Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றம் வருவதற்கு கல்வித் தகைமை கொண்டுவரப்படவேண்டும்

Featured Replies

பாராளுமன்றம் வருவதற்கு  கல்வித் தகைமை கொண்டுவரப்படவேண்டும்  

 

பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டுமென நேற்று சபையில் வலியுறுத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வாய் மூடியிருந்தவர்கள் இன்று வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.  qualification_0123.jpg

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே   அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;

கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷதான் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் இன்று நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தவர்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக வாய்கூட திறக்கவில்லை. மௌனித்திருந்தனர். 

அன்று எதனோல் கொண்டு வந்தவர்கள், மது விற்பனையில் ஈடுபட்டோர் உட்பட மஹிந்த ராஜபக் ஷவிற்கு சார்பானவர்களுக்கு சுங்கவரிகளோ  அல்லது வேறு எந்தவரிகளோ அறவிடப்படவில்லை. சலுகைகள் வழங்கப்பட்டன.

இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்கள்  கிடைக்காமல் போயின. ஆனால் இன்றைய நிதியமைச்சர் சுங்கவரி உட்பட அனைத்து வரிகளையும் அறவிடுகின்றார். 

நாட்டுக்கு சேர வேண்டிய வரிகள் இன்று கிடைக்கின்றன. அரச வருமானம்  அதிகரித்துள்ளது.  இவ்வாறு நாட்டுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நிதியமைச்சருக்கு எதிராகவா நம்பிக்கை இல்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர். 

 நாட்டின்  ஆலோசனையின் பேரில் அல்ல கடந்த ஆட்சிக்காலத்தில், நிதியமைச்சரின் செயலாளராகவிருந்த பி.பி. ஜயசுந்தரவின் ஆலோசனையை கேட்டே தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த காலத்தில் சுங்கத்தையும் திறைசேரியையும் அழித்தவர்கள் இன்று நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் இன்று நிதி நிர்வாகம் தெரியாதோர் பல்கலைக்கழகம் செல்லாதோர் கல்வி அறிவு இல்லாதவர்கள் வெறுமனே கூச்சலிடுகின்றனர்.

எனவே படித்தவர்கள் பாராளுமன்றம் வர வேண்டும்.பாராளுமன்றத்துக்கு வருவோருக்கு கல்வித் தகைமை இருக்கவேண்டும்.  அதற்கான  நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.  

http://www.virakesari.lk/article/7389

தகுதியாக சிறந்த தேர்ச்சியுடன் கூடிய பல்கலைக்கழக பட்டப்படிப்பு கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். 

பாராளுமன்றம் செல்ல கல்வித்தகமை வரவேற்க வேண்டியது. ஆனால் சமூகவியல் தகைமை (Sozial Kompetenz)  மிக அவசியம். சமூகவியல் தகைமை இல்லால் தனியே பட்டப்படிப்பு எந்த முன்னேற்றத்தையும் தராது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

பாராளுமன்றத்தில் இன்று நிதி நிர்வாகம் தெரியாதோர் பல்கலைக்கழகம் செல்லாதோர் கல்வி அறிவு இல்லாதவர்கள் வெறுமனே கூச்சலிடுகின்றனர்.

இஞ்சை யாழ்களத்திலையும் உந்தப்பிரச்சனை இருக்கு :cool:

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை யாழ்களத்திலையும் உந்தப்பிரச்சனை இருக்கு :cool:

உண்மை குமாரசாமி அண்ணை - நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேலைகளில் ஈடுபடுவதற்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை

அத்துடன் இன்றைய கல்வி பொருளாதாரத்துக்கானது என்றநிலையில்

கல்வி கற்றோர் பொது மக்களின் நலன்களை மட்டுமே முன்னுறுத்தி பொதுமக்களுக்காக உழைப்பார்கள் என்பதும் கடினம்.

பொது மக்களிடத்தில் வேலை செய்வோர்

அவர்களுடன் இன்பத்திலுமம் துன்பத்திலும் பங்கு கொள்வோர்

கட்சிகளின் பலமற்று

அந்தந்த தொகுதிகளில் தேர்தல்களில் நின்று அந்த மக்களால் தெரிவு செய்யப்படுபவர்களே

பாராளுமன்றம் செல்வது சிறந்தது

அதுவே உண்மையான மக்கள் தெரிவாக

உண்மையான ஐனநாயகமாக

உண்மையான மக்களாட்சியாக இருக்கும்..

அந்த மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை

செய்து முடிப்பதற்காக படித்த அதிகாரிகள் 

அந்தந்த பதவிகளில் இருந்தால் போதும்.

ஆனால் இன்று அதிகாரிகளும் வியாபார  அரசியல்வாதிகளால் நியமனப்படுத்துவதாலும் 

எல்லாவற்றிலும் பொருளாதாரமும் வியாபாரமும் வீற்றிருக்கிறதே தவிர

மக்கள் நலன் அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மெத்தப் படித்தவர்களால்த் தான் நாடே குட்டிச் சுவராக உள்ளது.

குறைந்த படிப்புடன் தேசிய தலைவர் உலகமே போற்றும் வண்ணம் குறிப்பிட்ட நிலத்தை நிர்வாகம் செய்திருநதார்.

யாராவது செய்திருந்தார்களா? அல்லது இனி மேல் செய்யத்தான் முடியுமா?

9 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் மெத்தப் படித்தவர்களால்த் தான் நாடே குட்டிச் சுவராக உள்ளது.

குறைந்த படிப்புடன் தேசிய தலைவர் உலகமே போற்றும் வண்ணம் குறிப்பிட்ட நிலத்தை நிர்வாகம் செய்திருநதார்.

யாராவது செய்திருந்தார்களா? அல்லது இனி மேல் செய்யத்தான் முடியுமா?

அதாவது பாராளுமன்றத்துக்கு படிப்பறிவற்றவர்கள் தான் செல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள்? அமெரிக்காவில் இது சாத்தியமா?

தேசியத் தலைவர் பிரபாகரன் போல் பலகோடி பில்லியன் மக்களில் ஒருவரைக் கூட கண்டுபிடிப்பது அரிது தான். ஆனால் அவர் பல சிறப்புப் படையணிகளை உருவாக்க பலரை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி படிக்கவைத்து பட்டம் பெற வைத்தது, அவர்களை பொறுப்பாளர்கள் ஆக்கியது, மேலும் பலருக்கு தாய் மண்ணிலேயே கடும் பயிற்சிகள் கற்கை நெறிகள் வழங்கப்பட்டமை உங்களுக்கு தெரியாதபடியால் இந்த பொருத்தமில்லாத கருத்து வந்திருக்கு. தேசியத் தலைவரும் நோஞ்சான் குஞ்சுகளை, அறிவிலிகளை இயக்கத்தில் சேர்க்கவில்லை என்பதும் உங்கள் அறிவுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.