Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் - இந்திய தொழிலதிபர் அன்பளிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 16 இடங்களில் நிறுவுவதற்காக  16 திருவள்ளுவர் சிலைகளை தமிழக  வி.ஜி.பி தமிழ் ஒன்றியத்தின் நிறுவனர் வி.ஜி. பி.சந்தோசம்  வழங்கியுள்ளார். இந்த சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கையளிக்கப்பட்டதாக  அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 16 இடங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகளை தமிழக வி.ஜி.பி தமிழ் ஒன்றியத்தின் நிறுவனர் வி.ஜி. பி.சந்தோசம் வழங்கியுள்ளார். இந்த சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159880&category=TamilNews&language=tamil

இக்காலத்துக்கு பொருத்தமான நல்ல விடயம்.

இலங்கைக்கு வரும் 16 திருவள்ளுவர் சிலைகள்

இலங்கைக்கு வரும் 16 திருவள்ளுவர் சிலைகள்

 

 
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இலங்கை அரசிடம் வழங்கியது என, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் இயங்கி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் தனது தமிழ்ப் பணிகளின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருகிறது.

அந்த வகையில் ரிஷிகேஷ், நவிமும்பை, அந்தமான், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், அமெரிக்கா, தென்னாபிரிக்கா, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் வள்ளுவர் சிலைகளை நிறுவியிருக்கிறது. இந்ததநிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் உட்பட 16 இடங்களில் வள்ளுவர் சிலைகளை நிறுவ முடிவு செய்தது.

இதற்காக சிற்பி ஜானகிராமன் என்பவரைக் கொண்டு பைபர் கிளாஸ் பொருளால் 16 வள்ளுவர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் அறிமுக விழா சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம், இலங்கை கல்வி அமைச்சகத்தின் செயலாளர் திசா ஹெவாவிதானா, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வள்ளுவர் சிலைகளை ஒப்படைத்தார்.

விழாவில் வி.ஜி.சந்தோஷம் வர வேற்றுப் பேசும்போது, “இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வள்ளுவர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று இலங்கை எழுத்தாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வைப்பதற்காக இந்த 16 வள்ளுவர் சிலைகளை வழங்குகிறோம். இந்த சிலைகள் செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் வழியாக கொண்டு செல்லப்படும். இதைத் தொடர்ந்து இலங்கையில் நடத்தப்படும் மாநாட்டில் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், நீதிபதிகள் என 60 பேர் கலந்துகொள்கிறார்கள்” என்றார்.

இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “இலங்கைக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவில் புதிய பரிமாணம் இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. உலகத்துக்கே சொந்தமானவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 7 சொற்களில் கருத்துகளை ஆணித் தரமாக சொன்னவர் வள்ளுவர் என்று குறிப்பிட்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=80829

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம்!

வள்ளுவர் உலகப்புலவர் எண்டு சொல்லுற ஆக்கள்.. அஞ்சு சிலைகளைச் சிங்களக் கிராமங்களிலும் வைக்கிறது நல்லது!

அப்போது தான் அவர்களது 'பரந்த மனதை' உலகமும் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும்!

என்னவோ....ஆஞ்சநேயர் வராத வரைக்கும் ஓகே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

 

என்னவோ....ஆஞ்சநேயர் வராத வரைக்கும் ஓகே!

புத்தர் ok யாtw_tounge_wink:மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

புத்தர் ok யாtw_tounge_wink:மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

ஆக்கிரமிப்பாளராக வருவார் எனில் 'நோ' !

அங்கீகரிக்கப்பட்டு வருவார் எனில் 'ஓகே' !

18 hours ago, putthan said:

புத்தர் ok யாtw_tounge_wink:மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

உருவ வழிபாட்டை நிராகரித்து பல போதனைகள் செய்த புத்தருக்கே சிலை வைப்பது அவரை அவமதிப்பதுக்கு சமம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

thruvalluvar-statuesசென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.75 அடி உயரமான பீடத்தில் அமர்ந்தபடி உள்ள 6.5 அடி உயரமான இந்த திருவள்ளுவர் சிலைகள், கண்ணாடியிழையினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை சென்னையில் இருந்து கப்பல் மூலம் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்படுகின்றன.

சாவகச்சேரி, கிளிநொச்சி, மன்னார், புளியங்குளம், திருகோணமலை, புத்தளம், கல்முனை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்தச் சிலை நிறுவப்படும்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனரான தொழிலதிபர் விஜிபி சந்தோசம் இந்த சிலைகளை நேற்றுமுன்தினம் சென்னையில் உள்ள சிறிலங்கா உதவித் தூதுவரிடம் அன்பளிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2016/06/21/news/16966

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.