஞ்ச வேண்டும் போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

சுத்து மாத்துகளுக்கும்,  ஒரு எல்லை உண்டு.
ஆனால்.... விடுதலைப் புலிகள்  போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே....
அதனைக் குழப்பி, திசை திருப்புவதில்... ஒட்டுக் குழுக்கள் பெரும் பங்கு வகித்தன.
30 வருடம் இந்தக் கிலுசு கெட்ட, குழுக்கள் செய்த... சகுனி வேலைகளையும், 
தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சமாளித்ததே.... பெரிய விடயம்.
இந்த, ஒட்டுக் குழுக்கள் மட்டும்.... இல்லாதிருந்து இருந்தால், என்றோ எமது பிரச்சினை  தீர்ந்து இருக்கும்.
அதே கோஸ்டி, இப்ப... "சம் சும்" கும்பலுக்கு, வக்காலத்து வாங்கிக் கொண்டு இருப்பது கேவலம்.
இதிலும் பார்க்க..... இவர்கள்,  xxöx zxy  qzdä   üxy  செய்வது நல்லது.

பிற்குறிப்பு: வெள்ளிக்கிழமை என்ற படியால், சிவப்பில் எழுதியது, சுய தணிக்கை செய்யப் பட்டுள்ளது.

முப்பது வருடங்கள் எப்படியோ புலிகளிடம் இருந்து சுழி ஓடி கடைசியில் ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்துவிட்டார்கள் தானே ?

அப்ப யார் கெட்டிகாரர்கள் .tw_astonished:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

முப்பது வருடங்கள் எப்படியோ புலிகளிடம் இருந்து சுழி ஓடி கடைசியில் ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்துவிட்டார்கள் தானே ?

அப்ப யார் கெட்டிகாரர்கள் .tw_astonished:

ஆப்பு...
யாருக்கு, யார் வைத்தது.....?
முழு ஈழத்தமிழனும்..... இன்று, ஆப்பில் அகப்படுள்ளான்.
புலிகள் போராடும் போது.... உதவி செய்யா விட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருந்திருந்தால்....
தமீழிழம் என்றோ... கிடைத்திருக்கும். அது.... புரிய இன்னும் கனகாலம் எடுக்கும்.

புலிகளின் தமிழ் ஈழத்தில் இருப்பதை விட சிங்களவனுடன் இலங்கைக்குள் இருக்கலாம் என்பதுதான் தமிழர்களின் முடிந்த முடிவு .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

புலிகளின் தமிழ் ஈழத்தில் இருப்பதை விட சிங்களவனுடன் இலங்கைக்குள் இருக்கலாம் என்பதுதான் தமிழர்களின் முடிந்த முடிவு .

ஏதாவது கருத்துக்கணிப்பு நடத்தி அறிந்து கொண்டீர்களா?

இப்படியான முடிவு எடுத்திருந்தால் ஏன் சமஸ்டி, தேசியம் என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்த கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்?

அடிமையாக வாழ்வதை பெருமையாக நினைக்கும் ஒரு சிலர்தான் சிங்களவனுடன் இலங்கைக்குள் வாழலாம் என்று முடிவெடுப்பார்கள். மற்றையவர்கள் எல்லாம் உரிமையோடு வாழவேண்டும் என்றுதான் இப்போதும் விரும்புகின்றார்கள்.

 

சமஸ்டி என்பது இலங்கைக்குள் தான் .

 

எடுத்ததற்கும் அடிமை ,தேசியம் என்று வீராப்பு பேச நான் வியாபாரி இல்லை .

எல்லா விடயங்களுக்கும் கருத்து கணிப்பு நடத்தித்தான் முடிவு எடுக்கவேண்டிய தேவை இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வசனத்தை எடுத்துவிடுவதுதான் இப்போது முகநூல் சுவரில் இருந்து கழிப்பறைச் சுவர் வரை நடக்கின்றது. சிங்களவனுடன் இலங்கைக்குள் இருக்கலாம் என்று முடிவெடுத்தவர்கள்கூட விரும்பி எடுத்திருக்கமாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற கொல்லவந்த சிங்களவர்களுடன் வாழ்வதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. 

எனது வசனத்தின் முதல் சொல்லை கவனிக்க தவறிவிட்டீர்கள் போல - புலிகளின் தமிழ் ஈழம் .

தமிழர்கள் பிள்ளையார் பிடிக்க போக  அதை குரங்காக்கி விட்டார்கள் புலிகள் .

போராட போன எந்தவொரு போராளியை கேட்டாலும் இன்று அதையே தான் சொல்லுகின்றார்கள் .

1 hour ago, arjun said:

எனது வசனத்தின் முதல் சொல்லை கவனிக்க தவறிவிட்டீர்கள் போல - புலிகளின் தமிழ் ஈழம் .

தமிழர்கள் பிள்ளையார் பிடிக்க போக  அதை குரங்காக்கி விட்டார்கள் புலிகள் .

போராட போன எந்தவொரு போராளியை கேட்டாலும் இன்று அதையே தான் சொல்லுகின்றார்கள் .

