Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம்

Featured Replies

மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம்
 
 
மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
 
வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றியிருந்த தினேஷ் குணவர்த்தன எம்.பி, இலங்கையைப் போன்று அமெரிக்காவும் சீனாவிடம் மண்டியிடுவதாகக் கூறியிருந்தார். இதன்மூலம் கடந்த அரசாங்கத்தில் இலங்கை சீனாவிடம் மண்டியிட்டிருந்தது என்பது புலனாகிறது.
 
எனினும், நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் யாருக்கும் வளைந்து கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கையுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. மோல்டா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை. பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் தேடிவந்து சந்தித்திருந்தனர். எமது ஜனாதிபதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். அதேபோல வெளிநாடுகள் பிரதமரின் நலன் குறித்து விசாரிக்கின்றனர். சர்வதேச ரீதியில் இலங்கைக்கான வரவேற்பு கிடைத்துள்ளது.
 
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாம் சீனாவுடன் நட்புடன் இணைந்து செயற்பட்டுவருகிறோம் என்றார்.
 
இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் நபர்களின் தடைகளை நீக்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை சிலர் எதிர்த்து வருகின்றனர். புலிகளை பாதுகாப்பதற்கு நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக அவர்கள் எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். உயிரிழந்து பல வருடங்கள் சென்றவர்களின் பெயர்களை கூட புலிகள் எனக்கூறி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
 
இது இவ்விதமிருக்க, கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொள்ளைகள், கொலைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 725 முறைப்பாடுகளில் ராஜபக்ச குடும்பத்தினர் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொடர்புபட்டுள்ளனர்.
 
ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான ஒரு மோசடி குறித்த விசாரணையை நடத்துவதற்காக அதிகாரிகள் 6 அல்லது 7 பேர் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டி ஏற்படுகிறது. அதிகாரிகள் பற்றாக்குறை போன்ற காரணத்தால் விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார். 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, நவீனன் said:

எனினும், நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் யாருக்கும் வளைந்து கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கையுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. மோல்டா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை. பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் தேடிவந்து சந்தித்திருந்தனர். எமது ஜனாதிபதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். அதேபோல வெளிநாடுகள் பிரதமரின் நலன் குறித்து விசாரிக்கின்றனர். சர்வதேச ரீதியில் இலங்கைக்கான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐயோ...ஐயோ எனக்கு சந்தோசத்திலை கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை.....tw_astonished:

பின்னை என்ன மைத்திரி லேசுப்பட்ட ஆளே??????tw_yum:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம்
 
மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம்
 
அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் தேடிவந்து சந்தித்திருந்தனர்.
 

கடிக்க வருவதைக் கண்டால் கல்லைத் தேடுவதும், ஒட்டமெடுப்பதும்... tw_rage: 

காலில் விழுந்து, குழைந்தால் குனிந்து தடவமுயல்வதும்..... :love:

சிறியோர்முதல் பெரியோர்வரை இயல்பானதே. :grin:  

சிங்களவன் உண்மையில் துணிந்தவன் தான் .

கொலை பல செய்து போர் முடித்து தீர்வை வை அல்லது விசாரணை என்று  மேற்குலக நாடுகள் சொன்னபோது ஈரானிடம் போக ஒரு தில் வேண்டும் .

அதைவிட அல்சியராவில் மகிந்தா கோத்தா நீங்கள் செய்யாத கொலைகளா என்று மேற்குலகை பார்த்து கேட்டார்கள் .இந்தியாவை புகழ்ந்து பேசுவதுமாதிரி பேசி எத்தனை தடவை கைவிட்டுவிட்டார்கள் .

"எனது அரசியல் அனுபவம் அளவு ராஜீவின் வயதை விட அதிகம்" என்று இந்து பத்திரிகையில் பேட்டி கொடுக்க ஜே ஆர் ஆல் தான் முடியும் .

எம்மவர்கள் எல்லாவற்றிகும் நேரே ஆமாம் போட்டு விட்டு முதுகில் குத்தியதுதான் வரலாறு அதுதான் எவரும் எம்மை நம்புவதில்லை .tw_angry:

சிங்களவன் சாணக்கியனா இருக்கிறான். எங்கடதுகள் விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்குதுகள். 
சுமந்திரனை பார்த்து தூசணத்தால நாலு காவாலிகள் கத்தினதையே பெரிய சாதனையாக விசிலடிச்சு மகிழ்ந்த கூட்டமெல்லோ. 

13 minutes ago, தெனாலி said:

சிங்களவன் சாணக்கியனா இருக்கிறான். எங்கடதுகள் விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்குதுகள். 
சுமந்திரனை பார்த்து தூசணத்தால நாலு காவாலிகள் கத்தினதையே பெரிய சாதனையாக விசிலடிச்சு மகிழ்ந்த கூட்டமெல்லோ. 

