Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க:-

 

 

அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க:-



அரசாங்கத்தின் அமைச்சர்கள் கட்டியிருக்கும் மலசல கூடங்கள்  மாதிரியேனும் கூட தமிழ் மக்களின் வீடுகள் இல்லை என ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். 

இன்று புதன் கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  இடம்பெற்ற தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் உரையாற்றும்  போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்
அமைச்சர்களின் மலசலங்கள் கூட மிக தரமாக காணப்படுகிறது சிலரின் மலசல கூடங்களுக்கு ஏசி கூட பொருத்தி இருக்கிறார்கள், விமல் வீரவன்வசவின் மாதாந்த மின் கட்டணம் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா, ஹெகலிய ரம்புக்வெலவின் மாதாந்த வீட்டு மின் கட்டணம் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் ரூபா.
2Q==
ஆனால்  மீள்குடியேறிய மக்களுக்கு  அரசு வழங்கியது பத்து தகரமும், 25000.00 ரூபா பணமும் இதில் அவர்கள் எப்படி வீடுகளை அமைத்து வாழ முடியும்? எனக்கேள்வி எழுப்பிய அவர், காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற  அரசுக்கள்  தங்களுடைய நலன்களையும், பொருளாதார பலத்தையும் பெருக்கிக் கொண்டார்களே தவிர மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்ததாக  இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும்  வடக்கிலும் தெற்கிலும் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றவர்கள்  இனவாதம் பேசுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இவர்களோ இவர்களது பிள்ளைகளோ எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிக்கப்பட்டதும், இறந்ததும் நாட்டின் அப்பாவி மக்களுடைய பிள்ளைகளே. கடந்த 68 ஆண்டுகளாக மக்களால் மாறி மாறி இரண்டு கட்சிகளே  ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி ஜேவிபி கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130108/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்? :cool:

சொல்ல மாட்டன் :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சொல்ல மாட்டன் :grin:

சொல்லிட்டா விடமாட்டன்....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 எலெக்சன் ஏதாவது கிட்டடியில வாறஅசுமாத்தம் ஏதும்  தெரியுதோ தெரியல்லை. அதைத்தான் சொல்ல வாறாரோ யார் கண்டார்.

12 hours ago, குமாரசாமி said:

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்? :cool:

 

12 hours ago, Nathamuni said:

சொல்ல மாட்டன் :grin:

பிளீஸ் தனிமடலில் எனக்காவது சொல்லுங்கோவன். சத்தியமா நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்? :cool:

அப்பாவி தமிழனும் ,அப்பாவி சிங்களவ‌னும் சேர்ந்து புரட்சி செய்து மற்றகோஸ்டியை வீட்டுக்கு அனுப்பவேணுமாம்.....தமிழ் இளைஞர்கள் தனிய‌ புரட்சி செய்து அழிஞ்சு போயிட்டினம்,சிங்கள இளைஞர்களும் தனிய புரட்சி செய்து அழிஞ்சு போயிட்டினம் இனி  இருவரும் சேர்ந்து புரட்சி செய்து அழிவோம் என்று சொல்லுறார்tw_angry:

2 hours ago, ஜீவன் சிவா said:

 

பிளீஸ் தனிமடலில் எனக்காவது சொல்லுங்கோவன். சத்தியமா நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்.

நாதமுனி தனிமடல் தகவலுக்கு நன்றி.:grin:

அட அதுவா விஷயம்.:grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.