ஆமாங்க... யார் அந்தப் போராடப்போன போராளிகள்??? ப்ளீஸ் ஒருக்கால் சொல்லூங்கோ? ... 

... எத்தனைதரம் சொன்னாலும் ... ம்ம்ம் கூ ... ஏறவே மாட்டேங்குதே!

இன்று இரவு முழுக்க நாங்கள் ஃபிறீ! ... அந்த போராடப்போன போராளிகளாம் ... அவர்களின் கதை கேட்க ரெடி! ... இப்ப சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, arjun said:

எனது வசனத்தின் முதல் சொல்லை கவனிக்க தவறிவிட்டீர்கள் போல - புலிகளின் தமிழ் ஈழம் .

தமிழர்கள் பிள்ளையார் பிடிக்க போக  அதை குரங்காக்கி விட்டார்கள் புலிகள் .

போராட போன எந்தவொரு போராளியை கேட்டாலும் இன்று அதையே தான் சொல்லுகின்றார்கள் .

புலிகளின் தமிழீழத்தில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழமுடியும் என்றுதான் பல்லாயிரம் போராளிகள் தமது உயிர்களை அர்ப்பணித்தார்கள். ஆனால் இடையில் நுழைந்த வியாபாரிகளால் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு இறுதியில் தோற்கடிக்கப்பட்டது. அந்த வியாபாரிகள் இப்போதும் நன்றாகத்தான் யாவாரம் செய்கின்றார்க்ள்.

என்றுதான் ........ஆரம்பத்தில் பலர் நம்பினார்கள் .

இறுதியில்  வீட்டிற்கு ஒருவர் பின்னர் இருவர் பின்னர் எல்லாரும் கடைசியாக கட்டாய ஆள் பிடிப்பு .

தொடங்கிய போராட்டம் இப்படி போய் முடியவல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

இன்று...  வெள்ளிக்கிழமை, 13´ம் திகதி.
அர்ஜூனுக்கு.... கெட்ட நாள். 
அதனால் தான், வாயை... கொடுத்து, வாங்கிக் கட்டுகிறார். 
Smiley

11 minutes ago, arjun said:

என்றுதான் ........ஆரம்பத்தில் பலர் நம்பினார்கள் .

......

இறுதியில்  வீட்டிற்கு ஒருவர் பின்னர் இருவர் பின்னர் எல்லாரும் கடைசியாக கட்டாய ஆள் பிடிப்பு .

தொடங்கிய போராட்டம் இப்படி போய் முடியவல்ல .

சரி கட்டாய ஆட்சேர்பு இறுதி நாட்களில் ... நாமும் ஏற்கவில்லை அதை!

ஆனால் அண்ணோய் ... நீங்கள் முன் வரியில் கூறியது போல ......... "ஆரம்பத்தில் பலர் நம்பினார்கள்"....  அந்த ஆரம்ப நேரத்திலேயே/காலத்திலேயே ... ஏன் அதை குழப்பி அடிக்க முயற்சித்தீர்கள்?? சிங்களத்திடன் இணைந்து ஏன் காட்டிக்கூட்டிக் கொடுப்பதில் ஈடுபட்டீர்கள்? நீங்கள் கூறியது போல் பலரது நம்பிக்கையை ஏன் சிதறியடிக்க முயற்சித்தீர்கள்??? 

அர்ஜுன மல்லி, முதலில் உதுகளை விட்டுட்டு ... போராடப்போன போராளிகளின் ... கதைகளை சொல்லுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

புலிகளின் தமிழீழத்தில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழமுடியும் என்றுதான் பல்லாயிரம் போராளிகள் தமது உயிர்களை அர்ப்பணித்தார்கள். ஆனால் இடையில் நுழைந்த வியாபாரிகளால் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு இறுதியில் தோற்கடிக்கப்பட்டது. அந்த வியாபாரிகள் இப்போதும் நன்றாகத்தான் யாவாரம் செய்கின்றார்க்ள்.

இந்த இடையில் நுழைந்த வியாபாரிகளுக்கு எதிராக புலம்பெயர் உண்மைப் புலிப் போராளிகள் போராடமாட்டார்களா? போராடமாட்டார்கள் ஏனெனில் வியாபாரத்தின் முக்கிய பங்காளிகள் அவர்கள் தேனே! Sorry அவர்கள் தானே!

19 hours ago, வாலி said:

இந்த இடையில் நுழைந்த வியாபாரிகளுக்கு எதிராக புலம்பெயர் உண்மைப் புலிப் போராளிகள் போராடமாட்டார்களா? போராடமாட்டார்கள் ஏனெனில் வியாபாரத்தின் முக்கிய பங்காளிகள் அவர்கள் தேனே! Sorry அவர்கள் தானே!

அந்த வியாபாரிகளில் ஒரு முக்கிய  நபர் தான் சுமந்திரன். விடுதலைபோரட்டத்தின் தோல்வியால் மக்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை  வைத்து தனது வாழ்வை வளப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுகிறார்.

*******

Edited by நியானி
மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.