Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபாலிடா...... தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

Featured Replies

  • தொடங்கியவர்

13775599_10154808695009578_8049099971779

  • தொடங்கியவர்

கபாலி திரைப்படம் பார்வையிட இந்தியாவில் விடுமுறை அறிவிப்பு

கபாலி திரைப்படம் பார்வையிட இந்தியாவில் விடுமுறை அறிவிப்பு:-


சுப்பர் ஸ்டார் ரஜின் காந்தின் புதிய திரைப்படமான காபலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இந்தியாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தென் இந்தியாவில் பல நிறுவனங்களில் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் சுகயீன விடுமுறை எடுத்தல், தொலைபேசிகளை நிறுத்தி வைத்தல், பணிக்கு வராமல் இருத்தல் ஆகியனவற்றை தடுக்க இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கபாலி திரைப்படம் இந்தியாவில் 12000 திரையறங்குகளில் திரையிடப்பட உள்ளது.


கபாலி திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே விநியோக உரிமையின் ஊடாக சுமார் 30 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.


சென்னை மற்றம் பங்களுரு அகிய தென்னிந்திய பகுதிகளில் பல நிறுவனங்கள் நாளை மூடப்பட உள்ளன.


சில நிறுவனங்கள் கபாலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இலவச டிக்கட்டுகளையும் வழங்கியுள்ளன.


எயார் ஏசிய என்ற விமான நிறுவனம் கபாலி திரைப்படத்திற்காகவே விசேட விமான போக்குவரத்துச் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
நன்றி: பிபிசீ நியூஸ்
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134254/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

'கபாலி': ரஜினியின் 2 நிமிட அறிமுக காட்சிகள் கசிந்தன

160721095619_kabali_640x360_thevcreation

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகவுள்ள 'கபாலி' திரைப்படத்தின் 2 நிமிடக் காட்சிகள் கசிந்துள்ளன. அதுவும், அவை ரஜினியின் அறிமுக காட்சிகள் என்பதால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.

கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் திரைப்படம் 'கபாலி'.

இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 2 நிமிட காட்சிகளால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

160721095447_kabali_640x360_thevcreation 

முன்னர், 'கபாலி' திரைப்படத்தை கள்ளத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்கக்கோரி படத்தின் தயாரிப்பாளர் தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இச்சூழலில், திரைப்படத்தின் 2 நிமிட காட்சிகள் கசிந்தது குறித்து தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தாணு, '' தலைவர் படத்தை கைப்பேசி அல்லது கணினிகளில் பார்ப்பதால் உற்சாகம் கிடைக்காது '' என கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/india/2016/07/160721_kabali_movie

  • தொடங்கியவர்

மலேசியாவில் கபாலி டிக்கெட் கிடைக்காமல் ரசிகர் தற்கொலை

Date: 2016-07-22@ 00:58:15

Daily_News_9689708948136.jpg

கோலாலம்பூர் : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார். ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், திரையரங்கு இருந்த 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கீழே குதிக்கும் காட்சிகள், வாட்ஸ்ஆப்பில் இப்போது பரவி வருகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=232905

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

கபாலி திரைப்படம் பார்வையிட இந்தியாவில் விடுமுறை அறிவிப்பு

கபாலி திரைப்படம் பார்வையிட இந்தியாவில் விடுமுறை அறிவிப்பு:-


சுப்பர் ஸ்டார் ரஜின் காந்தின் புதிய திரைப்படமான காபலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இந்தியாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தென் இந்தியாவில் பல நிறுவனங்களில் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் சுகயீன விடுமுறை எடுத்தல், தொலைபேசிகளை நிறுத்தி வைத்தல், பணிக்கு வராமல் இருத்தல் ஆகியனவற்றை தடுக்க இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கபாலி திரைப்படம் இந்தியாவில் 12000 திரையறங்குகளில் திரையிடப்பட உள்ளது.


கபாலி திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே விநியோக உரிமையின் ஊடாக சுமார் 30 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.


சென்னை மற்றம் பங்களுரு அகிய தென்னிந்திய பகுதிகளில் பல நிறுவனங்கள் நாளை மூடப்பட உள்ளன.


சில நிறுவனங்கள் கபாலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இலவச டிக்கட்டுகளையும் வழங்கியுள்ளன.


