Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது

Featured Replies

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது
 

article_1466919493-Arasst02.jpgசெல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று  கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழைமை (19) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி சம்பவத்தினை மூடி மறைப்பதற்கு முயற்சி செய்த மேலும் நான்கு ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக, பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து, சிறுமியின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கு கல்வி கற்கும் 12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து, பெற்றோர் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் வினாவியபோது, இந்த விடயத்தை இத்துடன் விடுமாறும், அதுவே நல்லது எனவும் வெளியில் தெரியப்படுத்தவேண்டாம் எனவும் அதிபர் மற்றும் அங்கிருந்த 3 ஆசிரியைகள் பெற்றோர்களை அச்சுறுத்தும் பாணியில் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தை அறிந்த பிரதேசவாசியொருவர், சாவகச்சேரி சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இச்சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த 3 ஆசிரியைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/175568#sthash.eF6z749e.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

என்றும் இல்லாத, முன்பு கேள்விப் பட்டிராத  அளவுக்கு... ஆசிரியர்கள் காமம் தலைக்கேறி திரிவது ஏன்?
இதனை இனியும் பொறுமையாக பார்த்துக் கொண்டிராமல்... விரைந்து கடுமையான தண்டனை மூலம் 
இவர்களை ஆசிரிய பணியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

என்றும் இல்லாத, முன்பு கேள்விப் பட்டிராத  அளவுக்கு... ஆசிரியர்கள் காமம் தலைக்கேறி திரிவது ஏன்?
இதனை இனியும் பொறுமையாக பார்த்துக் கொண்டிராமல்... விரைந்து கடுமையான தண்டனை மூலம் 
இவர்களை ஆசிரிய பணியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும்.

இவர்களுக்கு இப்படியான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

1. பணிநீக்கம்
2. பொதுப்பணிகளில் இணைய நிரந்தரத்தடை.
2. ஆண்மை நீக்கம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

இவர்களுக்கு இப்படியான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

1. பணிநீக்கம்
2. பொதுப்பணிகளில் இணைய நிரந்தரத்தடை.
3. ஆண்மை நீக்கம்.
 

மூன்றாவது தடையை தவிர மற்றவையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது தடை எனக்கும் உடன்பாடில்லை...., வேண்டும் என்றால் அவரைக் கட்டாய விந்து தானத்துக்கு  உட்படுத்தி ஏதாவது ஆக்கபூர்வமாய் செய்யலாம்...! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

12 hours ago, suvy said:

மூன்றாவது தடை எனக்கும் உடன்பாடில்லை...., வேண்டும் என்றால் அவரைக் கட்டாய விந்து தானத்துக்கு  உட்படுத்தி ஏதாவது ஆக்கபூர்வமாய் செய்யலாம்...! tw_blush:

என்ன இன்னும் உந்த கட்டாக்காலியளின்ரை சந்ததியை பெருக்கவோ:grin:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

என்ன இன்னும் உந்த கட்டாக்காலியளின்ரை சந்ததியை பெருக்கவோ:grin:

குற்றம் செய்த கனபேர் திருந்தி இருக்குறானுகளே கு. சாமி அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

என்ன இன்னும் உந்த கட்டாக்காலியளின்ரை சந்ததியை பெருக்கவோ:grin:

பிறக்கிற பிள்ளைகளுக்கு கணணியைக் கண்ணிலும் காட்டாமல் களனிக்குள் விட்டு வளர்த்தால் போதும்.நல்ல சந்ததியும் பெருகும், கிராமங்களும் சுபீட்சமாகும்...!  tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.