Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது

Featured Replies

ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது.

வரதர் ஐயா! போய் வாருங்கள்,

நீங்கள் மீண்டும் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற சுயநல ஆசையுடன்

என் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு.

http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் பெயரை ஆழமாக முத்திரையிட்டவர் வரதர் அவர்கள். இதனைவிட ஆனந்தம், வெள்ளி, புதினம், தேன்மொழி, அறிவுக்களஞ்சியம் போன்ற சஞ்சிகைகளை காலத்துக்கு காலம் வெளியிட்டு தன் சுவடுகளை இதழியல் துறையில் ஆழப்பதித்தவர்.

ஈழத்து இலக்கி உலகிலே தனது இருப்பை ஆழ அகல பதிந்து இலங்கை அரசின் இலக்கிய வாதிகளுக்கான அதியுயர் விருதான சாகித்திய இரத்தினம் விருதை முதன்முதல் பெற்ற தமிழ் இலக்கியவாதியாகவும் இவர் திகழ்கின்றார்.

இதனைவிட பிரச்சனைகள் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் எரிகின்றது, மற்றும் 24 மணி நேரம் போன்ற நூல்களை வெளியிட்டு துணிச்சலுடன் செயலாற்றிய ஒரு பதிப்பாசிரியர், நூல்வெளியீட்டாளர்.

முதன்முதலாக ஈழத்தில் கவிதைக்கென சஞ்சிகை நடாத்திய புரட்சிவாதியும் இவரே

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக

வரதர் மாமாவுக்கு அஞ்சலிகள்,

யாழில் பரவிய காச்சலால் அவதியுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் காலமாகி உள்ளார்.

ஈழத்தின் முக்கிய இலக்கிய முன் நோடி களில் ஒருவரான இவர் ஆள்ந்த மனித நேயப் பண்புகளை உடையவர்.சிறு வயதில் எமக்கு கதை சொல்லி சித்திரம் வரையக் கற்றுத் தந்தவர்.இந்தமாதம் பல உயர்ந்த மனிதர்களின் இழப்புக்கள் மனதைக் கவலை கொள்ள வைக்கிறது.

இது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே! அவரின் அறிவுகளஞ்சியத்தை படித்து இருக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடய பிரார்த்திக்கிறேன்

ஈழத்து பிரபல எழுத்தாளர் வரதர் காலமானார்.

ஈழத்து இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளரும் நூல் வெளியீட்டாளருமான வரதர் என அழைக்கப்படும் சண்முகம் வரதராசன் இன்று தமது 82 வயதில் யாழ்ப்பாண நகரின் மானிப்பாய் வீதியில் உள்ள தமது வீட்டில் காலமானார்.

1924 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் நீண்டகாலமாக இலக்கியதுறையிலும் நூல் வெளியீட்டிலும் பங்காற்றியிருந்தார்.

www.pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி கானாபிரபா எழுதிய ஆக்கத்தினைப்பார்க்க http://www.yarl.com/forum3/index.php?showtopic=16923

வரதர் அய்யாவைப்பற்றி பல தகவல்களினைத் தந்தமைக்கு நன்றிகள் கானா பிரபா. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துலகிற்கு அளப்பரிய சேவைகள் புரிந்த வரதருக்கு எம் அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரிசையில் வரதர் எனப்படும் சண்முகம் வரதராசன் ஈழகேசரி (1930-1958)யிற் தான் முதலில் எழுதத் தொடங்கினார். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.

வரதரின் இறப்பு

ஈழத்து

இலக்கியத்துறைக்கு

பேரிழப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் வரதனுக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துக்கலை என்பது பலருக்குக் கைகூடினாலும் கவிதை என்பது சிலருக்குத்தான் கைகூடும். எழுத்துலகிலே பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற வரதரின் மறைவு ஈடுசெய்யமுடியாததொன்று. தமிழிலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக தலை சாய்த்து வணங்கி எனது அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் தன் எழுத்துக்களால் காலடிபதித்த திரு தி.ச வரதராசன் ஜாயவுக்கு என் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.