எயார் ஏசிய என்ற விமான நிறுவனம் கபாலி திரைப்படத்திற்காகவே விசேட விமான போக்குவரத்துச் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
நன்றி: பிபிசீ நியூஸ்
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134254/language/ta-IN/article.aspx

கொடுமை.

40 minutes ago, குமாரசாமி said:

கொடுமை.

கொடுமையிலும் கொடுமை அந்த பாவி மாடியில் இருந்து குதித்தது

  • தொடங்கியவர்

இணையத்தில் வெளியாகியது கபாலி... #KabaliOnline #StopPiracy

1.jpg

ண்டிகை கால தட்கல் டிக்கெட்டுகளை போல் மின்னல் வேகத்தில் சாதனை படைத்தது கபாலி திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை. நேற்று இரவு பலரது எதிர்பார்ப்பு, கபாலி படத்தின் ஒரு டிக்கெட்டாகத்தான் இருந்தது. ஒரு டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது.

பல திரையரங்குகளில், கபாலி படத்தின் முதல் காட்சி தற்போது தான் தொடங்கி இருக்கும். நேற்று இரவே, வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டதால், படத்தைப் பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் வரத்தொடங்கிவிட்டன.

2.jpg

 

கபாலி படத்தை ஆன்லைனில் வெளியிடக்கூடாதென படத்தின் தயாரிப்பாளர் தாணு, நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதன்படி, பல இணையதளங்கள் முடக்கப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன், ரஜினிகாந்த் கலந்து கொண்ட கபாலி திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அப்போதே, படத்தின் முதல் இரண்டு நிமிட காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது 110 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி திரைப்படத்தின் தியேட்டர் பிரின்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பு, நீதிமன்ற தடை உத்தரவு அனைத்தையும் மீறி இணையத்தில் படம் வெளியாகி இருப்பது, ரஜினி ரசிகர்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/66402-kabali-out-on-the-internet.art

  • கருத்துக்கள உறவுகள்

13716060_810455352424370_107095798058141

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

13716060_810455352424370_107095798058141

நெடுக்கர் கவனம் .....ரஜனி ரசிகர்கள் கணனிக்குள்ளால வந்து தாக்கினாலும் தாக்குவினம்

  • தொடங்கியவர்

கபாலி பொறிகள்

 
rajini_2942263f.jpg
 

டீஸருக்கான வசனம்!

‘கபாலி’ முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், எடிட்டிங் பணிகளுக்காகக் காட்சிகளை ப்ரவீனிடம் கொடுத்திருக்கிறார்கள். அப்போது அவர் ரஃப் கட் எனப்படும் முதல் படத்தொகுப்பு பிரதியைத் தயார் செய்திருக்கிறார். அப்போதுதான் டீஸரில் ரஜினி பேசும் காட்சியை எடிட் செய்திருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் “இதுதான் டீஸருக்குப் பொருத்தமான வசனம். இதை வைத்து டீஸர் பண்ணலாம்” என்று ரஞ்சித்துக்குக் குறுந்தகவல் அனுப்ப, அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

விருது நிச்சயம்!

துப்பாக்கி சுடும் காட்சியின் படப்பிடிப்பின்போது, கோட் அணிந்து வந்துவிட்டார். ஆனால், கோட்டின் காலர் மடிக்காமல் இருந்திருக்கிறது. இதை இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருமே எப்படிப் போய்ச் சொல்வது என்று தயங்கியிருக்கிறார்கள். இறுதியாக ரஞ்சித் போய் “கோட்டின் காலரை மடிக்க வேண்டும் சார்” என்று கூற “ஏன் இப்படி இருந்தால் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ரஜினி. “இல்ல சார்… முழுக்க கோட் காலரை மடித்தபடிதான் நடித்திருக்கிறீர்கள். இதிலும் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கூற உடனடியாக ரஜினி கோட் காலரை மடித்துவிட்டு இயக்குநரை அழைத்து, “உங்களுக்கு விருது நிச்சயம் சார்” என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினி பாராட்டு

