Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு பேரவை சதியா?

Featured Replies

தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கப்போகும் தீர்வுத்திட்ட வரைபை அங்கீகரிக்கப்போவது யார்? அதை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவது யார்? தமிழர்களின் உரிமைகளுக்காக – அவர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீண்ட காலமாகப் போராடிவரும் வடக்கு, கிழக்குத் தமிழரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி பேரவையின் தீர்வு யோசனைகளை அரசோ அல்லது சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளுமா போன்ற கேள்விகள் எழுகின்றன.

…………………….

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் தளம் இன்று நாளுக்குநாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் உதயமே இதற்குக் காரணம். அதன் உதயம் – அதன் செயற்பாடுகள் தமிழர் அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்துகின்றது. அதன் செயற்பாடுகள் எல்லாம் வேகமாக இருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக்கொண்டு நிற்பவர்களும் அரசியலில் மக்கள் செல்வாக்கை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் பேரவையின் நோக்கம் ஒன்றிணைந்த தமிழரின் அரசியல் போராட்டத்தில் பிளவை ஏற்படுத்துவதா என்ற கேள்வி அந்த அமைப்பு தோன்றியது முதல் முன்வைக்கப்படுகின்றது.
கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இந்தப் பேரவை யாழில் உதயமானது. அதன் இணைத் தலைவர்களுள் ஒருவராக வடக்கு முதலமைச்சரும் அவரை முதலமைச்சராக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முட்டிக்கொண்டு நிற்பவருமான சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பேரவையின் உருவாக்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அதிர்ச்சியை உருவாக்கியதால், அதைக் கலைத்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்குமிடையில் கொழும்பில் கடந்த மாதம் 25ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பேரவை முடிவுக்குவரும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிறகுதான் அதன் ஆட்டமே ஆரம்பமானது.
இந்தச் சந்திப்பு இடம்பெற்று இரண்டு நாட்களில் கடந்த மாதம் 27ஆம் திகதி பேரவையின் இரண்டாவது கூட்டம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது. அதில் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்தப் பேரவை இப்போது தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று மாதங்களுக்குள் அரசியல்தீர்வு வரைபு ஒன்த் தயாரித்து வெளியிடவுள்ளதாக அந்தப் பேரவை தெரிவித்துள்ளது.
இந்தப் பேரவை தயாரிக்கப்போகும் தீர்வுத்திட்ட வரைபை அங்கீகரிக்கப்போவது யார்? அதை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவது யார்? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அதுமாத்திரமன்றி, தமிழர்களின் உரிமைகளுக்காக – அவர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீண்ட காலமாகப் போராடிவரும் வடக்கு, கிழக்குத் தமிழரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி பேரவையின் தீர்வு யோசனைகளை அரசோ அல்லது சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அதன் செயற்பாடுகள் இப்போது குறுகிய வட்டத்துக்குள் இல்லை. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இரண்டு பிரதான இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கி அந்த இரண்டு இனங்களுக்கும் திருப்திப்படும் வகையிலான வரைபு ஒன்த் தயாரிப்பதற்கு கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது என்று அதன் செயற்பாடுகளிலிருந்து தெரிகின்றது. அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளமை இதற்குச் சான்றாகும்.
இந்திய அரசும்கூட இந்த இரண்டு இனங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வையே விரும்புகின்றது. 2014ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோது இந்திய அரசு மேற்படி நிலைப்பாட்டை கூட்டமைப்பிடம் தெரிவித்தது. கூட்டமைப்பு அதை ஏற்றுக்கொண்டு அதன்படியே செயற்படத் தொடங்கியது.
மேற்படி நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான ஓர் ஆரோக்கியமான நல்ல பயணத்தைக் குழப்பும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என் சொல்லவேண்டும். ஒரு சுமுகமான பாதையில் போய்க்கொண்டிருக்கும் – இரண்டு சிறுபான்மை இனங்களையும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் கூட்டமைப்புக்குத் தலையிடியைக் கொடுப்பதாகவே பேரவையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்தப் பேரவை கூட்டமைப்புக்கு எதிரானது அல்ல என்று சொல்லப்படுகின்றது. ஆனால், அந்தப் பேரவையில் உள்ளவர்கள் எல்லாம் கூட்டமைப்புடன் முரண்பட்டுக்கொண்டிருப்பவர்கள். கூட்டமைப்புக்கு உதவுவதுதான் பேரவையின் நோக்கம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியாயின், பேரவையின் உதயத்திற்கு கூட்டமைப்பு அனுமதி வழங்கியிருக்கவேண்டும். ஆனால், அப்படி அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. கூட்டமைப்புடன் முரண்பட்டு நிற்பவர்களைத் தவிர, கூட்டமைப்பின் சார்பில் எவரும் இந்தப் பேரவையில் இல்லை.
நிலைமை இவ்வாறிருக்கும்போது, இந்தப் பேரவை கூட்டமைப்புக்கு எதிரானது அல்ல என்றும், கூட்டமைப்புக்கு உதவுவதே இதன் நோக்கம் என்றும் சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? கூட்டமைப்புக்கு உதவுவதற்குத் தனியாக ஓர் அமைப்புத் தொடங்கவேண்டுமா? கூட்டமைப்புடன் இணைந்துகொண்டே அந்த உதவியை வழங்கலாம்தானே.
முக்கயமான ஒரு கட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் பயணம் இப்போது சென்றுகொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான நுழைவாயிலில் இப்போது இந்த இரண்டு சமூகங்களின் அரசியல் பயணமும் ஒன்றிணைந்துபோய் நிற்கின்றது. இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து அந்தப் பலத்தின் மூலம்தான் அரசியல் தீர்வுக்கான நுழைவாயில் கதவைத் திறக்கமுடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இது ஓர் அரிய சந்தர்ப்பம். இதை நாம் இழந்துவிடக் கூடாது.
இந்தச் சந்தர்ப்பத்தை நாம் இழந்தால் இரண்டு சமூகங்களும் மீண்டும் முதலில் இருந்தே அரசியல் பயணத்தைத் தொடங்கவேண்டி ஏற்படும். ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றிணைந்து நிற்பதே புத்திசாலித்தனம்.
அரசியல் தீர்வைப் பெறுவதற்கான இறுதிக் கட்டப் பயணத்தில் – அந்த நுழைவாயிலில் நின்றுகொண்டு நாம் முரண்பட்டால் அது எதிரிகளுக்கு – பேரினவாதிகளுக்கு – அரசியல் தீர்வு கிடைப்பதைத் தடுக்க நினைப்பவர்களுக்கு சாதகமாகிப் போய்விடும்.
ஆகவே, இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பேரவை மாத்திரமன்றி, அனைவரும் சிந்தித்துச் செயற்படவேண்டும். இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிட்டால் அப்போது அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் அமைத்து மாற்று அரசியல் தளம் ஒன் உருவாக்குவது பற்றி யோசிக்கலாம். ஆனால், இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு அது பொருத்தமற்றது.

