Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி

தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:-


தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை முன்னாள் சட்ட மா அதிபரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த குழுவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் சிவா பசுபதி, கடந்த வாரம் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

தொலைபேசி மூலம் விக்னேஸ்வரன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார் எனவும், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது என சிவா பசுபதி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மிகத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி கேள்வி எழுவதாகத் சிவா பசுபதி தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் தமிழர்களின் ஐக்கியம் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு விக்னேஸ்வரன் தொலைபேசியில் கோரியதாகவும் அதற்கு திட்டவட்டமாக பசுபமதி மறுப்பு வெளியிட்டதாகவும் கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


1985ம் ஆண்டு திம்பு தீர்மானத்தை மையமாகக் கொண்டு அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க சிவா பசுபதியின் உதவியை பெற்றுக்கொள்ள விக்னேஸ்வரன் விரும்புகின்றார்.

2003ம் ஆண்டில் சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய இடைக்கால சுயாட்சி நிர்வாக முறைமை குறித்த யோசனையை தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் சிவா பசுபதி உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் வடக்கும் கிழக்கும் கொழும்பிலிருந்து பிளவடைந்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127523/language/ta-IN/article.aspx

"தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மிகத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி கேள்வி எழுவதாகத் சிவா பசுபதி தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் தமிழர்களின் ஐக்கியம் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். "

தீர்வை குழப்ப முயலும் பேரவைக்கு விழுந்த மரண அடி .

  • கருத்துக்கள உறவுகள்

வில்கியின் அழைப்பை ஏற்று வந்தார் என்ற ஊடக விபசாரிகளின் பொய்ச் செய்தியின்பால் உந்தப்பட்டு சிவா பசுபதி அவர்களை தவறாக விமர்சித்தமைக்காக சிவா பசுபதி அவர்களிடம் வாலி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்

விக்கியின் முகத்திரை கிழிகின்றது! அந்தோ பாவம் அவர்கள் இலவுகாத்த கிளிகள். **************!

Edited by நியானி
சீண்டும் வசனம் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மிகத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி கேள்வி எழுவதாகத் சிவா பசுபதி தெரிவித்துள்ளார்.

 

இதே கவலை எல்லோருக்குமுண்டு

இப்போ சிக்கலே

மூடிய கதவுகளுக்குள் அரசியல்வாதிகளை நம்பமுடியாது என்பதும்

இதன் வரலாற்று அனுபவமும் தான்.

அதற்கு ஒரு சிலர் வேறு வழிகளில் முயற்ச்சிப்பது தப்பல்ல

எல்லோரும் ஒருவருக்கு பின்னால் என்பது ஐனநாயகத்தில் சாத்தியமில்லை....

அதேநேரம் பசுபதி அவர்களின் கருத்தை மதிக்கணும்

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பண்ணையாருக்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பதே தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர உதவும் என்பதை உணர்ந்தால் பேரவையின் தேவையும் வந்திருக்காது.<_<

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தி வந்திருக்கு என்ற உடனே இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது.இந்தியாவுக்கு தமிழ்மக்கள் பேரவை உருவானதில் கெhஞ்சம் கூட விருப்பம் இல்லை. விக்கி ஐயாவைச் சமாதhனப்படுத்தி தன் சொல் கேட்கும் தலைமைப் பீடத்துடன் அனுசரித்துப் போகுமாறு பல முறை விக்கி ஐயாவைக் கேட்டுள்ளார்கள். அவசரப்பட்டுக் கருத்து எழுத முன் கொஞசம்'  பொறுப்போம்.மேலும் பிரச்சனை தீரப் போவதாக அவர் கூறியிருப்பதாகக்  கூறுவது அவர் எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அப்படிக் கூறுவார். அடுத்து அவர் ஒருவர் இல்லாவிட்டால் தீர்வுத்திட்ட வரைபை  எழுத தமிழினத்தில் யாருமே இல்லாதது போல் சொல்வது நினைப்பது மடமை.தீர்வுத்திட்ட வரைபை தமிழ்மக்கள் பேரவை நச்சயம் வெகு விரைவில் வெளிவிடும்.

 

விக்னேஸ்வரனின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி

JAN 04, 2016 | 13:10by கார்வண்ணன்in செய்திகள்

Siva-Pasupathyதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார்.

சிவா பசுபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தனிப்பட்ட பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உபகுழுவில் தனது பிரதிநிதியாக பங்கேற்கும்படி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தொலைபேசி மூலம் சிவா பசுபதியிடம், வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால்,சிறிலங்காவுக்குள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க தீர்வு ஒன்றைக் காணும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறும் போது, தமிழ் மக்கள் பேரவை போன்று தனியானதொரு உருவாக்கம் பொருத்தமற்றது என்று தாம் நினைப்பதாக, முதலமைச்சரிடம் சிவா பசுபதி வெளிப்படையாக கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் தமிழர்களின் ஒற்றுமையே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விக்னேஸ்வரன் விடாப்படியாக அவரை வலியுறுத்திய போதிலும், சிவாபசுபதி தனது முடிவில் தளரவில்லை.

இறுதியாக விக்னேஸ்வரன் கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவா பசுபதியின் இந்த முடிவு விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா பசுபதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தார் என்றும், அரசியல் நோக்கமற்ற, முற்றிலும் தனிப்பட்ட பயணமாகவே வந்திருந்தார் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
சிவா பசுபதி தொடர்பில் விஷமத்தனமான செய்திகள்: விக்னேஸ்வரன் சாடல்
[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 10:08.57 AM GMT ]
cm_pc.jpg

தமிழ் மக்கள் பேரவையில் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உப குழுவில் பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பிலும், அதற்கு அவர் பதில் அளித்தமை தொடர்பிலும் வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு நீங்கள் விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே இது உண்மையா என்று விக்னேஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை இதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் கூறினார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தற்போது யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு தங்கி உள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்கள்.

இந்த நிலையிலேயே முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியை தனது பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

தற்போது 82 வயதுடைய சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 � 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆவர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக இவர் பணியாற்றியிருந்தார்.

இதேவேளை, விடுதலிப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையைஇந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியை பயின்ற சிவா பசுபதி, சிலோன் பல்கலைக்கழகத்தில் தனது சட்ட பட்டப் படிப்பை பூர்த்தி செய்து பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/show-RUmuyBTZSWjt2H.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.