Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

160 பள்ளிவாசல்களை மூடுகிறது பிரான்ஸ்

Featured Replies

160 பள்ளிவாசல்களை மூடுகிறது பிரான்ஸ்
 

article_1449141610-g3dfox6r.jpgநவம்பர் 13ஆம் திகதி பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸிலுள்ள ஏறத்தாழ 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படைவாத, தீவிரவாதக் கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பும் பள்ளிவாசல்களும் அனுமதிபெறாத பள்ளிவாசல்களுமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான இமாம்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் ஹஸன் எல் அலோவுய், இந்தத் தகவலை வெளியிட்டார்.

உள்விவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில், 100 தொடக்கம் 160 வரையிலான பள்ளிவாசல்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதிப்பத்திரமின்றி இயங்குதல், வெறுப்பைப் பரப்புதல், ஏனைய முஸ்லிம்களை மத வெறுப்பாளர்களெனக் குற்றஞ்சாட்டுதல் ஆகியவற்றின் காரணமாகவே, இவை மூடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய முஸ்லிம்களை மத வெறுப்பாளர்கள் எனக் குற்றஞ்சாட்டுவது, பிரான்ஸில் அதிகரித்துள்ளதோடு, பிரிவினைக்கும் பாகுபாட்டுக்குமாகப் பயன்படுத்தப்படுகிறது.

'இவ்வாறான பேச்சுகள், இஸ்லாமிய நாடுகளில் கூட அனுமதிக்கப்படக்கூடாது. பிரான்ஸ் போன்ற மதச்சார்பற்ற நாடுகளைப் பற்றித் தெரிவிக்கவே தேவையில்லை" என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே, 3 பள்ளிவாசல்களை ஏற்கெனவே மூடியுள்ளதாகவும், அவை மூடப்படும்போது, றிவோல்வர்கள், ஜிஹாதி ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/160563/-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%B8-#sthash.ahhAKro5.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொடக்கம்.  நாங்கள் இஸ்லாம் ஆகமத்துக்கு எதிரானவர்கள் அல்ல பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள். இதன் ஓரங்கமாக ரவுடிக் கும்பல்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மூடப்படும்போது, றிவோல்வர்கள், ஜிஹாதி ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

றம்புக்வெல சொன்ன மாதிரி கிடக்கு. நான் நினைக்கிறேன் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை பிரான்ஸ் மேலும் சம்பாதிக்கும் என. பிரான்ஸில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நாங்கள் எங்கள் பாதுகாப்புக்குச் செய்தா.. இனச்சுத்திகரிப்பு.. அவையள்.. பெரியாக்கள்.. காதும்காதும் வைச்சாப்போல செய்தால்.. நாட்டின் பாதுகாப்பு. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

றம்புக்வெல சொன்ன மாதிரி கிடக்கு. நான் நினைக்கிறேன் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை பிரான்ஸ் மேலும் சம்பாதிக்கும் என. பிரான்ஸில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 உலகத்தை ஆளுதல் என்பதற்கான ஏற்பாடுகள் தான்  கூடுவதும் பேசுவதும் 

ஆட்களை இளைஞரைத்திரட்டி அனுப்புவதும் தான் பள்ளிவாசல்களில் நடப்பதாக சாதாரண பிரெஞ்சு மக்கள் நம்புகிறார்கள்

நானும் அப்படித்தான் பார்த்திருக்கின்றேன்

நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, விசுகு said:

 உலகத்தை ஆளுதல் என்பதற்கான ஏற்பாடுகள் தான்  கூடுவதும் பேசுவதும் 

ஆட்களை இளைஞரைத்திரட்டி அனுப்புவதும் தான் பள்ளிவாசல்களில் நடப்பதாக சாதாரண பிரெஞ்சு மக்கள் நம்புகிறார்கள்

நானும் அப்படித்தான் பார்த்திருக்கின்றேன்

நம்புகின்றேன்

உண்மையும் அதுதான்.

இது எல்லாம் மேற்குலக நாடுகள் முற்பகல் செய்த விளைவுகள் .

பலருக்கு தாங்கள் ஆட்களை திரட்டி அனுப்பியது தான்  நினைவிற்கு வரும் ஆனால் ஒரு சிறு பகுதியே அதை செய்கின்றார்கள் .

மேற்கு உலகிற்கு அது நன்கு தெரியும் .

கனடாவிற்கு சிரியா அகதிகள் தனி நபர்கள் ஸ்பொன்சர் மூலம் வந்து இறங்க தொடங்கிவிட்டார்கள் .பல ஸ்போன்சர்கள் வெள்ளைகள் .

ஒரு இனத்தை ஒரு மதம் சார்ந்தவர்கள் எல்லோரையும் ஒரு கூடையில் போட முடியாது போடவும் கூடாது .

ஓடி வந்து அகதி அந்தஸ்து கேட்டவர்கள் தான் அடுத்து வர இருப்பவனுக்கு முதல் எதிரி .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

ஒரு இனத்தை ஒரு மதம் சார்ந்தவர்கள் எல்லோரையும் ஒரு கூடையில் போட முடியாது போடவும் கூடாது .

 

ஓமோம்

நீங்க சிந்திக்கவேண்டிய முக்கியமான விடயம் தான்

புலிகள்

புலிகளின்  ஆதரவாளர்கள் அனைவரும்

வியாபாரிகள்

கள்ளர்

சுயநலவாதிகள் என்று எழுதுபவர் தாங்கள்......

ஒரு இனத்தை ,ஒரு மதத்தை என்று தான் எழுதினேன் ,

புலிகள் எல்லோரும் ஒரே கூடைதான் .ஒரு இனத்தின் ஒரு கூறு அவர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.