Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ம.ந.கூட்டணியில் வைகோ, ஜி.ஆர். தேர்தல் போட்டியில் இல்லை! - யாருக்கு எத்தனை இடங்கள்?

Featured Replies

ம.ந.கூட்டணியில் வைகோ, ஜி.ஆர். தேர்தல் போட்டியில் இல்லை! - யாருக்கு எத்தனை இடங்கள்?

 
 

தேமுதிகவுக்கு 124  தொகுதிகள் போக, 110 தொகுதிகள் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக தவிர மற்ற நால்வருக்கும் சம உரிமை என்றளவில் 110 தொகுதிகளை கணக்கிட்டு பிரித்துக் கொடுத்தால், மூன்று கட்சிக்கு தலா 27 தொகுதிகளும்,  ஏதாவது ஒரு கட்சிக்கு 29 தொகுதிகளும் கொடுக்க வேண்டும்.

dmdk600.jpg

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியைப் பொறுத்தவரையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்றுதான் முடியும். இதனால், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜி. ராமகிருஷ்ணன், தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறிதான்.

சி.பி.எம்.மின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் பீம்ராவ். இவருக்கு மதுரவாயல் தொகுதி ஒதுக்கப்பட்டது. தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்து, பாக்கியம் வசம் ஒப்படைத்து விட்டு தேர்தலை சந்தித்தார், எம்.எல்.ஏ.வும் ஆனார்.

வைகோவின் முடிவு என்ன ?

ம.ந.கூ. அணியில் இருக்கும் இன்னொரு தலைவரான மதிமுகவின் வைகோவும் 'தளபதி' யாக இருந்து கூட்டணியை வழி நடத்துகிறேன் என்று ம.ந.கூ. - தேமுதிகவில்  ஐக்கியமான அதே மேடையிலேயே தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்து விட்டார். இப்போது தலைவர்களில் மிச்சமிருப்பது சி.பி.ஐ.யின் முத்தரசனும், விசிகேவின் திருமாவும்தான். சிபிஎம்மின் அதே பாலிசிதான் சிபிஐக்கும் பொருந்தி வரும் என்கிற நிலை இருந்தால் முத்தரசன் தேர்தல் களம் காண்பதும் இயலாத ஒன்று.

திருமாவும், விஜயகாந்தும்

மொத்தத்தில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தும், சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவும் மட்டுமே வேட்பாளர்களாகவும், பிரச்சார பீரங்கிகளாகவும் இரண்டு கடமைகளையும் ஏற்பார்கள் என்பதே தற்போதைய நிலவரம்.

யார், யாருக்கு எந்தெந்த தொகுதி ?

தேமுதிகவைப் பொறுத்தவரை, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தொடங்கி, தேமுதிக வென்றிருக்கும் அத்தனை தொகுதிகளையும் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறது. அதே போல் தேமுதிக கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த தொகுதிகளையும், முதல்முறை களம் கண்ட போது அதிக வாக்குகளை அள்ளிக் கொடுத்த தொகுதிகளையும் தங்களுடைய 124 தொகுதிக்குள் கொண்டுவரும் முடிவில் உறுதியாக உள்ளது.

சிபிஐ-யினர் திருப்பூர், கோவை, தஞ்சை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளோடு சென்னை சைதாப்பேட்டையைக் குறி வைத்துள்ளது

சிபிஎம் எப்போதுமே சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் தொகுதியை விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்துக் கொள்வதில் உறுதியைக் கடைபிடிக்கும். அந்த வகையில் சென்னை பெரம்பூர், மதுரவாயல் மற்றும் சிபிஎம் வலுவாக இருக்கும் பல்லாவரம் போன்ற தொகுதிகளை உறுதி செய்து வைத்துள்ளது. இது தவிர சிபிஎம், தாங்கள் வலுவாக இருக்கும் மதுரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்களுடைய வெற்றி இடங்களாக கணித்து வைத்து தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டிருக்கிறது.

மதிமுக, விசிகே எங்கே?

மதிமுகவின் வேளச்சேரி மணிமாறன், வேளச்சேரி தொகுதியை நோக்கி தேர்தல் வேலைகளை தொடங்கியிருந்தாலும் அந்தத் தொகுதியை சிறுத்தைகள் கணக்கில் வைத்திருப்பதால், விசிகேவின் ரவிசங்கருக்கு அந்தத் தொகுதியை மணிமாறனே விட்டுக் கொடுத்து விட்டு சென்னை எழும்பூர் தொகுதிக்கு இடம் பெயரக் கூடும்.

இப்படி எல்லா தொகுதிகளிலும் 'விட்டுக் கொடுத்தல்' நாகரிகம் கடைபிடிக்கப்படுமா என்பது தெரியவில்லை, மணிமாறனும், ரவிசங்கரும் அண்ணன் -தம்பி என்பதால் இது சாத்தியப் பட்டது. ஆயிரம் விளக்குத் தொகுதி ரெட்சன் அம்பிகாபதிக்கும், திருவல்லிக்கேணி மின்னல் முகம்மது அலிக்கும் என்பதில் வைகோ உறுதியாக இருக்கிறாராம். அதேபோல் சோழிங்க நல்லூரை விசிகேவுக்கு வாங்குவதில் திருமா உறுதியாக இருக்கிறார்.

கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சி மாவட்டங்களை விசிகே தனக்கான தொகுதிகளாக கூட்டணியில் உறுதி செய்து வைத்திருக்கிறது. திருமாவுக்கு காட்டுமன்னார் கோயில் தொகுதி மீது தனி கண் உண்டு.

தொகுதிப் பங்கீடு எப்படி ?

தேமுதிகவை ம.ந.கூ. அணிக்குள் கொண்டு வருவதையே முழுமையாக கவனத்தில் வைத்துக்கொண்டு ம.ந.கூ. தலைவர்கள் செயல்பட்டு வந்து, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்... இதில் எந்தத் தொகுதி யாருக்கு என்பதோடு, யாருக்கு எத்தனை தொகுதி என்பதை 'கவுன்ட்' செய்யாமல் விட்டிருக்கின்றனர். அதற்கான சரிபார்ப்புகள் இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்து விடும் என்பது நமக்குக் கிடைத்த தகவல்.

யாருக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது,  வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதியை பிரிப்பதா ? யாருக்கு எந்தத் தொகுதியில் செல்வாக்கு உள்ளது, சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கும் கட்சிகள் கேட்கும் பட்சத்தில், அதே தொகுதிகளை மீண்டும் அவர்களுக்கு கொடுத்து விடலாமா? என்பதுபோன்ற அம்சங்கள் தொடர்ந்து தலைவர்கள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

''எல்லாம் சரி,  ம.ந.கூ. அணியில் கலக்க புதிய கட்சிகள் ஏதாவது வரும் பட்சத்தில் அவர்களுக்கான சீட்டை எந்த அணியின் கணக்கில் இருந்து கொடுப்பீர்கள்?" என்றொரு கேள்வியை வீசினேன். கொஞ்சமும் அசராமல் அதற்கு பதில் வருகிறது.

"அதையெல்லாம் கேப்டன் பாத்துப்பாரு!."

http://www.vikatan.com/news/politics/61217-mnk-leaders-vaiko-gr-wont-contest-in-election.art

  • கருத்துக்கள உறவுகள்

12718137_1655831731345456_22234890594450

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் நின்று தோற்பதிலும் பார்க்க இப்படி இருப்பது நல்லது என்று வைகோ நினைக்கிறார். கருணாநிதியை விட்டுப் பிரிந்தபின் எந்தத் தேர்தலிலும் அவர் வெல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

12718137_1655831731345456_22234890594450

அப்ப பிரேமலதா பாஞ்சாலியா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்ப பிரேமலதா பாஞ்சாலியா?

இந்தக் குசும்புதானே வேண்டாங்கிறது. பிரேமலதா இன்னொரு ஜெயலலிதா!!!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அப்ப பிரேமலதா பாஞ்சாலியா?

சபதத்துக்கு பிறகு தான் சொல்லலாம். எப்பூடி?

வைகோ ஒரு சிறந்த மதி நுட்பம் அற்ற அரசியல்வாதியாக இருக்கலாம் ஆனால் அவர் மீது சுத்தமானவர் நேர்மையானவர் உண்மையானவர் என்று தமிழ் நாட்டில் ஒரு மரியாதை இருக்கு ,

ஆனால் எம்மவர் வழக்கம் போல தமக்கு பிடிக்காதவர்களுக்கு எவ்வித சாயமும் பூசி சேறு அடிக்க தொடங்கிவிட்டார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

அவதான் கொண்டையை அள்ளி முடிஞ்சிருக்காவே?

1 hour ago, nunavilan said:

சபதத்துக்கு பிறகு தான் சொல்லலாம். எப்பூடி?

 

உண்மை. 

1 hour ago, arjun said:

வைகோ ஒரு சிறந்த மதி நுட்பம் அற்ற அரசியல்வாதியாக இருக்கலாம் ஆனால் அவர் மீது சுத்தமானவர் நேர்மையானவர் உண்மையானவர் என்று தமிழ் நாட்டில் ஒரு மரியாதை இருக்கு ,

ஆனால் எம்மவர் வழக்கம் போல தமக்கு பிடிக்காதவர்களுக்கு எவ்வித சாயமும் பூசி சேறு அடிக்க தொடங்கிவிட்டார்கள் .

 

எனக்கென்னமோ இன்னொரு ஜானகி போலதெரிகிறது

8 hours ago, புலவர் said:

இந்தக் குசும்புதானே வேண்டாங்கிறது. பிரேமலதா இன்னொரு ஜெயலலிதா!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2016 at 3:12 AM, goshan_che said:

அப்ப பிரேமலதா பாஞ்சாலியா?

ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்க.. tw_blush:

12924611_1710124745933432_70957106343573

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, இசைக்கலைஞன் said:

ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்க.. tw_blush:

12924611_1710124745933432_70957106343573

???. இப்ப சொல்லுங்க வை கோ கூட்டணி அமைச்சதில் ராஜதந்திரம் இருக்கா? இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

???. இப்ப சொல்லுங்க வை கோ கூட்டணி அமைச்சதில் ராஜதந்திரம் இருக்கா? இல்லையா?

விஜயகாந்த எதுக்கெடுத்தாலும் கையை தூக்குவாரே.. அவரிட்ட இந்த ராஜதந்திரம் பலிக்குமா? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

விஜயகாந்த எதுக்கெடுத்தாலும் கையை தூக்குவாரே.. அவரிட்ட இந்த ராஜதந்திரம் பலிக்குமா? tw_blush:

கையமட்டுந்தான் தூக்குவார் - அதனால்தான் சொல்கிறேன் பலிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.