http://sudaroli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இது அரசியல் தீர்வு முயற்சிகளைக் குழப்பும் சதிகாரர்களின் பேரவையாகும். இதனைத்தான் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று நாகரிகமாகத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் கஜே குழுவினர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறி மகிந்தவுக்கு தமது ஆதரவை நல்கினர், அதுபோலவே விக்கியின் சம்பந்தி வாசு மகிந்தவின் தீவிர விசுவாசி எனவே மகிந்தவை ஆதரிக்கவேண்டிய கடப்பாடு விக்கிக்கு இருக்கின்றது. மேலும் தனது முதலமைச்சர் பதவியினை விக்கி அப்போதைய அதிபர் மகிந்தமுன்னிலையில் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அதேவேளை சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி உள்ளிட்ட ஒரு குழுவினர் முள்ளிவாய்க்காலில் வைத்து பதவியேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று விக்கி அந்தக் குழுவினரிடம் இணைந்து முள்ளிவாய்க்காலில் பதவியேற்றிருப்பாரானால் நம்பியிருக்கலாம். எனவே மகிந்த சார்புக் குழுக்கள் அரசியல் தீர்வு முயற்சியைக் குழப்புமுகமாக இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் மக்களால் நிராகரிகப்பட்ட அரசியல்வாதிகளும் சேர்ந்திருக்கின்றார்கள்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தை தேடிப்பிடியுங்கள். மாமா, மச்சான், சம்பந்தி. கட்டினவழி, கட்டாதவழி. நிறைகுடம் தளம்பாது, குறைகுடம் தான் தளம்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா

அவன் துரோகி

இவன் உரிமையில்லாதவன்

இவன் பேச தகுதியில்லாதவன்..