அதற்கேற்ப தலைவர்களை போராட்டங்களை எம்மவர்கள் ஆதரிக்கும் போது எங்கள் இனம் உண்மையில் இதற்குதான் லாயக்கோ என்ற எண்ணம் ஏற்படுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

ம்கூம்.... நாங்களும் துணிஞ்ச ஆக்கள்தான் இந்தியாவின் பிரதமர் ஒருவரியே அங்கை வச்சே போட்டனாங்கள்! அண்டையோட பிள்ளையார் சுழி போட்டாச்சு எங்கட துணிவுக்கு!

1 hour ago, தெனாலி said:

சிங்களவன் சாணக்கியனா இருக்கிறான். எங்கடதுகள் விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்குதுகள். 
சுமந்திரனை பார்த்து தூசணத்தால நாலு காவாலிகள் கத்தினதையே பெரிய சாதனையாக விசிலடிச்சு மகிழ்ந்த கூட்டமெல்லோ. 

அட அந்த கோவத்தில் உங்கடை தலிவரு சிங்களவனுக்கு நயினாதீவை நாகதீப என்று சிங்களவனுக்கு கூவி கூவி வித்தவரோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, arjun said:

சிங்களவன் உண்மையில் துணிந்தவன் தான் .

கொலை பல செய்து போர் முடித்து தீர்வை வை அல்லது விசாரணை என்று  மேற்குலக நாடுகள் சொன்னபோது ஈரானிடம் போக ஒரு தில் வேண்டும் .

அதைவிட அல்சியராவில் மகிந்தா கோத்தா நீங்கள் செய்யாத கொலைகளா என்று மேற்குலகை பார்த்து கேட்டார்கள் .இந்தியாவை புகழ்ந்து பேசுவதுமாதிரி பேசி எத்தனை தடவை கைவிட்டுவிட்டார்கள் .

"எனது அரசியல் அனுபவம் அளவு ராஜீவின் வயதை விட அதிகம்" என்று இந்து பத்திரிகையில் பேட்டி கொடுக்க ஜே ஆர் ஆல் தான் முடியும் .

எம்மவர்கள் எல்லாவற்றிகும் நேரே ஆமாம் போட்டு விட்டு முதுகில் குத்தியதுதான் வரலாறு அதுதான் எவரும் எம்மை நம்புவதில்லை .tw_angry:

 

4 hours ago, தெனாலி said:

சிங்களவன் சாணக்கியனா இருக்கிறான். எங்கடதுகள் விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்குதுகள். 
சுமந்திரனை பார்த்து தூசணத்தால நாலு காவாலிகள் கத்தினதையே பெரிய சாதனையாக விசிலடிச்சு மகிழ்ந்த கூட்டமெல்லோ. 

வரலாற்று ரீதியாக சிங்கள ஆட்சியாளர்கள்  தமிழர்களுக்கு செய்ததெல்லாம் பாவங்களும் அட்டூழியங்களும் அழிப்புகளும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது ஒட்டுமொத்த சிங்கள பொதுமக்களுக்கும் தெரியும். ஏன் சர்வதேசத்திற்கும் தெரியும். உங்களுக்கும் தெரியுமென நினைக்கின்றேன்.
சரி விசயத்துக்கு வருவம் என்ன.....

இவ்வளவு கொடூரங்களை செய்த சிங்கள அரசுக்கு எதிராக எந்தவொரு சிங்கள பொது மகனும் தன் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வீதிக்கு இறங்கவில்லை.அல்லது அவை எடுபடவில்லை. ஒரு சிங்களவனும் தன் இராணுவத்தை காட்டிக்கொடுக்கவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தன் இனத்தின் ஒருமைப்பாட்டில் குறியாக இருக்கின்றான்.சிங்களவன் தமிழர்களை போற்றுவதுமில்லை. பாராட்டுவதுமில்லை.
தன் இனத்தை மட்டம் தட்டுவதுமில்லை.நாட்டில் இருக்கும் சிங்களவனை விட புலம் பெயர்ந்த சிங்களவன் இன்னும் ஒற்றுமையாக இருக்கின்றான். 
எங்கடையளும் இருக்குதுகளே!!!!!! 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் முட்டாள் தனம் + ஒட்டுக்குழுக்களின் சொந்த இனத்தை கருவறுக்க காட்டிக்கொடுப்புக் கீழ்புத்தி + சம் சும் கும்பலின் சிங்கள எஜமான விசுவாசம் = சிங்களவனின் சாணக்கியம். tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.