‘கபாலி’ படப்பிடிப்பில் ரஜினியுடன் நடித்த தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலரும் வியந்து கூறுவது அவருடைய பாராட்டைத்தான். ரித்விகாவின் நடிப்பைப் பார்த்து, “என்னப்பா. இந்தப் பொண்ணு இப்படி நடிக்குது... அய்யோ” என்று படப்பிடிப்புத் தளத்திலேயே அனைவரது முன்னிலையிலும் பாராட்டியிருக்கிறார். தினேஷின் வசன உச்சரிப்பு, கலையரசனின் நடிப்பு என எது அவருக்குப் பிடித்திருந்தாலும் உடனடியாகப் பாராட்டியிருக்கிறார். கலையரசனை முதல் நாள் பார்த்த உடனே, ‘மெட்ராஸ்’ அன்பு பாத்திரத்தைப் பற்றி அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறார் ரஜினி.

இன்னொரு டேக்கா?

பல காட்சிகளில் நடித்துவிட்டு, ரஞ்சித் இன்னொரு டேக் கேட்டுவிடுவாரோ என்று பயந்திருக்கிறார் ரஜினி. ஜான் விஜய்யுடன் முதல் காட்சி நடித்து முடித்துவிட்டு “என்னங்க… இப்படிப் பார்க்கிறார். இன்னொரு டேக் கேட்டுவிடுவாரோ? 14 வருடங்களில் யாருமே என்னிடம் இன்னொரு டேக் கேட்டதே இல்லை” என்று ஜான் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. அப்போது ரஞ்சித்தும் எழுந்து நடந்து வர, ரஜினி நேரடியாகச் சென்று “இதுதான் நான் நடித்ததிலேயே சிறப்பான நடிப்பு. இன்னொரு டேக் மட்டும் கேட்டுவிடாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

இது ரஞ்சித் படம்

படம் முடித்தவுடன், ரஜினிக்குப் படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். படம் பார்த்து முடித்தவுடன், “ரஞ்சித் சார்… என்ன சொன்னீங்களோ அப்படி எடுத்திருக்கீங்க. இது ரஞ்சித் படம்” என்று பாராட்டியிருக்கிறார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/கபாலி-பொறிகள்/article8885568.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

முதல் பார்வை: கபாலி - மகிழ்விக்கும் முயற்சி!

 
kabali_002_2942216_2942763f.jpg
 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கபாலி' என்ற ஒற்றை வரி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மகிழ்ச்சியும், ஆச்சர்யமும், திகைப்பும் சொல்லித் தீராதது...சொல்லில் தீராதது.

அதே சமயம் ரஜினி நடிக்கும் 'கபாலி'யா? அல்லது ரஞ்சித் இயக்கும் 'கபாலி'யா? எதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். படத்தில் ரஜினியின் ராஜாங்கம் நடக்குமா? அல்லது ரஞ்சித்தின் எண்ணங்களை படம் பேசுமா என்ற தீரா கேள்வியுடன் 'கபாலி' பார்க்க விரும்பினோம்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு டிக்கெட் கிடைக்க, அடித்துப் பிடித்து தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'கபாலி' கவர்ந்திழுத்ததா?

தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரு தனிமனிதன் 'கபாலி' கேங்ஸ்டராக வளர்ச்சி அடைகிறார். நல்லது செய்ய நினைக்கும் அந்த மக்கள் தலைவனை இன்னொரு கேங்ஸ்டர் கும்பல் அழிக்க நினைக்கிறது. இந்த கேங்ஸ்டர் ஆட்டத்தில் யார் என்ன ஆகிறார்கள்? 'கபாலி' குடும்பம் என்ன ஆகிறது? என்பது ரத்தம்... சத்தம் கலந்த மீதிக் கதை.

வழக்கமும் பழக்கமுமான ஒன் லைன் கதை தான். அதில் கொஞ்சம் எமோஷன், இனம், உரிமை என்று அரசியல் சாயம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

ரஜினியின் இன்ட்ரோவில் வரும் சண்டைக் காட்சி தெறிக்கிறது. ரஜினியின் என்ட்ரி பாடல் என்றாலே துள்ளலும், உற்சாகமும் கொண்டாட்டமுமாய் இருக்கும். அந்த எனர்ஜி கபாலி படத்தில் இல்லாததாலேயே இது வழக்கமான ரஜினி படம் இல்லை என உணர வைத்தது.