எல்லோருக்குமான உரிமை குறித்து

ஒருவர் பேசட்டும் என்பது தான் ஆபத்தானது...

 

நேற்றுவரை இந்த சிவா பசுபதியர் 

தமிழருக்கெதிரான சிறீலங்காச்சட்டங்களை இயற்றியவர்

இன்று ........???

போங்க

இந்த வாந்திகளை முதலில் நிறுத்துங்க...

மகிந்தா இப்போ முத்திரை சேர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பலர் நம்புகின்றார்கள் .:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

நிச்சயமாக இது அரசியல் தீர்வு முயற்சிகளைக் குழப்பும் சதிகாரர்களின் பேரவையாகும். இதனைத்தான் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று நாகரிகமாகத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் கஜே குழுவினர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறி மகிந்தவுக்கு தமது ஆதரவை நல்கினர், அதுபோலவே விக்கியின் சம்பந்தி வாசு மகிந்தவின் தீவிர விசுவாசி எனவே மகிந்தவை ஆதரிக்கவேண்டிய கடப்பாடு விக்கிக்கு இருக்கின்றது. மேலும் தனது முதலமைச்சர் பதவியினை விக்கி அப்போதைய அதிபர் மகிந்தமுன்னிலையில் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அதேவேளை சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி உள்ளிட்ட ஒரு குழுவினர் முள்ளிவாய்க்காலில் வைத்து பதவியேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று விக்கி அந்தக் குழுவினரிடம் இணைந்து முள்ளிவாய்க்காலில் பதவியேற்றிருப்பாரானால் நம்பியிருக்கலாம். எனவே மகிந்த சார்புக் குழுக்கள் அரசியல் தீர்வு முயற்சியைக் குழப்புமுகமாக இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் மக்களால் நிராகரிகப்பட்ட அரசியல்வாதிகளும் சேர்ந்திருக்கின்றார்கள்!

இவ்வளவு காலமும் நரி வேலை செய்து எங்கட இனத்தை அழிச்ச ரணிலோட சேர்ந்து சம்பந்தர் சிங்கக்கொடி ஆட்டுறது, சம்சும் சுதந்திரதின விழாவில கலந்துகொண்டு கூத்தடிக்கிறது எல்லாம் அரசியல் சாணக்கியம் , விக்கி ஐயா மகிந்த முன்நிலையில பதவிப்பிரமாணம் செய்யிறது மட்டும் துரோகம். இதுகளிண்ட அலப்பரை தாங்க முடியேல்லை.

2 hours ago, arjun said:

மகிந்தா இப்போ முத்திரை சேர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பலர் நம்புகின்றார்கள் .:unsure:

இல்லை கடற்கரையில சிப்பி சோகி பொறுக்கிக்கொண்டு இருக்கிறார் எண்டெல்லோ நினைச்சன்.

3 hours ago, விசுகு said:

சும்மா

அவன் துரோகி

இவன் உரிமையில்லாதவன்

இவன் பேச தகுதியில்லாதவன்..

எல்லோருக்குமான உரிமை குறித்து

ஒருவர் பேசட்டும் என்பது தான் ஆபத்தானது...

 

நேற்றுவரை இந்த சிவா பசுபதியர் 

தமிழருக்கெதிரான சிறீலங்காச்சட்டங்களை இயற்றியவர்

இன்று ........???

போங்க

இந்த வாந்திகளை முதலில் நிறுத்துங்க...

விடுங்கோ விசுகு இந்த ஜால்ரா கூட்டங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
பானையில இருக்கிறதுதானே அகப்பையில வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.