Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைப்ரஸில் அரசியல் தஞ்சம் வேண்டும்... எகிப்து விமானத்தைக் கடத்திய சமஹா கோரிக்கை

Featured Replies

சைப்ரஸில் அரசியல் தஞ்சம் வேண்டும்... எகிப்து விமானத்தைக் கடத்திய சமஹா கோரிக்கை

எகிப்து பயணிகள் விமானத்தை கடத்திய இப்ராஹிம் சமஹா தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது.

எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சமஹாவின் பிடியில் இருக்கும் 5 பயணிகளில் 3 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், ஒருவர் இத்தாலியர், ஒருவர் அயர்லாந்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சமஹா அரபு மொழியில் 4 பக்கத்திற்கு சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளாராம். அந்த கடிதத்தை அவரிடம் அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம்.

அவர் தனது முன்னாள் மனைவியின் பெயரை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம். மொழி பெயர்ப்பாளரை கேட்டுள்ள அவர் தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறும் கோரியுள்ளாராம். அதிகாரிகள் சமஹாவின் முன்னாள் மனைவியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள பயணிகள், சிப்பந்திகளை மீட்க திட்டமிட்டுள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் இன்று எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்துகளால் விமானத்தில் செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/egypt-air-flight-with-81-onboard-hijacked-250027.html

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளைப் பிரிக்கின்ற எல்லைக்கோடுகள்..நாளுக்கு நாள் மேலும் மேலும் ஆழமாகக் கீறப் படுகின்றன!

 

  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய விமான கடத்தல்கள்
 

விமான நிலையத்தில் உள்ள பல சோதனைகளையும் கடந்து ஆயுதங்களுடன் விமானத்தில் ஏறி அதை கடத்துவது என்பது சாதாரண விசயமில்லை. விமான நிலைய ஊழியர்கள், அல்லது அந்த விமான நிறுவன ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தீவிரவாதிகளோ, கடத்தல்காரர்களோ விமானத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடியாது.

1930களில் தொடங்கி கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாகவே விமானங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் எகிப்து நாட்டுக்குச் சொந்தமான 'எகிப்துஏர்' பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக எகிப்து நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்துள்ளது. இன்று அலெக்சாண்டிரியாவில் இருந்து விமானம் கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட விமானத்ததில் 80 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்திற்குள் இருந்த மர்ம நபர், பைலட்டை மிரட்டி பயணிகள் விமானத்தை சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தை கடத்திய நபரிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிகிறது. விமானத்திற்குள் இருக்கும் கடத்தல்காரர் வெடிகுண்டை தனது உடலில் கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட விமானத்திலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் விமானத்தில் தற்போது 63 பேர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் விமானத்தை கடத்திச் சென்றதற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்ட விமானம் எகிப்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. ஐ.எஸ் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி இருக்கலாம் என எகிப்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் எகிப்துக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்பும் கடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பல மோசமான விமான கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.

உலகின் முதல் விமானக்கடத்தல் தென் அமெரிக்க நாடான பெருவில் 1931ம் ஆண்டு நடைபெற்றது.

1932ம் ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சொந்தமான விமானம் கடத்தப்பட்டது.

1931ம் ஆண்டிலிருந்து1948ம் ஆண்டு வரை 9 வருட காலத்தில் 15 விமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

1958ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை உலகில் 48 விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

1969 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிக அதிகமான விமானக் கடத்தல்கள் இடம்பெற்ற ஆண்டாகும். அந்த ஆண்டு மட்டும் 82 விமானங்கள் கடத்தப்பட்டன.

1976ல், 300 பயணிகளுடன் பறந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க மறுத்து, தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார், இடி அமீன். இஸ்ரேலிய கமாண்டோ படையினர் ஒரு விமானத்தில் வந்து அதிரடி தாக்குதல் நடத்தி 7 தீவிரவாதிகளையும், 20 உகாண்டா ராணுவத்தினரையும், சுட்டுக் கொன்றுவிட்டு, 300 பிரயாணிகளையும் பத்திரமாக மீட்டனர். இடி அமீனின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன.