படம் முழுக்க ரஜினி ஒற்றை ஆளுமையாக ஸ்கோர் செய்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, நுணுக்கமான தீர்க்கமான பார்வை, சில நொடிகளுக்குள் முகமொழியை மாற்றுவது, ஏக்கமும் தவிப்புமாய் மனைவி குறித்து யோசிப்பது, பிரிவின் துயரில் கலங்குவது என அதகளம் செய்திருக்கிறார். ரஜினியின் தோற்றமும், உடையும் கூடுதல் வசீகரத்தை வழங்கியிருக்கிறது.

ராதிகா ஆப்தே கொஞ்சூண்டு இடத்திலும் நிறைவாய் நடித்திருக்கிறார். 'உன் கருப்பு கலரை என் உடம்பு முழுக்க பூசிக்கணும்' என்று கண்கள் நிறைய பேசும் ராதிகா, பாண்டி போர்ஷனில் கண்கள் கசிய பார்க்கும்போது ஈரமும் ஈர்ப்புமாய் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ரஜினியின் கேங்ஸ்டர் பிம்பத்தை தனக்குள் கடத்திக் கொண்டதாலோ என்னவோ படம் முழுக்க தினேஷ் பதற்றமும், பரபரப்புமாய் இருக்கிறார். ரஜினி பேசும்போது அதற்கு தினேஷ் காட்டும் ரியாக்‌ஷன்களில் தினேஷின் ஒவ்வொரு அங்கமும் தனியாய் நடித்திருக்கிறது. அதனாலேயே வெடித்து சிரிக்கிறது தியேட்டர்.

தன்ஷிகா, ரித்விகா, ஜான் விஜய், கலையரசன், கிஷோர் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

வில்லன் கதாபாத்திரத்துக்கு உரிய கம்பீரமும், பலமும் வின்ஸ்டன் சௌவுக்கு இல்லாதது பெருங்குறை.

முரளியின் கேமரா மலேசியாவின் பளபளக்கும் நகரங்கள், நிழல் உலகம் என எல்லா ஆங்கிளிலும் பளிச் ஸ்கோர் செய்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசை படத்துக்கு பெரும் பலம். நெருப்புடா பாடலில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார். மாயநதி பாடலில் மெல்லிசையில் சோகத்தைப் பாய்ச்சுகிறார்.

''காந்தி சட்டையை கழட்டுனதுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காரணம் இருக்கு. சும்மா இல்லை.'', ''நான் செத்து தான் போயிருந்தேன். நீ என்னை வந்து பார்க்கிற வரை'' போன்ற சில இடங்களில் மட்டுமே வசனங்கள் கூர்மையாக உள்ளன.

முதல் பாதியில் கொஞ்சம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

படத்தின் ஒட்டு மொத்த உயிர்ப்பை எமோஷன் போர்ஷனில் மட்டுமே வைத்து, அதை ரசிகர்களுக்கும் கடத்திய விதத்தில் ரஞ்சித் ரசிக்க வைக்கிறார்.

சிகரெட் பிடிக்காத, அதிர அதிர பன்ச் டயலாக் பேசாத, டூயட் இல்லாத, துதிபாடிகள் இல்லாத ரஜினி படம் என்ற விதத்தில் வழக்கமான ரஜினி படத்துகுரிய முத்திரைகளை தகர்த்த ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

ஆனால், இது மட்டுமே போதுமா ரஞ்சித்? திக் திக் என்று இருக்க வேண்டிய திரைக்கதை பயணத்தில் சாதாரண ரெய்டு மட்டும் அடித்திருக்கிறீர்களே? அவ்வளவும் சமரசம் தானா ரஞ்சித்? காட்சிப்படுத்த வேண்டிய சங்கதிகளை வசனத்திலேயே சொல்லிவிட்டது ஏன்?

ரஞ்சித் படம் என்றாலே டீட்டெய்லிங் இருக்கும். அது இந்த படத்தில் எங்கே என்று தேட வேண்டிய சூழல் வந்துவிட்டது. ரஞ்சித் கொடுத்த ட்ரீட்மென்ட்டும் ரசிகர்களை எந்த விதத்திலும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புதிதும், புத்திசாலித்தனமும் இல்லாத திரைக்கதையால் இரண்டாம் பாதி சுணங்கி நிற்கிறது.