1986ம் ஆண்டு பான் ஆம் 73 ரக விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ப்ராங்பர்ட் கிளம்பியது. இந்த விமானத்தினை தீவிரவாதிகள் கடத்தினர். இந்த விமான கடத்தலில் பயணிகளை காக்க முயன்ற பணிப்பெண் கொல்லப்பட்டார்.

கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர். ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். பின்னர் 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டு வந்தனர்.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி காலை, அமெரிக்காவுக்கு அன்று மோசமான நாளாகவே விடிந்தது. நான்கு ஜெட் விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர். தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை நியூயார்க்கின் இரட்டை கோபுரம் மீது அடுத்தடுத்து மோத விட்டனர்.இதில் இரண்டு மணி நேரங்களில் இரு பிரமாண்ட கட்டடங்களும் தூள் தூளாகி சாம்பலாகி மண்ணோடு மண்ணாக சிதைந்து போனது. இன்னொரு விமானம் பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம், ஷாங்க்ஸ்வில்லி என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த அதி பயங்கர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 5000 பேர் உயிரிழந்தனர்.

இது உலகின் மோசமான விமான கடத்தலாகும். இந்த சம்பவத்திற்குப் பின்னர் விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் விமான நிலையங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவ்வப்போது விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/most-terrifying-airplane-hijackings-all-time-250034.html

  • தொடங்கியவர்

எகிப்து விமானத்தை கடத்தியவர் தீவிரவாதி அல்ல... அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக பேராசிரியர்!

எகிப்து விமானத்தை கடத்திய இப்ராஹிம் சமஹா அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக பேராசிரியர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் விமானத்தில் இருந்த பயணிகளில் யாரோ ஒருவர் சமஹாவை எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் கெய்ரோவுக்கு கிளம்பிய எகிப்து ஏர் நிறுவன விமானத்தை எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) சைப்ரஸுக்கு கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக தரையிறக்க வைத்துள்ளார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் 5 பயணிகள், 2 சிப்பந்திகள் தவிர்த்து மற்ற அனைவரையும் விடுவித்துள்ளார்.

இந்நிலையில் பயணிகளில் யாரோ ஒருவர் சமஹாவை புகைப்படம் எடுத்தது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் சமஹா அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக கால்நடை மருத்துவ துறை பேராசிரியர் என்றும், அவர் அமெரிக்க பல்கலைக்கழம் ஒன்றில் கூட அவ்வப்போது கால்நடை மருத்துவம் குறித்து பாடம் நடத்தி வந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமஹாவுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என்று சைப்ரஸ் அதிபர் தெரிவித்துள்ளார். சமஹா தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/egyptair-flight-hijacker-photo-gets-leaked-250042.html

  • கருத்துக்கள உறவுகள்

80 களில் சேப்பால எக்கா நாயக்க எனும் சிங்களவன் இவ்வாறுதான் செய்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை படுகொலையில் முன்னின்று செயற்பட்டவர் இந்த சேப்பால எக்கநாயக்க.

https://www.colombotelegraph.com/index.php/prison-massacre-and-the-alitalia-hijacker-sepala-ekanayake/

  • கருத்துக்கள உறவுகள்
கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் நான்கு பேரைத் தவிர மற்றவர்களை விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர்.எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த 'எகிப்து ஏர்' நிறுவனத்தின் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தப்பட்டது.இந்த விமானம் சைப்ரஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், கடத்தல்காரரிடம், விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் விமானத்தில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டார்.

கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் நான்கு பேரைத் தவிர மற்றவர்களை விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர்.எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த 'எகிப்து ஏர்' நிறுவனத்தின் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தப்பட்டது.இந்த விமானம் சைப்ரஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், கடத்தல்காரரிடம், விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் விமானத்தில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டார்.

   

இதையடுத்து, 4 வெளிநாட்டு பயணிகளைத் தவிர அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.தற்போது விமானத்தில் வெளிநாட்டுப் பயணிகள் 4 பேரும், ஊழியர்கள் 4 பேரும் உள்ளனர். விமானத்தைக் கடத்தியவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்று தெரிய வந்துள்ளதாகவும், அவர் தனியாக இந்த விமானத்தைக் கடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.அவர் வெடிகுண்டுகள் பொருத்திய பெல்டை அணிந்திருப்பதாக விமானிகளை மிரட்டி, விமானத்தைக் கடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=154384&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.