தொழிலாளர்கள் பிரச்சினையை அசலாக அழுத்தமாக பதிவு செய்யத் தவறிவிட்டார். கேங்ஸ்டர் ரஜினியை கட்டமைத்ததில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. ஒரு பள்ளிக்கூடம் நடத்தும் ரஜினி எப்போது எப்படி எங்கே கேங்ஸ்டராக உருவெடுத்தார்? எதிரிக் கூட்டத்தை அடிக்க ஒவ்வொரு முறையும் ரஜினியே கிளம்பி வருவாரா? அவரே அடித்து துவம்சம் செய்வாரா? ரத்தம் தெறிக்க, துப்பாக்கி வெடிக்க பழிவாங்குவாரா? அங்கே போலீஸ் என்ன செய்கிறது? என்று கேள்விகளின் பட்டியல் நீள்கிறது.

'கபாலி' முழுக்க ரஞ்சித் படமாகவும் இல்லை. ரஜினி படமாகவும் இல்லை. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ரஞ்சித் படம் என நாடி வந்தவர்களுக்கு இந்த முயற்சி மகிழ்ச்சியைக் கொடுக்குமா? என்பது சந்தேகம்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/முதல்-பார்வை-கபாலி-மகிழ்விக்கும்-முயற்சி/article8887479.ece?homepage=true

  • தொடங்கியவர்
இன்றைய கதாநாயகன் ரஜினி : கபாலி பற்றி ஜெர்மன் பத்திரிக்கையில் செய்தி
 
 
 
Tamil_News_large_1569298_318_219.jpg
 

பெர்லின்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படம் குறித்து ஜெர்மனி பத்திரிக்கை ஒன்று ‛மேன் ஆப் தி டே' என்னும் தலைப்பில் ரஜினி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

 

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினி. அவர் நடித்துள்ள கபாலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியானது.

 

கபாலி திரைப்படம் குறித்து தமிழ் ஊடகங்கள் மட்டுமல்லாது இந்திய அளவிலான ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் கபாலி பற்றி செய்திகள் வைரலாக பரவி வருகிறது.
இதை மிஞ்சும் வகையில் ஜெர்மன் மொழியில் வெளிவரும் அந்நாட்டு பத்திரிக்கையிலும் கபாலி திரைப்படம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

 

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினி. 65 வயதான இவரின் இயற்பெயர் சிவாஜி கெய்க்வாட். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். பஸ் கண்டக்டராக தன் பணியை துவங்கிய இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

 

தன்னுடைய ,தனிப்பட்ட ஸ்டைலால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தார். இந்திய சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டவர். இவர் நடித்துள்ள கபாலி திரைப்படம் இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்றைய தினத்தின் கதாநாயகனாக ரஜினி மாறியுள்ளார்.இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1569298

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CoClDL7WgAAAZ-n.jpg

CoCkyEbWgAALKTe.jpg

CoCkRN4WEAA258D.jpg

 

தலைவரோட கார் சர்ர்ர்ர்ரேல்ன்னு ரைட்ல திரும்பும் பாரு..அது ஒண்ணுதான்..கபாலில படத்துல திருப்பம்... raw?riffsid=fYLQk_YP9jD-RfFdXmVXKzB6HTRx

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரையரங்கில் கபாலி படத்தைப் நேற்றிரவு பார்த்தேன். எங்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்தான் பார்க்க வந்திருந்தனர்!!!

இயக்குநர் சொதப்பிவிட்டிருந்தார் என்று தெரிந்தும் போகாமல் இருக்கமுடியவில்லை!! :(

விடுதலைப் புலிகளை ஏறி மிதித்த கபாலி!!! 

 

அண்மையில் கபாலி திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்

தேவையற்ற நிகழ்வுகளுக்காக நாம் அளவுக்கதிகமாக பரபரப்பை உண்டாக்குகிறோம், அதில் நாமும் பங்கேற்கிறோம் என்கிற குற்ற உணர்வையே இப்படம் நாளடைவில் எமக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை…

கபாலி திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததால் ஒரு மாபெரும் நிகழ்வாக பார்க்கப்பட்டது. கதை கேட்டு வளர்ந்த தமிழகத்தில், உச்ச நடிகரான ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பு இயல்பானதே!

திரைப்படங்களில் இருந்து புரட்சியையோ, சமூக விடுதலையையோ, வேறு எந்த ஒரு மாபெரும் கருத்தையோ தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு என்பது ‘ஒரு பொழுதுபோக்கு’ மட்டுமே.

அவற்றில் ரைக்கர் எனும் ஒரு கதா பாத்திரம் உருவாக்கப் பட்டதை யாரும் மறுக்க மாட்டீர்கள் இந்தப் பெயர் எதற்காக?? யாருக்காக இது தேவையா?

அன்று தொடக்கம் இன்று வரை ரஜனி ஈழத் தமிழ் மக்களுக்கோ அல்லது விடுதலைப் புலிகளுக்கோ சிறிதளவும் ஆதரவாக இருந்தவர் இல்லை…!!!

ஒட்டு மொத்த உலகமே இன்று ஈழத் தமிழர்களையும் புலிகளையும் உயர்வாக பார்க்கும் நிலையில் இந்திய அரசு இன்று வரை புலிகள் மீதான தடையை நீடிக்கிறது…

தொடர்ச்சியாக தமிழகம் தவிர்ந்த மற்றைய அனைத்து மாநலங்களிலும் புலிகளுக்கு எதிரான நிலை…

ரஜனியை இறுதியில் சுடுபவருக்கு எதற்காக ரைக்கர் என பெயரிட வேண்டும்!! 1983க்கு முன்னர் இப் பெயரை யாரும் பயன் படுத்தலாம். அதன் பின்  இப் பெயரைப் பயன்படுத்துவதற்கு ஒரு வரையரை வேண்டும்.

விடுதலைப் புலிகளை தீண்டப்படாதவர்களாக பார்க்கும் இந்தியாவில் தொடர்ச்சியான இப்படியான கருத்துருவாக்கம் புலிகளை இன்னும் கொடியவர்களாக அல்லவா காட்டும்…!!

அப்படியாயின் படத்தில் இப் பெயரிற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்கலாம்… ஏன் இந்தப் பெயர் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தவா?? இது தமிழகத்தின் உணர்வாளர்கள் கண்களுக்குத் தெரிய வில்லையா??

ஈழத்தில் இருந்து வந்து தமிழகத்தில் ஒய்யாரமாக வாழ்ந்து வரும் ஒரு சிலர் நாளை தமிழீழம்!! நாளை மறுதினம் பிரபாகரன் வருவான்!! என தமிழர்களை ஏமாற்றி வெளிநாட்டுப் பணத்தில் தமிழகத்தை சுற்றி ஈழத் தமிழரை நாசமாக்கும் தேசிய வாதிகளுக்கு தெரியவில்லையா….???

மற்றவர்களின் அறிக்கையில் இலக்கணப் பிழை சொற் பிழை பிடிக்கும் இவர்களுக்கு இது ரெியவில்லையா…

ஒட்டு மொத்தத்தில் கபாலி விடுதலைப் புலிகளை பாரிய அளவில் பாதித்திருக்கிறது. இதற்கு என்ன பதில் உள்ளது?? உலகத் தமிழரே அல்லது அது எல்லாம் சும்மா கபாலியில் சுப்பஸ்ரார் சுப்பர் என கைதட்டலுடன் முடிந்து விட்டதா….

பல்லாயிரம் மாவீரர்களை மண்ணில் விதைத்த மறவர் படையை தகுதி இல்லாதவன் எல்லாம் விமர்சிக்கின்றார்கள்!! புலிகள் இன்று அநாதையா…..!!

-தவிழவி-

http://www.addtamil.com/விடுதலைப்-புலிகளை-ஏறி-மி/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

ரஜனியை இறுதியில் சுடுபவருக்கு எதற்காக ரைக்கர் என பெயரிட வேண்டும்!! 1983க்கு முன்னர் இப் பெயரை யாரும் பயன் படுத்தலாம். அதன் பின்  இப் பெயரைப் பயன்படுத்துவதற்கு ஒரு வரையரை வேண்டும்.

அதுதானே...........சுடுபவருக்கு காந்தி என பெயர் சூட்டித்தான் பார்க்கட்டுமே.tw_angry:
நான் படம் பார்க்கவேயில்லை....:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.